புதன், 17 ஏப்ரல், 2013

பரிணாமம் எளிய விளக்கங்கள் .Part 1



வணக்கம் நண்பர்களே,

கடந்த சில நாட்களாக நாம்& சில நண்பர்கள் நடத்திய பரிணாமத்தின் ஏற்புத் தன்மை சார் விவாதம் பலரின் கவனத்தை ஈர்த்து இருக்க்லாம்.பரிணாமம் எதிர்க்கும் குழுவின் கட்டுரைகளுக்கு பல மறுப்புகள் எழுதி இருந்தாலும் பரிணாமம் குறித்தே ஒரு தொடர் எழுத வேண்டும்  என ஆசை உண்டு.

பரிணாமம் என்பது பல துறைகள் சார்ந்த அறிவியல் என்பதால், கணிதம் சார்ந்து எழுத முற்பட்டாலும், அதற்கு அடிப்படைக் கணிதம் விள்க்கவே நேரம் செல்லும் எனத் தோன்றியதால் குழு கணித அடிப்படை முயற்சியை பிறகு முயற்சிப்போம் என முடிவு செய்தேன்.

சரி இப்பதிவில்‍ இருந்து ஒரு தொடர் முயற்சிக்கலாம் என தோன்றுகிறது. பதிவுகள் விவாதிக்கப்பட வேண்டும், பல சார்புக் கருத்துக்களும் ஆவணப் படுத்தப்பட வேண்டும் என்பது நம் விருப்பம் என்றாலும், விவாதங்கள் ஒரு குறிப்பிட்ட புள்ளி சார்ந்தே இருப்பதும் அவசியம். அப்படி இல்லாவிட்டால் குழப்பமே மிஞ்சும்.

இப்பதிவில் பரிணாமம் என்பது என்ன என்பதை மட்டுமே விளக்க,விவாதிக்க‌ போகிறோம்.

அறிவியல் கற்கும் ஆர்வம் உள்ள, உண்மை தேடும் மக்களுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய கடமை உள்ளதாக நினைப்பதால் மட்டுமே பரிணாமம் குறித்த நமது கற்றலை தமிழ் பதிவுலகில் பகிர்கிறோம். சரி இப்பதிவில் அறிவியல் மட்டுமே சார்ந்து பரிணாமம் என்றால் என்ன? என விளக்(ங்)குவோம்.
  
ஒரு சின்ன எ.கா எடுத்துக் கொள்வோம்.

காவல்துறை ஒருவரை குற்றம் சாட்டி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்கிறது. நீதிமன்றத்திடம் ஒப்படைக்கிறது.கைது செய்யப் பட்டவர்களில் சான்று இல்லாதவரை நீதிமன்றம் விடுதலை செய்கிறது.

காவல்துறை சமர்ப்பிக்கும் ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்கிறதா என்பதே பிரச்சினை. குற்றவாளியும் தன் தரப்பு வாதங்களை ,ஆதாரங்களை சமர்பிக்கலாம், அதுவும் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது.

இங்கு நீதிமன்றம் அறிவியல் உலகம். காவல் துறை, குற்ற‌வாளி பரிணாம ஏற்பு, எதிர்ப்பு குழு என எடுபோம். ஹிஹி யார் காவல்,யார் குற்றவாளி என அவரவர் விருப்பம் போல் எடுக்கவும். ஒருவர் குற்றவாளி என்பதற்கோ,குற்ற‌வாளி இல்லை என்பதற்கும் சரியான சான்று எப்படி இருக்க வேண்டும் என நீதிமன்றத்துக்கு சீர் தூக்கி பார்க்க‌ தெரிந்தால் மட்டுமே இந்த முறை சரியாக பலன் அளிக்கும்.

அறிவியல் உலகத்தில் பரிணாமம் என்பது இப்போதைய உயிரின தோற்ற விளக்க கொள்கையாக ஏற்கப்பட்டு, பெரும்பான்மை பல்கலைக் கழகங்கள்,பள்ளிகளின் போதிக்கப்படுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அறிவியல் உலகத்தால் ஒருமித்து ஏற்கப்பட்ட ஒரு கொள்கையையின் மீது கற்றல்,ஆய்வு மூலம் சாதிக்கும் விருப்பினை தமிழ் உலகம் இழந்து விடக்கூடாது என்னும் நோக்கிலேயே எழுதுகிறோம்.

வைரஸ்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப மருந்துகளின் தன்மை மாறுகிறது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து இருக்கிறோம்,சில வருடங்களுக்கு முன் பலன் அளித்த பென்சிலின் இப்போது பலன் அற்று போனது. கொசு விரட்டி மீதே உடகாரும் வல்லமை கொண்ட கொசு என பல பரிணாம செயல்களை,அன்றாட வாழ்வில் பார்த்தாலும் நாம் அதனை உணர்வது இல்லை. ஆகவே பரிணாமம் என்பது 100% சரியாக ஆய்வுரீதியாக சரி பார்க்கப் பட்டு ஏற்கப்பட்ட கொள்கை.

சோவியத் யூனியனின் போலி அறிவியலாளன் லைசெங்கோவின் தவறான பரிணாமம்,மரபியல் சார் கருத்துகள், செயல் படுத்தியமையால் அங்கு உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தியது என்பது வரலாறு!!!.அது உலகின் வரலாற்றை மாற்றியது!!!. அது என்ன என்பதைப் பிறகு பார்ப்போம்!!


ஆகவே தொடர்ந்து கிடைக்கும் சான்றுகளை மெய்ப்பிக்க முடியா அறிவியல் கொள்கை கைவிடப் படும். மாற்றுக் கொள்கை அதன் இடத்தை பிடிக்கும். சர் ஐசக் நியுட்டன் எந்த [ஈர்ப்பு] விசை ஆப்பிள் மரத்தில் இருந்து ஆப்பிளை விழச் செய்கிறதோ, அதே விசைதான் கோள்கள்,நட்சத்திர இயக்கங்களுக்கு காரணம் என முதலில் விளக்கினார்.

சில சோதனைகள் மூலம் ஈர்ப்பு விசைக்கு சூத்திரம் கண்டறிந்தார். அந்த விதியின் மூலம் பூமிக்குள் செய்த ஆய்வுக் கணிப்புகள் சரியாக இருந்ததால் ,யாரும் நியுட்டனின் ஈர்ப்பு விதியை மறுகவில்லை.அறிவியலில் சரியாக என்றால் ,கணிப்பு,பரிசோதனையின் அளவீட்டு வித்தியாசம் குறைவாக இருப்பது என்பதைப் புரிய வேண்டும்.

ஆனால் அறிவியல் முன்னேற்றத்தில் தொலைநோக்கி உதவியால் சிவப்பு விலக்கம்[Red Shift] கொண்டு சூரியக் குடுமப்த்தின் இதர கோள்களின் இயக்கங்களை கணக்கிட்டால் தவறு வருகிறது. ஆகவே சான்றுகளின் அடிப்படையில் நியுட்டனின் விதி கைவிடப்பட்டு,ஐன்ஸ்டினின் ஈர்ப்பு விதிக் கொள்கை ஏற்கப்பட்டது. இதுவும் நம் பால்வீதி மண்டலம் தாண்டி கணக்கீட்டில் பிழை கொடுப்பதால், கருப்பு பொருள் என்னும் கருதுகோள் கொண்டு பிழையை சரி செய்ய முயற்சி நடக்கிறது. ஒருவேளை கருப்பு பொருள் என்பது இல்லை எனில் ஐன்ஸ்டினின் விதிக்கும் மாற்று கொள்கை காணப்பட வேண்டும்.மாறியது ஈர்ப்பு விசை அல்ல, ஈர்ப்பு விசையின் செயல்பாட்டு விளக்கம் மட்டுமே மாறுகிறது.

ஆகவே அறிவியல் சான்றுகள் அடிப்படையில் தன்னை சரிபார்க்கும் தொடர் இயக்கம் கொண்டது என்பதை விளக்கவே இதனைக் கூறினோம். ஆகவே பரிணாமம் என்பது இன்று வரை கடந்த ,நிகழ்கால சான்றுகளை சரியாக பிழையின்றி விளக்குகிறது.நூற்றுக் கணக்கில் ஆய்வு சஞ்சிகைகளும்[Journals],ஆயிரக் கணக்கில் கட்டுரைகளும் வருடத்திற்கு பல புத்தகங்களும் வெளிவருகின்றன. பரிணாமம் முறைப்படி கற்க வேண்டும் எனில் கணிணியில் இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதும் என்னும் கால கட்டத்தில் வாழ்கிறோம் என்னும் அரிய வாய்ப்பினை கொண்டவர்கள் நாம்.

பரிணாமக் கொள்கை டார்வினுக்கும் முந்தியது.பரிணாம கொள்கையும் பல மாறுதல்களை சந்தித்து உள்ளது.

லாமார்க்கீயம், இயற்கைத் தேர்வு,நியோ டார்வினியம்,நிறுத்திய நிலைத்தன்மை,.. மூலக்கூறு பரிணாமவியல் என பலவகையான மாறுதலான விளக்கங்களைக் கண்டது.

http://en.wikipedia.org/wiki/History_of_evolutionary_thought

இவை அனைத்தையும் அடுத்த பதிவில் அதிகம் விவாதிப்போம். இங்கும் பரிணாமம் மாறவில்லை பரிணாமக் கொள்கையின் விளக்கங்கள் மட்டுமே சான்றின் அடிபடையில் மாறுகின்றன.அறிவியல் என்பது இயற்கை விதிகளுக்கு உட்பட்ட விளக்கங்களை மட்டுமே ஏற்கும் என்பதால், பரிணாம கொள்கைக்கு மாற்றம் வரும் வாய்ப்பு மிக மிக....குறைவு.

பாமர மக்களாகிய நாம் எப்படி அறிவியல் உலகம் பரிணாமத்தை ஏற்கிறது என்பதையே அறிய முயல்வோம்.பரிணாமம் குறித்த தவறான புரிதல்களையும் தவிர்த்தல் நலம்.

***
பரிணாமம் என்பது என்ன?

விக்கிபிடியாவில் இருந்து

1.Evolution is the change in the inherited characteristics of biological populations over successive generations.

2.Evolutionary processes give rise to diversity at every level of biological organisation, including species, individual organisms and molecules such as DNA and proteins.[1]

3.Life on Earth evolved from a universal common ancestor approximately 3.8 billion years ago. Repeated speciation and the divergence of life can be inferred from shared sets of biochemical and morphological traits, or by shared DNA sequences.[2]

4.These homologous traits and sequences are more similar among species that share a more recent common ancestor, and can be used to reconstruct evolutionary histories, using both existing species and the fossil record. Existing patterns of biodiversity have been shaped both by speciation and by extinction.[3]

1.பரிணாமம் என்பது உயிரினக் குழுக்களில் தலைமுறைரீதியாக ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.

2.பரிணாம நிகழ்வினால் உயிர் அமைப்புக்களின் ஒவ்வொரு நிலையிலும்[உயிரின குழுக்கள்,தனிப்பட்ட உயிரிகள்,மூலக்கூறுகள், ஜீனோம்,... மற்றும் ப்ரோட்டீன்] பல்வேறு வகைகள் உருவாகி தொடர்ந்து மாற்றம் அடைகிறது. 

3.பூமியில் 380 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பொது நுண் உயிர் முன்னோரில் இருந்தே அனைத்து உயிரி,தாவர வகைகளும் கிளைத்து தழைத்தன.பலமுறை நிகழ்ந்த சிற்றினமாதல்[Speciation: ஒரு உயிரி பல உயிரிகளாக பிரிதல்],உயிரிகளில் ஏற்படும் வித்தியாச விலகல்[divergence of life] இதனை தோற்றுவித்தது என்பதை உயிர் வேதியியல், உரு அமைப்பு ஒப்பீடு மற்றும் ஜீனோம் ஒப்பீடுகளில் இருந்து உறுதி செய்கிறோம்.

4. ஒரு சமீப கால பொது முன்னோரில் இருந்து தோன்றிய உயிரிகளின் உரு அமைப்பு, ஜீனோம் அமைப்பு அதிகம் நெருங்கியதாக இருக்கும்.இந்த ஒப்பீடுகள்,ஆய்வுகள் மூலம், பரிணாம வரலாறு, வாழும் உயிரிகள், மறைந்த உயிரிகளின் படிம வரலாறு மூலம் கட்டமைக்கப் படுகிறது.இப்போது காணப்படும் உயிரிகளின் வகைப்படுத்தல் ஒழுங்குகள், சிற்றினமாதல், உயிரின மறைவு[Extintion] ஆகியவற்றால் ஏற்பட்டது.

பரிணாமம் என்பது என்ன என்பதன் விக்கிபிடியா விளக்க மொழியாக்கம்,ஆங்கில மூலம் கொடுத்து இருக்கிறேன். மொழியாக்க மேம்பாடு,புதிய தமிழ் சொற்கள் நண்பர்கள் கொடுக்கலாம்.

**
இந்த 4 விடயங்களையும் சரியாக விளங்குவோம். 

நாம் நமது சுற்றுப்புறத்தை அறிய முயல்கிறோம், கடந்த&நிகழ் கால நிகழ்வுகளை சான்றுகள் கொண்டு  பொருந்தும் விளக்கம் ஏற்கிறோம்.அதனைக் கொண்டு எதிர்கால நிகழ்வுகளைக் கணிக்கிறோம்.சான்றுகளுக்கு ஏற்ப விளக்கங்களை மாற்றுகிறோம். இது வரலாறு,அறிவியல் ஆகிய இரண்டுக்குமே சரியான உண்மை.

1.பரிணாமம் என்பது உயிரின குழுக்களில் ஏற்படும் தலைமுறைரீதியான மாற்றம்.

பெற்றோர்,குழந்தை இருவரிடையே பல ஒற்றுமை இருந்தாலும், சிறிது வேற்றுமை உண்டு. ஜீனோம் ஒப்பீட்டில் ஒருவரின் தந்தையை அறிய முடியும் என்பது பல வழக்குகளில் முடிவு காண உதவி இருக்கிறது.

பெற்றோர் ஜீனோம், குழந்தை ஜீனோம் இவற்றை ஒப்பிடும் போது சில மாற்றங்கள் இருக்கும் இதனை ம்யுட்டேஷன்[mutations] என அழைக்கிறோம். இந்த தொடர்ந்த ஜீனோம் மாற்றம் ,உரு அமைப்பு மாற்றம், ஒரு உயிரியை சில உயிரிகளாக நீண்ட கால அளவில் பிரிக்கிறது என்பதே பரிணாமம்.

பரிணாமம் என்பது இருவிதங்களில் உணரப் படுகிறது.

a). உரு அமைப்பு மாற்றம்[Morphologcal change]:சிறுபரிணாமம் 

b). சிற்றினமாதல்[Speciation]:ஒரு உயிரி சில உயிரிகளாக பிரிதல்

பெரும் பரிணாமம்=1+2

Macro evolution=Morphologcal change+Speciation


சராசரியாக சிற்றினமாதல்[speciation] நிகழும் கால அளவு சுமார் 30இலட்சம் ஆண்டுகள். ஆகவே நம் வாழ்வில் நேரடியாக இதனை பரிசோதித்து பார்த்தல் என்பது இயலா காரியம்.



Current estimates from the fossil record and measured mutational rates place the time required for full reproductive isolation in the wild at ~3 million years on average (Futuyma 1998, p. 510). Consequently, observation of speciation in nature should be a possible but rare phenomenon. However, evolutionary rates in laboratory organisms can be much more rapid than rates inferred from the fossil record, so it is still possible that speciation may be observed in common lab organisms (Gingerich 1983).

இப்போதைய கணக்கீடுகளின் படி சிறுமாற்ற வீதம் ஆனது,இயற்கையில் முழு இனவிருத்தி விலக்கம்[reproduction isolation] ஏற்பட சராசரியாக 30 இலட்சம் ஆண்டுகள் தேவைப்படுகிறது[ஃபட்டைமா 1998 ,பக்கம் 510].இருந்தாலும் இயற்கையில் சிற்றினமாதல் என்னும் நிகழ்வு சாத்தியம் என்றாலும் அபூர்வமே.ஆய்வ‌கங்களில் இனவிருத்தி வீதம் படிம வரலாற்று ,சிற்றினமாதல் வீதத்தை விட‌,அதிகரிக்க்க வழிவகை செய்ய இயலும் என்பதால்  இதனை ஆய்வகங்களில் உறுதிப் படுத்த இயலும் (Gingerich 1983).


**
2.பரிணாம நிகழ்வினால் உயிர் அமைப்புக்களின் ஒவ்வொரு நிலையிலும்[உயிரின குழுக்கள்,தனிப்பட்ட உயிரிகள்,மூலக்கூறுகள், ஜீனோம்,... மற்றும் ப்ரோட்டீன்] பல்வேறு வகைகள் உருவாகி தொடர்ந்து மாற்றம் அடைகிறது. 

பரிணாமம் என்பது ஒரு மூல உயிரியில் இருந்து கொஞ்சம் வித்தியாசமான பலவகை உயிரிகள் தோன்றும் என்பதனை நடைமுறைவாழ்வில் உணர முடியும்.

ஓநாய், நரி, நாய் ஆகியவை ஒரே மூல உயிரிகளில் இருந்து தோன்றியவை. நாயும் ஒருவகை ஓநாய்தான்,ஆனால் எத்த‌னை வகையான நாய்கள்,ஓநாய்கள்,நரிகள் இருக்கின்றன??இப்படிப் பல வகைகள் இருப்பதை நாம் உணர்ந்தாலும் இவை அனைத்தும் ஒரே மூல உயிரியில் இருந்து தோன்றியது என்பதை உருஅமைப்பு ஒப்பீடு, ஜீனோம் ஒப்பீட்டில் நெருங்கி இருப்பதை வைத்து உறுதி செய்கிறார்கள்.

சிறுத்தை, புலி,சிங்கம்,பூனை,காட்டுப் பூனை சொல்லலாம்.

குதிரை,கழுதை,கோவேறு கழுதை, வரிக்குதிரை,..இன்னொரு எ.கா.

விலங்கினங்களின் வரிசைப்படுத்தல் என்பதே ஒருவகை பரிணாம நிரூபணமே. உரு அமைப்பில் ஒத்த இனங்களின் ஜீனோம் நெருங்கிய தொடர்பில் இருக்கும் என்ற கணிப்பு மிக சரியாக பொருந்துகிறது.ஒரு மூலத்தில் இருந்து கிளைத்து தழைப்பது நன்கு உணர முடியும்.பெரும்பாலும் மூல உயிரியின் படிமம் இந்த உயிரிகளின் உருஅமைப்புக்கு ஒத்து இருக்கும்.

இவை உயிரிக்கும் மட்டும் அல்ல,உயிர்க் குழு உள்ளேயும் பல வகைகள்,மூலக்கூறுகள்,ஜீனோம் என ஒவ்வொன்றிலும் இருப்பதும் பரிணாம நிரூபணமே.

பல விடயங்களில் ஒத்து ,சில விடயங்களில் மாற்றங்கள் கொண்ட பலவகை உயிரிகள்,மூலக்கூறுகள்,ஜீனோம் இருப்பதால் இவற்றுக்கு ஒரே மூலம் என எப்படி சொல்ல முடியும்? என்பது விதண்டாவாதமே!!!

ஏன் எனில் இதற்கு மாற்றாக இயற்கைக்கு உட்பட்ட எந்தக் கொள்கையும் இதனை விள்க்க இயலாது.வேறு வாய்ப்பு இல்லை.
**
3.பூமியில் 380 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பொது நுண் உயிர் முன்னோரில் இருந்தே அனைத்து உயிரி,தாவர வகைகளும் கிளைத்து தழைத்தன.பலமுறை நிகழ்ந்த சிற்றினமாதல்[Speciation: ஒரு உயிரி பல உயிரிகளாக பிரிதல்],உயிரிகளில் ஏற்படும் வித்தியாச விலகல்[divergence of life] இதனை தோற்றுவித்தது என்பதை உயிர் வேதியியல், உரு அமைப்பு ஒப்பீடு மற்றும் ஜீனோம் ஒப்பீடுகளில் இருந்து உறுதி செய்கிறோம்.

 இப்படி பல்வேறு வகை உயிரிகளின் பொது முன்னார் ஒரு உயிரி என்னும் கருத்தை விரிவுபடுத்தி, அனைத்து உயிரிகளும் 380 கோடி வருட முந்தைய நுண்ணுயிர்' ல் இருந்தே கிளைத்து தழைத்தன என்பதே பரிணாமத்தின் முக்கிய கோட்பாடு ஆகும்[Common ancestry]. அனைத்து உயிர்களின் ஜீனோமும் ஒரே மாதிரியான வேதிப் பொருள்களை கொண்டு இருப்பது இதனை உறுதிப் படுத்துகிறது.வாழும் உயிரிகளின் ஜீனோம் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதாலும் ,மறைந்த உயிரிகளின் ஜீனோம் நம்மிடம் இல்லை என்பதாலும் மட்டுமே பல் புதிர்களை அவிழ்க்க சிரமாக இருக்கிறது. இதுவரை பூமியில் தோன்றிய அனைத்து உயிரிகளின் ஜீனோம் மட்டும் இருப்பின் பரிணாம தொடர்புகளை மிக நுட்பமாக விளக்கி இருக்க முடியும்.

சரி முதல் நுண் உயிரி எப்படி இருந்தது, எப்படி வந்தது என்பது சிக்கலான  தீர்க்கப்படாத விடயமே. இதற்கு பல கருதுகோள்கள் உண்டு என்றாலும், தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஒரு நுண்ணுயிரி செல்லில், இயற்கை ஜீனோமுக்கு பதில், செயற்கை ஜீனோமை வைத்து ,புதிய நுண்ணுயிர் உருவாக்கும் அளவிற்கு முன்னேறி இருப்பதால், இன்னும் சாதனை தொடரும் என்வே எதிர் நோக்கலாம்.

Synthetic Genome+Natural Cell=New Life?

Craig Venter has taken yet another step towards his goal of creating synthetic life forms. He’s synthesized the genome of a microbe and then implanted that piece of DNA into a DNA-free cell of another species. And that…that thing…can grow and divide. It’s hard to say whether this is “life from scratch,” because the boundary between such a thing and ordinary life (and non-life) is actually blurry. For example, you could say that this is still a nature hybrid, because its DNA is based on the sequence of an existing species of bacteria. If Venter made up a sequence from scratch, maybe we’d have crossed to a new terrain.

**
4. ஒரு சமீப கால பொது முன்னோரில் இருந்து தோன்றிய உயிரிகளின் உரு அமைப்பு, ஜீனோம் அமைப்பு அதிகம் நெருங்கியதாக இருக்கும்.இந்த ஒப்பீடுகள்,ஆய்வுகள் மூலம், பரிணாம வரலாறு, வாழும் உயிரிகள், மறைந்த உயிரிகளின் படிம வரலாறு மூலம் கட்டமைக்கப் படுகிறது.இப்போது காணப்படும் உயிரிகளின் வகைப்படுத்தல் ஒழுங்குகள், சிற்றினமாதல், உயிரின மறைவு[Extintion] ஆகியவற்றால் ஏற்பட்டது.

இரு ஒத்த உரு அமைப்பு கொண்ட வாழும் உயிரிகளின் ஜீனோம் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் அவை பொது முன்னோரில் இருந்து எப்போது பிரிந்த்ன என்பதையும் கண்க்கிட முடியும். இது ஜீனோம் கடிகாரம் எனப்படுகிறது. இந்த கண்கீட்டு காலம் அருகில் இவற்றின் பொது மூல முன்னோரின் படிமம் இருக்கும்.கால‌ வித்தியாசம் வந்தால் ஜீனோம் கணக்கீட்டை விட படிம காலமே ஆதாரப் பூர்வமாக எடுக்கப்படுகிறது.

இந்த கணக்கீடுகள் கொண்டு பரிணாம மரம் கட்டமைக்கப் பட்டது. ஒவ்வொரு வாழும் உயிரியின் வரலாற்றை, முதல் நுண்ணுயிரி வரை அறிய முடியும்.

பரிணாமம் என்பது உயிரின 380 கோடி வருட வரலாறு. இதற்கு பல சான்றுகள் உண்டு.ஆய்வ‌கங்களில் பரிணாம பரிசோதனைகளில் ஜீனொம் மாற்றம் உரு அமைப்பில் மாற்றம் ஏற்படுத்துவது நன்கு ஆவணப் படுத்தப் பட்டு உள்ளது.

http://genome.cshlp.org/content/17/6/682.full
Figure 1.

பெரும்பரிணாமம் என்ப்படும் ஒரு உயிரி சில உயிரிகளாக பிரிவது மட்டும் அதிக காலம் எடுக்கும் செயல் என்பதால்  நுண்ணுயுரி,பழ ஈக்களில் நடைபெறுகிறது. பல சான்றுகள் இதனை மெய்ப்பிக்கும் விதமாகவே உள்ளன. பெரும்பரிணாம பரிசோதனை சான்றுகள் பற்றியே மீண்டும் இத்தொடரில் எழுதுவோம்.

இப்பதிவில் இதோடு நிறுத்துவோம். பரிணாமம் பற்றிய எளிய விளக்கம், ஆதரவு சான்றுகள் பற்றி மட்டுமே பார்த்து இருக்கிறோம். எதிரான வாதங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

நண்பர்கள் இந்த பதிவு தொடர்பாக மட்டுமே கேள்வி கேட்க வேண்டுகிறோம்.
பரிணாமத்தின் எதிரான ஆதாரமாக வைக்கப் படும் விடயங்கள் மேல் அடுத்த பதிவில் விவாதிப்போம்.




நன்றி!!!

"மிகச் சிறந்த விஞ்ஞானிகள் வஹாபிகள் இல்லை


"





வணக்கம் நண்பர்களே,

நகைச்சுவைப் பதிவு இடுவதில் வஹாபிகளுக்கு நிகர் எவரும் இல்லை என்பதை மீண்டும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ம(னி)தாபிமானி என்ப்படும் பதிவர் நிரூபித்து உள்ளார்.


அறிவியல் என்பது என்ன என்பதை உணர மாட்டோம், பரிணாம அறிவியலை மறுத்தாலும் , அது குரானைப் பொய்யாக்கும் என்றால் பம்மி விடுவது, ஒரு உயிரினம் என்பதை எப்படி வரையறுப்பது என்ற கேள்விக்கு பதில் சொல்ல மறுப்பது என பல்விதங்களில் நகைச்சுவை காட்டி வரும் வஹாபி சகோ ஆஜிக் அகமதின் லேட்டஸ்ட் பதிவிற்கு மறுப்பு சொல்ல நாத்திகர் என்னும் இடத்தில் வஹாபிகள் என்ப் போட்டால் போதுமானது.

நாம் மூமின்களிலும் எதார்த்த சூழல் சிந்திக்கும் சூஃபிக்கள் இருப்பதால் வஹாபிகளின் வரட்டுத்தன பிரச்சாரம் மட்டுமே எதிர்த்து வாதம் வைக்கிறோம்.

சவுதி அரச மதம் வஹாபியியத்தை விளம்பரம் செய்ய அங்கிருந்து முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது என அறிவோம்.

சவுதி அரசை விமர்சிக்கும் எந்த செயலும் கடுமையாக ஒடுக்கப்படும் என்பதும்,சில தினங்களுக்கு முன்பு சில் ஜனநாயகப் போராளி அரபு சகோதரர்கள் கைது செய்யப்பட்டு 10 வருடம் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள். 

Saudi Arabia jails two prominent activists

Founding members of the banned Saudi Civil and Political Rights Association are sentenced to 10 years in prison.

A Saudi Arabian court has sentenced two prominent political and human rights activists to at least 10 years in prison for offences that included sedition and giving inaccurate information to foreign media.
Mohammed Fahd al-Qahtani and Abdullah Hamad are founding members of the banned Saudi Civil and Political Rights Association, known as Acpra, that documents human rights abuses.
Qahtani was sentenced to 10 years. Hamad was told he must complete the remaining six years of a previous jail term for his political activities and serve an additional five years.
They will remain in detention until a judge rules on their appeal next month.

பரம்பரை அரச உரிமை என்பது மதத்தின் படி தவறானது என சொல்லும் தைரியம் உள்ளவர்கள் சவுதியில் இருக்க முடியாது. இதுதான் வஹாபியியம்.

சரி பதிவுக்கு செல்வோம்.

 **

சவுதி அரசின் மாபெரும் கிருபையால், லண்டனில், "இஸ்லாமா? நாத்திகமா? - எது அறிவுக்கு ஒத்துவருகின்றது?" என்ற தலைப்பிலான விவாதம் அருமையாக நடந்து முடிந்தது. விவாதம் அறிவிக்கப்பட்ட சில நாட்களில் இதற்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பதில் இருந்து இந்த விவாதத்திற்கு இருந்த ஆர்வத்தை அறிந்துக்கொள்ளலாம். 

பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் (IERA) சார்பில் ஹம்ஸா ஆண்ட்ரியசும், நாத்திகத்துக்கு ஆதரவாக நன்கறியப்பட்ட இயற்பியல் ஆய்வாளர் லாரன்ஸ் க்ராஸ்சும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். 


மிக சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இந்த விவாதத்திற்கு நேரடி ஒளிபரப்பு இல்லையென்றாலும், IERA சார்பில் உடனுக்குடனான அப்டேட்கள் முகப்பக்கத்தில் பதியப்பட்டன. ஹம்ஸாவின் திருப்பி திருப்பி அதுதான் இது, யூதன் இட்டுக் கட்டியது  என்னும்வாதத்திறன் மற்றொரு முறை என்னை வியப்பில் ஆழ்த்தியது. "அட ஆமாம்ல" என்று எண்ணும் அளவிற்கு மிக ஆழமான கருத்துக்கள்.

இன்னும் சில நாட்களில் விவாத வீடியோ வந்துவிடும். அறிவுக்கு நல்ல தீனியாக அமைந்த இந்த விவாதத்தில் பார்வையாளர் நேரத்தில் ஒரு கேள்விக்கு இப்படியாக பதில் சொல்கின்றார் க்ராஸ். 

"science doesn't require you to be an Muslim, I know very good scientists who aren't Muslims - 

அறிவியல் நீங்கள் முஸ்லிமாக இருக்கும்படி கூறவில்லை. நான் அறிந்த மிகச் சிறந்த விஞ்ஞானிகள் முஸ்லிம்கள் இல்லை" 

அட்ரா சக்க...:-) இதை தானே பல காலமா சொல்றோம்? அறிவியல் என்பது ஆன்மீகத்திற்கான‌ வழியல்ல. அறிவியல் உலகில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் முஸ்லிம் அல்லாதவர்களே. 

இந்த உண்மை க்ராஸ் மூலமாக மற்றொரு முறை வெளிவந்ததற்கு மகிழ்ச்சி. 
**

நாம் மாற்றிய சேர்த்த சொற்களை சிவப்பில் காட்டி இருக்கிறோம். மதவாதிகள் மத(ட) புத்தகத்தில் அறிவியல் என்பது வார்த்தை விளையாட்டு ஏமாற்று வேலை என்றாலும், அறிவியல் மதத்தை விட உயர்ந்தது என்பதால்  , அறிவியல் போல் மத புத்தகம் எனக் காட்டி இணை வைத்தாலும், காஃபிர் என்னும் சொல்லை நாத்திகர் என மொழி ஏமாற்றம் செய்தாலும் வஹாபியியத்தின் பருப்பு தமிழகத்தில் வேகாது!!.


அறிவியல் என்றால் சான்றுகளின் மீதான பொருந்தும் விளக்கம்

நாத்திகம் என்றால் சான்று இல்லாத விடயத்தை ஏற்க மறுத்தல்!!!

இன்னும் இங்கே படியுங்கள்!!!

நாத்திகம் ஆத்திகம் ஒரு எளிய விளக்கம்



மதம் நிரூபிக்க அகழ்வாய்வு,மொழியியல் சான்றுகள் வேண்டும். அப்படி எதுவுமே எந்த மதத்திற்கும்,குறிப்பாக‌ வஹாபியியத்திற்கு இல்லை என கூறுகிறோம்.மதத்திற்கு வரலாற்று சான்றுகள் இருந்தால் பதிவுகள் இட்டு விவாதிக்க வேண்டுகிறோம்.

மதப்பிரிவினரிடையே கூட , இறைவனுக்கு உருவம் உண்டா?, மதபுத்தக எழுத்து பிரதிகளில் தவறு உண்டா என்னும் அடிப்படைப் பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து இல்லை.

முதலில் ஒருமித்த மத புத்தக[குரான்] மொழியாக்கம், ஒரே விளக்கம், துணைப்புத்தகங்ளில்[ஹதித்] மிச்சம் மீதி வடிகட்டிய தகவல்களில் ஒருமித்து கருத்து ஏற்பட்டால் மட்டுமே இஸ்லாம் ஒரே மதம் என ஏற்க முடியும். ஆகவே இஸ்லாம் என்பதை ஒரு குழு மதப் பிரிவுகள், மூலம் ஒன்றா என பரிணாம பாணியில் வினவுகிறோம். 

**
அறிவியலாள‌ர்களின் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே சீர்தூக்கி பார்த்து சான்றுகளின் அடிப்படையில் ஏற்கப்படும்.அறிவியலாளர்களின் ஆய்வு மட்டுமே பரிசோதித்து ஏற்று கற்க மட்டுமே.அது தவிர்த்து அறிவியலாளர்களின் செயல்களைப் பின்பற்றுதல் முட்டாள்தனம்.

இராக்கெட் விட நல்ல நேரம் பார்த்து இராக்கெட் விடும் விஞ்ஞானிகளும் உண்டு.இயற்கைப் பாழாக்கும் தொழில் நுடபம், மனித சமூக அழிக்கும் ஆயுதங்களை வடிவமைக்கும் விஞானிகளும் உண்டு.

அறிவியல் என்பது சமூக நலனுக்கு,பாம‌ரனுக்கும் பயன் தரும் வகையில் இருக்க வேண்டும்.

அது தவிர 'அஆஇஈ' செய்தார் எல்லோரும் செய்வோம் என்பது வடிகட்டிய முட்டாள்தனம்.எங்கள் 'அஆஇஈ' செய்தார்,அதனைக் கேள்வி கேட்காமல் ,பின்பற்றுவோம், பின்பற்ற முடியாத அருவறுப்புகளை வேண்டா வெறுப்பாக நியாயப் படுத்துவோம் என்பதுதானே வஹாபியம்.

உலகில் அதிக விஞ்ஞானிகள் யூதர்களே,அப்படி எனில் அது மட்டுமே சரியான மதமா??
ஆகவே அறிவியல் ஆய்வாளர்களின்  இறை நம்பிக்கை சார்ந்து , மதம் நாடுவது என்றால் யூதம் மட்டுமே சரி!!

வஹாபிகள் சிந்திக்க மாட்டார்களா??!!!.

**

பரிணாமம் உண்மை என்றால் வஹாபியியம் பொய்யாகி விடும் என்பதால் , அதனைக் காப்பாற்ற ஆஸிக் அகமது  மீண்டும் பரிணாம எதிர்ப்பு  பதிவு மட்டுமே அடிக்கடி எழுத வேண்டுகிறோம்.ஹி ஹி நாமும் மறுப்பு உடனே  இடுவோம்.

 மனிதாபிமானிக்கு கேள்விகள்.

1. ஆத்திகர் அனைவரும் சுவனம் போவாரா?

2. குரானில் பல் இடங்களில் வசை பாடப்பட்டு கரித்து கொட்டபடும் [அரபி சொல்] காஃபிர் என்பதன் பொருள் நாத்திகரா?

3.இஸ்லாமின் எந்தப் பிரிவு சரியானது? சரியான பிரிவு அல்லாதவர்கள் ஆத்திகரா,காஃபிரா,நாத்திகரா?

இந்த கேள்விகளுக்கு விடை தெரிந்தும் வழக்கம் போல் சொல்லாமல் போனால் கிடைக்கும் பலனின் எண்ணிக்கை[ ஹி ஹி அவங்கதான்} ஒன்று குறைந்து விடும்.

சகோதரி ரிசான நஃபீக்கின் கொடூர தண்டனைக்கு எழுந்த எதிர்ப்பு கண்டு பயந்த  காட்டு மிராண்டி சவுதி அரசு ,பொது இடத்தில் மக்கள் கூட்டம் முன் தலை வெட்டும் தண்டனைக்கு பதில் தூக்கு, துப்பாக்கியால் சுடுதல் என தனியான இடத்தில் தண்டனை நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது என்பது நல்ல செய்தி

Saudis 'consider nullifying' public beheading

Saudi daily Al-Watan says that a ministerial committee is considering fatal shootings as an alternative.



A ministerial committee is looking into formally dropping public beheadings as a method of execution in Saudi Arabia, a local newspaper has reported.
The authoritative daily Al-Watan said in its Sunday edition that the ministerial committee was considering fatal shootings as an alternative.
There was no official confirmation immediately available of the newspaper's report.


மாற்றம் ஒன்றே மாறாதது,சூழல் பொறுத்து மாற மறுக்கும் எதுவும் அழியும் என்பதே பரிணாம விதி!!



மதவாதிகள் விவாதத்தில் சுத்தி வளைத்து மூக்கைத் தொடு என்னும் திருப்பி திருப்பி சொல்லும் ஒரே வாதம்[ circular reasoning ] தவிர்த்து எதையும் சொல்ல மாட்டார்கள் . அது பற்றி கொஞ்சம் அறியுங்கள்!!!

Circular reasoning (also known as paradoxical thinking[citation needed] or circular logic), is alogical fallacy in which "the reasoner begins with what he or she is trying to end up with".[1] The individual components of a circular argument will sometimes be logically valid because if the premises are true, the conclusion must be true, and will not lack relevance. Circular logic cannot prove a conclusion because, if the conclusion is doubted, the premise which leads to it will also be doubted.[2]Begging the question is a form of circular reasoning.[3]


இந்த புத்தகம் சொல்வதால் , கடவுள் உண்மை.

சரி புத்தகம் எப்படி உண்மை ஆகும்?

ஏன் எனில் அது கடவுளிடம் இருந்து வந்தது!! ஹி ஹி


This is circular argument!!!!






நாம் நம் மத்வாத சகோக்கள் யாரையாவது முன்னிலைப் படுத்தினால், அவர் பரிணாம கொள்கை மீது என்ன கருத்து கொண்டு இருக்கிறார் என கண்டறிவோம். அந்தவகையில் வழி நடத்தப் பட்ட பரிணாமம் என்னும் கொள்கை உடைய ஆத்திகர்களை நாம் கன்டு கொள்வது இல்லை.

ஹம்ஸாவின் பரிணாமம் சார் கருத்து , அது அறிவியலில் ஒருமித்து சான்றளிக்கப்ப்ட்டு ஏற்கப் பட்ட கொள்கை என் ஏற்பதனைக் காட்டுகிறது. அறிவியல் ஆய்வாளர்கள் முஸ்லிம்களுக்கு சரியாக புரிய வைக்க முயற்சிக்க‌வில்லை என மட்டுமே கருத்து தெரிவிக்கிறார்.  



Over the past few decades there has been a growing discourse on science, evolution and its compatibility with Divine revelation. This discourse can be summarised in the following way: the theory of evolution has been established as a scientific fact therefore a believer in a particular revealed text, such as the Qur’an, must reconcile evolution with their holy book. If there is no hope for reconciliation there are three main outcomes: the religious text is discarded, evolution is renounced, or a hope for a better understanding of the religious text and evolution in the future. However, in this growing discussion there is a hidden premise. This premise is that science produces certainty, evolution is fact and science is the only way to establish or verify truth claims. This premise is assumed in the popular discussion amongst many religious people, popular scientists and even the media, and by not bringing this premise to the forefront of the debate many Muslims (and fellow theists) have been left confused and disheartened.

...
Since revealed texts are certain and science cannot produce certain knowledge, revealed texts will always supersede science if there is a need for reconciliation and if there are irreconcilable differences. For the Muslim, this revealed text is the Qur’an, and this text can be established as a Divine book outside of the method and philosophy of science using deductive arguments.

அப்புறம் சமர் சால்ட் அடித்து, குரான் இறைவன் வேதம் என்பதால், அவசியம் என்றால் மட்டும் , பரிணாம கொள்கையோடு சமரசம் செய்து கொள்வோம் என் சொல்வது நகைச்சுவை. அதாவது குரான் சொல்வது பரிணாமத்துக்கு முரண்,ஆகவே பரிணாமம் தவறு என்று சொல்ல துணிவு இல்லாமல் ஹம்சா நழுவுகிறார்.


அதாவது பரிணாமத்தை ஏற்றே ஆக வேண்டிய சூழல் வந்தால், ஹி ஹி குரானின் பொருளை வழக்கம் போல் மாற்றி அதுதான் இது என  காட்டுவோம் என்பதை மார்க்க சிந்த்னையில் உரைக்கும் ஹம்சா நன்றாக கல்லா கட்ட வாழ்த்துகிறோம். 

தந்தை பெரியாரை விமர்சிக்கும் கூற்று சுட்டுதல்[Quote Mining] என்னும் குருட்டுவாதம்







வணக்கம் நண்பர்களே ,

சென்ற பதிவில் திருப்பி திருப்பி சொல்லும் சுற்று வாதம்[circular argument] பற்றி ஒரு எ.கா வுடன் அறிந்தோம். இப்பதிவில் இன்னும் ஒரு வாதம் பற்றி அறிவோம்.

மனிதர்களில் பலர் பலவிதமான் கருத்துக்களை கொண்டு இருத்தல் இயல்பே,இது அவர் பிறந்த ,வளர்ந்த சூழல், கல்வி சார்ந்தது என்பதல் பல முரண்பாடான கருத்துகள் உலகில் இருப்பதில் வியப்பு இல்லை.

ஆத்திகம் ,நாத்திகம்
முதலாளித்துவம்,பொது உடமை
ஜனநாயகம், மன்னராட்சி
மத சார் ஆட்சி,மத சார்பின்மை ஆட்சி

என பல ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துகள் சார் விவாதம் நாம் வாழ்வில் கண்டு,அறிந்து இருக்கிறோம்.

இதில் மதவாதிகள் ஆத்திகர் என்னும் வேடம் பூண்டு,நாத்திகர்களுடன் நடத்தும் விவாதங்கள் அதிகம் நடைபெறுகிறது.

ஆத்திகம்,ஆன்மீகம் என்பதற்கு சான்று இல்லாமையால்,நாத்திகர்களின் தவறுகள் எதையாவது தோண்டி அதன் மூலம் வெற்றி பெற மதவாதிகள் முயல்வது அந்த விவாதங்களில் காண முடியும்.

சென்ற பதிவில் மதவாதிகள் தங்களின் நம்பிக்கையை நிறுவ சுற்றுவாதம் பயனப்டுத்துவர் எனக் காட்டினோம்.

கேள்வி:கடவுள் உண்டு என் எப்படி சொல்கிறாய்?

பதில்: மத புத்தகம் சொல்கிறது

கேள்வி: மத புத்தகம் சொலவது எப்படி சரியாகும்?

பதில்: இதில் அறிவியல் இருக்கிறது. இன்று ஒரு கண்டுபிடிப்பு வந்தால்,அந்த பொருள் வரும் வசனம் மறுநாள் காட்டுவோம்.

கேள்வி: ஏன் முன்னரே சொல்லக் கூடாது?.

பதில் :முடியும் என்றாலும், பிறகு சொன்னால்தானே உங்களுக்கு புரியும். ஹி ஹி. கண்டுபிடிப்பு வரவரத்தான் எங்களுக்கே வசனம் சரியாக புரிகிறது.

கேள்வி: மத புத்தகம் வழங்கப்பட்டவர் பொய் சொல்லி இருக்கலாமே!!

பதில்: மத புத்தகம் அப்படி சொல்லவில்லை.இதில் உள்ளது போல் சில அத்தியாயம், நாங்கள் ஏற்கும் வண்ணம் தர  முடியுமா?
*
இந்த வாதங்களில் இருக்கும் வெற்றுத் தன்மை எளிதில் புரியும், இதுதான் அதுதான் இது என் சுற்றி சுற்றி வருவது எதையும் முடிவுக்கு வரவிடாது.

ஒருவேளை எதிர்காலத்தில் வேறு வழியின்றி  பரிணாமம் ஏற்க வேண்டும் என்றாலும் ,அது ஏற்கெனெவே சொல்லி இருக்கிறது என்ற தொனியில் மட்டுமே சொல்லி ஏற்பார்.இப்போதைய பரிணாம எதிர்ப்பில் கூட ஒரு எச்சரிக்கை உணர்வை பார்க்க முடியும்.  

மத்வாதிகளுக்கு தங்கள் தரப்பின் சான்றின்மை நன்கு தெரியும் என்பதால் ஆம்/இல்லை கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்ப்பர். தங்கள் தரப்பு நிலைப்பாட்டை சொல்ல மறுப்பர். .இப்பதிவில் கூற்று சுட்டுதல்[quote mining] என்னும் வாதம் பற்றி அறிவோம்.
**

மதவாதிகள் பயன்படுத்தும் ஒரு கோமாளித்தனமான வாதம் கூற்று சுட்டுதல்[Quote mining] என்பதாகும்.

நாத்திகர் தரப்பு அறிஞர் ஒருவர் ஏதோ ஒரு காலகட்டத்தில், குறிப்பிட்ட சூழலில் சொன்னது இப்போதைய சூழலுக்கு தவறாகத் தெரிவதால், அவர் சொன்னது அனைத்தும், நாத்திகர் சொல்வது அனைத்தும் தவறே என்பதுதான் இந்த கூற்று சுட்டுதல் வாதம்.


Quote mining is the deceitful tactic of taking quotes out of context in order to make them seemingly agree with the quote miner's viewpoint or to make the comments of an opponent seem more extreme or hold positions they don't in order to make their positions easier to refute or demonize.[1] It's a way of lying. 

ஒருவர் ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு சொன்னதை,அனைத்து விடயங்களுக்கு சொன்னதாக் திரித்து தங்கள் வாதத்திற்கு ஆதரவு சேர்க்கும் முயற்சி.

மனிதர்கள் சூழல் சார் கைதிகள். ஒருவர் வாழும் சூழல் சார்ந்து மட்டுமே முடிவு எடுக்க,வாழ‌ முடியும். எனினும் சில கருத்து,அறிவுரை கூறும் போது அச்சூழலை மேம்படுத்தும் விதமாக சொல்வது உண்டு.இவை எதிர் காலத்தில் சூழல் சார்ந்து ஏற்க(நிராகரிக்க)ப்படும்.

ஒருவர் ஒரு பிரச்சினையில் கொண்ட நிலைப்பாடு என்ன என்பதை அவரின் வாழ்வு,செயல் சார்ந்து மட்டுமே அவதானிக்க முடியும். ஒரு குறிப்பிட்ட கூற்றினை மட்டும் சொல்லி அவரின் அனைத்து கருத்துகளையும் தவறாக காட்டுவது ஏமாற்றுவேலை ஆகும். 

ஒருவர் பல கருத்துகளை,பல சூழல்களில் சொல்லி இருக்கிறார்,சில நிலைப்பாடுகள் எடுத்து இருக்கிறார்.ஒரு அறிஞ‌ரின் ஒரு பிரச்சினை சார் கருத்துகளில் ஒரு கூற்றினை மட்டும் எடுப்பது சரியல்ல. அது எந்த சூழலில் சொல்லப்பட்டது,அதற்கு முந்தைய பிந்தைய நிலைப்பாடுகள் அனைத்தையும் சார்ந்து விமர்சிக்க வேண்டும்.

நம்ம மாப்ளே தாசின் பதிவில் பெண் திருமணம் செய்ய வேண்டாம், கருப்பையை எடுக்க வேண்டும்.ஆண் எனவே பெண் அழைக்கப்பட வேண்டும் என பெரியார் கூறினார் என் விமர்சித்து பதிவு இட்டார்.

அவரின் பதிவில் இருந்து
**
1. இந்த விவாதத்தில் முதலில் எடுத்துக் கொண்ட பாயிண்ட் பெரியார் போதித்த பெண் சுதந்திரம் அவர் கருத்துப் படி:

பெண்களுக்கு திருமணமே கூடாது.பெண்களும் ஆண்கள் மாதிரியே கிராப் வெட்டி பேன்ட் சட்டை  போட்டுக் கொள்ள வேண்டும்.பெண்கள் நகை ஸ்டேன்ட் ஆகிவிட்டார்கள் எனவே அவர்கள் இனி நகையணியக் கூடாது.
கர்ப்பப் பை இருப்பதால் தானே ஆண் அவளை கர்ப்பமாக்கி அடிமைப் படுத்து கிறான்?  எனவே அவள் கர்ப்பப் பையை வெட்டிப் போட வேண்டும்.பெண்ணை இனிமேல் பெண் என்றே அழைக்க கூடாது, ஆண் என்று தான் அழைக்க வேண்டும்!! 

ஆத்தீகர்களின் குற்றச் சாட்டு:  இதை பெரியார் கட்சிக் காரர்களே யாரும் பின்பற்றவில்லை நடைமுறைக்கு ஒவ்வாதது.  மனோதத்துவ டாக்டர் ஷாலினியின் வாக்குப் படியும் திருமணமில்லாத வாழ்க்கை பெண்ணிற்கு உகந்ததல்ல. பெரியாரே பல திருமணங்களை முன்னின்று நடத்தியிருக்கிறார், அவரே இரண்டாவதாகவும் திருமணம் செய்திருக்கிறார்.  பெண் சுதந்திரம் என்ற அவர் திருமணம் புரிந்து ஒரு பெண்ணை தனக்கு பணிவிடை செய்யும் அடிமையாக்கி இருக்கிறார். இது முரண். எப்பேர்பட்ட கொலைகாரனாக, கொள்ளைக் காரனாக  இருந்தாலும் அவனுக்கும் என்று ஒரு வக்கீல் வந்து ஆஜராவான், அதுமாதிரி கூட இந்த கொள்கைக்கு பெரியார் உட்பட ஒருத்தரும் ஆதரவாக இல்லை.
**

பெரியாரின் காலத்தில் பால்ய விவாகம்,தேவதாசி முறை,பலதாரமணம்,சொத்துரிமை இன்மை, விதவைக் கோலம் போன்றவை இந்து சமூகத்தில் மிக இயல்பாக இருந்தது என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

பெண் ஏன் அடிமை ஆனாள் என்னும் நூலில் தனது பெண் விடுதலைக் கருத்துகள் அனைத்தையும் தொகுத்து கூறுகிறார்.

அந்நூலில் பெண்களின் அக்கால நிலை குறித்து அவர் அடையும் கவலை,அடையும் கோபம் போன்றவை நன்கு அப்புத்த்கத்தில் வெளிப்படுகின்றன்.

புத்தகம் இங்கே தரவிறக்கி அனைவரும் படியுங்கள். ஒரு மனிதன் சுமார் 90 வருடங்களுக்கு முன் இந்த கொள்கைகள் கொண்டு இருப்பது வியப்புதான்.


முகப் புத்தக கண்க்கு கொண்டு தரவிறக்கலாம்.

பால்ய விதவைகளின் எண்ணிக்கை 1921ல் மக்கள் தொகை கணக்கின் படி தமிழகத்தில் சில இலட்சங்களில் இருந்ததையும் அப்புத்த்கத்தில் குறிப்பிடுகிறார்.

ஒரு பெண் 10 வயதில் விதவைக் கோலத்தில் வாழ்நாள் முழுதும் கழிப்பதை பார்க்கும் ஒருவருக்கு வரும் கோபம்தான் பெரியாரின் அக்கருத்து. இப்படி திருமணம் செய்யாவிட்டால் என்ன,குழந்தை பெறாவிட்டால்தான் என்ன்? என்பது எனக்கு எந்த விதத்திலும் தவறாக தெரியவில்லை.பெண் ஆணுக்காக பணியாற்ற படைக்கப் பட்டவள் அல்ல.ஆணைக் கவரும் வண்ணம் உடை உடுத்தாமல் ஆண் போல் முடி வெட்டி, ஆடை அணிவதில் தவறு என்ன?

அதே காலத்தில் வாழ்ந்த காந்தி,  இவ்விடயத்தை ஒரு பிரச்சினை கருதி பலமுறை எழுதி இருக்கிறார்.


807. Widow-remarriage is no sin—if it be, it is as much a sin as the marriage of a widower is .All widowhood is not holy. It is an adornment to her who can observe it. If this sister has the courage, then let her speak out her mind to her uncle and brothers and seek their help. It they cannot assist in the marriage, then the sister will have to quit their house and take refuge in some widow-remarriage institution.
–(Translated from the Hindi Navajivan of 9-5-29.)

808. Some Brahman students told me that they cannot follow this principle, that they cannot get Brahman girls sixteen years old, very few Brahmans keep their daughters unmarried till that age, the Brahman girls are married mostly before 10, 12 and 13 years. Then I say to the Brahman youth, ‘Cease to be Brahman if you cannot possibly control yourself. Choose a grown up girl of 16 who became a widow when she was a child. If you cannot get a Brahman widow who has reached that age, then go and take any girl you like. And I tell you that the God of the Hindus will pardon that boy who has preferred to marry out of his caste rather than ravish a girl of twelve.’ –YI, 15-9-27, 314..

பாவம் திரு காந்தி பழமைக்கும்,நியாயம் இரண்டுக்கும் இடையில் தள்ளாடியாவது உண்மை சொல்கிறார்.

ஒருவரின் கருத்து இன்றும் சிலரை பாதிக்கும் போது அது விமர்சித்தால் சரி. ஏதோ ஒரு சூழலில் சொல்லும் கூற்றை திரித்து அது எப்போதும் பொருந்துவது போல் காட்டுவது தவறு.

தந்தை பெரியாரின் மீதான அவதூறுகள் அன்றில் இருந்து இன்றுவரை தொடர்வதே அவர் தமிழ் சமூகத்தின் மீது எழுப்பிய தாக்கமே.

ஒரு மனிதன் வாழும் கால நடைமுறைகளை விமர்சிப்பதும்,மாற்ற முயல்வதும் சமூக புரட்சிக்கு வித்திடுகிறது.

ஒரு மனிதர் வாழும் கால சூழல் சார்ந்து கருத்து சொல்வதும் இயல்பே.

பெண்கள் கருப்பையை அகற்ற வேண்டுமென்று சொல்லும்போது 'மனித இனவிருத்தி அற்றுப்போகுமே?' என்று பகுத்தறிவுக் கேள்வி கேட்கப்பட்டபோது பெரியாரின் பதில்.

" மனிதஜீவராசிகள் அற்றுப்போனால், புல்பூண்டு, விலங்கு விருத்தியடையட்டுமே. இதுவரை விருத்தியடைந்த மனிதச் சமூகம் பெண்ணுக்கு என்ன செய்து கிழித்தது? எனக்கு மனிதச்சமூகம் விருத்தியடைவது குறித்துக் கவலையில்லை, பெண்ணின் விடுதலைதான் முக்கியம்'.

நாமும் அதைத்தான் மனிதர்களை மதம் ,இனம்,மொழி சார்பற்று சமமாக நடத்தாத மதம், அரசு அமைப்புகள் தேவையில்லை எனவே கூறுகிறோம்.

பெண்களின் மக்கள் தொகை குறைவதால், மாநிலம் விட்டு மாநிலம் சென்றும்,சில சமயம் நாடு விட்டு நாடு சென்றும் பெண் தேடும் வழக்கம் இன்று வந்த சூழலை நண்பர் நம்பள்கிபதிவிட்டார்.

பெண்கள் குழந்தை பெறும் இயந்திரமாக மாறுவதில் இருந்து விடுதலை வேண்டும் என்பதன் பொருள் இதுதான்.பெண்ணை மதிக்காத மதம்,சமூகம் அழியும் என்பதையே பெரியார் அவ்வாறு குறிப்பிடுகிறார்.

ஆகவெ கூற்று சுட்டும் முறையில்  பெரியாரை விமர்சிக்கும் முயற்சிகள் வரவேற்கப்படுகின்றன. அப்போதுதான் அவரின் எழுத்துகளை தேடிப்பிடித்து பதிவிட வசதியாக இருக்கும்.

பெரியாருக்கு சிலை வைத்து மாலை போடுவதால் மூட நம்பிக்கை என்கிறார்கள்.இன்றும்  சாமி சிலைக்கு அனைவரும் கருவரை சென்று மாலை போட முடியாத சூழலில் வாழ்கிறோம். இன்னும் சில உயர் சாதி சாமியார்கள் சாதி சார்ந்தே ஆசிர்வாத முறையும் இருக்கும். அதற்கு பெரியார் சிலைக்கு யாரும் மாலை போடலாம் என்பது பரவாயில்லை.

சிலைக்கு மரியாதையை விட அவரின் எழுத்துகளைப் படிக்கலாமே 
என்பதே நம் யோசனை.

பெரியார் மீது விமர்சனம் வைக்க அவர் காலத்தில் வாழ்ந்த  உத்தமர்களின் கருத்துகளை சொல்லி விமர்சிப்பது உத்தமம்.

நம் தாசு மதிக்கும் இஸ்கான் குரு பிரபுபாத பெண் 16 வயதுக்குள் திருமணம் செய்தாக வேண்டும் என் வலியுறுத்துகிறார்.

http://www.prabhupadavani.org/main/Walks/MW045.html

Pusta-krsna: In the Bhagavatam, you said that by the age of sixteen, a girl should be married, or twenty-four for a man. We were just reading that...

Prabhupada: That is the maximum.

Pusta-krsna: We were just reading that.

Prabhupada: The point is that supposing this twenty to thirty-six years is nice age... For women. But before twenty years, she is sacked, and her health is broken. What she'll produce, children? Because this is... The girls, from twelve years, thirteen years, nowadays, they begin sex.[Geneva, June 7, 1974]



இக்கால பெண்கள் 12 வயதிலேயே கெட்டுப் போவதால் சீக்கிரம், அதிகபட்சம் 16 வயதுக்குள் திருமணம் முடிக்க பிரபுபாத வலியுறுத்துகிறார்.

1974 ல் பிரபுபாத சொல்வது சரியா? 1930 ல் பெரியார் சொல்வது சரியா??

இது கூற்று சுற்றுதல் ஆக இருக்கும் வாய்ப்பினை நாம் மறுக்கவில்லை. எனவே தாஸ் திரு பிரபுபாத இக்கருத்திற்கு மாற்று சொல்லி இருக்கிறார் என மறுப்பு பதிவு இடுவார் என எதிர் நோக்குகிறோம்.

மத புத்தக மதங்களை ஏன் விமர்சிக்கிறோம்?




வணக்கம் நண்பர்களே,

பெரும்பான்மை மதங்களுக்கு கடவுள் கருத்துகள் அடங்கிய மத புத்தகம் உண்டு.இவை அக்கால மதத்தலைவர்களின் மூலம் மக்களுக்கு வழங்கப் பட்டது என்பார்.

இதில் மத்திய கிழக்கு மதங்கள் தங்களின் மத புத்தகம் எக்காலத்துக்கும் பொருந்தும் சட்ட திட்டம் கொண்டது என விளம்பரம் செய்கிறார்.பிரச்சாரங்களில் அதில் உள்ள சில வசனங்களை வெட்டி ஒட்டி  , தங்களின் விளக்கம் இணைத்து அருமையான மதம் பாரீர், வந்து ஜோதியில் ஐக்கியமாகி இம்மையிலும்,மறுமையிலும் இனபம் பெற உத்த்ரவாதம் தரும் ஒரே மார்க்கம் என பல பதிவுகள் தமிழ் மணத்திலும் வருகிறது. இது நேற்றைய பதிவு. 




தயவு செய்து அப்பதிவைப் படியுங்கள்.என்ன சகோ அருமையான கருத்துகள் ,அனைவருக்கும்,எக்காலமும் பொருந்தும் வகையில்தானே இருக்கிறது!!. இதையும் விமர்சித்தால் உங்களுக்கு நாத்திக வெறி முத்தி விட்டது என பொருள் என்னும் மதச்சார்பிமையில் மூழ்கி முத்தெடுக்கும் தமிழ் சகோக்களே!! அப்பதிவைப் படித்து விடுங்கள்!!

படித்து விட்டீர்களா!!

நாம் என்ன சொல்கிறோம்!!
மத புத்தகங்கள் ஒரு இனக்குழுவை மேன்மைப் படுத்த,அவர்கள் செய்யும் விடயங்களை கடவுள் சொல்லி செய்தோம் என் நியாயப் படுத்தி விளக்க்வே உருவாக்கப் பட்டவை. இனக் குழு தலைவர்கள் தனிமையில் இருக்கும் போது கடவுளிடம் இருந்து வந்த செய்திகளே மத புத்தகம் ஆனது என அவர்களும் சொல்கிறார்கள்.

ஆகவே 

மத புத்தகம் இனவாதம், இன மேட்டிமை[racist supremacy] பேசுகிறது.

இதனை நிரூபிக்க முடியுமா என்றால் முடியும், மத புத்தக மதங்களின் முதல் எதிரி அவர்களின் மத புத்த்கமே. அதில் அவர்கள் சுட்டும் வசனம் மேல் கீழ் கொஞ்சம் படித்தால் இப்படி ஒரு இனக்குழுவை,அதன் செயல்களை மட்டும் புகழ்பாடுவது புரியும்.

அவர்கள் சொன்ன யாத்திராகமம்,23 ஆம் அதிகாரம் முழுதும் படிப்போம். அவர்கள் சொல்லாமல் விட்ட வசனங்களை சிவப்பில் தருகிறேன்.அத்தியாயம் 23 முழுதும் படியுங்கள்.




இந்த சூழல் என்னவெனில் எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூத மக்களை, அவர்களின் தலைவர் மோசஸ்[மூசா] த்ன்னிடம் கடவுள் பேசுவதாக சொல்லி, அவர்களுக்கு பாலும் தேனும் பாயும் நாடு கொடுப்பதாக சொன்னதாக கூறி அங்கிருந்து புறப்பட வைக்கிறார்.

40 வருடம் பயணித்து, இபோதைய இஸ்ரேல்,ஜோர்டான் பகுதிக்கு வந்து ,ஏற்கெனவே இருந்தவர்களை கொன்று,வென்று,ஆக்கிரமித்து நாடு அமைக்கிறார்.[இப்போதைய இஸ்ரேலின் கதையும் இதுதான்]. இது என்ன அயோக்கியத்தனம் எங்கிருந்தோ வந்து , பூர்வ குடிகளை விரட்டி ஆக்கிரமிக்கலாமா? என்றால் எங்கள் கடவுள் அனைத்தையும் படைத்தவர் அவரைக் கேள்வி கேட்காதே என மத புத்தகம் கூறும். அதனை விமர்சித்தால் மத நிந்தனை ஆகும்.

இதுதான் மத புத்தகம் கூறும் இனவாதம்!!

**
12. ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக.

[அடிமைப் பெண் எனபது போரில் தோற்கடிக்கப்பட்ட பூர்வ குடிகள்]
***
13. நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.
[தோற்கடிக்கப் படவனின் கடவுளை விட வென்றவன் கடவுள் பெரிது]
****
22. நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.

23. என் தூதனானவர் உனக்குமுன் சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன்.

24. நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.

[மத புத்தகம்[அதாவது மத குரு] சொல்வதைக் கேட்டால் தவறுகளுக்கு மன்னிப்பு, அடுத்தவன்[பூர்வ குடி] சொத்தை எடுக்கலாம்.பூர்வ குடிகளின் கடவுள் சிலைகளை உடை, தேவதூதர்கள் போரில் உதவுவார்கள்]

***
27. எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன் செல்லும்படி செய்வேன். நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையம் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன்.

28. உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.

29. தேசம் பாழாய்ப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல்,

30. நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன்.

31. சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.

32. அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக.

33. அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவஞ் செய்யப்பண்ணாதபடிக்கு உன் தேசத்திலே குடியிருக்க வேண்டாம்; நீ அவர்கள் தேவர்களைச் சேவித்தால், அது உனக்குக் கண்ணியாயிருக்கும் என்றார்.
***
இந்த வசனங்களுக்கு விளக்கம் தேவையில்லை!!

இப்படி மதபுத்தகம் இருப்பதற்கு இப்போதைய பிரச்சாரகர்கள் எப்படி பொறுப்பு ஆவார் என்றால், இப்படி மதபுத்தக் உண்மைகளை மறைப்பதுதான் பொறுப்பாளி ஆக்குகிறது.

மத புத்தக கதைகளுக்கு வரலாற்று சான்றுகள் இல்லை என்றாலும், அதனை அப்படியே எழுத்துக்கு எழுத்துக்கு நம்புவோரும் இருக்கிறார்.

இஸ்ரேல் என்பது யூதர்களுக்கு கடவுளால் கொடுக்கப் பட்டது என் இன்னும் ஜியோனிச யூதர் கூறுகிறார். அவர்களுக்கு உலகில் பல கிறித்துவ அமைப்புகள் ஆதரவு கொடுக்கின்றன.மத புத்தக கருத்துகள்,சட்டங்கள் இன்னும் பிரச்சினை வன்முறைகளுக்கு வித்திடுகின்றன!!!

மத புத்தக கடவுள் என்பவர் பாரபட்சம் இல்லாமல், ஜனநாயகவாதியாக‌,மத சார்பற்றவராக இல்லையே என்பதுதான் நம் கவலை !!!!!!!!

ஆகவே மத புத்தக பிரச்சாரம் கண்டால்,அந்த அத்தியாயம் முழுதும் படியுங்கள். பிரச்சாரகர் பொய் சொல்வது தெரிந்துவிடும்.

இதுவே மத புத்தக பிரச்சாரம் மறுக்கும் வழியாகும்!!!!

மனிதனுக்கு மதம் தேவையில்லை குறிப்பாக மத புத்தக மதங்கள்!!!

பரிணாமம் குறித்த சில விளக்கங்கள்





ஒரு நண்பர் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.இது அவ்ர் ஏற்பாரா இல்லையா என்பதை நாம்றியோம் எனினும் இது மற்ற்வர்களுக்கும் பயன்பட‌ட்டுமே என்பதுதான் நம் நோக்கம்.

//1.நாம் கேட்பது ஒரு உயிரினத்திலிருந்து மற்ற உயிரனமாக மாற புறத் தோற்றத்தில் அந்த விலங்கு 1,2,3,4 என்று பல நிலைகளை அடைந்து தற்போதய நிலையை அடைந்திருக்க வேண்டும். இதற்கு பல மில்லியன் வருடங்கள் ஆனதாக பரிணாமத் தத்துவம் கூறுகிறது.//

சரி. ஒரு உயிரின குழு இன்னொரு(சில) உயிரின குழுவாக(குழுக்களாக) காலப்போக்கில் இயற்கைத் தேர்வு+சீரற்ற‌ சிறு மாற்றங்கள் ஆகியவற்றால் மாறுவதை பரிணாம் வளர்ச்சி என்கிறோம்.இதில் ஒரு உயிரினக் குழுக்களிடையே நடக்கும் சிறு(மைக்ரோ) பரிணாமம் கண்கூடாக பார்க்கப்படுவதல் யாராலும் எதிர்க்கப்படுவதில்லை.ஒரு உயிரினம் இன்னொரு உயிரின்மாக் பல் மில்லியன் ஆண்டுகளில் மாறுகிறது என்னும் பெரும்(மேக்ரோ) பரிமாணம்  பெரும்பான்மையான மதவாதிகளால் எதிர்க்கப் படுகிறது.
_________________

//2.ஒரு இனம் ஒன்றாவது நிலையிலிருந்து நான்காவது நிலையை அடைவதாகக் கொள்வோம். இதற்கு இடைப்பட்ட இரண்டு நிலைகளை அந்த உயிர் பரிணாமத்தால் அடைந்திருக்க வேண்டும். இப்பொழுது நாம் பார்க்கும் காணொளியில் அனைத்து தாவரங்களும் விலங்குகளும் இன்று நாம் எப்படி பார்க்கிறோமோ அதே போன்ற நிலையில்தான் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் பல லட்ச வருடங்களுக்கு முன்பும் இருந்துள்ளன என்பதை விளங்குகிறோம். இதற்கு இடைப்பட்ட இனமான இரண்டாம் நிலையும்மூன்றாம் நிலையும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை.//

படிமங்கள் என்பது இயற்கையால் நம்க்கு கிடைத்த கொடை.அனைத்து படிமங்களுமே பராமரிக்கப்பட்டு ஆய்வாளர்களுக்கு யாரும் கொடுப்பது இல்லை.கிடைப்பதை ஆய்வு செய்து,வகைப்படுத்தி,விவாதித்து  கருத்து வெளியிடுகிறார்கள்.கிடைத்த படிமங்களில் பல இடைப்பட்ட நிலைகளை நன்றாக விள்க்குகின்றன.
படிமங்கள் எப்படி கிடைக்கின்றன என்பதை அட்டன்பரோவின் காணொளியில் அருமையாக் விள்க்கியுள்ளார்.முடிந்தால் பார்க்க்லாம்.


David Attenborough: Lost Worlds Episode 1 Magic In The Rocks (BBC)


David Attenborough: Lost Worlds Episode 2 Putting Flesh On Bones (BBC)

_______________
//3.ஜீன்களின் மாற்றத்தினால் உயரத்திலும் பருமனிலும் பல வித்தியாசங்கள் நடந்துள்ளது. இதை அனைவரும் ஒத்துக் கொள்கிறோம்.//

இதுதான் சிறு(மைக்ரோ )பரிமாண வளர்ச்சி.கண்கூடாக நிரூபிக்கப்பட்டதால் ஏற்றே ஆக வேண்டும்.
______________
 4.தண்ணீரில் நீந்தியது ஊர்வனவாக மாறியதற்கும் படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை.// 
Fish to Amphibians-reptiles



5//ஊர்வன பிறகு பறப்பனவாக மாறியதற்கும் படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை.//

Reptiles-mammals and Birds





6..
அப்போ கடலில் திமிங்கிலங்கள் இன்னும் இருந்து கொண்டிருக்கிறதே! வரலாறு எழுதப்பட்ட காலத்திலிருந்து ஒரு திமிங்கிலமும் கடலைத் தாண்டி வரவில்லையே! அடுத்து கடல் வாழ் உயிரினங்களுக்கும் நில வாழ் உயிரினங்களுக்கும் அடிப்படையிலேயே சுவாச உறுப்புகளில் மாற்றங்கள் உள்ளது. தண்ணீர் இல்லாமல் அவற்றின் உடல் அமைப்புக்கு நிலத்தில் வாழவும் முடியாதே!




திமிங்கல்த்தின் முன்னோர்கள் நில வாழ் விலங்குகள்.இதற்கு நன்றாக் இடைப்ப்ட்ட படிமங்கள் உண்டு.இதுவும் இரண்டாம் காணொளியிலேயே விள்க்கப்படுகிறது.
http://www.pbs.org/wgbh/evolution/library/03/4/l_034_05.html 

http://www.talkorigins.org/features/whales/
______________


7.நீங்கள் கொடுத்துள்ள சுட்டி முழுவதுமாக கிடைத்த படிமங்கள் அல்ல. இவர்களாக பல இடங்களிலும் சேகரித்து எடுத்து ஒட்ட வைத்தது. மேலும் அவை ஒரிஜினல் படங்களும் அல்ல. வரைந்தவையே!

நண்பரே நீங்கள் ஏற்றுக் கொள்ளாததால் காணொளியில் காட்டப்பட்ட அப்படிமங்கள் நிராகரிக்கப் படப்போவது இல்லை.இது அறிவியல் உலகில் ஏற்கப்பட்டவை.பாதுகாத்தும் வரப்படுகின்றன்.
அறிவியல் உலகிற்கு பிரச்சினை இல்லாமல் தனிப்பட்ட மனித்னாக இந்த முடிவு எடுக்க உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.



8.மனிதனுக்கு இது போன்ற பரிணாம வளர்ச்சியின் படிமங்களை இது வரை சமர்ப்பிக்கவில்லையே! ஆதார சுட்டிகள் அப்படி ஏதும் இருக்கிறதா.நமது முக்கிய பிரச்னையே மனிதனின் பரிணாமத்தைப் பற்றியதுதானே.



மனித பரிமாண வளர்ச்சிக்கு அறிவியல் உலகில் ஏற்கப் ப‌ட்ட பல படிம சான்றுகள் உண்டு.இவை ஒரு சில.இவைகள் லண்டனில் உள்ள இயற்கையியல் வரலாற்று அருங்காட்சியத்தில் உள்ளது 


இன்னும் சில இடங்களிலும் படிம்ங்கள் பாதுகாக்கப் படுகின்றன.


Virtual fossil Musuem

பரிணம்த்தின் மீதான் கேள்விகளுக்கு விடை தேடி அளிக்க சித்தமாக்வே இருக்கிறோம்.பரிணாம் மறுப்பாளர்களுக்கு விடை தேவையில்லை என்பதை உணர்ந்து இருந்தாலும் இது விடை தேடும் மற்றவர்களுக்காவது பயன்படும் என்றே முயற்சிக்கிறோம்.நன்றி!!!!!!!!!!!!!!!