வெள்ளி, 31 மே, 2013

கடவுளும், மதமும் கடைத்தேறப் போவதில்லை




கடவுள் நம்பிக்கை இனி கரையத்தான் செய்யும். ஏதோ எந்தக் காலத்திலோ இடிக்கும் மின்னலுக்கும் பயந்து கற்பித்துக் கொண்ட கடவுள் மீதான பயம் இந்தக் காலத்தில் காலாவதியான ஒன்றாகும்.

கடவுள் படைப்புக் கொள்கை எல்லாம் பழைய பஞ்சாங்கமாகி விட்டது. டார்வினின் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத மதம்  தன் தவறை உணர்ந்து திருத்திக் கொண்டு விட்டது.

பைபிளுக்கு விரோதமாக உலகம் உருண்டை என்று சொன்னதற்காக விஞ்ஞானி கலிலியோ தண்டிக்கப்பட்டார். 360 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகன் போப் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

இது அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் கிடைத்திட்ட மகத்தான வெற்றியாகும்

 உயிர் களைப் படைத்தான் கடவுள் என்பதுதான் கடவுள் இருப்பதற்குக் கூறப்பட்ட மகத்தான காரணமாகும்.

உயிர்த் துளியை (க்ரோமோசோம்) விஞ்ஞானிகள் உண்டாக்கி உலகை வியக்க வைத்து விட்டனர். மதவாதிகளை வியர்க்கவும் வைத்து விட்டனர்.

நகலாக்கம் கண்டுபிடிக்கப்பட்ட போதே அந்தக் குலை நடுக்கம் கடவுள் மத வியாபாரிகள் மத்தியில் தொடங்கி விட்டது.

இது ஒரு புறம் இருந்தாலும் மதத்தின் பெயரால் கடவுளின் பெயரைச் சொல்லி நாட்டில் ஓட விடப்படும் மனித ரத்த வெள்ளம் கடவுள், மதங்களின் குரூரத்தை மக்கள் உணரும்படிச் செய்து வருகிறது.

ஈராக்கில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ்புஷ் படைஎடுத்து பல லட்ச மக்களைக் கொன்று குவித்ததற்கு என்ன காரணத்தைச் சொன்னார்? 

கடவுளிடம் அனுமதி பெற்றுத்தான் இந்தப் போரைத் தொடுத்தேன்! என்று சொல்லவில்லையா?

ஈழத்திலே பல லட்சக்கணக்கில் தமிழர்களின் உயிரைக் குடித்த வெறி சிங்கள வெறி மட்டு மல்லவே  மத வெறியும் அல்லவா கூட்டணி சேர்ந்து விட்டது! 

இவ்வளவுக்கும் கருணை, அன்பின் வடிவமான பவுத்த நெறி மதவெறியாகக் கூர் தீட்டப்பட்டு தமிழன் கழுத்துகளுக்கல்லவா அரிவாளாக, கோடரியாக மாற்றுருப் பெற்றது? 

இந்தியாவில் இந்துத்துவா கூட்டம் திரிசூலத்தைத் தூக்கிக் கொண்டு ராம் ராம் என்று உச்சரித்து அல்லவா இன்னொரு மதக்காரர்களின் வழிபாட்டுத் தலத்தைத் துவம்சம் செய்தது?

குஜராத் மாநிலத்தில் என்ன நடந்தது? எத்தனை இலட்சம் அப்பாவி சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்டனர். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்களின் வயிறு கிழிக்கப்பட வில்லையா? அந்தக் கருவை உருவி நெருப்பில் தூக்கியெறிந்து குதியாட்டம் போடவில்லையா? இந்தக் கொடியவர்களுக்கு வெறியூட்டி எரி நெருப்பைக் கையில் கொடுத்ததும் இந்து மதம் அல்லவா? இஸ்லாம் நாடுகளில்கூட நாத்திகம் முளைக்கக் காரணம் என்ன?

இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது கடவுள் மீதும், மதத்தின்மீதும் மக்களுக்கு நம்பிக்கை எப்படி ஏற்பட முடியும்?

அதன் விளைவுதான் உலகில் நாத்திகர்களின் எண்ணிக்கை பெருகி வரும் அறிகுறிகள்!

கடவுள் - மதம் கூட்டணி வன்முறைகளை மட்டும் கட்டவிழ்த்து விடவில்லை, ஒழுக்கக் கேட்டையும் அல்லவா ஊட்டி வளர்க்கிறது.

சாமியார்களும் சாமியாரிணிகளும் செய்யும் அட்டகாசம் என்ன?

ஜெகத்குரு என்று சொல்லப்படுபவரே கொலைக் குற்றத்திற்கு ஆளாகி சிறையில் கம்பி எண்ணவில்லையா?

தப்பித் தவறி மதங்களும், கடவுள்களும் நிலைத் திருப்பதற்கு என்ன காரணம்?
இதோ தந்தை பெரியார் சொல்லுகிறார்:

மதங்களுக்குச் சீவ நாடியாய் இருந்து வருவது பணமும், பிரச்சாரமும் அல்லாமல் அவற்றின் உயர்ந்த கொள்கைகளோ, தத்துவங் களோ என்று எந்த மதத்தையும் யாரும் சொல்லி விட முடியாது

(தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் தந்தை பெரியார் - 1928 நவம்பர் 26,27).

இனி அடுத்த கட்டம் பணமும், பிரச்சாரமும்கூட எடுபடாமல் போகும் நிலைதான்; எவ்வளவு காலத்திற்குத் தான் மக்கள் மயக்கத்திலேயே இருப்பார்கள்?
               ------------------------------"விடுதலை” தலையங்கம் 30-5-2013

வியாழன், 30 மே, 2013

கடவுள் நம்பிக்கை குறைகிறது!





2005 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 87 சதவிகி தத்தினர் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். இப்பொழுது எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு கணக்கெடுப்பு மேற்கொண்ட போது அதில் ஆறு சதவிகிதம் குறைந்து 81 சதவிகிதத்தினரே கடவுள் நம்பிக்கை உள்ள வர்களாக உள்ளனராம்.

இதுபோன்ற கணக்குகள் துல்லியமாக இருக்கின்றனவா என்பது கேள்விக் குறியே! இன்னும் கூடுதலாக நாத்திகர்கள் இருக்கக் கூடும்.

சீனாவில் 14 சதவிகிதத்தினரும், ஜப்பானில் 16 சதவிகிதத்தினரும், செக் குடியரசில் 20 சத விகிதத்தினரும், பிரான்சில் 37 சதவிகிதத் தினரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
அறிவியல் அறிஞர்களைப் பொறுத்தவரை பெரும் அளவில் நாத்திகர்களே. அமெரிக்கா விலிருந்து வெளிவரும் நேச்சர் (இயற்கை) என்ற இதழ் உலகம் முழுவதும் உள்ள ஆயிரம் அறிவியல் அறிஞர்களிடம் கடவுள் பற்றிய வினாவைத் தொடுத்திருந்தது.

93 விழுக்காட்டினர் 1999இல் தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்த தாகவும் 1993ஆம் ஆண்டிலோ அது 85 விழுக்காடு என்று நேச்சர் இதழ் தெரிவித்தது. 1914ஆம் ஆண்டிலே விஞ்ஞானிகள் 72 விழுக் காட்டினர் கடவுள் மறுப்பாளர்களாக இருந்தனர்.

                     -----------------------------------------(ராணி 11.7.1999).

ஆண்டுகள் வளர வளர நாத்திகர்களின் எண்ணிக்கையும் வளர்கிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (5.6.2010) ஒரு தகவலைக் கூறியதுண்டு.

"கடந்த பத்து ஆண்டுகளாக நடந்த ஆய்வில் இவ்வுலகில் 50 முதல் 70 கோடி மக்கள் வரை கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
அய்ரோப்பில் நாத்திகம் பரவலாக உள்ளது. அமெரிக்காவில் 2007இல் 5 விழுக்காட்டினரும், 2008 இல் 19 விழுக்காட்டினரும் நாத்திகர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

வியட்நாம் 81, சுவீடன் 46.85, டென்மார்க் 43.80, நார்வே 31.72, ஜப்பான் 64.65; செக் குடியரசு 54.61; பின்லாந்து 26.80, பிரான்சு 43.54, தென் கொரியா 30.52, எஸ்டோனியா 49 விழுக்காடு மக்கள் நாத்திகர்கள் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது (5.6.2010).

அதற்கு இரண்டாண்டுகளுக்குமுன்  இதே டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (13.6.2008) முக்கியமானதோர் தகவலை வெளியிட்ட துண்டு. Brainy People Outlive others by 15 years  என்ற தலைப்பில் வெளியான தகவல் அது.

அதிக மூளைத்திறன் கொண்டவர்கள் மற்றவர்களைவிட 15 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கிறார்கள் என்றது.

அறிவார்ந்த மக்களின் மூளை மிக மெதுவாகவே மூப்பு அடைவதால், அவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்று இத்தாலி நாட்டு கலாப்ரியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உண்மையிலேயே அவர்களை அறிவாளி களாக்கும் எஸ்.எஸ்.ஏ.டி.எச். என்ற மரபணு வுக்கே தான் நன்றி கூற வேண்டும்.

இன்னொரு தகவல் மிக மிக முக்கியமானது.  உல்ஸ்டர் பல்கலைக் கழக பேராசிரியர் ரிச்சர்ட்லின் தலைமையில் ஆய்வினை மேற் கொண்டவர்கள் அறிவாற்றல் கொண்ட மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்ப தில்லை. அறிவாற்றலுக்கும், நாத்திகத்துக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இனிவரும் காலத்தில் இந்த நிலை தவிர்க்க முடியாதது - கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடையே நிலவும் பக்திகூட சடங்காச்சாரமாக இருக்கிறதே தவிர, கடவுள்மீது அழுத்தமான நம்பிக்கை என்றெல்லாம் ஒன்றும் கிடையாது என்பது வெளிப்படை!
                  --------------------------"விடுதலை” தலையங்கம் 29-5-2013

இந்தியர்களிடம் கடவுள், மத நம்பிக்கை குறைந்தது! உலகளவிலும் நாத்திகம் வளர்ச்சி


!

இந்தியர்களிடம் கடவுள், மத நம்பிக்கை குறைந்தது
உலகளவிலும் நாத்திகம் வளர்ச்சி! கருத்துக் கணிப்பில் தகவல்
லண்டன், மே 28 - உலகில் எந்த நாட்டு மக்கள் அதிகமாக கட வுள் நம்பிக்கை கொண் டிருக்கிறார்கள் என்று கடந்த 2005-ஆம் ஆண்டு ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட் டது.
அப்போது இந்தியா முழுவதும் சுமார் 87 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கையுடன் இருப்ப தாக தெரியவந்தது.

குறைந்தது

8 ஆண்டுகளுக்குப் பிறகு கடவுள் நம்பிக்கை பற்றி சமீபத்தில் உலகம் முழுவதும் மீண் டும் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட் டது. 51 ஆயிரத்து 927 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. லண் டனில் நேற்று இந்த கருத்துக் கணிப்பு முடி வுகள் வெளியிடப்பட்டன.
இதில் இந்தியர்களில் 81 சதவிகிதம் பேருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்தியர் களிடம் கடவுள் நம்பிக்கை குறைந்து விட் டது உறுதியாகி உள்ளது. 2005-ஆம் ஆண்டு கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் தற்போது 6 சதவிகித இந் தியர்கள் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர் கள் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.

சீனா முதலிடம்

ஒட்டு மொத்த இந்தியாவில் கணக்கிட்டால் 81 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கையுட னும் 13 சதவிகிதம் பேர் மத ஈடுபாடு இல்லாம லும், 3 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கை இல் லாதவர்களாகவும் உள் ளனர். நமது அண்டை நாடான சீனா, கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கள் பட்டியலில் முதலி டத்தில் உள்ளது. அங்கு 48 சதவிகிதம் பேருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.

சீனாவில் 14 சதவிகித மக்களே கடவுள் நம்பிக் கையுடன் உள்ளனர். அது போல ஜப்பானில் 16 சதவிகித மக்களே கடவுள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
இந்த வரிசையில் செக் குடியரசு 20 சதவி கிதம், பிரான்சு 37 சதவிகிதம், தென் கொரியா 52 சதவிகிதம் நாடுகள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.

பாகிஸ்தான்

உலக அளவில் பாகிஸ்தானில் கடவுள் நம்பிக்கையுடன் அதிக மக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு கணக்கெடுப்புடன் ஒப்பிடும் போது பாகிஸ்தானில் தற்போது 6 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கை இருப்பவர் கள் பட்டியலில் சேர்ந் துள்ளனர்.

ஆனாலும் நாத்திக அமைப்புகளும் முஸ்லிம் நாடுகளில் தோன்றிட ஆரம்பித்துள்ளன.
   -------------------"விடுதலை”28-5-2013

புதன், 15 மே, 2013

போர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..?



பிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தையும் பலவிதமான உயிரினங்களையும் “குன்” (ஆகுக!) எனும் ஒற்றை சொல்லில் உருவாக்கி, தன் கட்டளையின் கீழ் வைத்தும் நிர்வகிப்பதாக கூறிக் கொள்பவன் நிச்சயமாக வல்லமைமிக்கவனாகவும், நம் அனைவரின் கற்பனைக்கு எட்டாத அளவு ஞானம் உள்ளவனாக இருக்க வேண்டும். அத்தகைய சர்வ வல்லமைமிக்க ஆற்றல் தன்னால் படைக்கப்பட்ட படைப்பினத்தில் இருந்த ஒரு மிகச்சிறிய அற்ப மனித கூட்டத்தை கட்டுப்படுத்த அல்லது அழிக்க, போர்வியூகம் அமைத்து, கையில் வாள் ஏந்திய மலக்குகளை குதிரையில் ஏற்றி, முஹம்மது நபிக்கு ஆதரவாக போரிட போர்க்களங்களில் இறக்கினான். என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
புகாரி ஹதீஸ் -4118
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்ம் கிளையாரின் குறுகலான வீதியில் நபி (ஸல்) அவர்கள் பனூ குறைழா குலத்தாரை நோக்கிச் சென்ற போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது படை பரிவாரங்களுடன் கம்பீரமாக பவனி வந்ததால் கிளம்பிய புழுதியை (இப்போது கூட) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
புகாரி ஹதீஸ் -2813
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரி 4 அல்லது 5ஆம் ஆண்டில் நடந்த) அகழ் போரின் போது (போரின் முடிந்து) திரும்பி வந்து ஆயுதங்களை கீழே வைத்து விட்டு குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) தமது தலையை புழுதி மூடியிருக்க வந்தார்கள். நபி (ஸல்) அவர்களை நோக்கி நீங்கள் ஆயுதத்தை கீழே வைத்து விட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை கீழே வைக்கவில்லை என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் எங்கே (போர் புரியப்) போகிறீர்கள் என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் இதோ இங்கே ! என்று பனூ குறைழா ( என்னும் யூதக்) குலத்தினரை (அவர்கள் வசிக்கும் இடம்) நோக்கி சைகை காட்டினார்கள். ஆகவே அல்லாஹ்வின் தூதரும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்
(புகாரி 2813,4117,4118).
அசூரர்களை அழிக்க கடவுளர்களும், தேவர்களும் பலவிதமான சிறப்பு ஆயுதங்களுடன் போரிட்டதாக கூறும் இந்துமத புராண கட்டுக்கதைகளை விட சிறுபிள்ளைத்தனமானது. ஏனெனில் அவைகளில் காண்பிக்கப்படும் அசூரர்கள் பலவிதமான மாயசக்தி கொண்டவர்கள், அவர்களது கடவுளர்களுடன் நேரடியாக போரில் ஈடுபடும் அளவுக்கு வல்லமையுடையவர்கள். அசூரர்கள் எனப்படுபவர்கள் சராசரி மனிதர்களில்லை.
நபி (ஸல்) அவர்களின் எதிரிகள் அபூஜஹல் மற்றும் அவனுடய கூட்டத்தினரை பலவாறு சபிக்கறான். சவால் விடுகிறான். உடன்படிக்கை செய்து கொள்கிறான் (குர் ஆன் 8:56,57,58,61, 9:4). வேறு வழியில்லாமல் போருக்கு வியூகம் வகுக்கிறான் (குர் ஆன் 4:101, 102, 103, 104, 8:60). ஆயிரக்கணக்கில் மலக்குகளை அனுப்பி வாளெடுத்து போர் புரிய வைக்கிறான் (குர் ஆன் 3:124, 125, 8:9).
உங்களுடைய ரப்பிடத்தில் நீங்கள் பாதுகாவல் தேடிய பொழுது தொடர்ந்து அணிவகுத்து முன்னே) வரும்படியான ஆயிரம் மலக்குகளைக் கொண்டு உங்களுக்கு நிச்சயமாக நான் உதவி செய்பவனாக இருக்கிறேன் என்று உங்களுக்கு அவன் பதிலளித்தான்.
(குர்ஆன் 8: 9)
உம்முடைய ரப்பு மலக்குகளிடம், நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். எனவே முஃமின்களை நீங்கள் உறுதிப்படுத்தங்கள். காஃபிரானவர்களின் இதயங்களில் திகிலை விரைவில் போடுவேன்; ஆகவே கழுத்துகளுக்கு மேல் வெட்டுங்கள் அவர்களிலிருந்து ஒவ்வொரு கணுவையும் வெட்டுங்கள் என்று அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)
(குர்ஆன் 8:12)
(பத்ருப்போரில்) அவர்களை நீங்கள் வெட்டவில்லை எனினும் அல்லாஹ் வெட்டினான். (மண்னை அவர்களின் மீது) நீர் எறிந்த போது (அதை நபியே) நீர் எறியவில்லை எனினும் அல்லாஹ் எறிந்தான்…
(குர் ஆன் 8:17)
1000 அல்லது 3000 அல்லது 5000 போர் அடையாளம் உள்ள மலக்குகளை அல்லாஹ் அனுப்பியதாகவும் ஹதீஸ்களிலும் காணப்படுகிறது
புகாரி ஹதீஸ் -3995
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
பத்ருப் போரின் போது நபி (ஸல்) அவர்கள், இதோ ஜிப்ரீல்! போர்த்தளவாடங்களுடன் தமது குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை) ப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள்.
முஹம்மது நபி அவர்களின் எதிரிகள் எவ்வித சிறப்பு சக்திகளும் இல்லாத நாகரீகமறியாத மிகச் சாதாரண மனிதர்கள். சில ஆயிரங்களில் மட்டுமே எண்ணிக்கை கொண்டவர்கள். அவர்களிடம், வாள், அம்பு, ஈட்டி, கற்களைத் தவிர எந்த சிறப்பு ஆயுதங்களும் கிடையாது. குதிரைகள், ஒட்டகங்களைத் தவிர எந்த வாகன வசதியும் கிடையாது. மேலும் இன்று இஸ்லாமுக்கு எதிராக உள்ளவர்களின் எண்ணிக்கையில் மிக சொற்பமானவர்கள். இன்றுள்ளது போல எவ்வித தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியும் அவர்களுக்கு கிடையாது.
எதிரிகளுடன் போர் புரிய உற்சாகப்படுத்துகிறான்,
தங்களுடைய சத்தியங்களை முறித்து (நம்) ரஸூலை (ஊரைவிட்டு) வெளியேற்ற எண்ணிய கூட்டத்தாரிடம் நீங்கள் போர் புரிய வேண்டமா? அவர்கள் (தாம்) முதன் முறையாக உங்களிடம் (போரைத்) துவக்கினர்; அவர்களுக்கு அஞ்சுகறீர்களா? அல்லாஹ்–அவனே அஞ்சுவதற்கு மிகத் தகுதியானவன்- நீங்கள் (உண்மையான) முஃமின்களாக இருந்தால்.
(குர் ஆன் 9:13)
புஹாரி ஹதீஸ் : 3992
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, உங்களிடையே பத்ருப் போரில் கலந்து கொண்டவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பத்ரில் கலந்து கொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள் என்றோ அல்லது அதுபோன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். (உடனே) ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவ்வாறு தான் வானவர்களில் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்கள் (எங்களில் சிறந்தவர்கள் என்று நாங்களும் கருதுகிறோம்) என்று கூறினார்கள். இந்த ஹதீஸை பத்ருப் போரில் கலந்து கொண்டவரான ரிஃபஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரகீ (ரலி) அவர்களிடமிருந்து அவர்களின் புதல்வர் முஆத் பின் ரிஃபஆ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
போர் புரிய வராதவர்களை எச்சரிக்கிறான் (குர் ஆன் 9:39,81,83,90,93–97), சபிக்கிறான் (குர் ஆன் 8:16, 9:94–97). வெற்றி பெற்றவுடன் மகிழ்ச்சியால் திளைக்கிறான். போரில் கைப்பற்றிய பெண்கள் மற்றும் இதர பொருட்களை பங்கு பிரித்து தருகிறான் (குர் ஆன் 48:15). முஹம்மது நபி அவர்களின் படை புறமுதுகிட்டால் எச்சரிக்கிறான், சபிக்கிறான்.
(அல்லாஹ்வின்) ரஸூல் உங்களுக்கு பின்னாலிருந்ருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க எவர்பக்கமும் நீங்கள் திரும்பிப்பார்க்காமல் விரண்டோடிக் கொண்டிருந்ததை (நினைத்துப்பாருங்கள்) எனவே (நீங்கள் ரஸூலுக்கு கொடுத்த) துக்கத்திற்கு பகரமாக (தோல்வி எனும்) துக்கத்தை உங்களுக்கு பிரதிபலனாகக் கொடுத்தான்…
(குர் ஆன் 3:153)
முஹம்மது நபி அவர்களின் மனைவியருக்கிடையே ஏற்படும் சக்களத்தி சண்டையை பஞ்சாயத்து செய்கிறான். யாரும் எந்த கேள்வியும் கேட்கக் கூடாதென்பதற்காக நபியே உம்மை படைக்கவில்லையென்றால் இந்த பிரபஞ்சத்தையே படைத்திருக்க மாட்டேனென்றும், நீரே இறுதித் தூதர் என்றும் பாதுகாப்பளிக்கிறான். யாராவது உயிர், ரூஹ் என சிக்கலான கேள்வியை கேட்டால், வஹி வரும் வேளையில் இது போன்ற கேள்விகள் வஹியை தடுத்து விடும் தேவையற்ற வீண் கேள்விகளால் உங்களது முன்னோர்கள் அழிந்ததைப் போன்று நீங்களும் அழிய வேண்டாம் என எச்சரிக்கிறான். (குர் ஆன் 2:108).
இவைகளை பார்க்கும் போது உங்களுக்கு புரிவது என்ன? ஊதிப் பெருக்கப்பட்டிருக்கும் அல்லாஹ் என்பதன் தகுதிக்கு பொருத்தமானவைகளா இவை? குதிரையில் ஏறி, வாளெடுத்து, போர்புரிந்து வெட்டிச் சாய்த்துத்தான் சக மனிதர்களிடமிருந்து தனக்கு அதி முக்கியமான முகம்மதை காக்க முடியும் என்றால் (முகம்மதைப் படைக்கவில்லை என்றால் பிரபஞ்சத்தையே படைத்திருக்க மாட்டேன் என்பதைக் கவனிக்கவும்) அவ்வளவு பெரிய பிரபஞ்சத்தையும் கோள்களையும் விண்மீன்களையும் இன்னும் அனைத்தையும் குன் என்று சொல்லி படைக்கும் தகுதி பெற்ற அந்த அல்லாஹ்வை எண்ணி சிரிக்கத் தோன்றுகிறதா?