செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ’கடவுள் அல்லாத’ துகள்



அணுவைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். அணு என்பது எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற துகள்களால் ஆனது என்று சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னரே ரூதர்போர்ட் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்துக் கூறினார்

அதன் பிறகு விஞ்ஞானிகள் அணுவை மேலும் மேலும் ஆழ்ந்து ஆராயத் தொடங்கினர். இதன் பலனாக துகள் இயற்பியல் என்ற தனித் துறை உருவாகியது. அடிப்படையான துகள்கள் யாவை என்று தொடர்ந்து ஆராய் முற்பட்ட போது மொத்தம் 16 துகள்களே அடிப்படையான துகள்கள் என்று கண்டறியப்பட்டது. கல், மண்,பேனா, பென்சில், கார், விமான்ம், பூமி, சூரியன், நட்சத்திரங்கள், அண்டங்கள் இப்படியாக அனைத்துக்கும் அவற்றின் இயக்கத்துக்கும் இந்த 16 துகள்கள் தான் அடிப்படை.
16 அடிப்படைத் துகள்களின் பட்டியல்

இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். இயற்பியல் துறையில் இரு வகையான விஞ்ஞானிகள் உண்டு. ஒரு வகை விஞ்ஞானிகள் காகிதம் பென்சில் ஆகியவற்றை மட்டுமே பயனபடுத்தி தங்கள் சிந்தனை ஆற்றல் மூலம் இது இப்படிததான் இருக்க வேண்டும். இப்படியான துகள் இருந்தாக வேண்டும் என்று கூறுபவர்கள். இவர்களை கொள்கை விஞ்ஞானிகள் என்று வருணிக்கலாம்.

இவர்கள் கூறியவை சரிதானா என்று பரிசோதனைகள் மூலம் ஆராயும் விஞ்ஞானிகள் இன்னொரு வகை. ஐன்ஸ்டைன் முதல் வகையைச் சேர்ந்தவர். E=MC 2 என்பது முதல் அவர் கூறிய பல கொள்கைகள் சரியே என்று பின்னர் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டன.

அடிப்படைத் துகள்கள் 16 என்று சொல்லப்பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் எடின்பரோ பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானியும் அவர் போலவே மேலும் சில விஞ்ஞானிகளும் இன்னொரு முக்கியமான துகள் இருந்தாக வேண்டுமே என்று 1964 ஆம் ஆண்டு வாக்கில் கூறினர். விஞ்ஞானி ஹிக்ஸ் கூறிய துகள் போஸான் என்ற வகையைச் சேர்ந்தது.
பீட்டர் ஹிக்ஸ்
அது வரை அறியப்படாத அத் துகளுக்கு ஹிக்ஸ் போஸான் என்று பெயர் வைக்கப்பட்டது. அதாவது  ஹிக்ஸ் கூறிய வகையைச் சேர்ந்த போஸான் என்பது அதன் பொருள். இந்த போஸானை எங்கே தேடுவது? பொதுவில் போஸான் வகைத் துகள்கள் அல்பாயுசு கொண்டவை. தோன்றிய சில கணங்களில் வேறு வகைத் துகளாகி விடும்.

 ஹிக்ஸ் தாம் குறிப்பிட்ட போஸான் துகள் பற்றி ஒரு முக்கிய விஷயத்தை சொல்லி வைத்தார்.. அதாவது எல்லா அடிப்படைத் துகள்களும் வெவ்வேறு அளவில் நிறை (Mass) கொண்டவை. நிறை வேறு எடை என்பது வேறு என்றாலும் எளிதில் புரிந்து கொள்ள நிறை என்பதை எடை என்றும் சொல்லலாம். 16 அடிப்படைத் துகள்களுக்கும் நிறை இருப்பதற்கு ஹிக்ஸ் போஸான் தான் காரணம் என்று அவர் சொன்னார்.

ஆகவே ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடிப்பது மிக அவசியமாகியது. தவிர, அணு முதல் அண்டம் வரையிலான அனைத்தையும் விளக்கும் வகையில் விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளில் பிரபஞ்ச இயக்கக் கோட்பாடு என்ற ஒட்டுமொத்தக் கொள்கையை உருவாக்கியுள்ளனர். ஆங்கிலத்தில் இதை Standard Model என்று கூறுவர். ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடிக்காவிட்டால் இக் கொள்கையில் பெரிய ஓட்டை இருப்பதாகி விடும். ஆகவே தான் ஹிக்ஸ் போஸானைத் தேடுவது முக்கிய விஷயமாகியது.

ஹிக்ஸ் போஸானை எங்கே கண்டுபிடிப்பது? இங்கு ஐன்ஸ்டைன் உதவிக்கு வருகிறார். பொருளை ஆற்றலாக மாற்றலாம். அதே போல ஆற்றலையும் பொருளாக மாற்றலாம். ஐன்ஸ்டைனின் E= MC 2  என்ற கொள்கையின் அர்த்தமே அது தான். ஆகவே பெரும் ஆற்றலைத் தோற்றுவிக்கும் போது நுண்ணிய துகள் வடிவில் பொருள் தோன்றும். உதாரணமாக புரோட்டான்களை பயங்கர வேகத்தில் ஒன்றோடு ஒன்று மோத விட்டால் பெரும் ஆற்றல் தோன்றும். அப்போது தோன்றும் நுண்ணிய துகள்களை ஆராய்ந்தால் அவற்றில் ஹிக்ஸ் போஸான் தட்டுப்படலாம்.
அமெரிக்காவின் பெர்மிலாப்
துகள்களை இப்படி மோத விடும் ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் நீண்ட காலமாகவே செய்து வருகிறார்கள். ஆரம்ப காலத்தில் இது ஆட்டுக் கிடா சண்டை போல சிறிய அளவில் இருந்து பின்னர் டைனோசார்களை மோத விடுவதைப் போன்ற அளவுக்குப் பெரிதாக வளர்ந்தது. அமெரிக்காவில் இருந்து வந்த பெர்மிலாப் என்ற துகள் மோதல் ஆராய்ச்சிக் கூடம் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. பின்னர் ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஜெனீவா நகருக்கு அருகே பாதாளத்தில் பிரும்மாண்டமான துகள் மோதல் ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவியதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பெர்மிலாப் அண்மையில் மூடப்பட்டது.

 ஜெனீவா அருகே அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சிக்கூடம் சுருக்கமாக செர்ன் (CERN)  என்று அழைக்கப்படுகிறது. இங்கு 100 மீட்டர் ஆழத்தில் புரோட்டான்களை மோத விடும் ஆராய்ச்சிக் கூடம் உள்ள்து. குதிரைப் பந்தய மைதானம் போல இது வட்ட வடிவில் உள்ளது. இங்கு வலுவான காந்தக் கட்டைகளைப் பயன்படுத்தி புரோட்டான்களை விரட்டோ விரட்டு என்று விரட்டுவார்கள்.
ஜெனீவா அருகே உள்ள செர்ன். வான் காட்சி
இரு புறங்களிலும் ஆட்கள் நின்று கொண்டு ஒரு குதிரையை மாறி மாறி சவுக்கால் அடித்தால் அது மேலும் மேலும் வேகமாக ஓடும். புரோட்டான்கள் அது போல விரட்டப்படுகின்றன. 27 கிலோ மீட்டர் சுரங்கப் பாதையில் விசேஷ சூழ் நிலைகளில் புரோட்டான்கள் கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் பாய்ந்து செல்லும் வகையில் விரட்டப்படும். அதே சமயத்தில் எதிர்ப்புறத்திலிருந்து இதே வேகத்தில் புரோட்டான்கள் பாய்ந்து வரும். எதிரும் புதிருமாக அதி வேகத்தில் வருகின்ற இந்த்ப் புரோட்டான்கள் ஒரு கட்டத்தில் ஒன்றோடு ஒன்று மோதும்படி செய்யப்படும். பல கோடி புரோட்டான்கள் இவ்விதம் ஒன்றோடு ஒன்று மோதும். 

அப்போது கம்பி மத்தாப்பிலிருந்து பொறிகள் வெளிப்படுவதைப் போல ஒளிக் கீற்றுகள் பறக்கும். பயங்கர மோதலின் விளைவாக பெரும் ஆற்றல் வெளிப்படும். ஆற்றல் துகள்களாக மாறலாம் என்ற கொள்கையின்படி பல துகள்கள் நாலா புறங்களிலும் பாயும். இவற்றில் பலவும் அல்பாயுசாக உடனே வேறு துகள்களாக மாறும்.
புரோட்டான்களின் மோதல்களின் போது பாய்ந்து செல்லும் துகள்கள்
இந்த மோதல்களின் போது தோன்றும் விளைவுகளை மிக நுட்பமான காமிராக்கள் படம் எடுக்கும். அப்படங்களை விஞ்ஞானிகள் நுணுக்கமாக ஆராய்வர். ஜெனீவா ஆராய்ச்சிக்கூடத்தில் கடந்த பல மாதங்களாக விஞ்ஞானிகள் ஹிக்ஸ் போஸான்கள் தொடர்பாக மிகத் தீவிரமாக பரிசோதனைகளை நடத்தி புதன்கிழமையன்று முடிவுகளை அறிவித்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் ஆற்றலைத் தோற்றுவித்ததால் இப்போதைய பரிசோதனைகளில் ஹிக்ஸ் போஸான்கள் தட்டுப்பட்டதாகக் கருதப்படுகிறது.

ஹிக்ஸ் போஸான்கள் என்று சொல்லத் தக்க துகளைக் க்ண்டுபிடித்து விட்டோம் என்று தோன்றுகிறது என்று விஞ்ஞானிகள் குழுவினர் மிக ஜாக்கிரதையாக அறிவிப்பு வெளியிட்டனர். பரிசோதனைகளில் ஹிக்ஸ் போஸான் சில கணங்களில் வேறு துகளாக மாறினாலும் ஹிக்ஸ் போஸான் எவ்விதமான் துகள்களாக மாறும் என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியும். உருமாறிய போஸான்கள் அவ்விதத் தன்மைகளைக் காட்டியதால்  அவர்கள் கண்டுபிடித்தது ஹிக்ஸ் போஸான்களே என்று கருதப்படுகிறது. இக்கண்டுபிடிப்பு மிக மகத்தானது என்றே சொல்ல வேண்டும்.

ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு பற்றிய செய்தி வெளியான உடனேயே மேற்கத்திய பத்திரிகைகளும் டிவி சேனல்களும் கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்று பரபரப்பாக செய்தி வெளியிட்டன. இதில் கடவுள் எங்கே வந்தார்? 

 ஹிக்ஸ் போஸான் பற்றி ஒரு சமயம் பிரபல விஞ்ஞானி ஒரு நூலை வெளியிட்டார். இத்துகள் விஞ்ஞானிகளை அலைக்கழிப்பதை அவர் மனதில் கொண்டு எரிச்சலுடன் தம்து  நூலுக்கு Goddamn particle  என்று தலைப்பிட்டார். நாசமாய்ப் போன துகள் என்பது இதன் பொருள். வசவு வார்த்தை ஒரு நூலின் தலைப்பாக இருக்கக்கூடாது என்று கருதிய நூல் பதிப்பாளர் அதை God Particle  என்று மாற்றினார்.

 தவிர இத் தலைப்பு மக்களைக் கவருவதாக இருக்கும் என்றும் அவர் நினைத்தார் அவர் நினைத்தது சரியாகியது. அப்போதிலிருந்து ஹிக்ஸ் போஸான் துகளைப் பலரும் கடவுள் துகள் என்றே குறிப்பிட ஆரம்பித்தனர். மற்றபடி ஹிக்ஸ் போஸான் துகளுக்கும் கடவுளுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. ஹிக்ஸ் போஸானை கடவுள் துகள் என்று வருணிப்பது அபத்தம் என்று தெரிந்தும் பெரும்பாலான மேலை நாட்டு ஊடகங்கள்  ( இந்தியாவிலும் தான்) கவர்ச்சியான தலைப்புக்காக அச்சொல்லையே பயன்படுத்தின.இதை விட ஒரு படி மேலே போய் விஞ்ஞானிகள் கடவுளைக் கண்டனர் என்று வருணித்த ஊடங்கங்களும் உண்டு.

ஹிக்ஸ் போஸான்களில் மட்டும் கடவுள் இருப்பது போல எண்ணச் செய்வது அசட்டுத்தனமானது. கட்வுள் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்று சொல்வதானால் ஹிக்ஸ் போஸான் என்ன, அனைத்துத் துகள்களிலும் கடவுள் இருப்பதாக ஒப்புக் கொள்ள வேண்டும். ஹிக்ஸ் போஸானை மட்டும் கடவுள் துகள் என்று வருணிக்க முற்படலாகாது.

விஞ்ஞானிகளைப் பொருத்தமட்டில் அவர்கள் ஒருபோதும் ஹிக்ஸ் போஸானை கடவுள் துகள் என்று குறிப்பிட்டதில்லை. விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சி விஷயங்களில் கடவுளை இழுப்பதே கிடையாது. 

ஹிக்ஸ் போஸானுக்கும் இந்தியாவுக்கும் சில தொடர்புகள் உண்டு. அடிப்படைத் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வந்த சமயத்தில் குறிப்பிட்ட வகைத் துகள்களுக்கு என்ன பெயர் வைப்பது என்ற பிரச்சினை எழுந்தது.
ச்த்யேந்திர நாத் போஸ்
 இந்திய விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸின்  பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டது. போஸ் என்பதை போஸான் என்று மாற்றி அவ்வகைத் துகள்களை போஸான்கள் என்று அழைக்கலாயினர். சத்யேந்திர நாத் போஸும் ஐன்ஸ்டைனும் சம காலத்தவர். இருவரும் சேர்ந்து எழுதிய கட்டுரைகள் இயற்பியல் உலகில் முக்கியமானவை. சத்யேந்திர நாத் போஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் புறக்கணிக்கப்பட்டார்.

ஐரோப்பிய செர்ன் ஆராய்ச்சிக்கூடத்துக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு உண்டு. இந்த ஆராய்ச்சிக்கூடத்துக்குத் தேவையான ராட்சத காந்தங்களையும் மற்றும் பல கருவிகளையும் இந்தியா தயாரித்தளித்தது. அங்கு சுமார் 100 இந்திய விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர்.

ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடித்ததுடன் இயற்பியலில் ஆராய்ச்சிகள் முடிவடைந்து விடவில்லை. மேலும் ஆராய்ச்சிகளை நடத்தி ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பை உறுதி செய்ய வேண்டியுள்ளது.

தவிர, பிரபஞ்சத்தில் கருப்புப் பொருள், கருப்பு ஆற்றல் என இன்னும் பிடிபடாத விஷயங்கள் உள்ளன. இவை பற்றி நிறைய ஆராய வேண்டியுள்ளது. தவிர, விஞ்ஞானிகள் ஆராய்ச்சி விஷயத்தில் எப்போதுமே இத்துடன் எல்லாம் முடிவடைந்து விட்டது என்று திருப்திப்படுவது கிடையாது.

அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 3




ஆண்டான் அடிமை காலகட்டத்தில் அரேபிய தீபகற்பத்தில் வாழ்ந்த, பல அடிமைகளை உடமையாய் வைத்திருந்த ஓர் உயர் குல வணிகர், தம் வணிகர் குல மேலாதிக்கத்திற்காக உருவாக்கிய ஓர் அரசின் சட்டதிட்டங்கள் அடிமைமுறையை நீக்குவதை நோக்கமாக கொண்டிருந்தது என்பது இயல்பாகவே முரண்பாடுடையது. மட்டுமல்லாது நகைப்பிற்கும் இடமானது. இஸ்லாமே அடிமை முறையை ஒழித்தது எனும் மதவாதிகளின் புழகத்தை ஒதுக்கி வைத்து விட்டு அடிமைகள் குறித்து இஸ்லாம் என்ன கருத்து கொண்டிருந்தது என்பதை பார்க்கலாம்.

அடிமைகளும் அவர்களின் எஜமானர்களும் – அவர்களும் மனிதர்கள் தாம் என்றபோதிலும் – ஒருபோதும் சமமாக மாட்டார்கள் என்பதை கீழ்க்காணும் வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன.

.. .. .. பிரிதொருவனுக்கு உடமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் உரிமை பெறாத ஓர் அடிமை; மற்றொருவனோ, நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவும் பொருளும் கொடுத்திருக்கின்றோம், அவனும் அதிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கிறான். இருவரும் சமமாவாரா? .. .. .. குரான் 16:75

.. .. .. உங்கள் வலக்கரம் உரிமைப்படுத்திக் கொண்டவர்களில் எவரையும் நாம் உங்களுக்கு அளித்திருப்பதில் உங்களுடன் பங்காளிகளாக ஆக்கிக் கொண்டு அதில் அவர்களுடன் சமமாக இருக்கிறீர்களா? உங்களைப் போன்றோருக்கு பயப்படுவதைப் போல் அவர்களை பயப்படுகிறீர்களா? .. .. .. குரான் 30:28

இஸ்லாமியர்கள் அனைவரும் சகோதரரகள் என்று இன்றைய மதவாதிகள் ஓதித் திரிவதை மேற்கண்ட வசனங்களுடன் ஒப்பு நோக்குங்கள். முஸ்லீமாக இருந்தாலும் இல்லா விட்டாலும் அடிமையும் சுதந்திரமானவனும் சமமாக மாட்டார்கள் என்று மேற்கண்ட வசனங்கள் தெளிவாக எடுத்து வைக்கின்றன. முதல் வசனம் பொருளாதார ரீதியாக அடிமைக்கும் சுதந்திரமானவனுக்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை விவரிக்கிறது. இதில் இன்னொரு தொனியும் இருக்கிறது. அல்லா கொடுத்திருப்பதனாலேயே ஒருவன் ஆண்டையாக இருக்கிறான் என்பதையும் அழுத்திச் சொல்கிறது. இரண்டாவது வசனமோ, பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் அடிமையும் ஆண்டையும் ஒன்றல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது. 

இன்னொன்றையும் இதில் கவனிக்க வேண்டியதிருக்கிறது. இந்த இரண்டு வசனங்களும் நேரடியாக கூறப்பட்டவைகள் அல்ல.  இஸ்லாத்தில் இணைந்தவர்களே நேர்வழி பெற்றவர்கள். இஸ்லாத்தில் இணைய மறுப்பவர்களான யூதர்களும் கிருஸ்தவர்களும் வழிகேட்டில் இருப்பவர்கள். நேர்வழி பெற்றவர்களும் வழிகேட்டில் இருப்பவர்களும் சமமாக முடியாது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு உதாரணமாய் கூறப்பட்ட வசனங்களே அவைகள். தன்னால் கூறப்படும் தத்துவத்தை பின்பற்றாதவர்கள் எங்களுக்கு சமமானவர்கள் அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதற்கு முகம்மதுக்கு உதாரணமாய் சிக்கியிருப்பதே அடிமைகளின் தகுதிக் குறைவுதான் என்றால்; அடிமைகள் குறித்தும், அடிமை முறை குறித்தும் முகம்மது கொண்டிருந்த உளவியல் எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்பதையும் மேலதிக தகவலாக இந்த வசனங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸ் ஒன்று அடிமைகள் குறித்து இஸ்லாம் எவ்வளவு கண்ணியமான(!) கருத்து கொண்டிருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது.

மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட எந்த மரமாவது அதன் கனிகள் பற்றி பேசப்படாமல் விற்கப்படுமானால் அவை மகரந்தச் சேர்க்கை செய்தவருக்கே உரியவையாகும். அடிமையும் பண்படுத்தப்பட்ட நிலமும் கூட இவ்வாறே ஆகும். புஹாரி: 2203

அதாவது தோப்பு ஒன்றை ஒருவர் மற்றொருவருக்கு விற்பதாகக் கொள்வோம். அந்த நேரத்தில் அதிலுள்ள மரங்கள் பூக்கத் தொடங்கியிருக்குமேயானால் காய்க்கப் போகும் காய்கள் யாருக்கு உரியது என்பதை வியாபாரம் நடக்கும் போதே பேசிவிட வேண்டும். அப்படி பேசாத பொழுது, காய்க்கும் கனிகள் விற்றவருக்கே சொந்தமாகும். இதுபோலவே அடிமையும். விற்கும் போது ஒப்பந்தம் ஏதும் செய்யப்படவில்லையென்றால் அந்த அடிமைக்குப் பிறக்கும் குழந்தைகள் விற்றவரிடம் அடிமையாகத் தொடர வேண்டும். இந்த உயரிய(!) சிந்தனை தான் மனித குலத்துக்கே முன்மாதிரியாக இருப்பவரின் சிந்தனை. அடிமையின் மகனும் அடிமையே என்பதை இன்னொரு ஹதீஸ் மிகத் துல்லியமாக விளக்குகிறது.

ஸம் ஆ என்பவருடைய அடிமைப் பெண்ணுக்கு பிறந்த மகன் எனக்குப் பிறந்தவன் எனவே நீ அவனைக் கைப்பற்றிக் கொள் என்று உத்பா என்பவர் தன்னுடைய மரண வேளையில் சகோதரனிடம் கூறுகிறார். அந்த சகோதரரும் அவ்வாறே கைப்பற்றிக் கொள்ள அவருக்கும் ஸம் ஆவுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. இந்த வழக்கு முகம்மதிடம் வருகிறது. முகம்மது அளிக்கும் தீர்ப்பு என்ன? உத்பா என்பவர் வேறொருவனின் அடிமையுடன் உடலுறவு கொண்டதால் அது விபச்சாரம் என்றும் யாருடைய ஆளுமைக்கு கீழே அந்த அடிமைப் பெண் இருக்கிறாளோ அந்த ஆண்டைக்கே மகன் அடிமைப்பட்டவன் என்றும் தீர்ப்பளிக்கிறார். இந்த ஹதீஸ் புஹாரி 2053 ல் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இங்கு விபச்சாரத்திற்கான தண்டனையும் அளிக்கப்படவில்லை. அடிமைக்கு குழந்தை பிறந்ததால் அவள் விடுவிக்கப்படவும் இல்லை. மாறாக, அடிமைக்குப் பிறந்தவனும் அடிமையே என்பது உறுதி செய்யப்படுகிறது.



அடிமை குறித்த இன்னொரு குரான் வசனம் அடிமைகளை விலங்கினும் கீழான நிலைக்கு தள்ளுகிறது. குரான் வசனம் 2:178 இப்படிக் குறிப்பிடுகிறது

ஈமான் கொண்டோரே! கொலைக்காக பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமுடையவனுக்கு சுதந்திரமுடையவன், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண். .. .. ..

ஒருவன் தன்னுடைய அடிமையைக் கொண்றால் அதற்கு பழி வாங்கும் விதமாக கொன்றவனுடைய அடிமை ஒருவனைக் கொல் என்று பணிக்கிறது குரான். பெண்களும் இந்த வகையிலேயே வகைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இதில் உள்ளாடி நிற்கும் பொருள் என்னவென்றால் ஆண்களுக்கு அடிமைகளும், பெண்களும், குழந்தைகளும் சொத்துகளே. உன் சொத்துகளை ஒருவன் சூரையாடினால் பதிலுக்கு அவனுடைய சொத்தை நீ சூரையாடு என்று சட்டம் போட்டிருக்கிறது. இந்தச் சட்டத்தில் தான் உங்களுக்கு வாழ்வு இருக்கிறது என்று சான்றிதழ் வேறு அளிக்கிறது குரான்.

குரான் பல இடங்களில் அடிமைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ள எந்த தடையும் இல்லை என்று தன்னுடைய வசனங்கள் மூலம் வெட்ட வெளிச்சமாக்குகிறது. அடிமைகள் முறையாக திருமணம் செய்து குடும்ப பந்தத்தில் இணைந்திருந்தாலும் கூட அவர்களை ஆண்டைகள் தம் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேற்கண்ட குரான் வசனங்கள், ஹதீஸ்கள் மூலம் நமக்கு தெரிவதென்ன? அன்றைய சமூகம் எந்தெந்த வகைகளிலெல்லாம் அடிமைகள் உழைப்பைச் சுரண்டி கொடூரங்கள் செய்ததோ, அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் முகம்மதும் அவர் உருவாக்கிய சமூகமும் செயல்பட்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் சில அடிமைகளின் மீது இரக்கம் மேலிட்டுச் செய்த சில செயல்களையும், ஆண்டைகளுக்கு தண்டனை தரும் வகையில் சொல்லப்பட்ட அடிமை விடுவிப்பையும் வைத்துக் கொண்டு இன்றைய மதவாத புரட்டல்காரர்கள் முகம்மதை அடிமைத்தளையை உடைத்த புரட்சி நாயகன் போல் சித்தரிக்கிறார்கள்.

ஆனால் அடிமை முறை என்பது என்ன? இன்றளவில் அது முழுமையாக நீங்கி விட்டதா? இல்லை. மனிதன் உழைப்பை மனிதன் உண்டு கொழுக்கும் சுரண்டலின் முதல் வடிவம் அடிமை முறை. பல்லாயிரம் ஆண்டு காலம் நீடித்த அந்த வடிவம் ஒழிக்கப்பட்டுவிட்டது. அதேவேளை சுரண்டல் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அடிமை முறையிலிருந்து பண்ணையடிமையாக, அதிலிருந்து கூலி உழைப்பாளியாக வடிவங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன, சுரண்டல் மாறவில்லை. சோசலிசத்தின் வழியாக கம்யூனிசத்தை நோக்கி பயணிக்கும் போதே மனிதன் உழைப்பை மனிதன் சுரண்டுவது முற்றிலுமாக ஒழியும். இது தான் சமூகவியல் உண்மை. இயங்கியல் தேற்றம். இதை மதவாதிகள் புரிந்து கொள்ள அறிந்து கொள்ள முன்வர வேண்டும். மறுத்தால் காலம் கருணையற்று அவர்களுக்கு கற்பிக்கும்.

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

இஸ்லாம் போதிப்பது எதை? ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?



9மார்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 15


மதுவும், வட்டியும்,  பல தெய்வக் கொள்கையும், உருவ வழிபாடும் முஹம்மது நபிக்கு முன்பிருந்தவைகளே என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஈனத்தனமான செயல்களை இறைவனின் அனுமதியென்று கூறிக் கொள்வதை எப்படி ஏற்க முடியும்?
சராசரியாக சிந்திக்கக் கூடிய எவராலும் குர்ஆனின் இந்த அனுமதிகளிலுள்ள முட்டாள்த்தனத்தை அறிய முடியும். கற்றுணர்ந்த மார்க்க அறிஞர்களுக்குத் தெரியாதா? அவர்களென்ன இரக்கமில்லாதவர்களா?
                நிச்சயமாக  அவர்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் இத்தகைய விவாதங்களை பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்கள் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். இஸ்லாமின் முரண்பாடுகளையும், முட்டாள்த்தனங்களையும் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினாலும் அதைப் பற்றி வாய் திறப்பதில்லை. அவர்களிடமிருந்து வெளிப்படும் ஒரே பதில்  “அல்லாஹ்வின் கடும்கோபத்திற்கு ஆளாக வேண்டாம்” என்பதுதான்.
இன்று இஸ்லாமிய பெண்கள் திரைக்குப் பின்னால் வாழ்வதற்கும் “பர்தா” என்ற திரைகளுடன் நடமாடுவதற்கும் உமர் பின் கத்தாப்பின் நச்சரிப்பு மட்டுமே காரணம் என்பதை முன்பே கண்டோம். பெண்களின் ஒழுக்கத்திற்காகவும் கண்ணியத்தை காப்பாற்றவும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் வற்புறுத்தியவரின் ஒழுக்கத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Ibn Sa’d, volume 2, Page 438 
Narrated Umar
From “A slave girl passed by me who attracted me, and I cohabited with her while I was fasting”.
(உமர் பின் கத்தாப் கூறுகிறார்: என்னைக் கடந்து சென்ற அடிமைப் பெண்களில் ஒருத்தி (அழகால்) என்னை ஈர்த்ததாள் நான் நோன்பு வைத்திருந்த பொழுதும், அவளுடன் கலவியில் ஈடுபட்டேன்.)
நோன்பு வைத்திருக்கும் வேளையில் அழகான பெண்ணைக் கண்டிருக்கிறார். உடனே அவளைத் தனது இச்சைக்கு உபயோகப்படுத்திக் கொண்டார். அந்த அடிமைப்பெண் உமர் பின் கத்தாப்பின் மனைவி என்றோ, பிற்காலத்தில் அவளைத் திருமணம் செய்து கொண்டதாகவும் எந்த  குறிப்புகளும் இல்லை. சுருக்கமாக சொல்வதென்றால் அழகானவளைப் பார்த்தேன் வேலையை முடித்தேன்.
நோன்பின் கதி? அதோ கதி…!
முஹம்மது நபியின் காலத்திலும், அவருக்கு பிறகும் பல லட்சக்கணக்கான ஆப்ரிக்க கருப்பின மக்கள் அடிமைகளாக்கப்பட்டனர். கருப்பின அடிமைகளை விற்கும்,  விற்பனைச் சந்தை கிபி 1960 வரையிலும் மக்காவில் இருந்துள்ளது. ஆனால் அரேபிய  தீபகற்பத்தில் கருப்பின மக்கள் தொகை குறைவாக உள்ளதை நீங்கள் பார்க்கலாம். இதே போல அமெரிக்காவிற்கும் ஆப்ரிக்க கருப்பின அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் அங்கு பல்கிப் பெருகி ஒரு பெரும் சமுதாயமாகி அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆகும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். ஆங்கிலேயர்களால் அடிமைகளாக இந்தியாவிற்குக்   கொண்டு வரப்பட்ட நைஜிரியா, தான்ஸானியாவைச் சேர்ந்த ஆப்ரிக்க பழங்குடி கருப்பின மக்கள் மக்கள்  குஜராத் மாநிலத்தில் வசிப்பதை இன்றும் காணலாம்.
அரேபியாவிலிருந்து  கருப்பின மக்கள் விரட்டியடிக்கப்படவுமில்லை. அரேபிய  தீபகற்பத்தில் கருப்பின மக்கள் தொகை குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?
 அடிமைப் பெண்களை, தங்களது பாலியல் தேவைகளுக்காக உபயோகப்படுத்திக் கொண்ட மிருகங்கள், ஆண் அடிமைகளின் பாலியல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக ஆடு, மாடுகளுக்கு இன்றும் கிராமப்பகுதிகளில் “காயடிப்பதைப்” போன்று  ஆண் அடிமைகளின் விதைகளை அடித்து  மலடுகளாக ஆக்கிவிட்டனர். இப்பொழுது உங்கள் மனதில் இப்படி ஒரு கேள்வி எழலாம்.  இத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டு அடிமைகளாக எஜமானர்களின் காலடியிலேயே ஏன் வீழ்ந்து கிடக்க வேண்டும்? வாழ விரும்பினால் எங்காவது ஓடிப்போக வேண்டியதுதானே?
முஸ்லீம் ஹதீஸ் எண்: 101, அத்தியாயம்: 1, பாடம்: 1.31 அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி).
“தன் எஜமானர்களிடமிருந்து ஓடிப்போகிற அடிமை, அவர்களிடம் திரும்பி வரும்வரை இறைமறுப்பாளனாகவே இருக்கிறான்” என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொல்லச்) செவியுற்றிருக்கிறேன்.
முஸ்லீம் ஹதீஸ் எண்: 102, அத்தியாயம்: 1, பாடம்: 1.31,  அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி).
“(தன் எஜமானிடமிருந்து) ஓடிப் போன அடிமைக்கான (இறைவனின்) அடைக்கலம் நீங்கிவிடுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
சிந்தித்துப்பாருங்கள், அடிமை ஒடிப்போவதற்கும் இறைமறுப்பிற்கும் என்ன தொடர்பு?
புஹாரி ஹதீஸ்: 2534
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:    
எங்களில் ஒருவர் தன் அடிமை ஒருவனை தன் ஆயுட்காலத்திற்குப் பிறகு விடுதலை செய்து விடுவதாக அறிவித்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையை (இவனை வாங்குபவர் யார் என்று) கூறி அழைத்து (ஏலத்தில்) விற்று விட்டார்கள். அந்த அடிமை (விற்கப்பட்ட) முதல் ஆண்டிலேயே மரணித்துவிட்டான்.
சகமனிதனை கால்நடைகளைப் போல கருதுவது என்ன நியாயம்? முஹம்மது நபி, அடிமை முறை ஒழிப்பிற்காக பாடுபட்ட உத்தமர் என்று இஸ்லாமிய அறிஞர் மேடைகளில் வாய் கிழிய பேசுவார்கள். அதன் லட்சணம் இதுதான். 
விபச்சாரமும் அனுமதிக்கப்பட்டதே…!
புஹாரி ஹதீஸ் : 6837        
அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் கூறியதாவது.
ஓர் அடிமைப் பெண் கற்பைக் காக்காமல் விபசாரம் செய்துவிட்டால்… (அவளுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவள் விபசாரம் செய்தால் அவளை சாட்டையால் அடியுங்கள். அதற்குப் பிறகும் விபசாரம் செய்தால் (திரும்பவும்) சாட்டையால் அடியுங்கள், மறுபடியும் அவள் விபசாரம் செய்தால் (மறுபடியும்) சாட்மையால் அடியுங்கள். அவள் மீண்டும் விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக்கற்றைக்காவது விற்றுவிடுங்கள் என்று கூறினார்கள். (இதில் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷஹாப் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், (அவளை விற்றுவிடவேண்டும் என்பது) மூன்றாவது தடவைக்குப் பிறகா அல்லது நான்காவது தடவைக்குப் பிறகா என்று எனக்குத் தெரியாது எனக் கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸை காணும் பொழுது ஒரு அடிமைப் பெண் விபச்சாரம் புரிவதைக் கூட முஹம்மது நபி தடை செய்துள்ளார் என்ற உயர்வான சிந்தனை உங்கள் மனதில் தோன்றலாம்உங்கள் எண்ணம் தவறானது கற்பழிப்பதற்கே அனுமதியளித்தவர்கள் விபச்சாரத்தை ஏன் தடுக்க வேண்டும்?
அடிமைகளுக்கு எந்த உரிமையும் கிடையாதுஅவர்கள் உரிமையாளரை மீறி தன்னிச்சையாக செயல்படக் கூடாதுஅவள் உரிமையாளருக்கு மட்டுமே வைப்பாட்டிஉரிமையாளர் விரும்பினால் பிற ஆண்களுக்கு  அடிமைப் பெண்களைத் இரவலாகத் தரலாம்.
Malik’s Muwatta:Book 28, Number 28.15.38:
Yahya related to me from Malik from Ibrahim ibn Abi Abla from Abd al-Malik ibn Marwan that he gave a slave-girl to a friend of his, and later asked him about her. He said, “I intended to give her to my son to do such-and-such with her.” Abd al-Malik said, “Marwan was more scrupulous than you. He gave a slave-girl to his son, and then he said, ‘Do not go near her, for I have seen her leg uncovered. “
(நண்பருக்கு கொடுத்த அடிமைப் பெண்ணைப் பற்றி கேட்கையில், அவர் அந்த பெண்ணை, ‘கசமுச’ செய்ய தன் மகனுக்கு அளிப்பதற்காக திட்டமிட்டிருப்பதாக கூறும் ஒருசெய்தி)
இவ்வாறாக அடிமைப்பெண்களை விரும்பியவர்களுக்கு வழங்கலாம்முஹம்மது நபிக்கு எகிப்திய ஆட்சியாளர்மரியத்துல் கிப்தியா, ஷிரின் என்று இரண்டு பெண்களை பரிசாக வழங்கியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மனைவிகளோ, அடிமைப் பெண்களோ இல்லாத சூழ்நிலையில் என்ன செய்வது?
அல்முத்ஆ திருமணம் முஹம்மது நபி  அவர்கள் காலத்திலும் அரபிகளின் வழக்கிலிருந்ததுஅல்முத்ஆ திருமணம் என்பது குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு மட்டும் செய்யப்படும் தற்காலிக திருமணம்அவர்கள் விரும்பினால் திருமண வாழ்க்கையைத் தொடரலாம் அல்லது பிரியலாம் இதில் எந்த நிர்பந்தமும்குற்றமும் இல்லைஅல்முத்ஆ  திருமணத்திற்கு திரு குர் ஆனில் தடையெதும் காணவில்லை.
போர்காலங்களில் சஹாபக்கள் தங்கள் மனைவியரைப் பிரிந்து நீண்ட நாட்கள் இருக்க வேண்டியிருந்ததுசஹாபக்களின் உடல் தேவைக்காக மிகவும் சிரமப்பட்டனர்அதைக் கண்ட முஹம்மது நபி அவர்கள் போர் காலங்களில்  அல்முத்ஆ திருமணத்தை அனுமதித்தார். சஹாபக்கள்தங்களும் உடல் தேவைகளை அல்முத்ஆ திருமணம் மற்றும் பெண் போர்க் கைதிகளை அனுபவித்தல் என அல்லாஹ்வின் முழு அனுமதியோடு நிறைவேற்றி மகிழ்ந்தனர்.
ஆண்கள்மனைவியை விடுத்து பிற பெண்களை இச்சையுடன் பார்ப்பதை தடுப்பதற்காகவே புர்க்கா – ஃபர்தாஹிஜாப் என்ற உடையை பெண்கள் அணிய வேண்டும் என்று முஹம்மது நபி கூறினார்எனவே  கற்புநெறியை ஆண்களும் பின்பற்ற வேண்டும் என்றே இஸ்லாம் போதிக்கிறது என்று உங்களையும் உலகை ஏமற்றிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய பிரச்சாரா பீரங்கிகளின் வார்த்தைகளில் ஏதாவது பொருளிருப்பதாக தோன்றுகிறதா?
புகாரி ஹதீஸ் -5116
அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
அல்முத்ஆ (தவணை முறைத்திருமணம்) குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அவர்கள் அதற்கு அனுமதி உண்டு என்றார்கள். அப்போது அவர்களுடைய முன்னாள் அடிமை ஒருவர் (பயணத்தில் மனைவி இல்லாத) நெருக்கடியான சூழ்நிலை பெண்கள் குறைவாக இருத்தல் போன்ற சமயங்களில்தான் இத்திருமணத்திற்கு அனுமதியுண்டாமே! என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆம்! என்று பதிலளித்தார்கள்.
(புகாரி 5116,5117,5118,5119)
பின் நாளில் முஹம்மது நபி  அவர்கள் அல்முத்ஆ  திருமணத்தை தடை செய்தார் என்று  ஸுன்னி முஸ்லீம்கள் கூறுகின்றனர். ஆனால் ஷியா முஸ்லீம்களிடையே அப்படி எந்த தடையுமில்லை. ஒவ்வொருவரும், வாழ்வில் ஒருமுறையேனும் அல்முத்ஆ (தவணை முறைத் திருமணம்) செய்ய வேண்டும் என வலியுறுத்திக்கூறும் ஹதீஸ்களை ஷியாக்கள் முன்வைக்கின்றனர்.
புகாரி ஹதீஸ் -5115
முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்களும் அப்துல்லாஹ் பின் அலீ (ரஹ்) அவர்களும் கூறியதாவது
எம் தந்தை) அலீ (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், அல்முத்ஆ) தவணை முறைத்) திருமணத்திற்கும், நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கும், கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள் என்று சொன்னார்கள்.
அலீ அவர்களின் பெயரால் புனையப்பட்டதாகக் கூறி இந்த ஹதீஸை ஷியாக்கள் அடியோடு மறுக்கின்றனர். கீழே காணும் இந்த ஹதீஸ் மக்கா வெற்றியின் பொழுது நிகழ்ந்தது, முஹம்மது நபியின் அனுமதியோடு அங்கு அல்முத்ஆ திருமணம் நடைபெற்றதைக் குறிப்பிடுகிறது. அதாவது மேற்கூறிய கைபர் போருக்குப் பின் நடைபெற்ற நிகழ்ச்சி இது
Sahih Muslim Book 008, Number 3253:
Rabi’ b. Sabra reported that his father went on an expedition with Allah’s Messenger (may peace be upon him) during the Victory of Mecca, and we stayed there for fifteen days (i. e. for thirteen full days and a day and a night), and Allah’s Messenger (may peace be upon him) permitted us to contract temporary marriage with women. So I and another person of my tribe went out, and I was more handsome than he, whereas he was almost ugly. Each one of us had a cloaks, my cloak was worn out, whereas the cloak of my cousin was quite new. As we reached the lower or the upper side of Mecca, we came across a young woman like a young smart long-necked she-camel. We said: Is it possible that one of us may contract temporary marriage with you? She said: What will you give me as a dower? Each one of us spread his cloak. She began to cast a glance on both the persons. My companion also looked at her when she was casting a glance at her side and he said: This cloak of his is worn out, whereas my cloak is quite new. She, however, said twice or thrice: There is no harm in (accepting) this cloak (the old one). So I contracted temporary marriage with her, and I did not come out (of this) until Allah’s Messenger (may peace be upon him) declared it forbidden.
அல்முத்ஆ திருமணம் தடை செய்யப்பட்டதாகவும், பிறகு அனுமதிக்கப்பட்டதாகவும் மீண்டும் தடை செய்யப்பட்டதாகவும்,  அனுமதிக்கப்பட்டதாகவும் பல செய்திகள் காணப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் அன்றைய காலத்தில் அல்முத்ஆ  திருமணம் நடை முறையில் இருந்ததென்பதும்தடை செய்யப்பட்டதற்கான உறுதியான ஆதரங்களில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.
போர் காலங்களில்  சஹாபக்களின் மனைவியர்களும்தான் தனிமையில் இருக்க வேண்டிய நிர்பந்தம். “அல்லாஹ்வின் ரசூலே போர்காலங்களில் எங்களுடைய கணவர்களைப் பிரிந்து நீண்ட நாட்களுக்கு இருக்க வேண்டியுள்ளது எங்களின் உணர்வுகளுக்கு என்ன பதில்?” என்று சஹாபக்களின் மனைவியர்களும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும்?.
அல்முத்ஆ திருமணம் என்பது விபச்சாரத்தை தவிர வேறு என்ன? இன்று நம்மில் பல ஆண்கள் வயிற்று பிழைப்பிற்காக கடல் கடந்து செல்கிறார்கள். தங்கள் மனைவியர்களைப் பிரிந்து வருடக்கணக்கில் வாழவேண்டிய சூழ்நிலை அந்த ஆண்களும், அவர்களின் மனைவியரும் உணர்ச்சிகளற்ற ஜடமா?அவர்களுக்கும் அல்முத்ஆ திருமணம் செய்து வைத்தால் எப்படி இருக்கும்? கற்பனை செய்யவே அருவருப்பாக தோன்றவில்லையா?
மது அருந்துவது இனி முற்றிலும் தடை செய்யப்படுகிறது என்று ஓரேஅடியாக தடை செய்தால் மனிதர்கள் “நாங்கள் ஒருபோதும் மது அருந்துவதை கைவிடமாட்டோம்” என்றும், விபச்சாரத்திற்கு தடைவித்தால், “நாங்கள் ஒரு போதும் விபச்சாரம் செய்வதை நிறுத்த மாட்டோம்” என்றும் கூறி மறுத்து விடுவார்களாம் எனவேதான் படிப்படியாக தடைவிதிக்கப்பட்டது. என்கின்றனர் மார்க்க அறிஞர்கள்.
 முதலில் அந்த ஹலாலான விபச்சாரத்தை அனுமதிக்க வேண்டும்? பின் நாளில் ஏன் தடைசெய்ய வேண்டும்?
அந்தந்த காலகட்டத்தில் தேவைக்கேற்ப புதிய வழிமுறைகள் அல்லாஹ்வினால் வஹியாக இறக்கப்பட்டது அல்லது ரத்து செய்யப்பட்டது என்கின்றனர் மார்க்க அறிஞர்கள்.  யாருடைய தேவைக்கு? முஹம்மது நபி  அவர்களின் தேவைகளுக்காகவா அல்லது மனிதர்களின் தேவைகளுக்காகவா?
புஹாரியின் ஹதீஸ், முஸ்லீம்கள் தங்களது அரசாட்சியை வெற்றிகரமாக நிலைநிறுத்திய பிறகே, முத்ஆ திருமணங்கள் கியாமத் நாள்வரையிலும் தடைசெய்யப்பட்டதாக கூறுகிறது. இதை கவனித்தால் இதில் மறைந்துள்ள சூழ்சியை நீங்களே அறியலாம். இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள்,
முத்ஆ திருமணங்கள் முதலில் ஏன் அனுமதிக்கப்பட்டது?
                முஹம்மது நபி தனது படையினர் போரில் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்க எல்லா வழிகளிலும் உற்சாகப்படுத்தினார். பலதாரமணம், அளவில்லா அடிமைப் பெண்களுடன் கூடி மகிழ அனுமதி, எதிரிகளின் பெண்களையும், செல்வங்களையும்  சூறையாடுதல், சொர்க்கம், ஹூருலீன் கன்னியர்களுடன் சல்லாபம், நரகம் என்று  நியாய அநியாயங்களையும் ஒழுக்க முறைகளையும் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வெற்றியை வெறித்தனமாக அடைவதற்கு பல வழிகளிலும் உற்சாகப்படுத்தினார் அவற்றில் ஒரு வழிமுறையே இந்த முத்ஆ திருமணங்கள்.  தனது தேவை முடிவடைந்ததும் தடைசெய்து விட்டார்.
                வஹீ எனப்படும் முறையில் வெளியான குர்ஆன் வசனங்களையும் சூழ்நிலைகளையும் ஆய்வு செய்த பொழுது, இவைகள் சர்வ வல்லமையுடையவன் என்று போற்றப்படும் இறைவனின் வார்த்தைகளாக இருக்க முடியாது எனத் தோன்றியது. ஏகத்துவ செய்தியை மக்களிடையே கூறுவதற்கு, இனப்படுகொலைகளும்,  கொள்ளையடித்தலும், கற்பழிப்பதலும், விபச்சாரம் செய்ய அனுமதித்தலும், வாக்குறுதிகளை மீறி பொய் சொல்லி ஏமாற்றுதலுக்கும் (தக்கியா-புனிதமோசடி) அவசியம் என்ன? இவைகளை முன்னின்று செய்வதற்கும் இறைத்தூதர் என்றொருவர் தேவையா?  இவர் கூறும் அக்கிரமங்களை வேதவாக்கு என்று நம்ப வேண்டும்மறுப்பவர்கள் இறைமறுப்பாளர்கள்…?
 நல்ல வேடிக்கை இது …!
முஹம்மது தனது மிகக் கீழ்த்தரமான எண்ணங்களையும்விருப்பங்களையும் அல்லாஹ்வின் வேதவாக்கு எனக் கூறி நிறைவேற்றிக் கொண்டார்
குர்ஆன் முழுவதுமே இறைவனின் வார்த்தைகளல்ல என்ற முடிவை அடைந்தேன். ஒருவேளை இறைவனின் வார்த்தைகளுடன் முஹம்மது நபியின் சொந்த சரக்குகள் சிலவற்றை குர்ஆனுக்குள் நுழைத்து விட்டிருப்பாரோ என்றும் தோன்றியது. முழு குர்ஆனிலுமிருந்து முஹம்மது நபியின் கைச்சரக்குகளையும் அல்லாஹ்வின் வாக்குகளையும் பிரித்தறிவது எப்படி?
  குர்ஆன் எவ்விதமான முரண்பாடுகளுமற்றது மிகத் தெளிவானது முன்னறிவிப்புகள் நிறைந்தது இதுவே குர்ஆன் இறைவனின் சொல் என்பதற்கான நிரூபனம் என்று, இஸ்லாமிய அறிஞர்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் நினைவிற்கு வந்தது.  எனவே குர்ஆனின் மேலும் சில பகுதிகளையும் அதன் பின்னணிகளையும் ஆய்வு செய்வதென்று முடிவு செய்தேன்

கிருஸ்தவ மதத்தை உருவாக்கியது அல்லாஹ் தான்



11ஆடி

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 21

(Answering Islam.com இணைதளத்தின் கட்டுரையைத் தழுவியது)
ஈஸா நபி (இயேசு) பிறந்த குழந்தையாக இருந்த நாளிலிருந்தே இஸ்லாமிய கோட்பாடுகளை  போதித்துவந்தார் என்று  குர்ஆன் சொல்கிறது.
பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறினார்.
 (குர்ஆன் 19:23)
(அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினான்.
(குர்ஆன் 19:24)
“இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.
(குர்ஆன் 19:25)
“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், ‘மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.
 (குர்ஆன் 19:26)
“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.
 (குர்ஆன் 19:30)
“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.
(குர்ஆன் 19:31)
“என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.
    (குர்ஆன் 19:32)
“இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது.
(குர்ஆன் 19:33)
ஈஸா நபி தன் வாழ்நாள் முழுவதும், அதாவது அல்லாஹ் தன்னை தன் அளவில் உயர்த்திக் கொள்ளும்வரை இந்த இஸ்லாமிய கோட்பாடுகளை போதித்து வந்தார். குர் ஆனின்படி ஈஸா நபி  கொண்டுவந்த இஞ்ஜில் (பைபிள்) என்ற வேதத்தின் செய்தியும், தனக்கு முன் வந்த நபிமார்கள் கொண்டுவந்த செய்தியும் வெவ்வேறானவை அல்ல. ஈஸா நபி  அல்லாஹ்வின்  நபியாகவும் இருந்து இஸ்லாமை போதித்தார்.
நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்’ என்பதே – இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது – தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் – (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.
(குர்ஆன் 42:13) 
அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.
 (குர்ஆன் 43:59)
இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் – ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார்.
(குர்ஆன் 43:63)
நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).
(குர்ஆன் 43:64)
ஆக, ஈஸா நபி  தான் பிறந்ததிலிருந்து, வானத்திற்கு அல்லாஹ்விடம் எடுத்துக் கொள்ளப்படும் காலம் வரை, கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் யூத மக்களுக்கு இஸ்லாமை போதிப்பதில் செலவழித்தார். அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு கொண்டு போகப்படும் முன்பு வரை அவருடைய இஸ்லாமிய பிரச்சாரம் ஓரளவிற்கு வெற்றிப் பெற்றதாக இருந்தது என்றுச் சொல்லலாம். ஏனென்றால், அவரை பின்பற்றுகிற பல சீடர்கள் அவருக்கு இருந்தார்கள் என்பதை நாம் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.
        ஈஸா நபி  தன் வாழ்நாள் முழுவதும் இஸ்லாமை போதித்தபடியால், அவருடைய ஆரம்பகால சீடர்களுக்கு அவர் கொடுத்த செய்தி, இஸ்லாமின் அடிப்படை கோட்பாடுகளைச் சுற்றியே இருந்திருக்கும். இப்போதுள்ள முஸ்லீம்கள் போல அவருடைய சீடர்கள் போதிக்கப்பட்டு அல்லது கற்றுக் கொடுக்கப்பட்டு இருப்பார்கள். இதைத் தான் குர் ஆன்,  ஈஸா நபியைப்பற்றி கீழ்கண்டவாறுச் சொல்கிறது :
அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர்.
(குர்ஆன் 3:52)
“என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்” என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், “நாங்கள் ஈமான் கொண்டோம், நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள்.
(குர்ஆன் 5:111)
அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம், இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம், (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு, எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாக இருந்தனர்.
(குர்ஆன் 57:26)
ஈஸா நபி, “லாஹிலாஹா இல்லல்லாஹூ முஹம்மதுர் ரசூலில்லாஹி” என்ற கலீமாவையே  போதித்தர்,  என்று  முஸ்லீம்கள் கூறுகின்றனர். ஏனென்றால் இந்தக் கலீமா ஆதமை படைப்பதற்கு முன்பே உள்ளதாகும்அல்லாஹ்வின் அர்ஷில் எழுதப்பட்டிருந்த இந்த கலீமாவின் உதவியின் காரணமாகவே ஆதம் மன்னிக்கப்பட்டார் என்பதை முன்பு நான் கூறியிருந்ததை நினைவுபடுத்திக் கொள்ளவும்பர்னபாஸ் சுவிசேஷத்தின் 39-ம் அதிகாரத்தில் ஒளிரும் பிரகாசமான எழுத்துக்களைக் ஆதம் கண்டதாக கூறுகிறதுஅதன் உட்பொருள்  இன்று முஸ்லீம்களால் கூறப்படும் கலீமாவைத் தவிரவேறில்லை.   ஈஸா நபி தினமும் ஐவேளை தொழுததாகவும் பர்னபாஸ் சுவிசேஷம் கூறுகிறது.
ஆகவே, ஈஸா நபியின் இஸ்லாமிய போதனைகளை ஏற்றுக் கொண்ட முதல் நூற்றாண்டில் குறிப்பிட்ட அளவிற்கு முஸ்லீகள் இருந்ததாகவும், அல்லாஹ், அவர்களுக்கு செய்த உதவியால் வெற்றியாளர்களாய் ஆகிவிட்டதாகவும் குர்ஆன் கூறுகிறது.
 ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியது போல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் – எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் – அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.
(குர்ஆன் 61:14)
இந்த வசனத்தின்படி “ஈஸா நபியின்  சீடர்கள் வெற்றியாளர்கள் ஆகிவிட்டார்கள்” என்று குர்ஆன் சொல்கிறது. ஈஸா நபியின் போதனைகளை ஏற்றுக் கொண்டு “வெற்றியாளர்கள் ஆகிவிட்ட” இந்த முஸ்லீம்கள் என்ன ஆனார்கள்?
ஈஸா நபியின் சீடர்கள் முஸ்லீம்களாக இருந்தார்கள் என்ற வாதம் ஒரு தெளிவான கேள்வியை எழுப்பக் கூடியதாக உள்ளது. முதல் நூற்றாண்டில் முஸ்லீம்கள் இருந்தார்கள் என்பதை ஏன் நாம் ஒரு முறைகூட கேள்விப்பட்டதே இல்லை? இப்படிப்பட்ட முஸ்லீம்கள் பற்றிய ஒரு ஆதாரமும் ஏன் நம்மிடம் இல்லை?
வாதத்திற்காக, முதல் நூற்றாண்டில் குறிப்பிட்ட அளவிற்கு முஸ்லீகள் இருந்ததாகவும், அவர்களுடைய விவரங்கள் சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், ஈஸா நபியை கடவுளாக்கிய கிறிஸ்தவர்களால், இஸ்லாம் சம்மந்தப்பட்ட எல்லா ஆதாரங்களும் அழிக்கப்பட்டு விட்டதாகவும் முஸ்லீம்கள் கூறலாம்.
அல்லாஹ்வால் “வெற்றியாளர்கள்” என்று அறிவிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தை எவ்வித சிறு ஆதாரமுமின்றி அழிக்கமுடியுமா?
எந்த ஒரு நம்பிக்கையையோ, சமுதாயத்தையோ அவ்வாறு அழிக்கமுடியாது. உதாரணத்திற்கு, ஸ்பெயின் நாட்டிலிருந்து இஸ்லாம் விரட்டியடிக்கப்பட்ட நிகழ்ச்சியை எடுத்துக் கொள்வோம். அன்றைய ஸ்பெயின் ஆட்சியாளர்கள்,  முஸ்லீம்களை அதிகாரத்தையும், அடக்குமுறைகளைக் கொண்டும்  கிருஸ்துவமதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்தனர். ஸ்பெயினிலிருந்து இஸ்லாமின் சுவடுகளை முற்றிலும் அகற்ற முடியவில்லையே?
முகலாய மன்னர் அக்பரால் உருவாக்கப்பட்ட “தீன்இலாஹி” என்ற மதம் அவருக்குப்பின் ஒருவராலும்  பின்பற்றப்படவில்லை. அக்பரின் வாரிசுகள் கூட அவரது புதிய மதத்தை ஏற்கவில்லை. அக்பரின் மரணத்திற்குப் பிறகு “தீன்இலாஹி” முற்றிலும் அழிந்தது. ஆயினும் “தீன்இலாஹி” பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும், ஆதாரங்கள் இன்றும் உள்ளது. மிக மிக பலவீனமான, அக்பரின் கற்பனையில் உருவான மதம் “தீன்இலாஹி”யின் குறிப்புகள் இருக்கையில், அல்லாஹ்வினால் அற்புதங்களுடன் அனுப்பப்பட்ட ஈஸா நபியின் போதனைகளின் அடிப்படை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறுவது,  முட்டாள்த்தனத்தின் உச்சம்…! ஈஸா நபியின் இஸ்லாமிய போதனைகளை கிருஸ்துவர்கள் அழித்ததாகவோ, அல்லது அழிக்க முயற்சி செய்ததாகவோ எவ்விதமான வரலாற்று குறிப்புகளும் இல்லை. இது முஹம்மது நபியின் வெற்று வார்த்தைகளைத் தவிர வேறில்லை…!
எனவே, கிறிஸ்தவர்களால், இஸ்லாம் சம்மந்தப்பட்ட எல்லா ஆதாரங்களும் அழிக்கப்பட்டு விட்டதாக  கூறுவது, அர்த்தமற்றது. கிறிஸ்தவத்திற்கு முந்தைய நம்பிக்கைகளைச் சொல்லக்கூடிய கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவம்-அல்லாத நிறைய ஆதாரங்கள் உள்ளன. ஆனால், இந்த இரண்டு விதமான ஆதாரங்களிலும் ஒரு “முஸ்லீம்-கிறிஸ்தவன்” இருந்ததாக ஒரு தகவலும் இல்லை.
ஒன்று மட்டும் நாம் நிச்சயமாகச் சொல்லலாம், அதாவது “இயேசுவின் மரணம்” பற்றிய விவரம் அந்த காலத்து சமுதாயத்தினருக்கு தெரிந்த விவரமாக இருந்தது. மற்றும் இயேசுவின் ஆரம்பகால சீடர்களாகிய பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் போன்றவர்களுக்கு கூட இயேசு தங்கள் பாவங்களுக்காக மரித்தார் என்றும் பிறகு உயிர்த்தெழுந்தார் என்றும் அவர்கள் நம்பினர். இது மட்டுமல்ல இயேசுவின் சீடர்கள் இயேசு ஒரு தேவகுமாரன் என்று நம்பினர். இயேசு மரித்தார் மறுபடியும் உயிர்த்தெழுந்தார் என்று ஆரம்பகால கிறிஸ்தவர்கள் நம்பினார்கள் என்று புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்களிலிருந்தும், அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திலிருந்தும் நாம் தெரிந்து கொள்கிறோம். பவுல் எழுதிய கடிதங்கள் கூட இயேசுவின் மரணம் உயிர்த்தெழுதல் பற்றி அடிக்கடி குறிப்பிடுவதை காணலாம். மட்டுமல்ல, இயேசுவிற்கு பிறகு வாழ்ந்த கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை நாம் 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் காணலாம். எனவே இயேசுவின் சீடர்கள் (அப்போஸ்தலர்கள்) காலத்தில் நிலவிய அவர்களின் நம்பிக்கைக்கு இது ஒரு அத்தாட்சியாகக் கொள்ளலாம்.  
உதாரணத்திற்கு : அப்போஸ்தர் பேதுரு “ரோம பேராயராக” நியமித்த “ரோம் கிளமண்ட் (Clement of Rome)” என்பவர் கூட பல முறை அப்போஸ்தர்களின் நம்பிக்கையாகிய “இயேசுவின் மரணம் மற்றும் அவரது உயிர்த்தெழுதல்” பற்றி பலமுறை எழுதியுள்ளார். அப்போஸ்தலர் யோவான் நியமித்த போலிகார்ப் (Polycarp), என்பவரும் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பலமுறை எழுதியுள்ளார். இன்னும் பல “கிறிஸ்தவ அல்லாத ஆதாரங்கள் (Non-Christian Writings)” இயேசுவைப் பற்றியும், அவரது அப்போஸ்தலர்கள் பற்றியும் மிக முக்கியமான விவரங்களைச் சொல்கின்றன. யூத சரித்திர ஆசிரியர் “ஜோசபாஸ் (Josephus)” மற்றும் ரோம சரித்திர ஆசிரியர் டாசிடஸ் (Tacitus) இவர்களின் விவரங்களின்படி, இயேசு பொந்தியுஸ் பிலாத்து (Pontius Pilate) என்பவர் ஆட்சி செய்யும் போது சிலுவையில் அறையப்பட்டார். ஒரு கிரேக்க நகைச்சுவை (Satirist) எழுத்தாளர் “Lucian of Samosata” என்பவர் இவ்விதமாகச் சொல்கிறார், “இன்று கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஒரு மனிதனை வணங்குகிறார்கள், இவர்களுடைய எல்லா நம்பிக்கைக்கும்  அவர் தான் காரணர் மற்றும் இதனாலேயே  அவர் சிலுவையில் அறையப்பட்டார்”. அவ்வளவு ஏன், யூதர்களின் தல்மட் (Talmud) கூட இயேசுவின் சிலுவையில் அறையப்படுதலைப் பற்றிச் சொல்கிறது.
இந்த முதல் நூற்றாண்டு முஸ்லீம்கள் என்ன ஆனார்கள்?
ஈஸா நபியின் போதனைகள் என்ன ஆனது?
இந்த கேள்விகளுக்கு வழக்கம் போல “கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் போதனையை மாற்றி விட்டார்கள், மற்றும் கிறிஸ்தவ குருக்கள் ஈஸா நபியின் இஸ்லாமிய போதனையை மொத்தமாக அழித்து விட்டார்கள்” என்று பதில் சொல்ல முடியாது.
 ஈஸா நபிக்கு என்ன நடந்தது என்று குர் ஆன் சொல்வதை மறைத்துவிடுகிறது.
குர்ஆனின் கூற்றுப்படி, ஈஸா நபி சில யூதர்களை முஸ்லீம்களாக மாற்ற அவரால் முடிந்தது என்று அறியலாம். ஆனால், இயேசுவின் சீடர்கள் அல்லது அவரை பின்பற்றியவர்கள், அவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நம்பினார்கள் என்று சரித்திரத்தின் மூலமாக நாம் அறிந்துக கொள்ளலாம். இருந்தாலும், ஈஸா நபி வானத்திற்கு எடுத்துக் கொண்ட பிறகு ஏன் “ஒரு முஸ்லீம் கூட” இல்லை? அவர்களது நம்பிக்கை என்ன ஆனது ? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதில் என்னவென்றால், ஈஸா நபியை பின்பற்றிய எல்லாரும் “ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்  என்றும் அவர் மறுபடியும்  உயிரோடு எழுந்தார்” என்றும் நம்பினார்.
ஈஸா நபியைப் பின்பற்றியவர்களுக்கு, “ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார் ” என்ற நிகழ்ச்சியை உருவாக்கியது யார்? குர்ஆனின்  கூற்றுப்படி, “ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்” என்ற எண்ணத்தை மனிதர்களிடையே  உருவாக்கியதே அல்லாஹ் தான்.
இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய – மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்று விட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் – வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
(குர்ஆன் 4:157)
ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
 (குர்ஆன் 4:158)
குர்ஆனின்  இந்த வாதத்திற்கு வேறு ஆதாரம் ?
இயேசுவின் நேரடிச் சீடராக இருந்த பர்னபாஸ் என்பவரின் பெயரில் எழுதப்பட்ட சுவிசேஷம் கூறும் செய்திகள் அவர் வானத்துக்கு உயர்த்தப்ட்டார் என்றும் அவருக்கு வேறொருவன் ஒப்பாக்கப்பட்டான் என்றும் குறிப்பிடும் குர்ஆனின் செய்தியைக் கூறுகிறது.
பர்னபாஸின் சுவிசேஷம் (ஆங்கிலத்தின் தமிழாக்கம்)
இயேசு நின்ற இடத்திற்கு அருகே யூதாசும் படையாளிகளும் வந்தடைந்தபோது இயேசு ஜனங்களின் ஆரவாரத்தைக் கேட்டு வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றார். பதினொரு அப்போஸ்தலர்களும் அப்போது நித்திரையிலிருந்தனர். அப்பொழுது கர்த்தர் தன் ஊழியக்காரனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை அறிந்து, தன்னுடைய மந்திரிகளாகிய கப்ரியேல், மீக்காயேல், ராஃபேல், உரியேல் என்போருக்கு இயேசுவை பூலோகத்திலிருந்து புறமே எடுத்துவிடும் படிக்கு கட்டளையிட்டார். தெற்குப் பக்கமாக திறந்திருக்கும் சாளரம் வழியாக  இயேசுவை தேவ ஊழியர்கள் வெளியே எடுத்தார்கள். அவரையும் கொண்டு அவர்கள் கர்த்தரின் அருள் என்றைக்கும் நிலைத்து நிற்கக்கூடிய தேவ ஊழியக்காரர்கள் தங்கியிருக்கக்கூடிய மூன்றாவது வானத்துக்குக் கொண்டு சென்றார்கள்.
        இயேசு எடுக்கப்பட்ட உடனே யூதாஸ் மற்றவர்கள் முன்னிலையில் அறைக்குள் சாடிச் சென்றான். அப்போது எல்லா அப்போஸ்தலர்களும் நித்திரை கொண்டிருந்தனர். அப்பொழுது அற்புதங்களை உடைய கர்த்தர் அற்புதத்தை நிகழ்த்தினார்! யூதாசின் உரையாடலும் அவனது முகமும் இயேசுவினுடையது போல ஆயிற்று! நாங்கள் அனைவரும் அவன் இயேசுவென்று நினைக்கும் நிலைக்கு ஆகிவிட்டது! எங்களை எழுப்பி அவன் குரு எங்கே என்று தேடினான். அப்பொழுது நாங்கள் வியப்புடன் அவனுக்கு பதில் கூறினோம் ”ஆண்டவரே! தாங்கள் தானே எங்களுக்கு குருவானவர், இப்போது எங்களை மறந்து விட்டீர்களா?” அவன் புன்னகைத்துக் கொண்டு கூறினான்: நான்தான் யூதாஸ் இஸ்காரியாத், இதனைப் புரியாத நீங்கள் இப்போது அறிவீனர்களே!”
        இப்படிக் கூறிக்கொண்டிருக்கையில் படையாட்கள் உள்ளே நுழைந்தனர். முற்றிலும் இயேசுவைப் போல மாறிவிட்டிருந்த யூதாசைப் பிடித்துக் கொண்டார்கள். எங்களைச் சுற்றியிருந்த படையாட்களுக்கு இடையில் நாங்கள் ஓடுகையில் யூதாஸ் கூறிக்கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். நார்ப்பட்டுத் துணியால் தன்னைப் போர்த்தியிருந்த  யோவான் எழுந்து ஓடியபோது ஒரு படையாள் நார்ப்பட்டுத் துணியைப் பிடித்தபோது, அவர் அதை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்! இயேசுவின் வேண்டுதலுக்கு கர்த்தர் செவி கொடுத்து, பதினொன்று பேரும் காப்பாற்றப்பட்டார்கள்.
        படையாட்கள் யூதாசைப் பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தனர். அவனோ தான் இயேசு அல்ல என்று மறுத்துக் கொண்டிருந்தான். படையாட்கள் அவனைப் பரிகசித்துக் கொண்டு சொன்னார்கள், ஐயா, தாங்கள் பயப்படவேண்டாம், தங்களை இஸ்ரவேலரின் மன்னராக ஆக்குவதற்கு நாங்கள் வந்திருக்கிறோம். அரசாட்சியை தாங்கள் மறுப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் தான் உங்களைப் பிடித்து வைத்துள்ளோம்!”
(The Gospel of Barnabas: Translated by Lonsdale and Laura Ragg, Chapter 215,217)
“The Gospel of Barnabas”-பர்னபாஸ் என்ற சீடரால் எழுதப்பட்டதல்ல.  இது மிக பலவீனமான ஆதாரமாகும். இந்த சுவிசேஷம் கிபி 1585 ல் எழுதப்பட்டதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.  பர்னபாஸ் சுவிசேஷம் இட்டுக்கட்டி எழுப்பட்ட புத்தகமென்பதற்கு ஏராளமான ஆதரங்கள் இருக்கின்றன. பர்னபாஸ் எழுதிய கடிதங்கள்  இந்த சுவிசேஷத்திற்கு எதிரான செய்திகளைக் கூறுகிறது. இருப்பினும், குர்ஆன் கூறும் ஆள்மாறாட்டம் எவ்வாறு நிகழ்ததென்பதைக் அறிந்து கொள்வதற்காகவே இதையும் முன்வைக்கிறேன். )
அல்லாஹ்வால் நிகழ்தப்பட்ட ஆள்மாற்றத்தை, ஈஸா நபியின் (இயேசுவின்)  தாயாரான மரியம் அவர்களாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவரும் தன்மகன் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதாகவே நம்பினர். அல்லாஹ்வால், ஈஸா நபி வானிற்கு உயர்த்தப்பட்டதாகக்  கொண்டு நாம் விவாத்தைத் தொடர்வோம்.
அதாவது, மனித உடலுடன் அவர் இரண்டாம் வானத்திற்கு உயர்த்தப்பட்டார். இது ஒருமுரண்பாடான செய்தியாகும். எந்த வகையான சொர்க்கத்தைப் (வானம்) பற்றி  முஹம்மது நபி கூறுகிறார் என்பது புரியவில்லை. சொர்க்கம் என்பது ஆன்மாக்கள் வாழும் பகுதியாக இருந்தால், ஈஸா நபி மனித உடலுடன் அங்கு எப்படி வாழ முடியும்? ஈஸா நபி, உணவு, உடை, இயற்கைத் தேவைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சராசரி மனிதர். பூமியை போன்ற ஒரு இடத்தில்தான் அவரது உடலால் வாழ முடியும். எனவே முஹம்மது நபிகூறும் சொர்க்கம் பூமியைப் போன்ற பொருள் சார்ந்த உலகமாகவே தோன்றுகிறது. இதன் அடிப்படையில் நோக்கினால், ஈஸா நபி மட்டுமே மிக நீண்ட காலமாக, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதராவர். அப்படியானால் அல்லாஹ்வும் பூமியைப் போன்ற பொருள் சார்ந்த  பகுதியில்தான் தனது இருக்கையை (அர்ஷ்) அமைத்து அமர்ந்து கொண்டிருக்கிறானா?.
ஈஸா நபியை எதற்காக  தன்அளவில் (வானத்திற்கு) உயர்த்திக் கொண்டான்?
ஈஸா நபியை, தீய யூதர்கள் மற்றும் ரோம ஆட்சியாளர்களின் கைகளிலிருந்து  காப்பாற்றுவதே மைய நோக்கமென்றால், தனது நேசத்திற்குரிய ஒரு நபியை அநியாயமாகக் கொடூரமான முறையில் கொல்லத் துணிந்தவர்களின் மனதை மாற்றியிருக்கலாம், அல்லது  மற்றவர்களையும் எச்சரிக்கும்  முறையில் அவர்களை தண்டிக்கலாம் அல்லது  யூத மற்றும் ரோம ஆட்சியார்களை ஏமாற்றாமல், ஈஸா நபியை  அப்படியே எல்லாருக்கும் முன்பாக எல்லோரும் தெளிவாகக் காணும் முறையில் தன் அளவில் உயர்த்திக் கொள்ளலாம். மனிதர்கள் தங்களது இயலாமையின் காரணமாக எதிராளியை ஏமாற்றி தங்களது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக செய்யும் ஆள்மாறாட்ட வித்தையை சர்வவல்லமையுடைய அல்லாஹ்வும் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
அல்லாஹ் “ஈஸா நபியை பாதுகாப்பாக” தன் அளவில் எடுத்துக்கொண்டு அவருக்கு உரிய பாதுகாப்பு அளித்து விட்டானே. ஆள்மாறாட்டம்  செய்ய வேண்டிய அவசியம் என்ன?
நள்ளிரவில் மிக ரகசியமாகச் செய்யப்பட்ட இந்த ஆள்மாறாட்டத்தின் நோக்கம், ஈஸா நபியின்  எதிரிகள் ” ஈஸா நபியை  சிலுவையில் அறைந்து கொன்று விட்டோம்” என்று நம்பி ஏமாற வேண்டும் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது. (இயேசுவின் தாயார் உட்பட ஒருவருமே அறியாத,   அல்லாஹ்வால் ரகசியமாகச் செய்யப்பட்ட ஆள்மாறட்ட நிகழ்ச்சியை பர்னபாஸ் மட்டும் எப்படி அறிந்து கொண்டார்?) சர்வ வல்லமையுடையவனாகிய அல்லாஹ்விற்கு, ஆள்மாறாட்டம் செய்துதான் தன்னுடைய தூதரைக் காப்பாற்ற முடியுமா? அப்படி ஒரு கட்டாயம் என்ன?
அல்லாஹ்வின் திட்டப்படி வானவர்களால், ஈஸா நபி காப்பாற்றி அழைத்துச் செல்லப்படுவதை  யூத ரோமானியப் படைவீரர்கள் அறிந்து, வானவர்களை வழிமறித்து ஈஸா நபியை திரும்பவும் பூமிக்கு கொண்டுவந்து சிலுவையில் அடித்து கொன்று விடுவார்களோ  என்று அல்லாஹ் அஞ்சியிருக்க வேண்டும். எனவே படையாட்களின் கவனத்தை முற்றிலும் திசைதிருப்பி ஏமாற்றி ஈஸா நபியைக் காப்ற்றியிருக்கிறான் என்ற காரணத்தைத்தவிர வேறு எதுவுமில்லை.
 குர்ஆனின் கூற்றில் மறைந்துள்ள முட்டாள்தனத்தை உங்களால் அறிய முடிகிறதா?
எல்லோரும் தெளிவாகக் காணும் முறையில் ஈஸா நபியைத்  தன் அளவில் உயர்த்தி எடுத்துக் கொண்டிருந்தால், இப்படி பல மக்களை ஏமாற வேண்டிய அவசியமே இருந்திருக்காதே? ஆனால், அல்லாஹ்வின் இந்த ஏமாற்றுச் செயல், கிறிஸ்தவம் உருவாக காரணமாகி விட்டது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவம் இப்படித் தான் ஆரம்பித்தது என்று குர்ஆன் நம்மை நம்பச் சொல்கிறது. 
ஈஸா நபியை கொல்ல நினைத்தவர்களை மட்டும் ஏமாற்ற வேண்டும் என்பது தான் அல்லாஹ்வின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கும் என்று நாம் நினைத்தாலும், ஈஸா நபியின் சீடர்கள் உட்பட அனைவரும் அல்லாஹவால் ஏமாற்றப்பட்டனர் என்பதை நாம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரிந்து கொள்ளலாம்.