ஞாயிறு, 25 டிசம்பர், 2011

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 12


பூமி உருண்டை என யார் சொன்னது அல்லாவா? மனிதனா?
எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு
பூமியின் வடிவம் குறித்த அந்த பதிவில், உருண்டை என குரான் கூறுவதாக சொல்லப்படும் வசனங்களில் பெரும்பாலான வசனங்கள் பூமியின் வடிவம் குறித்து எதுவும் கூறாமல் இரவு பகலின் காட்சியை விவரிக்கும் வசனங்களாக இருக்கின்றன என்பதையும்; தஹாஹா, துல்கர்னைன் குறித்த வசனங்கள் பொய்யாகவும், வலிந்து ஏற்றப்பட்டதாகவும் இருக்கின்றன என்பதையும்; இன்னும் ஏராளமான வசனங்கள் பூமியின் வடிவத்தை தட்டை எனும் பொருள்பட குறிப்பிட்டுள்ளன என்பதையும் விளக்கியிருந்தேன். இவற்றில் தஹாஹா குறித்து அந்த வசனத்திற்கு ஜாஹிர் நாயக் தவறான விளக்கம் கொடுத்து வருவதாக நண்பரும் சேர்ந்து கூறியிருப்பதால் அந்த வசனத்தை தள்ளுபடி செய்துவிடலாம். ஆனால் ஜாஹிர் நாயக் மட்டும் தான் வசனங்களுக்கு பொருந்தாத அறிவியல் விளக்கம் கூறியிருக்கிறாரா? வேறு யாரும் கூறுவதில்லையா? துல்கர்னைன் வசனத்திற்கு பிஜே அளிக்கும் விளக்கம் எப்படி அறிவியலற்று இருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
முதலில், இரவு பகல் காட்சிகளை விவரிக்கும் வசனங்கள் குறித்து நண்பர் குழப்பமான வாக்கியங்களில் கடந்து செல்கிறார். அந்த வசங்களில் பூமியின் வடிவம் குறித்த விளக்கம் இருக்கிறதா? இல்லையா? நண்பர் அதை சரி காண்கிறாரா? மறுக்கிறாரா? \\அதை தவறு என்று மறுக்கவில்லை. மாறாகஇதை 1400 வருடங்களுக்கு 
முன் என்ன 2800    வருடங்களுக்கு முன்இருந்தவர்களாலும் 
சொல்ல முடியும் என்கிறார். ஆக, இதற்களிக்கும்விளக்கத்தில்
 எந்த மறுப்பும் அன்னாருக்கில்லை என்றாகிவிட்டது// என்று குறிப்பிட்டிருக்கிறார். அதாவது அந்த வசனங்கள் பூமி உருண்டை என விளக்குவது போலவும், அதை நான் தகுந்த முறையில் மறுக்கவில்லை என்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைந்திருக்கிறார். ஆனால் புளி போட்டு விளக்கும் அளவுக்கு அந்த வசனங்களில் ஒன்றுமில்லை என்பதை அந்த பதிவில் தெளிவு படுத்தியிருக்கிறேன். \\ஏனென்றால் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை இரவு பகல் மாற்றம் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிகழ்கிறது. அறிவியலின் வாசம் கூட இல்லாத இந்த ஒன்றுமற்ற வசனத்தை தான் மாபெரும் அறிவியல் கொண்டதாக புழுகுகிறார்கள்// ஒன்றன்பின் ஒன்றாக வருகிறது, தொடர்கிறது, அடுத்தடுத்து வருகிறது, ஒன்றை ஒன்று மூடுகிறது இதுபோன்று தான் அந்த வசனங்கள் இரவு பகலை விவரிக்கின்றன. மனிதன் தோன்றிய நாள் முதல் இரவு பகல் இப்படித்தான் வந்து கொண்டிருக்கிறது. இதைக் கூறுவதற்கு, ஆண்டவனிடம் டியூசன் படித்தவர்களால் மட்டும் தான் முடியுமா? ஆனால் அந்த வசனங்களில் பூமி உருண்டை என கூறப்பட்டிருப்பதாக ஜல்லியடிப்பதற்கு நிச்சயம் ஆண்டவனிடம் டியூசன் படித்திருக்க வேண்டும். அவ்வாறு டியூசன் எதுவும் படிக்கவில்லை என்பதால் தான் நண்பர் அவைகளில் உருட்டு விளக்கங்கள் கொடுக்காமல் தவிர்த்துக் கொண்டார் போலும்.
துல்கர்னைன் வசனங்களை எடுத்துக் கொண்டால், அந்த வசனங்களில் பிஜே அவர்கள் துப்பறிந்து பூமி உருண்டை என்று கண்டுபிடிப்பதை இதை சொடுக்கி கண்டு களியுங்கள். இந்த விளக்கத்தைத் தான் நண்பரும் தன்னுடைய மறுப்பில் எடுத்து வைத்திருக்கிறார். அதாவது பூமியில் நேர்கோட்டில் பயணம் செய்தால் சூரியன் மறைவதையும் உதிப்பதையும் பார்க்கலாம். அப்படி பார்ப்பதாக குரான் கூறுவதால் பூமி உருண்டை என்று உறுதிப்படுகிறது என்கிறார். இது எப்படி அடிப்படையற்றதாக இருக்கிறது என்பதைப் பார்ப்போம். திசைகள் என்பவை மனிதனுக்கான அடையாளங்கள் தாம், அண்ட வெளியில் திசைகள் இல்லை. சூரியன் உதிக்கும் திசை கிழக்கு, மறையும் திசை மேற்கு என்றால் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் சென்று மறைவதில்லை. பூமி சுழல்வதால் அப்படியான தோற்றம் வருகிறது. இப்போது ஒருவர் பூமியில் கிழக்கு நோக்கி பயணம் மேற்கொள்கிறார்(படம்) என்று கொள்வோம். அவரின் முகத்திற்கு எதிரே சூரியன் இருப்பதால் கிழக்காக செல்கிறார் என்று பொருள். தொடர்ந்து 90 பாகை கடந்ததும் அவர் தன் பாதையில் இயல்பாக மேற்கு நோக்கி திரும்பி விடுவாரா? நிச்சயம் மாட்டார். பூமியின் இரவுப் பகுதியில் நுழையும் போது அவரால் சூரியன் மறைவதை காண முடியாது. ஏனென்றால் சூரியனின் மறைவு அவரது பின் தலையில் நிகழும். 180 பாகை கடந்ததும், மீண்டும் அவர் சூரியன் உதிப்பதை காண முடியும். இப்படி அவர் எத்தனை சுற்றுகள் பூமியை சுற்றி வந்தாலும், சூரியன் உதிப்பதை மட்டுமே திரும்பத் திரும்ப காண முடியுமேயன்றி ஒருபோதும் அவரால் சூரியன் மறைவதை காண முடியாது. சூரியனின் மறைவை காண வேண்டுமென்றால் அவர் திரும்பி தன் திசையை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே ஒருவர் கிழக்காகவோ, மேற்காகவோ எந்த திசையில் சென்றாலும் சூரியன் உதிப்பதையோ மறைவதையோ ஏதாவது ஒன்றை தான் காண முடியுமேயன்றி இரண்டையும் காண முடியாது. இரண்டையும் கண்டிருக்கிறார் என்றால், அவர் தன் திசையை மாற்றியிருக்கிறார் என்பதைத்தவிர வேறு ஒரு பொருளும் இல்லை. இதைத்தான் பதிவில் இப்படி \\நேர் கோட்டில் பயணம் செய்யும் ஒருவரால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காணமுடியாது// சுருக்கமாக குறிப்பிட்டிருந்தேன்.
இதே துல்கர்னைன் வசனத்தில் முதலில் ஒரு பாதை, பின்னர் ஒரு பாதை என்று குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அவர் இருவேறு திசைகளில் பயணம் செய்திருக்கிறார் என்று கூறியிருந்ததை மறுத்து நண்பர் \\அவர் இது வரை பயணம் செய்த வழி தரைவழிப்பயணம் எனபதையும் மேற்குத்திசை நோக்கி பயணம் செய்தார் என்பதையும் ….. பின்னர் ஒருவழியில் சென்றார் என்பதன் அர்த்தம் கடல் மார்க்கமாக அல்லது நீர்மார்க்கமாக பயணம் செய்ததை குறிப்பிடுகிறது என்பதை அறியலாம்// என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு வாதத்திற்காக அப்படியே வைத்துக் கொள்வோம். என்றாலும் அவர் திசையை மாற்றாமல் ஒரே நேர்கோட்டில் சென்றார் என்பதை எப்படி கூறுகிறார்கள்? ஒரே திசையில் தான் சென்றார் என்பதை அந்த வசனத்தில் எந்த சொல்லிலிருந்து எடுத்துக் கொண்டார்கள்? அவர்களுக்கு தேவை என்றால் எப்படி வேண்டுமானலும் வளைத்து, நெளித்து பொருள் சொல்வார்களா?
குரான் 2800 ஆண்டுகளுக்கு முன்பே எல்லாவற்றையும் கூறிவிட்டது என்று வாய்ப்புக் கிடைத்த எல்லோருமே கூறித் திரிகிறார்கள். ஜாஹிர் நாயக் கூறியது தவறு என்று நண்பர் கூறுகிறார். பிஜே கூறியதை என்ன செய்வது? ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னால் சௌதி இமாம் ஷேக் இபின் பாஸ் பூமி தட்டை என்பதை ஏற்காதவர்கள் குரானை மறுக்கும் காபிர்கள் என்று வரலாற்று புகழ்மிக்க பத்வாவை வழங்கியிருக்கிறார் என்பது நண்பரின் கவனத்திற்கு.
பூமியின் வடிவம் குறித்து எதுவும் கூறாத வசனங்களை உலையில் பழுக்க வைத்து சம்மட்டியால் அடித்து நீட்டி பூமி உருண்டை என்று கதற வைக்கிறார்கள் என்பது ஒருபுறமிருந்தாலும்; பூமியின் வடிவத்தை தட்டை எனும் பொருளில் குறிப்பிடும் வசனங்களைக் கூட எப்படி உருண்டை என்று பொய் சாட்சி சொல்ல வைத்துவிடுகிறார்கள் என்பதை அந்த பதிவில் விளக்கியிருந்தேன். அதை மறுக்க வேண்டும் என நினைத்த நண்பர் எப்படி மறுப்பது என்பது புரியாததால் அறிவை ஐயப்படுகிறார். பூமியை விரித்தான் என்று கொண்டாலும், பூமியில் விரித்தான் என்று கொண்டாலும் அங்கு பூமி உருண்டை எனும் பொருளை அதிலிருந்து பெறமுடியாது. இதை தெளிவாகவே கேட்டிருக்கிறேன், \\ எந்த வடிவத்தில் அந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்கிறது? சமதளத்திலா? அல்லது உருண்டை வடிவத்திலா? என்ற கேள்விக்கு குரானில் விடை இருக்கிறதா? பூமி உருண்டையாக இருப்பதனால் அதன் மேலும் விரிப்பை பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. பூமி உருண்டையா தட்டையா என்று தெரியாது எனக்கொண்டால் குரானிய வசனங்களின் படி உருண்டை தான் என எப்படி உறுதிப்படுத்துவது?// சதுரமாக இருந்தாலும், முக்கோணமாக இருந்தாலும் விரிப்பை விரிக்க முடியும். பூமியில் விரிக்கப்பட்டிருக்கும் விரிப்பு எந்த வடிவின் மேல் விரிக்கப்பட்டிருக்கிறது? இதற்கு பதில் சொல்ல இன்னொரு முகம்மதா வருவார்? இருக்கும் முகம்மதுகள் தான் பதில் கூற வேண்டும்.
முகம்மது பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே பூமி உருண்டை என்பது மக்களுக்கு தெரிந்து தான் இருந்தது. கடலாடிகள் தங்கள் பட்டறிவின் மூலமும், அறிவியலாளர்கள் ஆய்வுகள் மூலமும் அதை வெளிப்படுத்தி இருந்தார்கள். இதில் புளகமடையும் விதமாக நண்பர் தன் நேர்மையுணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரே செய்தியை நானும் அவரும் கூறியிருப்பதை பாருங்கள். \\கிரேக்கர்கள் சீனர்கள் இந்தியர்கள், அராபியர்கள் கடலாடிய செய்திகள் பண்டைய இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. ….. பூமியின் வடிவம் உருண்டை என்பதை பட்டறிவாகவே விளங்கி வைத்திருந்தனர்// இது நான். \\இந்தியா, சீனா, கிரேக்கம் போன்ற நாடுகளில் குறிப்பிட்டது முகம்மது 
நபிக்குஎப்படித் தெரியும்?// இது நண்பர். அரபியர்களை மட்டும் நேர்மையாக மறைத்து விட்டார். தொடர்ந்து எனக்கு நெத்தியடி, சாட்டையடி முதல் இன்னும் பலவாறான அடிகளை அடிப்பதாக எண்ணிக் கொண்டு கேள்விகளாக அடுக்கியிருக்கிறார். ஸ்ஸ்ஸ்ஸ்யப்பா, முடியல (வடிவேலு பாணியில் படித்துக் கொள்ளவும்)
பூமி உருண்டை என்று குரான் கூறுகிறதா? என்பது எடுத்துக் கொண்ட தலைப்பு. ஆம் கூறுகிறது என்பதாக சுட்டப்படும் வசனங்களை மூன்றாக பிரித்து 1) இரவு பகல் காட்சி வசனங்களில் பூமி உருண்டை என்று கூறப்படவில்லை, 2) தஹாஹா, துல்கர்னைன் வசனங்களில் பூமி உருண்டை என்று கூறப்படவில்லை, 3) தட்டை என்று பொருள் கொள்ளத்தக்க வசனங்களிலும் பூமி உருண்டை என்று கூறப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறேன். மேலதிகமாக முகம்மதின் காலத்திற்கு வெகுமுன்பே பூமி உருண்டை என்பது நிருபணமாகியிருக்கிறது என்பதையும் எடுத்தியம்பி இருக்கிறேன். இதை மறுக்க வேண்டும் என்பதற்காக ஏதேதோ உளறி வைத்திருக்கும் நண்பர், அறிவுடன் தான் எழுதுகிறேனா? என்றும் கேட்டிருக்கிறார். மெய்யாகவே நண்பருக்கு அறிவு முற்றி இருக்கும் துளைகள் வழியாகவெல்லாம் வெளியேறிக் கொண்டிருப்பதாக எண்ணினால் உருப்பெருக்கி கொண்டு குரானின் வரிகளுக்கிடையே தேடி பூமி உருண்டை என்று கூறும் வசனங்களை கூற முயலட்டும், அவரால் முடிந்தால்.

புதன், 21 டிசம்பர், 2011

கடவுளை பரப்பியவன் அயோக்கியன்

"கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்" என்பதற்கு இவ்விளக்கம் எழுதப்படுகிறது. கடவுளைப் பரப்புகிறவன் எவனுமே "கடவுள்தத்துவத்திற்கு" ஏற்பக் கடவுளைக் கற்பித்துக் கொண்டு பரப்பு கிறவன், அல்லது பிரசாரம் செய்பவன், அல்லது கற்பித்துக்கொள்பவன், அல்லது கடவுளுக்காகவென்று கதைகள் புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் எழுதினவன்கள் மற்றும் அதற்கு ஆகக்கோவில்கள் கட்டி அவற்றுள் உருவங்கள் வைத்தவன்கள், கடவுளுக்காகவென்று பூசைகள் உற்சவங்கள் பண்டிகைகள் முதலியவைகளை நடத்து கிறவன்கள் செய்கிறவன்கள் யாவருமே நாணயத்தையோ , யோக்கியத் தையோ, ஒழுக்கத்தையோ ஆதாரமாக வைத்துக் கடவுளைப் பரப்புவதில்லை, நடத்துவது இல்லை.

"கடவுளுக்கு உருவமில்லை குணமில்லை" என்று ஆரம்பித்துக் "கடவுள் சர்வவல்லமையுடையவர், சர்வத்தையும் அறியக்கூடிய சக்தி (சர்வஞ்ஞத்துவம்) கொண்டவர்" "கருணையே வடிவானவர்" "அன்பு மயமானவர் " "அவரின்றி அணுவும் அசையாது" என்பன போன்ற கடவுளின் எல்லாக் குணங்களையும் சக்திகளையும் , தன்மைகளையும் அடுக்கடுக்காகக் கடவுளுக்குக் கற்பித்து மக்களை நம்பச் செய்விட்டு இந்தக் குணங்களுக்கும் தன்மைக்கும் மாறான குணங்களை, தன்மை களை அதற்கு ஏற்றி அதற்காகக் கோவில்கள் கட்டியும், உருவங்கள் உண்டாக்கி வைத்தும், நடவடிக்கைகளை ஏற்றியும், அவைகளை ஆதாரமாய்க் கொண்டு பூசை, உற்சவம், பண்டிகை முதலியவைகளைக் கொண்டாடச் செய்வதன் மூலம் கடவுளைப் பரப்புவதென்றால் இக்காரிய முயற்சியில் ஈடுபட்ட மக்கள் அயோக்கியர்களா அல்லவா என்று சிந்தித்துப் பார்க்கும்படி கேட்கிறேன்.

இக்கூட்டத்தார் மக்களை ஏய்க்க வல்லாமல் வேறு எக்காரியத்திற்காக இக்காரியங்களில் ஈடுபடுகிறார்கள், ஈடுபடவேண்டியவர்களானார்கள் என்று சொல்லமுடியுமா? இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக , தங்கள் பிழைப்பிற்காக இக்காரியங்களைச் செய்யும் அயோக்கியர்களாக முட்டாள்களாக இருந்து வருகிறார்கள் என்பதல்லாமல் வேறு கருத்து, காரணம் என்ன சொல்லமுடியும்?

இன்று இந்தப்படியான அயோக்கியர்களால் பரப்பப்பட்டிருக்கும் எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் அதற்கு வீடு,உணவு, பெண்டாட்டி, வைப்பாட்டி, குழந்தை குட்டிகள் , நகைகள் , சொத்துக்கள், கல்யாணம், உற்சவம், ஊர்வலம் முதலியவை செய்து கூட்டத்தை கூட்டி ஆயிரம், பல ஆயிரம், இலட்சம், பல லட்சம், ரூபாய்கள் செலவு ஏற்படும்படியும் அதுபோலவே மக்களுக்கும் நாள் கணக்கில் மெனக்கேடு ஏற்படும்படியும் செய்வதோடு கோடிக்கணக்கான மக்களை இழிசாதி மக்கள்களாகவும் இருக்கும்படி செய்கின்றனர்.
" அன்பும் கருணையும்,ஒழுக்கமும் உள்ள கடவுள்கள்" யுத்தம் செய்ததாகவும் கோடிக்கணக்கான, மக்களை ஆண்களை, பெண்களை கொன்று குவித்ததாகவும், வெட்டி வீழ்த்திச் சித்திரவதை செய்து நாசமாக்கியதாகவும் விபசாரம் செய்ததாகவும் , நடப்பில் நடத்திக் காட்டிப் பரப்புவதென்றால் இப்படிப் பரப்புகிறவர்கள் அயோக்கியர் களா அல்லவா என்று மறுபடியும் கேட்பதோடு இதற்கு இரையாகிற வர்களை முட்டாள்களாக மானமற்றவர்களாக ஆக்கு கிறார்கள் அல்லவா என்று திரும்பவும் கேட்கிறேன். இப்படிக் கடவுளைப் பரப்பும் அயோக்கியர்களால் எத்தனை எத்தனை கோடி மக்கள் மடையர் களாகிறார்கள் என்பதை அறிவாளிகள் முதலில் சிந்திக்க வேண்டும்.

சாதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொண்டால் சிறப்பாக இந்துக்களை எடுத்துக்கொண்டால் சுமார் 40 கோடி மக்களும் இந்த விஞ்ஞான காலத்தில் டாக்டர் எம்.ஏ. பி.ஏ. ( ஈச்ஷஞ்ச்சு, ங.அ., ஆ.அ.,) படித்த மக்களும் புலவர்கள் வித்வான்கள், மகாமேதாவிகள் என்று கூறப்படும், கூறிக்கொள்ளும் மக்களும் இக்காரியங்களில் பரம முட்டாள்களாக இருப்பதற்குக் கடவுளைப் பரப்பினவர்களும், பரப்பிவருபவர்களும் இப்படிப்பட்ட கடவுள் கதை எழுதினவர்களும் இந்தக் கடவுள் களுக்குக் கோவில் கட்டி உருவம், உற்சவம், நடப்பு தேர், திருவிழா நடத்தும் அயோக்கியர்களுமல்லாமல் வேறு யாராய்இருக்க முடியும்?
இந்த மடையர்கள் எவ்வளவு துணிவோடு ஆண் பெண் கடவுள் களைக் கற்பித்து அவற்றிற்கு விபசாரத் தன்மைகளை (ஒழுக்க ஈனங்களை)க் கற்பித்துப் பரப்புகிறார்கள்! என்றால் இவர்களை எத்தனை முறை அயோக்கியர்கள் என்று கூறவேண்டும்! என்பதை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ள விட்டு விடுகிறேன்.கடவுளை பரப்பிய அயோக்கியன்கள்.....முல்லாக்கள்...( ஹஜ்ரத்க்கள்)....சாமியார்கள்...( பார்ப்பனர்
கள்).....பாதிரிமார்கள்....

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காகக் கோபித்துக் கொள்ளும் சிகாமணிகளே! நான் கடவுளை "உண்டாக்கியவன் முட்டாள்" என்றால் எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ளவேண்டும்? உண்டாக்கியவன் முட்டாள் என்றால் உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக்கிறது? கோபிக்கிறவனே நீ கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்கிறாயா? உனது முட்டாள்தனத்தைக் காட்டத்தான் கோபிக்கிறாய். ஆத்திரப்படுகிறாய். நிற்க, உன் ஆத்திரத்திற்குக் காரணம், ஆதாரம் என்ன?

முண்டமே! நீ நினைக்கும் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்கிறாயா? அல்லது, அது ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறாயா? அல்லது , கடவுள் யாராலும் உண்டாக்கப் படாமல், யாராலும் கண்டு பிடிக்கப்படாமல் தானாக, இயற்கையாக, கடவுள் இஷ்டப்படி கடவுளே தோன்றிற்று என்கிறாயா? நான் சொல்வதில் உனக்கு ஆத்திரம், கோபம் வருவதாயிருந்தால், எதற்காக வரும்? நான் சொல்வதைக் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று நீ கருதினால்தானே உண்டாக்கியவனை நான் முட்டாள் என்கிறேன் என்று நீ கோபிக்கவேண்டும்!

மற்றும், கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று கருதுகிறவனுக்குத்தானே கோபம், ஆத்திரம் வர வேண்டும்! நீ கோபிப்பதால் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை நீ ஒப்புக்கொள்கிறாய் என்று தானே அர்த்தம்! அது மாத்திரமல்லாமல் , நீ கோபிப்பதால் கடவுளையும் அவமதிக்கிறாய் என்று தானே கருத்தாகிறது!

இப்போது நீ நினைத்துப்பார் ! கடவுள் உண்டாக்கப்பட்டதா! (கிரியேஷனா? (Creation) அல்லது கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதா? (இன்வென்ஷனா? (Invention) அல்லது கடவுள் இயற்கையாய்த் தோன்றினதா? நேச்சரா? (Nature) இதை முதலில் முடிவு செய்து கொள். நான் சொல்வதன் கருத்து கடவுள் கண்டு பிடிக்கப்பட்டதுமல்ல. தானாகத் தோன்றியதுமல்ல, முட்டாளால் உண்டாக்கப்பட்டது என்பதாகும். அதை அதாவது கடவுளை ஒரு மனிதன் உண்டாக்கினான். என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக் கொண்டதாலோ தானே கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால் நீ கோபித்துக் கொள்ளவேண்டும்!
நீ இருப்பதாகக் கருதிக்கொண்டிருக்கும் கடவுள் ஒருவராலும் உண்டாக்கப்பட்டதல்ல. " தானாக சுயம்புவாகத்தோன்றியிருக்கிறது" என்பது தான் இன்று கடவுள் நம்பிக்கைகாரர்களின் கருத்து ஆக இருக்கிறது. ஆகையால் நான் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்பதோடு அதற்காகக் கோபிப்பவனை இரட்டை முட்டாள் என்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்....."கடவுளைக் கற்பித்த முட்டாள்கள்"..... முகம்மது...கிறிஸ்து....கிருஷ்ணன்.....

"கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி"

 

"கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி" என்ற கருத்திற்கு விளக்கம் எழுத ப்படுகிறேன்.
பொதுவாகச் சொல்கிறேன், உலகிலேயே கடவுளை வணங்குகிற எவனும் கடவுள் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது? அதன் தன்மை என்ன? குணம்என்ன? என்பனவாகிய விஷயங்களை உணர்ந்தோ, அல்லது உணர்ந்ததன் படியோ வணங்குவதே இல்லை ; மற்றெப்படியென்றால் "கடவுளை" மனிதனாகவே கருதிக்கொண்டு மனிதகுணங்களையே அதற்கு ஏற்றிக்கொண்டு , தான் எப்படி நடந்து கொண்டான், தான் எப்படி நடந்து கொள்ளுகிறான், தான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் தான் நடந்துகொண்ட கூடாத்தன்மைகளுக்குப் பரிகாரம் (பாவ மன்னிப்பு) தேடும் முறையிலும், நியாயமோ பொருத்தமோ விகிதமோ இல்லாமல் தனக்கு வாழ்வில் எல்லாத் துறைகளிலும் உயர் நிலையே வேண்டுமென்கின்ற பேராசையுடனுந்தாம் கடவுளை வணங்குகிறான்."கடவுளை வணங்கும் காட்டுமிராண்டிகள்..... இந்துக்கள் .....முஸ்லிகள்.....கிறித்துவர்கள்.....

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 11

 


எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு
இந்த பதிவில் நண்பர் இஹ்சாஸ் என்ன சொல்கிறார்? அல்லது என்ன சொல்ல முனைந்திருக்கிறார்? என்று கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு பரிசு என்று அறிவித்து விடலாமா என்று எண்ணுமளவுக்கு வெறுமையாய் காட்சியளிக்கிறது. மறுக்க வேண்டும் என்பது மட்டும் தான் நண்பருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் எப்படி மறுப்பது என்பது கடைசிவரை அவருக்கு பிடிபடவே இல்லை. அதற்காக மறுக்காமல் இருந்துவிட முடியுமா என்ன? அதனால் தான் ஆயுதமின்றியே களத்திற்கு வந்துவிட்டார். வீரர் தான்.
இப்பேரண்டம் பெருவெடிப்பிலிருந்து தொடங்கியிருக்கலாம் என்பது அறிவியல் யூகம். இது அறிவியல் உண்மையல்ல யூகம் தான் அதனால் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று மதவாதிகள் யாரும் கூறவில்லை. ஏனென்றால் பெருவெடிப்புக் கொள்கையை ஒட்டிவைப்பதற்குத் தோதாக ஓரிரு வசனங்களை குரானில் கண்டடைந்து விட்டார்கள். அந்தோ! ”அறிவியல் உண்மையல்ல யூகம் தான்” என்னும் பெருமையைப் பெறுவதிலிருந்து பெருவெடிப்புக் கொள்கை நூலிழையில் தவறிவிட்டது.
அண்டவெளியில் சீராக பரவியிருக்கும் வெப்பம், பருப்பொருட்களின் விரைவு உள்ளிட்ட சில காரணங்களைக் கொண்டு பெருவெடிப்பை ஊகித்திருக்கிறார்கள். ஆனால் இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே முகம்மது கூறியிருக்கிறார் என்று காட்டுவதற்கு கண்டுபிடித்தவை தான் குறிப்பிடப்பட்ட அந்த இரண்டு வசனங்களும். அந்த இரண்டு வசனங்களுமே பெருவெடிப்போடு ஒட்டுறவு எதையும் கொண்டிருக்கவில்லை என்பதை காட்டியிருந்தேன். இதற்கு மொத்தப்பதிவில் நண்பர் எடுத்து வைத்துப்பது இதைத்தான் \\ இதன் மூலம் வானங்களும் பூமியும் முதலில் ஒன்றாக இருந்தது என்றும் அதை பின்னர் பிரித்து பிளந்தெடுத்தோம் என்றும் அல்லாஹ் கூறுகிறான். இது தற்கால விஞ்ஞானிகள் கூறும் பிரபஞ்சத்தின் தோற்றத்தை அப்படியே எடுத்துக்காட்டுகிறது.இதன் பின் உருவான தூசுப்படலத்த்லிருந்துதான் ஏனைய கிரகங்கள் தோன்றின என்று குறிப்பிடுகின்றனர் விஞ்ஞானிகள்// இந்த ஒற்றை வரியை எழுதுவதற்கு ஏன் ஒரு பதிவை வீணாக்கினார் என்பது அவருக்கே வெளிச்சம்.
வானங்களும் பூமியும் ஒன்றாய் இருந்தது என்று எந்த விஞ்ஞானி மதவாதிகளிடம் விளக்கினார் என்று நண்பர் நமக்கு விளக்குவாரா? வானங்களிடமிருந்து பூமி முதலில் பிரித்தெடுக்கப்பட்டது இதன் பின் உருவான தூசுப்படலத்திலிருந்து ஏனைய கிரகங்கள் தோன்றின. இதை நன்கு கவனித்துப் பார்த்தால் புதிய அறிவியல் உண்மையை(!) நண்பர் கண்டுபிடித்து உலகிற்கு அளித்துள்ளார் என்பது விளங்கும். முதலில் வானங்கள் பின்னர் பூமி அதன் பிறகு உருவான தூசுப்படலத்திலிருந்து சூரியன் உள்ளிட்ட விண்மீன்கள் கோள்கள் எல்லாம் பின்னர். இந்த அறிவியல் உண்மை தெரியாமல் உலகின் அறிவியலாளர்களெல்லாம் காலத்தே மிகவும் பிற்பட்டது பூமி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
இது ஒருபக்கம் இருக்கட்டும், பதிவின் தொடக்கத்தில் நண்பர் ஒரு விளக்கம் தந்திருக்கிறார். அதாவது குரான் வசனங்களில் அறிவியல் உண்மைகள் இருக்கின்றன என்று பலர் கூறித் திரிகிறார்களாம். அப்படி பலர் கூறித் திரிவதில் கலப்படமும் இருக்கிறதாம். எனவே கலப்படமான அறிவியல் உண்மையை எடுத்துக் கொள்ளாமல் அக்மார்க் அறிவியல் உண்மையை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே செங்கொடி கலப்படமான அறிவியல் உண்மையை எடுத்துக் கொண்டு மறுப்பு கூறியிருந்தால் நண்பர் அக்மார்க் அறிவியல் உண்மையை மட்டுமே கூறி மறுப்புரை வரைவாராம். அந்த விதத்தில் நண்பர் கூறும் அக்மார்க் அறிவியல் உண்மை தான் வானங்கள் பூமி பின்னர் ஏனையவை என்பது. இப்போது உங்களுக்கு எது அக்மார்க் அறிவியல் உண்மை? எது கலப்படமான அறிவியல் உண்மை? என்று குழப்பம் ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
சரி, எது அக்மார்க் அறிவியல் உண்மை, எது கலப்படமான அறிவியல் உண்மை என்று பிரித்தறிவதற்கு அளவுகோல் எதையாவது நண்பர் வைத்திருக்கிறாரா? ஒருவேளை நண்பர் சார்ந்திருக்கும் குழு கூறுவது மட்டும் அக்மார்க் அறிவியல் உண்மை அதற்கு மாற்றமாக கூறப்படுவதெல்லாம் கலப்படமான அறிவியல் உண்மை என்று கூறுகிறாரோ. குரானில் அறிவியல் என்று யார் கூறினாலும் அது கலப்படமில்லாத அக்மார்க் பொய் என்பது ஒருபுறம் இருக்கட்டும். குரானில் அறிவியல் என்று கூற முற்படுபவர்கள் அனைவரின் நோக்கமும் ஒன்றுதான். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் முகம்மது எனுமொரு மனிதர் எழுதியதை ஆண்டவன் எழுதியது என்று பீஜப்படுத்துவது தான்.
இன்னொன்றையும் நண்பர் குறிப்பிடுகிறார். எடுத்துக் காட்டப்பட்ட இரண்டு வசனங்களில் இரண்டாவது வசனத்தை மட்டும் மறுத்துவிட்டு முதல் வசனத்தை நான் ஏற்றுக் கொண்டு விட்டதைப் போல் பாவனை காட்டுகிறார். நண்பரின் காட்சிப்பிழையை உத்தேசித்து மீண்டும் ஒருமுறை கூறிவிடலாம் \\ வானமும் பூமியும் முன்னர் இணந்திருந்தது இப்போது பிரிந்திருக்கிறது என்பதை மேற்கண்ட வசனங்களின் மூலம் அறியலாம். ஆனால் வானம் என்பது மேலே தெரியும் நீல நிற பின்னணி மட்டுமல்ல எந்தக்கோளின் எல்லையிலிருந்தும் வானம் தொடங்கிவிடுகிறது. இன்னும் தெளிவாகச்சொன்னால் சூழ இருக்கும் வானத்தில் கோள்கள் குறை மூழ்கலில் கிடக்கின்றன. அதாவது நீர் நிரப்பிய பாத்திரத்தில் ஒரு பந்து முழுவதும் மூழ்கி தரை தட்டிவிடாமலும் நீரின் மேற்பரப்பில் மிதக்காமலும் நடுவில் இருப்பதைப்போல் கோள்களின் பூமியின் அனைத்து திசைகளிலும் வானம் சூழ்ந்திருக்கிறது. இந்த அறிவியலை அறியாத குரான், பூமியையும் வானத்தையும் பிரித்துவிட்டதாய் விளம்புகிறது//
ஒன்றுமில்லாத மறுப்பை மறுத்து எழுத வேண்டுமா என நீண்ட நேரம் யோசித்தேன். இது போன்ற குழப்பத்தை மீண்டும் எனக்கு நண்பர் தராதிருக்கட்டும். ஒரு வேளை நண்பரின் எந்த இடுகைக்காவது மறுப்பு எழுதாமல் விட்டுவிட்டேன் என்றால் இப்படியான ஒரு குழப்பத்தில் நகர்ந்து விட்டேன் என்று கொள்க.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 9

 


நுழைவாயில்
செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 2
எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு
முன்குறிப்பு: இத்தொடரின் கடந்த கட்டுரையில் நண்பர் அம்பலப்படுத்துவதாக கூறியிருந்தார். இதுவரை செய்யவில்லை, அவரின் அம்பலப்படுத்தலுக்காக காத்திருக்கிறேன், எனக் குறிப்பிட்டிருந்தேன். தற்போது அவர் அம்பலப்படுத்துவதாக(!) கருதிக்கொண்டு ஒரு பதிவிட்டிருக்கிறார்.  அம்பலப்படுத்தல் என்றால் என்ன?  எனக்கு எதிராக எதை அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார்?  அம்பலப்படுத்தல் என்றால் நான் வெளிப்படுத்தாமல் மறைத்த ஒன்றை அவர் வெளிப்படுத்தி நான் அதை மறைத்திருக்கிறேன் என்பதை விளக்கினால் அது அம்பலப்படுத்தலாக கொள்ளப்படும்.  அவர் அழைத்ததை நான் மறைக்கவில்லை. அவருக்கு நான் பதிலளித்து விட்டதையும் குறிப்பிட்டிருக்கிறேன். மீண்டும், மீண்டும் அவர் அழைக்கவே அதற்கு பதிலளிக்காமல், வெளியிடாமல், கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டேன் என்பதையும் மறைக்கவில்லை, வெளிப்படையாக கூறியிருக்கிறேன். இப்போது நண்பர் அந்த மின்னஞ்சல் செய்திகளை பதிவாக இட்டிருக்கிறார். இதில் எதை நான் மறைத்திருக்கிறேன், எதை அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருக்கும் இன்னொன்று, அவர் தொடர்ச்சியாக இப்படி அழைத்ததன் விளைவாகவே கடந்த பதிவை நேரடி விவாதம் குறித்து எழுதியிருப்பதாகவும், அது அவர் அழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறல்ல, நண்பர் எந்த வரிசையில் எனக்கான மறுப்பை எழுதியிருக்கிறாரோ அந்த வரிசையிலேயே நான் இத்தொடரை எழுதி வருகிறேன். அந்த வரிசையில் அவர் எழுதிய நேரடி விவாதம் தொடர்பான இடுகை வந்ததால் அதற்கு பதிலெழுதியிருந்தேனேயன்றி, நண்பர் அழைத்திருக்கிறார் என்பதால் வரிசை மீறி அதை எடுத்துக் கொள்ளவில்லை.
இப்போது மட்டும் இதை வரிசை மீறி விளக்கமளிப்பதேன் என்றால், அதில் தனிப்பதிவாக இடுவதற்கான விசயம் ஒன்றும் இல்லை என்பதால் முன்குறிப்பாக தெரிவித்திருக்கிறேன், அவ்வளவு தான்.
 ****************************************
என்னுடைய ’இஸ்லாமே கற்பனைகளின் களம் 2’ பதிவில் இஸ்லாமியர்கள் மத அடிப்படையில் ஒன்றிணைவது எப்படி இந்துப் பாசிசங்களுக்கு உதவுகிறது என்பதை விரிவாக விளக்கியிருந்தேன்.  இதற்கு பதில் தருவதாக இருந்தால், நான் கூறியது தவறு என்பதை விளக்கி சரியானதாக அவர் கருதுவதை கூற வேண்டும். இதை நண்பர் செய்திருக்கிறாரா? குறைந்த பட்சம் நான் கூறியிருப்பதை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூட இல்லை. மாறாக மேலோட்டமாக எனக்கு நானே முரண்படுவதாக காட்டிக் கொண்டு, உளறுகிறேன்,  லாஜிக் இல்லை, பல்டி அடிக்கிறார், சுயநினைவோடுதான் எழுதினாரா? என்றெல்லாம் வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார்.  ஆனாலும் பதிலெழுதுவதாய் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதால் இரண்டு கேள்விகளையும் கேட்டு வைத்திருக்கிறார்.
\\எதிரி இருந்தால்அழிக்குமே தவிர ஆக்காது! இஸ்லாமியர்கள் ஒண்றினைந்தால் அதைக்காட்டி இந்துக்களும்ஒண்றினந்த்துவிடுவார்களாம். இன்று இஸ்லாமியர்கள்ஒண்றினைந்திருக்கின்றனர்  அதனால் இந்துக்கள்ஒண்றிணைந்துவிட்டனரா?//\\பார்ப்பனியம் அனைத்து உழைக்கும் மக்களுக்கு  விரோதி என்பதால்இஸ்லாமியர்கள் மத ரீதியில் ஒண்றினைவது கூடாது என்கிறார்.பார்ப்பனியத்தை  ஒழிக்க வேண்டும் என்றால்அதற்கு எதிரியாகவிருப்பவர்கள்ஒன்று கூடினால்தான் முடியும் இதனால்  இஸ்லாமியர்கள் ஒன்று கூடுவது அவசியம்//
பார்ப்பனிய பாசிசங்கள் என்றும் ஒடுக்கப்பட்டவர்களை தங்களோடு உள்ளவர்களாய் கருதுவதில்லை. ஒடுக்கப்பட்டவர்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைகளாகவே வைத்திருக்கிறார்கள்.  அதேநேரம் அடிமைகளாய் வைத்திருப்பவர்களையே தேவைப்பட்ட இடங்களில் தங்கள் இராணுவமாகவும் பயன்படுத்துகிறார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று?  அவர்களை இந்து எனும் மதத்திற்குள் ஒன்றிணைத்து வைத்திருப்பதால். அடிமைகளாக்கி ஒடுக்கப்பட்டிருப்பவர்கள் அவர்களுக்கு எதிராக அல்லவா கிளர்ந்தெழ வேண்டும். அதற்காகத்தான் காலம்தோறும் எதிரிகளை உருவாக்கி வருகிறர்கள். சாங்கியம், பௌத்தம் தொடங்கி இஸ்லாம் ஈறாக எதிரிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்த எதிரிகளைக் காட்டியே இந்து ஒற்றுமையை கட்டிக் காக்கிறார்கள்.  இந்துப்பாசிசங்கள் இஸ்லாத்திற்கு எதிராக எப்படி பரப்புரை செய்கிறார்கள் என்பதை கவனித்துப்பார்த்தால் இது எளிதாக விளங்கும்.  இன்றுவரை ஒடுக்கப்பட்டவர்கள் தங்களை இந்து என கருதிக் கொள்வதுதான் பார்ப்பனியத்தின் முதன்மையான பலமாக இருக்கிறது.  அவர்கள் தங்களை இந்துவாக கருதிக் கொண்டிருக்கும்வரை பார்ப்பனியத்தை வீழ்த்துவது கடினம்.
இந்தியாவில் சகல அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கும் பார்ப்பனியம் வெகு எளிதாக இஸ்லாமியர்களை பிளவுபடுத்திவிட முடியும். இஸ்லாமியர்களில் குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு சலுகைகள் அளித்து மற்றவர்களை ஒடுக்குவதை தொடர்ந்து செய்து வந்தால் இஸ்லாமியர்கள் வெகு எளிதாக பிரிந்துவிடுவார்கள்.  ஆனால் கவனமாக அவ்வாறு செய்யாமல் தவிர்த்து வருகிறது பார்ப்பனியம்.  பண்டைய இந்தியாவில் சிறுபான்மையினர் என்று ஒதுக்கமுடியாத அளவில் இஸ்லாமியர்கள் இருந்தார்கள். இதை வெகு தந்திரமாக பிரித்தாண்டார்கள். கவனிக்க, பாகிஸ்தான் பிரிவினைக்கான கோரிக்கை முதலில் முஸ்லீம்களிடமிருந்து எழவில்லை. பார்ப்பன பாசிஸ்டுகள் தான் முதலில் இந்த திட்டத்தை முன்மொழிந்து பரப்பினார்கள். தந்திரமாக பெருவாரியான முஸ்லீம்களை தனிநாடாக பிரித்துவிட்டு இந்திய முஸ்லீம்களை ஒன்றிணைத்திருக்கிறார்கள்.
இவர்களை தனிப்பட்ட மதத்திற்கு எதிரானவர்களாக கருதமுடியாது. அனைத்து மதங்களிலும் இருக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரானவர்கள்.  மத அடிப்படையில் இந்து, முஸ்லீம், கிருஸ்தவன் என்று பிரிந்து ஒன்றிணைவது அந்த பாசிசங்களுக்கு ஆதரவாகவும், சொந்த வர்க்க நலனுக்கு எதிராகவும் அமைகிறது.  மலம் அள்ளும் ஒரு ஒடுக்கப்பட்டவனும், மகிந்திராக்களும் இந்து எனும் அடிப்படையில் ஒன்றாகிவிட முடியுமா? ஒரு ஏழை சுமைதூக்கும் தொழிலாளியும் பால் தினகரன்களும் கிருஸ்தவன் எனும் அடிப்படையில் ஒன்றாகிவிடமுடியுமா? அதுபோல் தான் முஸ்லீம்களும். உழைக்கும் வர்க்கமாக இவர்கள் ஒன்றிணைய வேண்டும், மத அடிப்படையில் ஒன்றிணைய ஒன்றிணைய அது பார்ப்பனிய பசிசங்களுக்குத்தான் உதவுமேயன்றி ஒருபோதும் சொந்த வர்க்கத்திற்கு உதவியாய் இருக்காது.  பாட்டாளி வர்க்கத்திற்கு சொந்த மதத்திலிருக்கும் ஆளும்வர்க்கம் எதிரானது தான். இதை புரிந்து கொள்ளாதவரை பாட்டாளிவர்க்கம் பயன்படுத்தப்படுமேயன்றி பலன் பெறாது.
மத பரப்புரை நிகழ்சிகள் ஒருவித ஹீரோயிஸ மனப்பான்மையாகவே அமைகின்றன.  ஒரு அமைப்பின் பிரபலமான தலைவர் ஒருவரின் நிகழ்சிக்கும் அதே அமைப்பின் பிரபலமில்லாத ஒருவரின் நிகழ்ச்சிக்கும் மக்களின் ஆர்வம் ஒரேபோல் இருப்பதில்லை. இது ஏன் என்பதை சிந்தித்தால் மத பரப்புரை நிகழ்சிகளின் உள்ளீடு என்ன என்பது எளிதில் புரிந்து போகும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கூட மக்கள் ஏன் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை நுழைவாயில் பகுதியிலும் எளிதாக காட்டியிருக்கிறேன். \\ இந்து மதத்தில் அதன் ஆன்மீக சாரங்களை யாரும் வாழ்க்கை நெறியாக கொள்வதில்லை. கிருஸ்துவத்திலும் கூட ஆன்மீகத்தையும் சமூகத்தையும் பிரித்துப்பார்க்கும் போக்கு வெளிப்படுகிறது, ஆனால் இஸ்லாத்திலோ அதை பின்பற்றுபவர்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது//  இந்நிலை ஆய்வு நோக்கிலிருந்து சரி தவறுகளை உள்வசமாய் பரிசீலித்து பெறப்பட்ட முடிவு அல்ல. நெகிழ்வுத்தன்மையுடன் ஆன்மீகத்தை அணுகுவது போல் காட்டிக் கொள்வது இந்து மதத்தை பின்பற்றும் சாதாரண மக்களிடம் எப்படி இயல்பாக இருக்கிறதோ, அதுபோலவே உறுதித்தன்மையுடன் இருப்பது போல் காட்டிக் கொள்வது சாதாரண முஸ்லீம்களிடம் இயல்பாக இருக்கிறது.  மதவிவகாரங்களைக் கடந்து செல்வது ஒரு இந்துவுக்கு சாதாரணமாக இருப்பது போல் முஸ்லீம்களுக்கு இல்லை என்பது நிறுவனமயமாக்கப்பட்ட மதத்தின் இறுக்கத்தில் இருக்கிறது. இதை இஸ்லாம் உண்மையானது என்பதால் தான் கேட்டவுடன் ஈர்க்கிறது என்று மொழிபெயர்க்க முடியாது.  ஏனென்றால் கேட்கப்படும் எல்லோரையும் அது ஈர்ப்பதில்லை.  இதை முஸ்லீம்களுக்கு மதத்தின் மீதுள்ள ஆர்வம் என்றோ, இஸ்லாத்தின் உண்மையான தன்மையின் சான்று என்றோ கூறமுடியாது. அது முஸ்லீம்களுக்கு கற்பிக்கப்பட்ட வடிவத்தை மட்டுமே காட்டுகிறது.  இந்த வடிவம் இஸ்லாத்தின் உண்மைத்தன்மையல்ல என்பதை விளக்குவதற்கே என்னுடைய தொடரை (இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே) எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இஸ்லாம் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறது.  ஏனென்றால் இஸ்லாம் என்பது  வணிகர்களின் நிர்வாகத்தை நாடோடி, விவசாய, வணிக அரபுக் குலங்களின் பொதுவான நிர்வாகமாக வளர்த்தெடுக்கும் ஒரு முயற்சியாக தோன்றியது தான்.  இதை தொடரின் இறுதிப் பகுதியில் நான் விளக்கவிருக்கிறேன்.  முதலாளித்துவம் ஒட்டுமொத்த மனித இனத்தை எவ்வாறு பாதிக்கிறது, மக்களைச் சுரண்டி ஒருபக்கம் குவிக்கிறது என்பது பலவாறாக உலகில் விளக்கப்பட்டுள்ளது.  மட்டுமல்லாது உலக மக்கள் வரலாறு சமூக காலகட்டங்களின் வழியாக எப்படி கடந்து வந்துள்ளது என்பதெல்லாம் மக்கள் முன் ஆய்வுரைகளாக உள்ளன. அவைகளை விளக்கினால் அது தனி தலைப்பாக நீண்டு செல்லும்.  முதலாளித்துவத்தின் ஆன்மாவான லாபக்கோட்பாட்டை இஸ்லாம் ஆதரிக்கிறது என்பதால், மக்களின் மனங்களை முதலாளித்துவம் கட்டமைத்திருக்கும் சுய உதவிக் குழுக்கள் எப்படி கட்டுப்படுத்த விரும்புகிறதோ அதே விதத்தில் தான் இஸ்லாமும் மக்களின் மனங்களை கட்டுப்படுத்த விரும்புகிறது என்பதால் முதலாளித்துவத்தின் கொடுமைகளை மக்களிடமிருந்து இஸ்லாத்தால் நீக்க முடியாது. இது போராட்டங்களோடும், வெற்று கோசங்களோடும் முடிந்துவிடும் விசயமல்ல. எனவே இஸ்லாத்தின் இறுக்கங்களை உடைத்து முதலாளித்துவத்திற்கு எதிராக வர்க்க அடிப்படையில் அணிதிரட்ட வேண்டியது அவசியமாகிறது. (இது எல்லா மதங்களுக்கும் பொருந்துவது)
நண்பர் மீண்டும் மீண்டும் இஸ்லாமிய இறையியல் குறித்து நான் கூறுவதாக கூறிக் கொண்டிருக்கிறார். ஒன்று விளங்கவில்லை என்றால் மீண்டும் கேட்கலாம். தவறில்லை. ஆனால், நான் விளக்கமளித்த பிறகும் அதையே தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தால் அதை பிடிவாதம் என்று தான் வகைப்படுத்த முடியும். \\ அரபு தேசியவாதம், அரபு மார்க்ஸியம் என்று இஸ்லாமிய இறையியலை விட்டுக்கொடுக்காமல் தத்துவம் பேசியவர்களெல்லாம் இன்றைய நிதிமூலதனத்தின் முன் முனை மழுங்கிய வாளாக செயலற்றிருக்கிறார்கள்//  இது தான் நான் நுழைவாயில் பகுதியில் எழுதியிருக்கும் வாக்கியம்.  இதில் அரபு தேசியவாதம், அரபு மார்க்சியம் இவையிரண்டும் இஸ்லாமிய இறையியல் என்று நான் எங்கே குறிப்பிட்டிருக்கிறேன். இஸ்லாமிய இறையியலை அதாவது இஸ்லாத்திலிருக்கும் கடவுள் நம்பிக்கையை விட்டுக் கொடுக்காமல், சமூகத்திற்கு மார்க்சியக் கொள்கைகளையும், ஆன்மீகத்திற்கு இஸ்லாமிய கடவுட் கொள்கையையும் கலந்து அரபு மார்க்சியம் என்று தனி கோட்பாடு ஒன்றை உருவாக்கினார்கள். சில காலம் இது செல்வாக்கிலும் இருந்தது. ஆனாலும் அது முதலாளித்துவத்தின் நிதி மூலதனத்தின் முன்னால் செயலற்றதாகிவிட்டது. இது தான் இந்த வாக்கியத்தின் பொருள் என்பது, தமிழ் தெரிந்த யாருக்கும் எளிதில் விளங்கும். இதைத்தான் என்னுடைய முந்தைய பதிவிலும் சுட்டிக் காட்டியிருந்தேன் \\ அரபுலக மண்ணில் ஆன்மீகத்திற்கு இஸ்லாமும் சமூகத்திற்கு மார்க்ஸியமும் என்று இரணடையும் இணைத்து, கடவுட் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் மார்க்ஸிய தத்துவங்களை இஸ்லாத்துடன் இணைத்து உருவானது தான் அரபு மார்க்ஸியம்// ஆனால் நண்பர் மீண்டும் தன்னுடைய பதிவில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார், \\ இவர் இஸ்லாமிய இறையியலாக அரபு தேசியவாதம்,அரபு மார்க்ஸியம் போன்றவற்றை குறிப்பிட்டார். அதை தவறு என்று கூறியதற்கு அவர் அளிக்கும் சமாளிப்பு பதில்தான் இது// \\ அரபு மார்க்ஸியம், தேசியவாதம் என்பன இஸ்லாமிய இறையியல் என்று தெளிவாகவே குறிப்பிடுகிறார்// மேற்குறிப்பிட்ட அந்த வாக்கியம் எப்படி அவர் கூறும் பொருளில் இருக்கிறது என்பதை விளக்க வேண்டும்.  அல்லது இதில் அவர் வறட்டு பிடிவாதம் பிடித்ததை ஒப்புக்கொள்ள வேண்டும்.
நுழைவாயில் பகுதியில் நான் ஒரு வேண்டுகோளை வைத்திருந்தேன்.  அதாவது இந்தத்தொடரை முன்முடிவுகளுடன் அணுகாதீர்கள் என்று. ஒருவரின் முன்முடிவு என்பதற்கும், அவரின் நிலைப்பாடு என்பதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லையா? நண்பருக்கு மெய்யாகவே இரண்டு சொற்களுக்கும் இடையே பொருள் வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை என்றால், நல்ல தமிழாசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.  இந்த தொடரில் எனக்கு ஒரு நிலைபாடு இருக்கிறது, நண்பருக்கு ஒரு நிலைபாடு இருக்கிறது. இருவரும் அவரவர் நிலைபாடுகளில் நின்று தான் எழுதிக் கொண்டிருக்கிறோம். அந்த நிலைபாட்டை விட்டுவிட்டு விவாதம் செய்யுங்கள் என்று சொன்னது யார்? நண்பர் இப்படி எழுதியிருக்கிறார், \\ இஸ்லாம் சரியானது என்று நம்பாமல் அதைப்பற்றி எழுத வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பது என்பது அறிவுடமையா? சந்தேகத்தில் இருந்தால் அது சரி என்று எந்தவகையில் ஒருவர் வாதிட முன் வருவார்// இஸ்லாத்தை மறுப்பது என்னுடைய நிலைப்பாடு, அதேநேரம் எந்த பரிசீலனையும் இல்லாமல் விமர்சனமாக வைக்கப்படுவது அனைத்தும் தவறானது என்று நான் முடிவு செய்ய இயலுமா? இது என்னுடைய கருத்து அதற்கு எதிராக வைக்கப்படுவது மாற்றுக் கருத்து எனும் அடிப்படையில் தான் என்னுடைய வாதங்கள் அமைந்திருக்கும்.  ஆனால் நண்பரின் வாதங்களைப் பார்த்தால், \\ உளறிக் கொட்டுகிறார், அறிவில்லாமல் எழுதியிருக்கிறார், சமாளிக்கிறார், சுயநினைவோடு இருந்தாரா? மூடிக் கொண்டு போகவேண்டும், தைரியமில்லாத கோழைகள்// இப்படிப் போகும். இவ்வாறு எப்போது ஒருவரால் எழுதமுடியும். எங்கு விமர்சனம், மாற்றுக் கருத்து எனும் எண்ணம் இல்லாமல் தன்னுடைய நிலைப்பாட்டுக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் அது தவறாக மட்டுமே இருக்கமுடியும் என்ற முன்முடிவு இருக்கும் இடத்தில் தான் இதுபோன்ற சொல்லாடல்கள் பிறக்க முடியும்.  ஒருவேளை என்னுடைய வாதங்கள் நண்பருக்கு உளறலாக தெரிந்தால், அது என்ன விதத்தில் உளறலாக இருக்கிறது என்பதை விளக்க வேண்டுமேயல்லாமல், உளறல் என்று எழுதக்கூடாது. இது போன்றவைகளெல்லாம் கண்ணியமாக, அழகான முறையில் விவாதம் செய்ய விரும்புபவர்கள் செய்ய வேண்டியது.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 10

 


குரான் கூறுவது அறிவியலாகுமா?
எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு
குரான் கூறுவது அறிவியலாகுமா? எனும் பதிவில் முஸ்லீம்கள் இஸ்லாத்தை மதமல்ல மார்க்கம் என்று கூறுவது சரியானதா? என்பது முதலாவதாகவும் குரானில் இருப்பதாக கூறப்படும் அறிவியல் செய்திகள் மெய்யாகவே அறிவியலார்ந்து இருக்கிறதா என்பது முதன்மையானதாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.  இதற்கு மறுப்பெழுதும் ஹோதாவில் குதித்த நண்பர் உள்ளீடில்லாமல் உடைபட்டிருக்கிறார்.  மறுப்பு என்றால் எழுதப்பட்டிருந்ததை உள்வாங்கி மறுத்து தன்னுடைய நிலைப்பாட்டை நிலைப்படுத்த வேண்டும். ஆனால் நண்பர் செய்திருப்பது என்ன? மறுக்க வேண்டும் என நினைத்திருக்கிறார். பாவம் அவரால் முடியவில்லை.
இஸ்லாம் மதமா? மார்க்கமா? என்பதை எடுத்துக் கொள்வோம்.  அது மார்க்கமல்ல மதம் தான் என்பதற்கு சில கருத்துகளை எடுத்துவைத்திருந்தேன்.
  1. எல்லா மதங்களும் நல்லதோ கெட்டதோ தமக்கென்று ஒருவாழ்முறையை நெறிப்படுத்துகின்றன.
  2. எல்லா மதங்களும் இதை செய்ய வேண்டும் இதைச் செய்யக்கூடாது என்று வரையறைகளை கொண்டிருக்கிறது.
  3. எல்லா மதங்களும் தங்களை விட்டு வெளியேறுவோரை எச்சரிக்கின்றன. இணைய விரும்புவோரை வரவேற்கின்றன.
  4. எல்லாமதங்களும் விதிக் கொள்கை மூலம் மக்களை சிந்திக்கும் திறனற்ற பொம்மைகளாகவே கருதுகின்றன.
  5. எல்லா மதங்களும் பரிசீலனைக்கு இடமின்றி ஒற்றைவிதமான சிந்தனையாக இருக்கிறது.
இவைகளில் இஸ்லாமும் ஒன்றுகிறது. பின் எப்படி ஏனையவை எல்லாம் மதம் இஸ்லாம் மட்டும் மார்க்கம் என்பது? இதற்கு மறுப்பாக நண்பர் கூறியது என்ன?
  1. ஏனைய மதங்கள் வாழ்முறையாக சிலவற்றை கூறி சிலவற்றை விட்டிருக்கின்றன.  இஸ்லாம் மட்டுமே எல்லாத் துறைகளுக்குமாக வாழ்முறைகளை கூறியிருக்கிறது.
  1. மதங்கள் மட்டுமல்ல கொள்கைகளும் கூட செய்யவேண்டியவை செய்யக் கூடாதவை என்று வகைப்படுத்துகின்றன. அதில் மெசேஜைத்தான் பார்க்க வேண்டும்.
  2. எல்லா மதங்களையும் போலவா இஸ்லாம் கூறுகிறது (வேறு எப்படி கூறுகிறது என்பது அவருக்கே வெளிச்சம்)
  3. இதில் இஸ்லாம் எப்படி வேறுபடுகிறது என்று கூறவில்லை.
  4. ஆம் அப்படித்தான்.
இந்த ஐந்து கருத்துகளில் முதல் கருத்தில் மட்டுமே ஏனைய மதங்களை விட இஸ்லாம் சற்று அதிகமாக கூறுகிறது என்றிருக்கிறார்.  வாதத்திற்காக அது சரி என்று கொண்டாலுமே கூட, ஏனையவை எல்லாம் மதம் இஸ்லாம் மட்டுமே மார்க்கம் என்பதை அது எப்படி நிரூபிக்கும்? வேண்டுமானால் ஏனையவை சாதா மதம் இஸ்லாம் தூக்கலான மதம் என்று கூறிக் கொள்ளலாம். ஆனால் எந்த அடிப்படையில் மார்க்கம் என்பது? இஸ்லாம் ஒன்றும் தனிச்சிறப்பாக எல்லாத்துறைகள் குறித்தும் கருத்து கூறிடவில்லை. புதிதாக என்ன எழுந்தாலும் ஏற்கனவே இருப்பவற்றில் ஒத்த கருத்துடையவைகளை தேடி அதிலிருந்து ஒரு புரிதலுக்கு வருவார்கள். இதைத்தான் எல்லா மதத்திலும் செய்கிறார்கள்.  அரிசி மாவில் கோலம் போடுவது எறும்பு போன்ற சிறு உயிர்களுக்கு தீனி என்பதில் தொடங்கி கன்ஃபெசன் கூண்டில் மன அமைதி கிடைக்கிறது என்பது வரை தேவைகளுக்கு ஏற்ப வேத வசனங்களை, மதச் சடங்குகளை வாழ்க்கையோடு பொருத்திக் கொள்கிறார்கள்.
இதை, இஸ்லாம் எல்லாவற்றையும் கூறியிருக்கிறது, ஏனைய மதங்கள் கொஞ்சம் குறைவாக கூறியிருக்கிறது என்பது அவரவர் மத நம்பிக்கையைப் பொருத்தது. இவைகளைக் கொண்டு எப்படி இஸ்லாம் மதமல்ல மார்க்கம் என்று கூறுவது? அதுவல்லவா முதன்மையான கேள்வி. இதற்கு மறுப்பு கூறுவதை விடுத்து என்னுடைய கட்டுரையின் பகுதிகளை ஆங்காங்கே எடுத்துப் போட்டு அதற்கு பதில் என்ற போர்வையில் ஏதேதோ எழுதிவைத்தால் அது மறுப்பாகிவிடுமா? இதை எப்படி எடுத்துக் கொள்வது, உளறியிருக்கிறார் என்றா? திணறலை மறைக்க முடியாமல் சமாளித்திருக்கிறார் என்றா? ஒருவேளை ஆணித்தரமான பதில்களின் மூலம் எனக்கு சாட்டையடி கொடுத்திருப்பதாகக் கூட நண்பர் எண்ணியிருக்கக் கூடும்.  என்னசெய்வது மூட நம்பிக்கைகளையே வாழ்க்கையாக கொண்டவர்களல்லவா?
அடுத்து, குரானின் அறிவியலை அறியாமைக்காலம் என்பதிலிருந்து தொடங்கியிருக்கிறார்.  அறியாமைக் காலம் எனும் சொல்லை ஒரு சொல் எனும் அடிப்படையில் இருந்து நண்பர் அணுகியிருக்கிறார், அதனால் தான் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலமா? முகம்மதின் காலம் அறியாமைக் காலம் தான் என்கிறார். ஆனால் நான் அறியாமைக் காலம் என்பதை இஸ்லாமிய கலைச் சொல்லாக பயன்படுத்தியிருக்கிறேன்.  என்னுடைய கட்டுரையை நிதானமாக படித்திருந்தால் இதை அவர் உணர்ந்திருக்க முடியும்? ஆனால் மறுத்து எழுத வேண்டும் என்பதற்காகவே படித்திருப்பார் போலும் அதனால் தான் புரியவில்லை.
எந்தக் காலப் பகுதியையும் அதற்குப் பிந்தைய காலப் பகுதியோடு ஒப்பிட்டால் முந்தைய காலம் அறியாமைக் காலமாகவே இருக்கும். ஏனென்றால், சமூக அறிவியல் வளர்ச்சியடைகிறது. ஆனால் ஒரு சொல்லாக அறியாமைக் காலம் என்பதற்கும் இஸ்லாமிய கலைச் சொல்லாக அறியாமைக் காலம் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முகம்மதின் சமகாலத்தவர்கள் கூட அறியாமைக் காலம் எனும் சொல்லை சரளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். குரான் கூட இச்சொல்லை பயன்படுத்தியிருக்கிறது. அதாவது சம காலத்தையே அறியாமைக் காலம் அறிந்த காலம் எனப் பிரித்திருக்கிறார்கள்.  அதாவது ஒருவனின் வாழ்வில் எப்போது இஸ்லாம் நுழைகிறதோ அப்போதிலிருந்து அறியும் காலம் தொடங்குகிறது. அதற்கு முந்திய காலமெல்லாம் அறியாமைக் காலம். முகம்மதின் சமகாலத்தவர்களும், குரானும் இந்தப் பொருளில் தான் அறியாமைக் காலம் எனும் சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்கள் பயன்படுத்தியிருக்கிறது.  ஆனால் தற்போதைய இஸ்லாமிய மதவாதிகள், பரப்புரையாளர்கள் இஸ்லாத்திற்கு முன்னர் உலகம் எதையும் அறியாதிருந்தது, அந்த அறியாமைக் காலத்தில் வந்த குரானின் வசனங்கள் இன்றைய அறிவியலைப் பேசுகிறது என்று அறியாமைக் காலத்திற்கு புது அழுத்தம் கொடுக்கிறார்கள். இந்த அழுத்தத்திலிருந்து தான் குரானின் அறிவியல் பீறிட்டுக் கிளம்புகிறது.
இதேபோன்று இதனுடன் தொடர்புடைய சொல் தான் ஓதத் தெரியாத உம்மி முகம்மது என்பது. இவ்வளவு அறிவியல் பழுத்து தொங்கிக் கொண்டிருக்கும் குரான் வசனங்களை கூறியது எழுதப் படிக்கத்தெரியாத முகம்மது, எனவே குரானை இறக்கியது அல்லாதான் என்று காட்டுவதற்காக. அதாவது, திரைப்படங்களில் கதைநாயகன் அழகானவனாக தெரியவேண்டும் என்பதற்காக அழகு குறைந்ததான ஒப்பனையில் சிலரை நண்பர்களாக இணைப்பார்களே அது போல. குரானின் அறிவியலை ஜாக்கி வைத்து தூக்குவதற்காக முகம்மதுவுக்கு படிப்பறிவில்லாத பிம்பத்தைப் பூசுகிறார்கள். ஆனால் இன்றைய காலத்தோடு ஒப்பிடுகையில் அன்று கல்வி என்பது எப்படி இருந்தது? இன்று இருப்பது சான்றிதழ் கல்வி, முன்னர் இருந்தது செயற்பாட்டுக் கல்வி.  எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது அன்றைய நிலையில் கட்டாயமில்லை.  மிகத் தேவையுள்ளவர்கள் மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்திருந்தனர். அன்றைய பொழுதில் எழுதப் படிக்கத் தெரிவது கல்வியின் அடையாளமல்ல, தேவையின் அடையாளம்.  பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சியின் விளைவாகவே கல்வி சான்றிதழ் முக்கியத்துவம் கொண்டதாக, எழுதப் படிக்கத் தெரிவது கல்வியின் அடையாளமாக மாறியது. தெளிவாகச் சொன்னால் இயந்திரங்களை இயக்குவதற்கு நிலப்பிரபுத்துவ கால உழைக்கும் மக்களைப் போல் உடலுழைப்பு மட்டுமே தகுதி என்பது போதுமானதாக இல்லை எனும் தேவை ஏற்பட்ட பிறகே, பரந்துபட்ட மக்களுக்கு படிப்பறிவு புகுத்தப்பட்டது. முகம்மதின் காலத்தில் கல்வி என்பது அனுபவ அறிவாக, செயல்படும் திறனாகத்தான் இருந்தது. அதேநேரம் முகம்மது இன்றைய தகுதியில் ஒரு முதுநிலை செயல் அலுவலர் (சீப் எக்ஸிக்யூடிவ்) போன்று மதிக்கப்பட வேண்டியவர்.  ஒரு பன்னாட்டு வணிக நிறுவனத்தில் (கதீஜாவின் வணிகம் சிரியா, எகிப்து போன்ற நாடுகளோடு தொடர்பு கொண்டிருந்தது என்பதை நினைவில் கொள்க) திறம்பட பணியாற்றி அதன் முதலாளியால் கவரப்பட்டவர் என்பதை கவனம்கொள்ள வேண்டும்.  இதைத்தான் குரானின் அறிவியலை ஊதிப் பெருக்குவதற்காக எழுதப் படிக்கத்தெரியாதவர் என்று பீலா விடுகிறார்கள்.
மறுப்புக்கு திரும்புவோம்,  குரானில் அறிவியல் ததும்பும் வசனங்கள் என்று மதவாதிகள் கூறும் வசனங்களில் எந்த ஒன்றாவது நேரடியாக அறிவியலை அறிவியல் மொழியில் பேசுகிறதா என்றால் இல்லை என்பதே பதில்.  இதற்கு நண்பர் உட்பட எல்லோரும் ஆயத்தமாக கூறும் பதில் குரான் அறிவியல் நூல் அல்ல என்பதே.  அதிலிருக்கும் அறிவியலெல்லாம் அதில் ஏற்றப்பட்டிருக்கும் அறிவியல் தான். எடுத்துக்காட்டாக, “உங்களுக்கு பயன்படுவதற்காக மண்ணாலான பானையை ஆக்கித் தந்திருக்கிறோம். சிந்திக்க மாட்டீர்களா?” என்றொரு வசனம் இருப்பதாக கொண்டால்,இந்த வசனம் 1400 என்ன 2400 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பயன்பாட்டில் இருந்தாலும் ஒரு சாதாரண வாக்கியமாக இருக்கும். எதுவரை? பின்னர் ஒரு காலத்தில் மண்ணிலிருந்து சிலிகான் என்றொரு பொருளை பிரித்தெடுத்து அந்த சிலிகான் மனிதனின் கணிணி உட்பட பெரும்பாலான செயல்பாட்டிற்கு துணையாகும் வரை. அதன்பிறகு பார்த்தாயா அல்லாவின் மகிமையை! சிலிகான் என்றொரு பொருளை மண்ணிலிருந்து கண்டுபிடித்து அது மனிதனுக்கு பெருமளவில் பயன்படும் என்று குரான் 2400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது என்று ஜல்லியடிக்க வேண்டும்.  இதுதான் குரானில் இருக்கும் அறிவியல்.
இப்படி குரானில் மட்டும் தான் அறிவியல் இருக்கிறதா? பண்டைய இலக்கியங்கள் அனைத்திலும் அறிவியல் அவர்களையறியாமல் எட்டிப் பார்த்திருக்கிறது. குரானைப் பார்ப்பது போல் உருப்பெருக்கிப் பார்த்தால் தமிழ்வாணன் கதைகளில் கூட முப்பதாம் நூற்றாண்டு அறிவியலை கண்டுபிடிக்க முடியும். அதற்கு சில எடுத்துக்காட்டுகளையும் அந்தக் கட்டுரையில் காட்டியிருந்தேன்.  அதற்கு மறுப்பு எழுதியிருக்கும் நண்பரின் அறிவு கண்டு புளகமடைந்து விட்டேன்.
மண்ணின் மேலவன் தேர் சென்ற சுவடெலா மாய்ந்து விண்ணின் ஓங்கியதொரு நிலை…….  மன்னன் சென்ற தேரின் தடம், சென்று கொண்டேயிருந்து திடீரென விண்ணில் ஏறிச் சென்றது போல் மறைந்துவிட்டது என்று விமானம் குறித்து எந்த அறிவும் இல்லாத காலத்தில் ஒருவரால் எப்படி வர்ணிக்க முடியும்?
ஒரு துகள் துகளாக இருக்கும் அதேநேரம் ஒளியாகவும் இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருக்கும் அதே நேரம் குறிக்க முடியாதபடி பேரண்டம் முழுவதிலும் இருக்கிறது. எஃகு கூண்டுக்குள் இருக்கும் ஒரு எலி அதற்கு வெளியே இருப்பதாகவும் கொள்ளமுடியும். ஒரு பொருளின் இருப்பையும் அதன் இயக்கத்தையும் இப்படி விளக்குகிறது குவாண்டம் அறிவியல்.  இந்த நூற்றாண்டின் இந்த அறிவியல் ஈசோ உபனிடதத்தில் இடம்பெற்றது எப்படி? அது நகர்கிறது, அது நகரவில்லை, அது தூரத்தில் உள்ளது, அது அருகேயும் உள்ளது அது உள்ளே இருக்கிறது, வெளியேயும் இருக்கிறது. எனக்கு அறிவியல் தெரியுமா என்பது எனக்குத் தெரியாது. முடிந்தவரை முயன்று கொண்டிருக்கிறேன். ஆனால் நண்பர் அளவுக்கு எனக்கு அறிவியல் தெரியாது என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
ஒரே அளவில் இருக்கும் ஆபரணத்தில் எது போலி என்பதை துப்பறிய அதன் அடர்த்தியை எப்படி அளப்பது  என குழம்பிக் கொண்டிருந்த ஆர்கிமிடீஸுக்கு தொட்டியில் மூழ்கிக் குளிக்கும் போது தான் மூழ்கியதால் வெளியேறிய நீரின் அளவுடன் அடர்த்திக்கு தொடர்பு இருக்குமோ என்று சிந்தித்தது தான் ஆர்கிமிடீஸின் அடர்த்தி பற்றிய கோட்பாடு. இதைத்தான் அவ்வையாரும் கூறுகிறார் ஆழ அமுக்கி முகக்கினும் என்று. அவ்வையாருக்கு இந்த சிந்தனை வந்தவழி எது?
சதகூறிட்ட கோணிலும் உளன். அணுவைவிட சிறிய பொருள் இருக்க முடியுமா என்று சிந்திப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லாத அந்த அறியாமைக் காலத்தில் அணுவை நூறாக உடைத்த அளவில் இருக்கும் அளவிலும் ஒன்று இருக்க முடியும் என யூகித்ததற்கு தூண்டுதலாக இருந்தது எது?
குரானின் வழியில் பார்த்தால் இவைகளையும் அறிவியலாக ஏற்றுக் கொள்ள நேரிடும். ஆனால் இவைகள் மெய்யாக அறிவியலில்லை. அவர்களின் கற்பனை பின்னரான அறிவியல் கூறுகளுடன் ஒன்றிப் போகிறது அவ்வளவுதான். இதே கதை தான் குரானிலும். ஆனால் குரான் இஸ்லாத்திற்கு பசையாக இருப்பதால் அதனை நம்புபவர்களுக்கு அல்லாவையும் அதன் தெய்வீகத்தையும் பிரிக்க முடியாமல் போகிறது. அந்தோ பரிதாபம்! அதை நம்மையும் நம்பச் சொல்கிறார்கள். அது தான் பிரச்சனை.
இந்த நூற்றாண்டு மட்டுமல்ல, இனி மனிதன் வாழப் போகும் அத்தனை நூற்றாண்டுகளின் அறிவியல் நுணுக்கங்களையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குள்ளே மறைவாக சூல் கொண்டுள்ள குரானில் வெளிப்படையாக கூறப்பட்டிருக்கும் ஜின் போன்ற உயிரினங்கள் இருப்பதற்கு என்ன ஆதாரம் என்றால், நண்பர் ஒரு சமன்பாடு சொல்கிறார் பாருங்கள். என்னே ஒரு கண்டுபிடிப்பு. குரானில் இருக்கும் வசனங்கள் அறிவியல் தான் என நிரூபித்து விட்டால், ஒட்டுமொத்தமாக குரானே இறைவன் இறக்கியது என்று நிரூபணம் ஆகிவிடும், அப்படி நிரூபணம் ஆகிவிட்டால், தனித்தனியாக ஒவ்வொரு வசனமாக நிரூபிக்க வேண்டிய தேவையில்லாமல் அத்தனையும் உண்மை என்றாகிவிடும். என்றால் ஜின் இருப்பது உண்மை தானே. கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கு பிடிப்பது பற்றி செவியுற்றிருக்கிறீர்களா? அதற்கு விளக்கம் வேண்டுமென்றால் நண்பர் இஹ்சாஸை தொடர்பு கொள்ளலாம் தெளிவாக விளக்கமளிப்பார். குரான் இறைவன் தந்தது என்பதும், அதில் அறிவியல் இருக்கிறது என்பதும் முஸ்லீம்களின் நம்பிக்கைக்கு வெளியே ஒன்றுமில்லை. நண்பரோ குரான் இறைவன் தந்தது என்பது அறிவியல் உண்மை என்பது போல் எண்ணிக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். விரைந்து மயக்கத்திலிருந்துவிடுபட்டால் அவருக்கு நல்லது.
இறுதியாக, கோல்டன் ஏஜ் ஆஃப் இஸ்லாம் பற்றி கூறியிருக்கிறார். முஸ்லீம்கள் மாங்கா மடையர்கள், அவர்களுக்கும் அறிவியலுக்கும் தொடர்பே இல்லை என்று கூறியது யார்? முஸ்லீம்களில் அறிவியலாளர்கள் இருந்திருக்கிறார்கள், கணிதவியலாளர்களாக, வானியலாளர்களாக பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மதவாதிகள் கூறும் முஸ்லீம்களாக இருந்திருக்கிறார்களா? அல்லது இஸ்லாம் அறிவியலை அரவணைத்ததால் அவர்கள் அறிவியலாளர்களாக இருந்தார்களா? சமூகத்தளத்தில் முஸ்லீம்களாக நடக்கவில்லை என்று யாரை தூற்றுகிறார்களோ அவர்களையே அறிவியல் முஸ்லீம்கள் என்று தூக்கிப் பிடிப்பது வேடிக்கையானது தான்.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 12

 



பூமி உருண்டை என யார் சொன்னது அல்லாவா? மனிதனா?
எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

பூமியின் வடிவம் குறித்த அந்த பதிவில், உருண்டை என குரான் கூறுவதாக சொல்லப்படும் வசனங்களில் பெரும்பாலான வசனங்கள் பூமியின் வடிவம் குறித்து எதுவும் கூறாமல் இரவு பகலின் காட்சியை விவரிக்கும் வசனங்களாக இருக்கின்றன என்பதையும்; தஹாஹா, துல்கர்னைன் குறித்த வசனங்கள் பொய்யாகவும், வலிந்து ஏற்றப்பட்டதாகவும் இருக்கின்றன என்பதையும்; இன்னும் ஏராளமான வசனங்கள் பூமியின் வடிவத்தை தட்டை எனும் பொருள்பட குறிப்பிட்டுள்ளன என்பதையும் விளக்கியிருந்தேன். இவற்றில் தஹாஹா குறித்து அந்த வசனத்திற்கு ஜாஹிர் நாயக் தவறான விளக்கம் கொடுத்து வருவதாக நண்பரும் சேர்ந்து கூறியிருப்பதால் அந்த வசனத்தை தள்ளுபடி செய்துவிடலாம். ஆனால் ஜாஹிர் நாயக் மட்டும் தான் வசனங்களுக்கு பொருந்தாத அறிவியல் விளக்கம் கூறியிருக்கிறாரா? வேறு யாரும் கூறுவதில்லையா? துல்கர்னைன் வசனத்திற்கு பிஜே அளிக்கும் விளக்கம் எப்படி அறிவியலற்று இருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.

முதலில், இரவு பகல் காட்சிகளை விவரிக்கும் வசனங்கள் குறித்து நண்பர் குழப்பமான வாக்கியங்களில் கடந்து செல்கிறார். அந்த வசங்களில் பூமியின் வடிவம் குறித்த விளக்கம் இருக்கிறதா? இல்லையா? நண்பர் அதை சரி காண்கிறாரா? மறுக்கிறாரா? \\அதை தவறு என்று மறுக்கவில்லை. மாறாகஇதை 1400 வருடங்களுக்கு முன் என்ன 2800    வருடங்களுக்கு முன்இருந்தவர்களாலும் சொல்ல முடியும் என்கிறார். ஆக, இதற்களிக்கும்விளக்கத்தில் எந்த மறுப்பும் அன்னாருக்கில்லை என்றாகிவிட்டது// என்று குறிப்பிட்டிருக்கிறார். அதாவது அந்த வசனங்கள் பூமி உருண்டை என விளக்குவது போலவும், அதை நான் தகுந்த முறையில் மறுக்கவில்லை என்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைந்திருக்கிறார். ஆனால் புளி போட்டு விளக்கும் அளவுக்கு அந்த வசனங்களில் ஒன்றுமில்லை என்பதை அந்த பதிவில் தெளிவு படுத்தியிருக்கிறேன். \\ஏனென்றால் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை இரவு பகல் மாற்றம் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிகழ்கிறது. அறிவியலின் வாசம் கூட இல்லாத இந்த ஒன்றுமற்ற வசனத்தை தான் மாபெரும் அறிவியல் கொண்டதாக புழுகுகிறார்கள்// ஒன்றன்பின் ஒன்றாக வருகிறது, தொடர்கிறது, அடுத்தடுத்து வருகிறது, ஒன்றை ஒன்று மூடுகிறது இதுபோன்று தான் அந்த வசனங்கள் இரவு பகலை விவரிக்கின்றன. மனிதன் தோன்றிய நாள் முதல் இரவு பகல் இப்படித்தான் வந்து கொண்டிருக்கிறது. இதைக் கூறுவதற்கு, ஆண்டவனிடம் டியூசன் படித்தவர்களால் மட்டும் தான் முடியுமா? ஆனால் அந்த வசனங்களில் பூமி உருண்டை என கூறப்பட்டிருப்பதாக ஜல்லியடிப்பதற்கு நிச்சயம் ஆண்டவனிடம் டியூசன் படித்திருக்க வேண்டும். அவ்வாறு டியூசன் எதுவும் படிக்கவில்லை என்பதால் தான் நண்பர் அவைகளில் உருட்டு விளக்கங்கள் கொடுக்காமல் தவிர்த்துக் கொண்டார் போலும்.

துல்கர்னைன் வசனங்களை எடுத்துக் கொண்டால், அந்த வசனங்களில் பிஜே அவர்கள் துப்பறிந்து பூமி உருண்டை என்று கண்டுபிடிப்பதை இதை சொடுக்கி கண்டு களியுங்கள். இந்த விளக்கத்தைத் தான் நண்பரும் தன்னுடைய மறுப்பில் எடுத்து வைத்திருக்கிறார். அதாவது பூமியில் நேர்கோட்டில் பயணம் செய்தால் சூரியன் மறைவதையும் உதிப்பதையும் பார்க்கலாம். அப்படி பார்ப்பதாக குரான் கூறுவதால் பூமி உருண்டை என்று உறுதிப்படுகிறது என்கிறார். இது எப்படி அடிப்படையற்றதாக இருக்கிறது என்பதைப் பார்ப்போம். திசைகள் என்பவை மனிதனுக்கான அடையாளங்கள் தாம், அண்ட வெளியில் திசைகள் இல்லை. சூரியன் உதிக்கும் திசை கிழக்கு, மறையும் திசை மேற்கு என்றால் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் சென்று மறைவதில்லை. பூமி சுழல்வதால் அப்படியான தோற்றம் வருகிறது. இப்போது ஒருவர் பூமியில் கிழக்கு நோக்கி பயணம் மேற்கொள்கிறார்(படம்) என்று கொள்வோம். அவரின் முகத்திற்கு எதிரே சூரியன் இருப்பதால் கிழக்காக செல்கிறார் என்று பொருள். தொடர்ந்து 90 பாகை கடந்ததும் அவர் தன் பாதையில் இயல்பாக மேற்கு நோக்கி திரும்பி விடுவாரா? நிச்சயம் மாட்டார். பூமியின் இரவுப் பகுதியில் நுழையும் போது அவரால் சூரியன் மறைவதை காண முடியாது. ஏனென்றால் சூரியனின் மறைவு அவரது பின் தலையில் நிகழும். 180 பாகை கடந்ததும், மீண்டும் அவர் சூரியன் உதிப்பதை காண முடியும். இப்படி அவர் எத்தனை சுற்றுகள் பூமியை சுற்றி வந்தாலும், சூரியன் உதிப்பதை மட்டுமே திரும்பத் திரும்ப காண முடியுமேயன்றி ஒருபோதும் அவரால் சூரியன் மறைவதை காண முடியாது. சூரியனின் மறைவை காண வேண்டுமென்றால் அவர் திரும்பி தன் திசையை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே ஒருவர் கிழக்காகவோ, மேற்காகவோ எந்த திசையில் சென்றாலும் சூரியன் உதிப்பதையோ மறைவதையோ ஏதாவது ஒன்றை தான் காண முடியுமேயன்றி இரண்டையும் காண முடியாது. இரண்டையும் கண்டிருக்கிறார் என்றால், அவர் தன் திசையை மாற்றியிருக்கிறார் என்பதைத்தவிர வேறு ஒரு பொருளும் இல்லை. இதைத்தான் பதிவில் இப்படி \\நேர் கோட்டில் பயணம் செய்யும் ஒருவரால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காணமுடியாது// சுருக்கமாக குறிப்பிட்டிருந்தேன்.

இதே துல்கர்னைன் வசனத்தில் முதலில் ஒரு பாதை, பின்னர் ஒரு பாதை என்று குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அவர் இருவேறு திசைகளில் பயணம் செய்திருக்கிறார் என்று கூறியிருந்ததை மறுத்து நண்பர் \\அவர் இது வரை பயணம் செய்த வழி தரைவழிப்பயணம் எனபதையும் மேற்குத்திசை நோக்கி பயணம் செய்தார் என்பதையும் ….. பின்னர் ஒருவழியில் சென்றார் என்பதன் அர்த்தம் கடல் மார்க்கமாக அல்லது நீர்மார்க்கமாக பயணம் செய்ததை குறிப்பிடுகிறது என்பதை அறியலாம்// என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு வாதத்திற்காக அப்படியே வைத்துக் கொள்வோம். என்றாலும் அவர் திசையை மாற்றாமல் ஒரே நேர்கோட்டில் சென்றார் என்பதை எப்படி கூறுகிறார்கள்? ஒரே திசையில் தான் சென்றார் என்பதை அந்த வசனத்தில் எந்த சொல்லிலிருந்து எடுத்துக் கொண்டார்கள்? அவர்களுக்கு தேவை என்றால் எப்படி வேண்டுமானலும் வளைத்து, நெளித்து பொருள் சொல்வார்களா?

குரான் 2800 ஆண்டுகளுக்கு முன்பே எல்லாவற்றையும் கூறிவிட்டது என்று வாய்ப்புக் கிடைத்த எல்லோருமே கூறித் திரிகிறார்கள். ஜாஹிர் நாயக் கூறியது தவறு என்று நண்பர் கூறுகிறார். பிஜே கூறியதை என்ன செய்வது? ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னால் சௌதி இமாம் ஷேக் இபின் பாஸ் பூமி தட்டை என்பதை ஏற்காதவர்கள் குரானை மறுக்கும் காபிர்கள் என்று வரலாற்று புகழ்மிக்க பத்வாவை வழங்கியிருக்கிறார் என்பது நண்பரின் கவனத்திற்கு.

பூமியின் வடிவம் குறித்து எதுவும் கூறாத வசனங்களை உலையில் பழுக்க வைத்து சம்மட்டியால் அடித்து நீட்டி பூமி உருண்டை என்று கதற வைக்கிறார்கள் என்பது ஒருபுறமிருந்தாலும்; பூமியின் வடிவத்தை தட்டை எனும் பொருளில் குறிப்பிடும் வசனங்களைக் கூட எப்படி உருண்டை என்று பொய் சாட்சி சொல்ல வைத்துவிடுகிறார்கள் என்பதை அந்த பதிவில் விளக்கியிருந்தேன். அதை மறுக்க வேண்டும் என நினைத்த நண்பர் எப்படி மறுப்பது என்பது புரியாததால் அறிவை ஐயப்படுகிறார். பூமியை விரித்தான் என்று கொண்டாலும், பூமியில் விரித்தான் என்று கொண்டாலும் அங்கு பூமி உருண்டை எனும் பொருளை அதிலிருந்து பெறமுடியாது. இதை தெளிவாகவே கேட்டிருக்கிறேன், \\ எந்த வடிவத்தில் அந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்கிறது? சமதளத்திலா? அல்லது உருண்டை வடிவத்திலா? என்ற கேள்விக்கு குரானில் விடை இருக்கிறதா? பூமி உருண்டையாக இருப்பதனால் அதன் மேலும் விரிப்பை பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. பூமி உருண்டையா தட்டையா என்று தெரியாது எனக்கொண்டால் குரானிய வசனங்களின் படி உருண்டை தான் என எப்படி உறுதிப்படுத்துவது?// சதுரமாக இருந்தாலும், முக்கோணமாக இருந்தாலும் விரிப்பை விரிக்க முடியும். பூமியில் விரிக்கப்பட்டிருக்கும் விரிப்பு எந்த வடிவின் மேல் விரிக்கப்பட்டிருக்கிறது? இதற்கு பதில் சொல்ல இன்னொரு முகம்மதா வருவார்? இருக்கும் முகம்மதுகள் தான் பதில் கூற வேண்டும்.

முகம்மது பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே பூமி உருண்டை என்பது மக்களுக்கு தெரிந்து தான் இருந்தது. கடலாடிகள் தங்கள் பட்டறிவின் மூலமும், அறிவியலாளர்கள் ஆய்வுகள் மூலமும் அதை வெளிப்படுத்தி இருந்தார்கள். இதில் புளகமடையும் விதமாக நண்பர் தன் நேர்மையுணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரே செய்தியை நானும் அவரும் கூறியிருப்பதை பாருங்கள். \\கிரேக்கர்கள் சீனர்கள் இந்தியர்கள், அராபியர்கள் கடலாடிய செய்திகள் பண்டைய இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. ….. பூமியின் வடிவம் உருண்டை என்பதை பட்டறிவாகவே விளங்கி வைத்திருந்தனர்// இது நான். \\இந்தியா, சீனா, கிரேக்கம் போன்ற நாடுகளில் குறிப்பிட்டது முகம்மது நபிக்குஎப்படித் தெரியும்?// இது நண்பர். அரபியர்களை மட்டும் நேர்மையாக மறைத்து விட்டார். தொடர்ந்து எனக்கு நெத்தியடி, சாட்டையடி முதல் இன்னும் பலவாறான அடிகளை அடிப்பதாக எண்ணிக் கொண்டு கேள்விகளாக அடுக்கியிருக்கிறார். ஸ்ஸ்ஸ்ஸ்யப்பா, முடியல (வடிவேலு பாணியில் படித்துக் கொள்ளவும்)

பூமி உருண்டை என்று குரான் கூறுகிறதா? என்பது எடுத்துக் கொண்ட தலைப்பு. ஆம் கூறுகிறது என்பதாக சுட்டப்படும் வசனங்களை மூன்றாக பிரித்து 1) இரவு பகல் காட்சி வசனங்களில் பூமி உருண்டை என்று கூறப்படவில்லை, 2) தஹாஹா, துல்கர்னைன் வசனங்களில் பூமி உருண்டை என்று கூறப்படவில்லை, 3) தட்டை என்று பொருள் கொள்ளத்தக்க வசனங்களிலும் பூமி உருண்டை என்று கூறப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறேன். மேலதிகமாக முகம்மதின் காலத்திற்கு வெகுமுன்பே பூமி உருண்டை என்பது நிருபணமாகியிருக்கிறது என்பதையும் எடுத்தியம்பி இருக்கிறேன். இதை மறுக்க வேண்டும் என்பதற்காக ஏதேதோ உளறி வைத்திருக்கும் நண்பர், அறிவுடன் தான் எழுதுகிறேனா? என்றும் கேட்டிருக்கிறார். மெய்யாகவே நண்பருக்கு அறிவு முற்றி இருக்கும் துளைகள் வழியாகவெல்லாம் வெளியேறிக் கொண்டிருப்பதாக எண்ணினால் உருப்பெருக்கி கொண்டு குரானின் வரிகளுக்கிடையே தேடி பூமி உருண்டை என்று கூறும் வசனங்களை கூற முயலட்டும், அவரால் முடிந்தால்.

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

படைப்புவாதமும் பரிணாமக் கோட்பாடும்: தொடரும் போர்

‘‘டார்வினின் புத்தகம் மிக முக்கியமானது. வரலாற்றில் நிகழும் வர்க்கப் போராட்டத்திற்கான இயற்கை அறிவியல்பூர்வமான அடிப்படையை அது எனக்கு வழங்குகிறது.’’
- கார்ல் மார்க்ஸ்
‘‘உயிரின இயற்கையின் வளர்ச்சி விதியை டார்வின் கண்டுபிடித்ததைப் போல மனித வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.’’
- எங்கெல்ஸ்
மனித குல வரலாற்றில் மனிதர்களின் சிந்தனைப்போக்கின் மீதும் அதன் விளைவாக வரலாற்றின் மீதும் மிகுந்த செல்வாக்கு செலுத்திய நூறு பேர் கொண்ட ஒரு பட்டியலை யார் தயாரித்தாலும் அதில் நிச்சயம் சார்லஸ் டார்வினுக்கு ஓர் இடம் இருக்கும். கடந்த நானூறு வருட கால நவீன அறிவியல் வரலாற்றில் தோன்றிய அதிமுக்கியமான பத்து அறிவியலாளர்களைக் கொண்ட எத்தனை மாறுபட்ட பட்டியல்கள் தயாரிக்கப்பட்டாலும் அவை அனைத்திலும் டார்வினுக்கு ஓர் இடம் இருக்கும். கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்ற ஒரு சில அறிவியலாளர்களின் செல்வாக்குடன் மட்டுமே ஒப்பிடத்தகுந்தது டார்வினின் செல்வாக்கு. நியூட்டனின் கண்டுபிடிப்புகள் நவீன இயற்பியலுக்கு வித்திட்டு அறிவியல் உலகில் ஒரு மாபெரும் புரட்சியையே கொண்டுவந்தன. ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் பிரபஞ்சத்தைப் பற்றி அதுகாறும் அறிவியலாளர்கள் கொண்டிருந்த பார்வையையே முற்றிலுமாய்ப் புரட்டிப்போட்டது. ஐன்ஸ்டீன், நீல்ஸ் போர், ஹைசன்பெர்க், ஷ்ராடிங்கர் போன்றோரால் உருவான குவான்டம் இயற்பியலின் கண்டுபிடிப்புகள் அறிவியல் உலகிலேயே பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின (குவான்டம் அறிவியலின் உண்மைகளை விளங்கிக்கொள்ளும் விதத்தில் ஐன்ஸ்டீனுக்கும் நீல்ஸ் போருக்கும் இடையில் மிக அடிப்படையான முரண்பாடு நிலவியது).
ஆனால் இவையெதுவுமே மத நம்பிக்கைகளை, கடவுளின் இருப்பை நேரடியாகக் கேள்விக்குட்படுத்தவில்லை. குறைந்தபட்சம் மத நம்பிக்கையாளர்கள் அப்படிக் கருதவில்லை. பூமியானது நாம் நினைப்பதுபோல் பிரபஞ்சத்தின் மையம் அல்ல மாறாக அது சூரியனைச் சுற்றிவரும் பல கோள்களுள் ஒன்று என்று அறிவியல்பூர்வமாக கலிலியோ 17ஆம் நூற்றாண்டில் நிரூபித்ததும் பைபிளில் கூறப்படுவது போல் முதல் நாளன்று வானத்தையும் பூமியையும் படைத்த தேவன் இறுதியாக ஆறாம் நாளன்று தனது சாயலில் ஆணையும் பெண்ணையும் படைத்தார் என்பதை மறுத்து ஒரு செல் உயிரியிலிருந்து அடுத்தடுத்து ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் விளைவாக உருவானவனே மனிதன் (இந்தப் பரிணாம வளர்ச்சி நடந்தேறப் பல கோடி ஆண்டுகள் பிடித்தன) என்பதைத் தனது ஆராய்ச்சியின் மூலம் டார்வின் 19ஆம் நூற்றாண்டில் நிரூபித்ததும் மதத்தின் - குறிப்பாக கிறிஸ்துவ மதத்தின் - அடிப்படைகளை உலுக்கின. கோபர்நிகஸின் தத்துவார்த்தக் கோட்பாட்டை அறிவியல்ரீதியாக முன்வைத்து 1632ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘‘இரு தலையாய உலக அமைப்புமுறைகள் பற்றிய உரையாடல்’’ (Dialogue Concerning the Two Chief World Systems) என்னும் புத்தகத்திற்காக போப் மற்றும் கத்தோலிக்க மதத்தின் Inquistion அமைப்பால் கலிலியோ விசாரிக்கப்பட்டார். கலிலியோவே தனது கோட்பாட்டை மறுக்கும்படி செய்யப்பட்டார். அப்படிச் செய்யாத பட்சத்தில் கொளுத்தப்படுவார் என்றும் அச்சுறுத்தப்பட்டார். அதற்குப் பணிந்த கலிலியோவிற்கு வாழ்நாள் வீட்டுக்காவல் தண்டனை 1633இல் வழங்கப்பட்டது. தனது எஞ்சிய வருடங்களைக் கலிலியோ வீட்டுக்காவலில் கழித்தார். 359 வருடங்கள் கழித்து, 1992இல் போப் ஜான் பால் இதற்கு வருத்தம் தெரிவித்து கலிலியோவின் கருத்தே சரி என்றும் ஒப்புக்கொண்டார்.
1859, நவம்பர் 22இல் டார்வினின் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை உள்ளடக்கிய ‘‘இயற்கைத் தேர்வின் வழியே உயிரினங்களின் தோற்றம்: அல்லது, வாழ்க்கைக்கான போராட்டத்தில் சிறப்பான இனங்கள் பாதுகாக்கப்படுவது’’ (The Origin of Species by Means of Natural Selection: Or, the Preservation of Favored Races in the Struggle for Life) என்னும் புத்தகம் வெளியானது. ஆனால் கலிலியோவிற்கு நேர்ந்த கதி டார்வினுக்கு நேரவில்லை. மதவாதிகள் திருந்தியிருந்ததல்ல இதற்குக் காரணம். மாறாக ஐரோப்பிய அறிவொளிக் காலகட்டத்தில் (18ஆம் நூற்றாண்டு) மத நம்பிக்கைகளுக்கும் பகுத்தறிவிற்கும் இடையில் நடந்த கடும் போராட்டத்தில் மனிதப் பகுத்தறிவின் மேன்மை நிறுவப்பட்டதும் உறுதிசெய்யப்பட்டதுமே இதற்குக் காரணம். கோபர்நிகஸ் புரட்சியைப் போலவே டார்வினின் கண்டுபிடிப்பும் நாத்திகவாதத்திற்குப் பெரும் வலுசேர்த்தது. டார்வின் பிறப்பதற்கு முன்பு ஒருவர் நாத்திகவாதியாக இருப்பது என்பது மிகக் கடுமையான சவால். ஆனால் டார்வினின் கண்டு பிடிப்பு அதை இன்று எளிதான காரியமாக ஆக்கியிருக்கிறது என்று புகழ்பெற்ற அறிவியலாளரும் நாத்திகவாதியுமான ரிச்சர்ட் டாக்கின்ஸ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். இதில் உண்மை இருக்கிறது என்றாலும் மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் நாத்திகவாதமானது மிக வலுவான அறிவியக்கமாக வரலாற்றில் எப் போதுமே இருந்துவந்திருக்கிறது. இந்தியத் தத்துவ மரபில் சார்வாகத்தின் பங்களிப்பு எவ்வளவு மகத்தானது என்பதைத் தத்துவவியலாளர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா நிறுவியிருக்கிறார். இதில் ஆர்வமூட்டக்கூடிய விஷயம் என்னவெனில் டார்வின் தன்னை நாத்திகவாதியாக ஒருபோதும் பிரகடனப்படுத்திக் கொண்டதில்லை. நாத்திகம் அறிவாளிகளுக்கு உகந்த விஷயம் என்று கருதிய டார்வின் சாதாரண மக்களுக்கு அது இன்னும் ஏற்புடையதாக இல்லை என்று கருதினார். ஆகவே தான் நாத்திகத்திற்கு ஆதரவாகப் பேசுவது தனது குடும்பத்தினரையும் வேறு பலரது மனங்களையும் புண்படுத்தும் என்று கருதிய டார்வின் தன்னை ஒரு ஐயவாதி (Agnostic) என்றே கூறிக்கொண்டார். மதம் பற்றிய தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிப்பதை எப்போதுமே தவிர்த்துவந்தார். கார்ல் மார்க்ஸின் மகளான எலியனோரின் காதலன் எட்வர்ட் எவ்லிங்கிற்கு டார்வின் எழுதிய கடிதத்தில் இது வெளிப்படுகிறது. மதம் பற்றிய அவரது கருத்துகளை இக்கடிதம் வெளிப்படுத்துவதுடன், பல காலமாக நம்பப்பட்டுவந்த கார்ல் மார்க்ஸ் - டார்வின் சம்பந்தமான ஒரு சர்ச்சைக்கும் வழிவகுத்தது. மார்க்ஸ் தனது மூலதனம் புத்தகத்தை டார்வினுக்குச் சமர்ப்பிக்க விரும்பியதாகவும் ஆனால் அதை டார்வின் மறுத்துவிட்டார் என்றும் நம்பப்பட்டு வந்தது. ஆனால் உண்மை என்னவெனில் எவ்லிங் தனது The Students’ Darwin என்னும் புத்தகத்தை டார்வினுக்குச் சமர்ப்பிக்க விரும்பி அதற்கு அனுமதி கோரியிருந்தார். அப்புத்தகத்தில் தனது தீவிர நாத்திகவாதக் கருத்துகளை எவ்லிங் கூறியிருந்த காரணத்தால் அது தனக்குச் சமர்ப்பிக்கப்படுவதை மென்மையான முறையில் டார்வின் மறுத்துவிட்டார். 1895இல் எலியனோர் தனது தந்தைக்கு வந்த கடிதங்களை ஆவணப்படுத்திய போது தனது காதலருக்கு டார்வின் எழுதிய கடிதத்தை அவற்றுடன் தவறுதலாகச் சேர்த்துவிட்டதுதான் எல்லாக் குழப்பங்களுக்கும் காரணம்.
மதத்துடன் டார்வினுக்கு இருந்த உறவை அக்கடிதம் (13.10.1880இல் எழுதப்பட்டது) மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் ஓர் அபூர்வமான ஆவணம் என்பதால் அதை முழுமையாகப் படித்துவிடுவது நல்லது:
அன்புள்ள ஐயா,
உங்கள் அன்பான கடிதத்திற்கும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள புத்தகத்திற்கும் நான் மிக்கக் கடன்பட்டுள்ளேன். எனது எழுத்துக்கள் மீதான உங்களது கருத்துகளை எந்த வடிவத்திலும் வெளியிட எனது அனுமதி தேவையில்லை. அனுமதி தேவையற்ற ஒரு காரியத்திற்கு அனுமதி வழங்குவது நகைப்பிற்குரியது. எனக்குத் தெரியாத ஒரு விவகாரத்தைப் பற்றிய வெளியீட்டிற்கு எனது அங்கீகாரத்தை இது வழங்கும் என்பதால் அந்தப் புத்தகம் எனக்குச் சமர்ப்பிக்கப்படுவதை மறுக்க விரும்புகிறேன் (என்னைக் கௌரவிக்க நினைத்ததற்கு நன்றி கூறுகிறேன்). மேலும், எல்லா விவகாரங்களைப் பற்றியுமான சுதந்திரச் சிந்தனையை நான் தீவிரமாக ஆதரிப்பவன் என்ற போதிலும் கிறித்துவத்திற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் எதிரான வாதங்கள் பொதுமக்கள்மீது பெரிதாகத் தாக்கம் எதையும் ஏற்படுத்தமாட்டா என்று எனக்குத் தோன்றுகிறது (இது சரியாகவோ தவறாகவோ இருக்கலாம்). அறிவியல் முன்னேற்றத்தின் விளைவாக மனிதர்கள் படிப்படியாக அறிவுத் தெளிவைப் பெறுவதன் மூலமே சுதந்திரச் சிந்தனையை முன்னெடுத்துச் செல்ல இயலும். ஆகவே மதத்தைப் பற்றி எழுதுவதை நான் எப்போதுமே தவிர்த்து வந்திருக்கிறேன். எனது பணியை அறிவியலுடன் மட்டும் நிறுத்திக்கொண்டேன். மதத்தின் மீதான நேரடியான தாக்குதலுக்கு நான் உதவினால் அது என் குடும்பத்தினருக்கு மிகுந்த வேதனையைத் தரும் என்ற காரணத்தால் இத்தீவிர நிலைப்பாட்டை எடுத்துள்ளேன். உங்கள் வேண்டுகோளை மறுப்பதற்காக வருந்துகிறேன். எனக்கு வயதாகிவிட்டது, உடலில் வலு இல்லை மற்றும் அச்சிடப்பட்ட தாள்களைப் பிழை பார்ப்பது என்னை மிகுந்த சோர்வுக்குள்ளாக்குகிறது.
உங்கள் உண்மையுள்ள
சார்லஸ் டார்வின்.
டார்வினின் கோட்பாடுகள் அவர் விரும்பியோ விரும்பாமலோ, மத நிறுவனங்களுக்கும் பிரச்சாரகர்களுக்கும் பெரும் சவாலாக அமைந்தன. ஆனால் தனது இளமைக் காலத்தில் தான் ஒரு கிறித்துவ மதகுருவாக வேண்டுமென டார்வின் விரும்பினார் என்பது வரலாற்றின் முரண்நகை. சர்ச்சுகள் தன் கருத்துகள்மீது தொடுத்த தாக்குதலால் அவர் தன்னை Devil’s Chaplain என்று நகைச்சுவையாக அழைத்துக்கொண்டார். ‘‘இயற்கைத் தேர்வின் வழியே உயிரினங்களின் தோற்றம்’’ 1859 நவம்பர் 24இல் வெளியானது. இப்புத்தகம் வெளியாவதற்கு அடிப்படையாக அமைந்த பி.வி.ஷி. ஙிமீணீரீறீமீ பயணம் 1831 டிசம்பரில் தொடங்கி 1836 அக்டோபரில் முடிவுற்றது. 2009 பிப்ரவரி 12ஆம் தேதி டார்வினின் 200ஆம் பிறந்த தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நூல் வெளியான பிறகு, கடந்த 150 வருடங்களில் பரிணாமக் கோட்பாட்டை நிரூபிக்கும் வகையில் மலைபோல் ஏராளமான ஆதாரங்கள் குவிந்துள்ளன. ஆனாலும் தீவிர மத நம்பிக்கையாளர்கள், பொது மக்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து இன்றும் பரிணாமக் கோட்பாடு எதிர்கொள்ளும் தடைகள் பல. ஓரிரு சமயங்களில் சில அறிவியலாளர்களும் இத்தகையவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதுதான் இதில் மிகுந்த வருத்தத்திற்குரிய விஷயம். பரிணாமக் கோட்பாடு என்பது ஒரு கோட்பாடுதானே (Theory) தவிர அறிவியல் உண்மை அல்ல என்பது முதல் குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்றால் ஏன் இன்னும் குரங்குகள் குரங்குகளாகவே இருக்கின்றன என்பது வரை ஏராளமான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. பொதுவாக அறிவியலில் கோட்பாடு (Theory) என்கிற வார்த்தையை என்ன அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றியும் குறிப்பாகப் பரிணாமக் கோட்பாடு பற்றியும் நிலவும் தப்பெண்ணங்களுமே இதற்குக் காரணம்.
அறிவியலில் கோட்பாடு என்பது இயற்கை உலகின் சில பரிமாணங்களை அல்லது சில அம்சங்களைத் தகுந்த ஆதாரங்களுடன் முறையாக விளக்குவது. தகுந்த ஆதாரங்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மைகள், அறிவியல் விதிகள் (புவியீர்ப்பு மற்றும் வெப்பவியக்கவிசை விதிகள் போன்றவை), அனுமானங்கள், மற்றும் சோதிக்கப்பட்ட கருதுகோள்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஓர் அவதானிப்பு பலமுறை மீண்டும் மீண்டும் சோதனைச்சாலையில் உறுதிசெய்யப்படுகிறபோதே அது உண்மை என்று அறிவியலாளர்களால் ஏற்கப்படுகிறது. கோட்பாடு, உண்மை என்பன வெவ்வேறான விஷயங்கள் என்பனவாகப் பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு கோட்பாடு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாவிட்டால் அது கோட்பாடாகவே அறிவியலாளர்களால் ஏற்கப்படாது. தலையைக் கிறுகிறுக்கவைக்கும் சார்பியல் மற்றும் குவான்டம் கோட்பாடுகள் உட்பட அனைத்துக் கோட்பாடுகளுக்கும் இது பொருந்தும். பெருவெடிப்பு நிகழ்வை யாரும் நேரடியாக அவதானித்ததில்லை. ஆனால் அக்கோட்பாட்டிற்குப் (ஙிவீரீ ஙிணீஸீரீ ஜிலீமீஷீக்ஷீஹ்) பல மறைமுகமான ஆதாரங்கள் இருப்பதால்தான் அது கோட்பாடாக ஏற்கப்படுகிறது.
பரிணாம வளர்ச்சி என்பதற்குப் புதிய மாறுதலுடன் தோன்றும் சந்ததி என்றே அர்த்தம். ஆங்கிலத்தில் descent with modification என்பார்கள். ‘‘Survival of the fittest’’ (டார்வினின் புத்தகத்தைப் படித்த பிறகு ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்ற தத்துவவியலாளர் 1864இல் தான் எழுதிய Principles of Biology என்ற புத்தகத்தில் இந்தச் சொற்றொடரை உருவாக்கினார். இது Natural Selection என்பதற்குப் பதிலியாக உருவாக்கப்பட்டது. சக அறிவியலாளரும் தனது சொந்த வழியில் பரிணாமக் கோட்பாட்டை இதே காலகட்டத்தில் கண்டுபிடித்திருந்தவருமான ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸின் கருத்தை ஏற்று இந்தப் பதத்தை 1869இல் தனது புத்தகத்தின் ஐந்தாம் பதிப்பில் டார்வின் பயன்படுத்தினார். ஆனால் இது சில குழப்பங்களுக்கு வழிவகுத்தது) என்று சாதாரணப் பேச்சுவழக்கில் கூறப்படுவதன் அர்த்தம் எந்த ஓர் உயிரினம் தான் இருக்கும் இடத்தின் சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறதோ அது நீடித்திருக்கிறது என்பதே. எந்த அம்சம் அது நீடித்திருக்க உதவுகிறதோ அது அடுத்தடுத்த சந்ததிகளுக்குக் கடத்தப்படுகிறது. ஒரே உயிரினத்திற்குள்ளேயே வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்கலாம். உதாரணமாக எல்லா வரிக்குதிரைகளுக்கும் ஒரே அளவான வரிகள் இருப்பதில்லை, எல்லாச் சிறுத்தைகளுக்கும் ஒரே அளவான அல்லது ஒரே எண்ணிக்கையிலான கருந்திட்டுகள் இருப்பதில்லை, எல்லாக் குதிரைகளும் ஒரே வேகத்தில் ஓடுவதில்லை. எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தால் ஒன்றைவிட மற்றொன்று மேலானது என்னும் பேச்சுக்கே இடமிருக்காது, இயற்கைத் தேர்வும் (Natural Selection) நடைபெற இயலாது. ஓர் உயிரினம் தான் நீடித்து உயிர்வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் ஏற்ற அம்சங்களைப் பெற்றிருந்தால் அந்த இனம் நீடித்திருப்பதும் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்வதும் சாத்தியமாகிறது. வேகமாக ஓடும் சிறுத்தையால் அதிக மான்களை வேட்டையாடி நீடித்து வாழ முடியும். அதேபோல் வேகமாக ஓடும் மானால் சிறுத்தையிடமிருந்து தப்பித்து நீடித்து வாழ முடியும். நீடித்து வாழ்ந்து இனப்பெருக்கம் செய்யும் விலங்குகள் தங்களது சாதக அம்சங்களை அடுத்த சந்ததிக்குக் கடத்துகின்றன. இந்தச் சாதகமான குணங்களை அல்லது அம்சங்களைப் பெற்ற விலங்குகளின் எண்ணிக்கை அல்லது சதவிகிதம் படிப்படியாக அந்த உயிரினத்தின் கூட்டத்தில் அதிகரிக்கிறது. அதாவது சிறுத்தை இனத்தை எடுத்துக்கொண்டால் பல தலைமுறைகளுக்குப் பிறகு மிக வேகமாக ஓடக்கூடிய சிறுத்தைகளால் நிரம்பியிருக்கும். மற்றொரு உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு பனிப் பிரதேசத்தில் இருக்கும் முயல்கள் அனைத்தும் பழுப்பு நிறத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவற்றை வேட்டையாடும் மிருகங்களிடமிருந்து அவை தப்புவது கடினம். பனிப் பிரதேசத்தில் பழுப்பு நிறப் பொருட்களை அடையாளம் காண்பது எளிது என்பதால் ஊனுண்ணிகள் (Carnivorous) அவற்றை எளிதாக வேட்டையாடி விடும். உயிர்வாழ்வதே அவற்றுக்குப் பெரும் போராட்டமாகிவிடும். பழுப்பு என்றாலும் அனைத்து முயல்களும் ஒரே மாதிரியான பழுப்பாக இருக்கமாட்டா. சில லேசான பழுப்பிலும் சில அடர்த்தியான பழுப்பிலும் இருக்கும். ஒரு கட்டத்தில் திடீர் மரபியல் மாற்றத்தின் காரணமாக (Mutation) வெளிறிய நிறத்தில் (Albino) சில முயல்கள் பிறப்பதாக வைத்துக்கொள்வோம். எங்கும் வெண்மையாக இருக்கும் பனிப் பிரதேசத்தில் இவை தங்களை வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். அடுத்த தலைமுறையிடையே வெளிறிய நிற முயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த வெளிறிய நிற அம்சம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு மரபணுக்கள் வழியே கடத்தப்படும். சில பல தலைமுறைகளுக்குப் பிறகு அப்பகுதியில் உள்ள அனைத்து முயல்களுமே வெள்ளை நிறத்தில் இருக்கும். முயல்கள் எப்படிப் பனிப் பிரதேசத்திற்கு வந்தன? இரண்டு விதங்களில் இது நடக்கக்கூடும். ஒன்று, வெப்பப் பிரதேசத்திலிருந்து சில முயல்கள் பனிப் பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்ததால் தனிமைப்பட்டுப் போயிருக்கலாம். இரண்டு, வெப்பப் பிரதேசமாக இருந்த அப்பகுதி சுற்றுச்சூழல் மாற்றத்தால் பனிப் பிரதேசமாக மாறியிருக்கலாம். சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் ஓர் உயிரினத்தின் சில குழுக்கள் இடம்பெயர்வது என்னும் இரண்டு காரணிகளுமே பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்றால் ஏன் இன்னும் குரங்குகள் குரங்குகளாகவே இருக்கின்றன? இந்தப் புரிதலே தவறானது. பரிணாமக் கோட்பாட்டின்படி குரங்கிலிருந்து தோன்றியவன் அல்ல மனிதன். மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையரிடமிருந்து தோன்றியவர்கள் என்றுதான் பரிணாமக் கோட்பாடு கூறுகிறது. ஓர் உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினம் தோன்றுவது என்பது (Speciation) பல ஆயிரம் தலைமுறைகளுக்கு ஒருமுறை நிகழ்வது. ஒரு புதிய உயிரினம் தோன்றிய பின்னர் அதன் மூதாதையர் தொடர்ந்து நீடிக்கவோ அல்லது மறைந்துபோகவோகூடும். அது சுற்றுச்சூழலையும் அந்த உயிரினத்தின் சாதகபாதக அம்சங்களைப் பொறுத்தது.
பரிணாம வளர்ச்சிக்கான ஆதாரங்களை உயிரியலாளர்கள் இருதளங்களில் வைக்கிறார்கள்: 1. நுண்ணியப் பரிணாம வளர்ச்சி (Microevolution). இத்துறை ஓர் உயிரினத்திற்குள் (within species) காலப்போக்கில் படிப்படியாக நிகழும் மாற்றங்களை ஆராய்கிறது. இத்தகைய மாற்றங்கள் காலப்போக்கில் புதிய உயிரினம் தோன்ற வழிவகுக்கலாம். 2. பெரும் பரிணாம வளர்ச்சி (Macroevolution). இத்துறை பல்வேறு உயிரினக் குழுக்களிடையிலான (Taxonomic groups) பெரும் மாற்றங்கள் எவ்வாறு காலப்போக்கில் உருவாயின என்பதை ஆராய்கிறது. இந்த இரண்டில் முதல் மாற்றத்திற்கு ஏராளமான ஆதாரங்கள் சோதனைச்சாலை ஆய்வுகளிலேயே காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பல சமயங்களில் படைப்புவாதிகளாலேயே மறுக்க முடிவதில்லை. உதாரணமாக, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் ஆர் கிராண்ட் அவர்கள் கால் போகாஸ் தீவுகளில் ஃபின்ச் என்ற பறவைகளை வைத்துச் செய்த ஆராய்ச்சி டார்வினின் இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை உறுதிசெய்கிறது. இரண்டாம் மாற்றத்திற்கு ஆதாரங்கள் தொல்லுயிர் எச்சங்களிலிருந்து (Fossil) பெறப்படுகின்றன. தொல்லுயிர் எச்சங்களின் டி.என்.ஏக்கள் (DNA) ஒப்பிடப்படுவ தன் மூலம் அவை எப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுள்ளன என்பது நிறுவப்படுகிறது. உதாரணமாக, 2004இல் கனடாவின் ஆர்க்டிக் பகுதியில் பாதிமீனும் பாதி நீர்நில உயிரியும் என இரண்டும் சேர்ந்த கலவையான ஒரு தொல்லுயிர் எச்சம் (Tiktaalik roseae) கிடைத்தது. அது மனிதர்கள் மற்றும் எல்லா நாற்கால் விலங்குகள் எப்படி மீனிலிருந்து பரிணாம வளர்ச்சிபெற்றன என்று விளக்கும் தொல்லுயிர் எச்ச உயிரியலாளர்களின் (Paleontologists) கோட்பாட்டிற்கு ஆதாரமாக விளங்குகிறது. அதே போன்று, ஐம்பது லட்சம் வருடங்களுக்கு முந்தைய மனித மூதாதையர்களுக்கும் (இவர்களது உருவங்கள் மனிதர்களை ஒத்திருந்தபோதிலும் இவர்கள் மனிதக் குரங்குகளுக்கு மிக நெருக்கமானவர்கள்) பத்து லட்சம் வருடங்களுக்கு முந்தைய மூதாதையர்களுக்கும் (உருவத்தில் இவர்கள் நவீன மனிதர்களுக்கு மிக நெருக்கமானவர்கள்) இடையே எப்படிப் படிப்படியாக மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதற்கு ஆதாரமாகப் பல தொல்லுயிர் எச்சங்கள் கிடைத்துள்ளன.
ஆனால் படைப்புவாதிகளை (Creationists), அறிவார்ந்த வடிவமைப்பு (Intelligent Design) என்னும் ‘‘கோட்பாட்டை’’ ஆதரிப்பவர்களை எவ்வளவு ஆதாரங்களும் எத்தகைய ஆதாரங்களும் மாற்ற முடியாது. தாங்கள் நம்புவதை எந்தக் கேள்விக்கும் உட்படுத்தாது கண்மூடித்தனமாக அவர்கள் நம்புவதே இதற்குக் காரணம். படைப்புவாதிகளுக்கும் ‘அறிவார்ந்த வடிவமைப்பு’க் கோட்பாட்டை ஆதரிப்பவர்களுக்கும் இடையே சில வேறுபாடுகள் உண்டு. பைபிளில் கூறப்படுவதைப் போன்று மனிதர்களும் மற்ற உயிரினங்களும் இன்றிருப்பதைப் போலவே என்றென்றும் இருந்தார்கள் என்று வாதிடுபவர்கள் படைப்புவாதிகள். இவர்கள் அறிவியலுக்கு மாற்றாக இது கல்விச்சாலைகளில் போதிக்கப்பட வேண்டும் என்று கோரி ஏறக் குறைய கடந்த நூறு ஆண்டுகளாகப் போராடிவருபவர்கள். ஆனால் அமெரிக்க நீதிமன்றங்களில் இவர்களது வாதங்கள் என்றுமே எடுபட்டதில்லை. ஆகவே தங்களது வாதங்களை மேலும் நுட்பமானதாக்கி வலிமையானதாக மாற்ற இவர்கள் செய்த முயற்சியே ‘‘அறிவார்ந்த வடிவமைப்பு’’ என்ற வாதம். (இதே போன்றதொரு வாதம் ஆர்க்டியா கான் வில்லியம் பாலே (Archdeacon William Paley) என்பவரால் 1700களின் இறுதியில் வைக்கப்பட்டது. இவரது இறையியல் கருத்துகள் கேம்பிரிட்ஜ் பல்கலைப் பாடத்திட்டத்தில் இருந்தமையால் அவற்றை டார்வின் நன்கு படித்திருந்தார்.) இவர்கள் பரிணாமக் கோட்பாட்டை ஏற்கிறார்கள். இப்பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என்பதையும் ஏற்கிறார்கள். ஆனால் இவ்வளவு சிக்கலான உயிரியல் அமைப்பு முறை காலப் போக்கில் இயல்பாக உருவாகியிருக்க முடியாது, மாறாக அதன் பின்னணியில் ஓர் அறிவார்ந்த வடிவமைப்பு செயல்பட்டிருக்க வேண்டுமென்பதே இவர்களது வாதம். நேரடியாகச் சொன்னால் கடவுள், நுட்பமான மொழியில் சொன்னால் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருந்திருக்க வேண்டும். இதற்கு என்ன ஆதாரம்? ஒரு சாதாரணக் கடிகாரத்தை உருவாக்கக்கூட ஒரு வடிவமைப்பாளர் தேவை. அப்படியிருக்கக் கண் போன்ற மிகச் சிக்கலான உறுப்பு எப்படித் தானாக உருவாகியிருக்க முடியும்? ஆகவே ஓர் அறிவார்ந்த வடிவமைப்பாளர் இதன் பின்னணியில் இருக்க வேண்டும்.
இதை முட்டாள்தனமான வாதம் என்கிறார்கள் உயிரியலாளர்கள். திடீர் மரபியல் மாற்றத்தின் (Mutation) விளைவாக ஒளியை உணரக்கூடிய செல்கள் ஆதிகால உயிரினங்களில் உண்டாகியிருக்க வேண்டும். அதன் மூலம் இரவையும் பகலையும் பிரித்தறியும் ஆற்றலை ஆதிகால உயிரினங்கள் பெற்றிருக்க வேண்டும். மற்றொரு மரபியல் மாற்றத்தின் விளைவாக இந்த செல்கள் குழித்தன்மையைப் (concave) பெற்று ஒளி மற்றும் நிழல் வரும் திசையை உணரக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். தங்களை வேட்டையாடும் மிருகங்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள இது அவசியம். ஆகவே அடுத்தடுத்த தலைமுறைகளில் இந்த உறுப்பு செழுமையடைந்திருக்க வேண்டுமென்பதுதான் உயிரியலாளர்களின் பதில். பரிணாம வளர்ச்சியில் திடீரென ஏற்படும் மரபியல் மாற்றத்தின் பங்கு மிக முக்கியமானது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. தங்கள் மூதாதையர்களான படைப்புவாதிகளின் அடுத்தகட்ட வளர்ச்சியே அறிவார்ந்த வடிவமைப்பு. இது நுட்பமான ஒன்றாகத் தோன்றினாலும் இதுவும் மதத்தில் ஆழமாக வேர்கொண்ட சிந்தனையே. இதன் காரணமாகவே இவர்களது வாதமும் அமெரிக்க நீதிமன்றங்களில் இதுவரை எடுபடவில்லை.
இத்தகையவர்கள் நம் இந்தியாவில் மிக அதிகம். ஆனால் ஒரு வித்தியாசம், அவர்கள் இந்து மதமும் அதன் புராண இதிகாசங்களும் கூறுவதை அப்படியே ஏற்கிறவர்கள். ஒரு நல்ல உதாரணம், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ. அவர் தொடர்ந்து எழுதிவரும் இந்து மஹா சமுத்திரம் அவர் ஒரு கண்மூடித்தனமான மத நம்பிக்கையாளர் என்பதைக் காட்டுகிறது. இத்தகைய ஆதாரமற்ற நம்பிக்கைகள் தனிநபர் விவகாரமாக இருக்கிறவரை எந்தப் பிரச்சினையும் எழுவதில்லை. ஒருவர் அவர் விரும்புவதைக் கேள்விக்குட்படுத்தாது நம்புவதோ ஏற்பதோ அவரது உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. அதைப் பிரச்சாரத்தின் மூலம் பரப்பும் உரிமையும் அவருக்கு உண்டு. ஆனால் அத்தகைய கருத்துகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அறிவியல் என்ற பெயரில் அல்லது அறிவியல் கோட்பாடுகளுக்கு மாற்றாக (Alternative) விளங்கும் கோட்பாடுகள் என்ற வகையில் கற்பிக்கப்பட வேண்டுமெனக் கோருகிறபோதுதான் பிரச்சினையே எழுகிறது. இவை மதக் கோட்பாடுகள் என்ற பாடத்திட்டத்தின் கீழ் அதை விரும்பும் மாணவர்களுக்குக் கற்பிப்பது என்பதை ஏற்க முடியும். ஆனால் அறிவியல் வகுப்புகளில் அறிவியலுக்கு இணையாக அல்லது மாற்றாக, போதிப்பது என்பதை ஒருபோதும் ஏற்க இயலாது. 2001இல் பாஜக அரசாங்கம் வேத ஜோதிடத்தைப் பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பாக அறிமுகப்படுத்தியது. ஜோதிடம் ஓர் அறிவியலோ அல்லது எதிர் காலத்தைக் கணிக்கும் வல்லமை பெற்றதோ அல்ல. இவ்வுண்மை ஏராளமான ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டிருக்கின்றன. ஆனால் பாஜக அரசு அதைச் சற்றேறக் குறைய அறிவியல் என்பதாகவும் அதன் மூலம் எதிர் காலத்தைப் பெருமளவு கணிக்க முடியும் என்பதாகவும் கூறி அறிமுகப்படுத்தியது. இதற்குச் சாதகமாக உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு அறிவியல் பார்வையோ அல்லது அறிவியலைப் பற்றிய அடிப்படை அறிவோகூட இல்லாதவர்கள் நீதிபதிகளாக இருப்பதையே காட்டுகிறது. அது மட்டுமல்ல, இதே போன்ற விவகாரமான படைப்பு வாதம் சம்பந்தமான வழக்கில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி பார்க்கிறபோது இத்தீர்ப்பு மதச்சார்பின்மைக்கு முரணானது.
2005இல் Pew Research Centre என்கிற அமைப்பால் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப் பின்படி மனிதர்களும் மற்ற உயிரினங்களும் இன்று இருந்ததைப் போலவே என்றென்றும் இருந்து வருகிறார்கள் என நம்புகிறவர்கள் 42%, பரிணாம வளர்ச்சியின்படி என்று கூறியவர்கள் 26%, அறிவார்ந்த வடிவமைப்பின்படி என்றவர்கள் 18%, தெரியாது என்றவர்கள் 14%. 2004ஆம் ஆண்டு Gallup நடத்திய கருத்துக்கணிப்பின்படி உலகம் இன்றிருப்பதைப் போலவே கடவுளால் படைக்கப்பட்டது என்று கூறியவர்கள் 45%, கடவுளால் வழி நடத்தப்பட்ட பரிணாமக் கோட்பாட்டின்படி உலகம் உருவானது என்றவர்கள் 38%, பரிணாமக் கோட்பாட்டின்படி மட்டுமே இதில் கடவுளுக்கு எந்தப் பங்கும் இல்லையென்றவர்கள் வெறும் 13%. இதே கருத்துக்கணிப்பை Gallup 1982 இலிருந்து பலமுறை நடத்தியிருக்கிறது. இந்தச் சதவிகிதங்களில் அநேகமாக மாறுதலே இல்லை. அரசாங்கம் நடத்தும் பள்ளிகளின் பாடத்திட்டங்களில் படைப்புவாதம் (Creationism) பரிணாமக் கோட்பாட்டுடன் சேர்த்துப் போதிக்கப்பட வேண்டுமா என்னும் கேள்விக்கு 68% பேர் ‘ஆம்’ என்றும், பரிணாமக் கோட்பாட்டை நீக்கிவிட்டு வெறும் படைப்புவாதம் மட்டும் போதிக்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு 40% பேர் ‘ஆம்’ என்றும் பதிலளித்திருந்தனர். இரண்டுமே போதிக்கப்பட வேண்டுமா என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ஏதோ தன்னை ஒரு மாபெரும் சுதந்திரச் சிந்தனையாளராகப் பாவித்துக்கொண்டு ‘‘வேறுபட்ட கருத்துகள் மக்கள் முன் வைக்கப்பட வேண்டுமா என்று கேட்கிறீர்கள். என்னுடைய பதில், ஆம்’’ என்றார் அமெரிக்க ஜனாதிபதி புஷ். தீவிரவாதிகள் என்னும் சந்தேகத்தின் பேரில் குவாண்டனாமோ ஃபே சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களுக்குத் தங்கள் தரப்பை வாதிடுவதற்கான வாய்ப்பைக்கூட மறுத்தவர் இவர். அறிவியல் துறையில் ஏராளமான சர்ச்சைகள் இருக்கின்றன. அவை தீவிரமாக வகுப்பறைகளிலும் அறிவியல் மாநாடுகளிலும் விவாதிக்கப்படுகின்றன. உதாரணமாக பரிணாமக் கோட்பாட்டிலேயே ஏராளமான சர்ச்சைகள் இருக்கின்றன. அவை தீவிரமாக விவாதிக்கவும்படுகின்றன. அறிவார்ந்த வடிவமைப்பு வாதம் அத்தகைய ஓர் அறிவியல் சர்ச்சையல்ல. எந்த ஆதாரமும் அற்ற ‘‘கோட்பாட்டை’’ப் போதிப்பது மற்றும் விவாதிப்பது என்னும் பெயரில் அறிவியல் வகுப்புகளின் நேரம் வீணாக்கப்படுவதை ஏற்க முடியாது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகிலேயே அதிகபட்ச முன்னேற்றம் கண்டிருக்கும் நாடான அமெரிக்காவில் நிலைமை இப்படி. இதற்கான அரசியல் மற்றும் வரலாற்றுரீதியான காரணங்கள் இருக்கவே செய்கின்றன. அமெரிக்கச் சமூகத்தை ஓர் அடிப்படைவாத சமூகம் என்றே நோம் சோம்ஸ்கி கருதுகிறார். ஈரான் போன்ற ஒரு நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இருக்கும் மிக முக்கிய வித்தியாசம் ஈரானில் அடிப்படைவாதம் நிறுவனமயமாகி இருப்பதும் அமெரிக்காவில் அப்படி ஆகாதிருப்பதும்தான் என்கிறார் சோம்ஸ்கி. அரசியல் சாசனத்தின்படி அமெரிக்கா ஒரு மதச்சார்பற்ற நாடு. இத்தகைய ஒரு சமூகத்தில் பரிணாமக் கோட்பாட்டிற்கு எதிராக அமெரிக்காவில் ஒரு பெரும் இயக்கமே எழுந்ததில் ஆச்சரியம் இருக்க முடியாது. இந்தியாவில் இப்படி ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினால் நிலைமை இன்னும் மோசமாக இருப்பது வெளிப்படக்கூடும்.
20ஆம் நூற்றாண்டின் முதல் சில பத்தாண்டுகளில் அமெரிக்காவின் பல மாநிலங்கள் பரிணாமக் கோட்பாடு பள்ளிகளில் போதிக்கப்படுவதைத் தடைசெய்திருந்தன. பைபிளில் கூறப்படுவதை மறுக்கும் எதுவும் போதிக்கப்படக் கூடாது என்பதன் அடிப்படையில் இத்தகைய சட்டத்தைப் பல மாநிலங்களின் காங்கிரசுகள் (சட்டப் பேரவைகள்) நிறைவேற்றியிருந்தன. டென்னிஸி மாநிலத்தின் பிரதி நிதிகள் அவையில் 1925 ஜனவரி 21இல் ஜான் பட்லர் என்பவரால் கொண்டுவரப்பட்ட மசோதா, பைபிளில் கூறப்பட்டபடி மனிதனை ஆண்டவன்தான் படைத்தார் என்பதை மறுத்துக் கீழ்நிலை விலங்குகளிலிருந்து படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்றவன் மனிதன் என்கிற கோட்பாட்டைப் பள்ளிகளில் போதிப்பதைச் சட்டப்படி தடைசெய்தது. இம்மசோதா ஜனவரி 27இல் பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியது. பின்னர் மாநில செனட் அவையில் நிறைவேற்றப்பட்டு மார்ச் 21 அன்று மாநில ஆளுநரின் கையொப்பத்துடன் சட்டமானது. பரிணாமக் கோட்பாட்டைத் தடைசெய்து அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட முதல் சட்டம் இதுவே. இச்சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவின் முற்போக்குச் சிந்தனையாளர்கள் திரண்டனர். இச்சட்டத்தை மீறும் ஆசிரியருக்கு ஆதரவாக வாதாடுவதாக அமெரிக்கக் குடியியல் உரிமைக் கழகம் (American Civil Liberties Union) அறிவித்தது. டென்னிஸி மாநிலத்தின் டேடன் நகரைச் சேர்ந்த ஜான் தாமஸ் ஸ்கோப்ஸ் என்ற ஆசிரியர் இதற்கு இசைந்தார். இவ்வழக்கின் மூலம் இச்சட்டத்தை அமெரிக்க அரசியல் சாசனச் சட்டத்திற்கு எதிரானது என நீதிமன்றத்தை அறிவிக்கச் செய்வதே இதன் நோக்கம். இந்த வழக்கு ‘குரங்கு வழக்கு’ (Monkey Trial) என வரலாற்றில் புகழ்பெற்றது. ஆனால் ACLUவின் நோக்கம் அவ்வழக்கில் நிறைவேறவில்லை. ஸ்கோப்ஸுக்கு 100 டாலர் அபராதம் விதிக்கப்பட்டதுடன் வழக்கு முடிவடைந்தது. ஸ்கோப்ஸுக்காக வாதாடிய அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற வழக்கறிஞர் கிளாரன்ஸ் டேரோ எதிர்பார்த்ததுபோல் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குப் போகவேயில்லை. அதற்கு, அடுத்த 43 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1968இல் நடந்த Epperson vs Arkansas வழக்கில் பரிணாமக் கோட்பாட்டைத் தடைசெய்திருந்த ஆர்கன்சாஸ் மாநிலத்தின் சட்டத்தை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசியல் சாசனத்திற்குக் கொண்டுவரப்பட்ட முதல் திருத்தத்தின்படி அரசுக்கும் மதத்திற்குமான உறவு முற்றிலும் பிரிக்கப்பட்டது. அதன்படி ஆர்கன்சாஸ் மாநிலத்தின் சட்டம் படைப்புவாதத்தை அரசாங்கப் பள்ளிகளில் போதிக்கச் சொல்வதாலும் அது கிறித்துவ மதத்திற்குச் சாதகமாக இருப்பதாலும் அது அரசியல் சாசனத்தின் முதல் திருத்தத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன் பிறகு நடந்த இது போன்ற பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் இதே தீர்ப்பை வழங்கியது. கடைசியாகத் தீர்ப்பு வந்தது 2005இல் நடந்த Kitzmiller, et al. vs Dover Area School District என்னும் வழக்கில்தான். இதிலும் அறிவார்ந்த வடிவமைப்பு என்ற ‘‘கோட்பாட்டை’’ப் போதிப்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும் இவர்கள் தங்கள் விடா முயற்சியைக் கைவிடவில்லை. அமெரிக்காவில் இருக்கும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரும் இவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்கள். ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் தங்களது வேதப் படைப்புவாதத்தைப் (Vedic creationism) பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அறிவார்ந்த வடிவமைப்பு வாதத்தைப் பள்ளிகளில் போதிப்பதற்கு வசதியாக ஒரு சட்டத்தை, மிகச் சமீபத்தில், லூசியானா மாநிலத்தின் ஆளுநர் பாபி ஜிண்டால் (இவருடைய பெற்றோர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், பின்னர் அமெரிக்காவில் குடியேறியவர்கள். ஜிண்டால் தனது பதின்வயதில் கத்தோலிக்கக் கிறித்துவராக மதம் மாறியவர்) கையொப்பத்துடன் 2008 ஜூன் 26இல் சட்டமானது. லூசியான மாநிலம் படைப்புவாதிகளின் கோட்டைகளுள் ஒன்று. இதே மாநிலம் 1980களில் கொண்டுவந்த Creationism Act என்ற சட்டத்தை உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனத்திற்கு முரணானது எனத் தீர்ப்பளித்தது. இக்காலகட்டத்தில் லூசியானாவையும் சேர்த்து 27 மாநிலங்களில் இத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டது. படைப்புவாதிகளின் ஆதரவாளரான ஜிண்டால் இம்முறை கொண்டுவந்துள்ள சட்டமான Louisiana Science Education Act மிகப் புத்திசாலித்தனமாகக் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம். சற்றேறக்குறைய நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த Tamil Nadu Prohibition of Forcible Conversion of Religion (TNPFCR) Act, 2002 போன்றது (பின்னர் இச்சட்டம் ஜெயலலிதாவாலேயே திரும்பப் பெறப்பட்டது). சாதாரணமாகப் பார்த்தால் அதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தோன்றாது. ஆனால் அது கொண்டுவரப்பட்ட பின்னணியை வைத்துப் பார்த்தால்தான் அதன் எதிர்மறைத் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும்.
அமெரிக்காவில் படைப்புவாதிகளின் செல்வாக்கு அசாதாரணமானது. தீவிரக் கிறித்துவ நம்பிக்கையாளர்களின் (Evangelical Christians) வாக்குகளைப் பெறுவதற்காக ஜான் மெக்கைனும் பாரக் ஒபாமாவும் போட்டி போட்டதைக் கோடீஸ்வரரும் மத போதகருமான ரிக் வாரென் நடத்திய கேள்வி - பதில் நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. மத விவகாரங்கள் உட்படப் பல விஷயங்களில் மெக்கைனோடு ஒப்பிடுகிறபோது ஒபாமா முற்போக்கானவர். ஆனால் வாக்குகளுக்காகச் சமரசம் செய்துகொண்டவர். அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் ஜனாதி பதியாக வாய்ப்புண்டு. ஆனால் ஒரு நாத்திகர் ஜனாதிபதியாக ஆகவே முடியாது என்று கூறப்படுவதில் உண்மை இருக்கிறது.
டார்வினின் தாயகமான பிரிட்டனின் நிலைமையும் அவ்வளவு சிறப்பாக இல்லை. அமெரிக்காவைப் போன்று பிரிட்டன் அரசு ஒரு மதச்சார்பற்ற அரசு அல்ல. சர்ச்சுக்கும் அரசுக்கும் இடையில் எந்த உறவும் இருக்கக் கூடாது என்று கோரும் குரல்கள் பிரிட்டனில் எழ ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவில் இருப்பதைப் போன்ற செல்வாக்கு பிரிட்டனில் படைப்புவாதத்திற்கு இல்லை என்றாலும் சமீபத்திய கருத்துக்கணிப்புகள் அறிவியலாளர்களுக்குப் பெரும் கவலையைத் தந்துள்ளன. பிரிட்டனில் 2008 டிசம்பரில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி (MORI poll) ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களில் 37% பேரும் அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களில் 29% பேரும் பரிணாமக் கோட்பாட்டுடன் படைப்புவாதத்தையும் கற்பிக்க ஆதரவு தெரிவித்திருந்தனர். இதைத் தேசிய அவமானம் என்றார் ரிச்சர்ட் டாக்கின்ஸ். ஆனால் மிகவும் ஆறுதல் தருகிற விஷயமாக, கான்டர்பஃர்ரி ஆர்ச்பிஷப்பான ரோவன் வில்லியம்ஸ் படைப்புவாதம் பள்ளிகளில் போதிக்கப்படுவதை எதிர்த்திருக்கிறார். பைபிளில் படைப்பைப் பற்றிக் கூறுவதை அறிவியல் கோட்பாடுகள் போன்றதொரு கோட்பாடாகக் கருதுவது, தொடர்பற்ற இரு கருத்தாக்கங்களைத் தொடர்புபடுத்துகிற தவறு (category mistake) என்றும் அவர் கூறியுள்ளார். அறிவியல் துறைப் பேராசிரியரான மைக்கல் ரீஸ், ‘‘அறிவியல் வகுப்பில் குழந்தைகள் படைப்புவாதம் பற்றிக் கேள்வி எழுப்பினால் ஆசிரியர்கள் அது குறித்து விவாதிக்க வேண்டும். படைப்புவாதத்தில் நம்பிக்கை கொண்டுள்ள குழந்தைகளையும் மதித்து நடத்த வேண்டும்’’ என்று ஒரு கூட்டத்தில் பேசுகிறபோது குறிப்பிட்டார். ஆனால் இது படைப்பு வாதத்தைப் போதிக்க வேண்டுமென அவர் கூறியதாகத் தவறாகச் செய்திகள் வெளியாகி அதன் காரணமாக ராயல் சொசைட்டியின் கல்வித் துறை இயக்குநராக வகித்துவந்த பதவியை அவர் இழக்க வேண்டியதாகிவிட்டது. அறிவியல் துறைப் பேராசிரியராக மட்டுமல்லாமல் அவர் ஒரு மதபோதகராகவும் இருந்தது அவரது பேச்சு திரிக்கப்பட்டு வெளியாவதற்குக் காரணமாகிவிட்டது.
டார்வினின் 200ஆம் பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஒட்டி சர்ச் ஆப் இங்கிலேண்ட் (Church of England) ‘‘நல்ல மதத்திற்கு நல்ல அறிவியல் தேவை’’ என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கலிலியோவின் வானியல் விஷயத்தில் சர்ச் தவறிழைத்து பின்னர் தன் தவறை உணர்ந்தது . . . அதே போன்ற தவறு சார்லஸ் டார்வின் விஷயத்திலும் நடந்தது . . . சார்லஸ் டார்வின், உங்களை நாங்கள் தவறாகப் புரிந்துகொண்டதற்காக உங்களது 200ஆம் பிறந்தநாளின் போது உங்களிடம் சர்ச் ஆப் இங்கிலேண்ட் மன்னிப்பு கோருகிறது’’ என்று கூறியுள்ளது. இத்தகைய ஓர் அறிக்கையை வெளியிடுவதில் ஆர்ச்பிஷப் ரோவன் வில்லியம்ஸின் பங்கு மிக முக்கியமானது.
மனித குலத்திற்கு மதம் ஆற்றியுள்ள பங்களிப்பு பற்றியும் மதத்திற்கும் அறிவியலுக்குமான உறவு பற்றியும் ஆய்வுகளும் விவாதங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ‘‘நாகரிகத்தின் தொடக்க காலத்தில் நாட்காட்டியை (calendar) உருவாக்குவதிலும் எகிப்து நாட்டைச் சேர்ந்த மதகுருமார்கள் கிரகணங்களைத் (eclipses) தொடர்ந்து கவனித்துக் குறித்து வைத்திருந்ததால் கிரகணங்கள் உண்டாவதை முன்கூட்டியே கணிக்க முடிந்தது என்ற இந்த இரு விஷயங்களைத் தவிர வேறெந்த நல்ல பங்களிப்பையும் மதம் செய்ததாக எனக்குத் தெரியவில்லை’’ என்று கணித மேதையும் தத்துவ ஞானியுமான பெட்ரண்ட் ரஸ்ஸல் குறிப்பிட்டார். ஆனால் இக்கருத்திலிருந்து இன்றைய சமூக அறிவியலாளர்கள் (ஸ்காட் அட்ரன் போன்றவர்கள்) பெரிதும் மாறுபடுகிறார்கள். மனித நாகரிக வளர்ச்சியில் மதம் ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பை இவர்கள் அங்கீகரிக்கிறார்கள். இது சரியான பார்வையும்கூட. மதம் என்பது வெறும் கொடுமைகளை மட்டுமே இழைத்த ஓர் அமைப்பல்ல. சமூகத்தில் மதத்தின் இருப்பிடமும் முக்கியத்துவமும் விரைவில் மறைந்துவிடாது என்றாலும் மெல்லக் குறைந்து வருவது உறுதி. மதத்தைப் பற்றிய பரிவான பார்வையைக் கொண்ட நாத்திகர்கள் கூட மதமும் அறிவியலும் ஒன்றுக் கொன்று உதவியாகவோ அல்லது முரண்படாமலோ இருக்க முடியும் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். மிகப் பெரும் அறிவியலாளரும் நாத்திகரும் இடதுசாரி சிந்தனையாளருமான ஸ்டீபென் ஜே கோல்ட் Non Overlapping Majesteria என்னும் கருத்தை முன்வைத்தபோது, அதாவது அறிவியல் உண்மைகளைப் பற்றி ஆராய்கிறது, மதம் மதிப்பீடுகளைப் பற்றி ஆராய்கிறது என்கிற கருத்தை முன்வைத்தபோது அதை அவரது சக இடதுசாரி அறிவியலாளர்களே ஏற்க மறுத்தனர். மார்க்சியத் தத்துவத்தில் ஆழ்ந்த பிடிப்புகொண்ட ஜே கோல்ட் இப்படிப்பட்ட தவறான கருத்தை முன்வைத்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இன்றைய காலகட்டத்தில் ஒரு சமூகத்தில் தார்மீக மதிப்பீடுகளையும் சமூக விழுமியங்களையும் மதச்சார்பற்ற நிறுவனங்களால் உருவாக்க முடியும். அப்படி உருவாவதுதான் நல்லது என்பதே உலகெங்கும் உள்ள முற்போக்காளர்களின் கருத்து.
மனித வாழ்வின் கருத்து மற்றும் சித்தாந்த தளத்தில் மதம் ஆற்றும் பங்கு ஈடு இணையற்றது. அதனால் தான், ‘‘மதம்மீதான விமர்சனம்தான்மற்ற எல்லா விமர்சனத்திற்குமான முன்தேவை’’ என்றார் கார்ல் மார்க்ஸ். ‘‘நான் அறிவொளியின் (Enlightenment) குழந்தை. பகுத்தறிவற்ற நம்பிக்கை மிக ஆபத்தானது. பகுத்தறிவற்ற நம்பிக்கையைத் தவிர்ப்பதில் நான் கவனமாக இருக்க முயல்கிறேன்’’ என்கிறார் சோம்ஸ்கி. அமெரிக்கா போன்ற அறிவியல்-தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த ஒரு நாட்டில் படைப்புவாதம், அறிவார்ந்த வடிவமைப்பு போன்ற அடிப்படைவாதப் போக்கு வலுவாக இருப்பது அடிப்படைவாதத்தால் ஏற்படும் ஆபத்தைப் பல மடங்கு அதிகரிக்கிறது என்கிறார் சோம்ஸ்கி.
இத்தகைய அடிப்படைவாத இயக்கங்கள் வெற்றிபெறும் என்றால் என்ன நடக்கும்? ஒரு விளையாட்டான கற்பனைதான். சில, பல தலைமுறைகளுக்குப் பிறகு பகுத்தறிவுடன் சிந்திப்பவர்கள், அறிவியலாளர்கள் என யாருமே இருக்க மாட்டார்கள். பகுத்தறிவின்மையும் மூடநம்பிக்கைகளும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டு, மனித குலம் இதுவரை அடைந்த எல்லா முன்னேற்றங்களும் மறைந்து, ஒரு கற்காலச் சமூகமே உருவாகியிருக்கும். ஆனால் இயற்கைத் தேர்வின்படி பகுத்தறிவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படும் என்பதுதான் அறிவியல் உண்மை. ஆதாரபூர்வமான நம்பிக்கைகள் ஆதாரமற்ற நம்பிக்கைகளை வெற்றிகொள்ளும்.

இஸ்லாமா அல்லது மதசார்பற்ற மனிதநேயமா?

 

டாக்டர் காலித் சோஹைல்

Share
(குறிப்பு: இந்த பேச்சு மேற்கத்திய ஒன்டாரியோ, கனடா பல்கலைக்கழகத்தின் முஸ்லீம் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மார்ச் 9, 2011 விவாதத்தில் வழங்கப்பட்டது ஹம்சா ட்சோர்டிஸ் (Hamza Tzortzis) இங்கிலாந்தைச் சேர்ந்த முஸ்லீம் அறிஞர், மற்றும் டாக்டர் காலித் சோஹைல் இடையே நடந்தது)
பெரியோர்களே, தாய்மார்களே,
நான் இஸ்லாமிலிருந்து வெளியேறி மதசார்பற்ற மனிதநேயத்தை அடைந்த என் பயணத்தின் சிறப்பு பகுதிகள் மற்றும் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மேற்கத்திய ஒன்டாரியோ பல்கலைக்கழகத்தில் என்னை அழைத்த முஸ்லீம் மாணவர்கள் சங்கத்துக்கு முதலில் நன்றி செலுத்துகிறேன். தசாப்தங்களாக நான் இந்த உலகில் எத்தனை ஜோடி கண்களை கொண்ட மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை உண்மைகள் உள்ளன என்று படிப்படியாக உணர்ந்த நிலைக்கு வந்தேன். எனவே இன்று நான் உண்மையென உணர்ந்ததை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அதே போல உங்கள் சொந்த உண்மையை உணர்ந்து அவற்றை பகிரங்கமாக பகிர்ந்துகொள்ள உங்களை ஊக்குவிப்பேன் என்று நம்புகிறேன். என் கதை, தனிப்பட்ட தத்துவார்த்த மற்றும் அரசியல் பரிமாணங்களை கொண்டிருக்கும்.
பல மதநம்பிக்கைகளை கொண்ட, பல கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவை 1947 ஆம் ஆண்டு பிரித்து உருவான பெரும்பான்மை முஸ்லீம் நாடான பாகிஸ்தானில் நான் பிறந்து வளர்ந்தேன் என்பதை நீங்கள் தெரிந்திருக்க கூடும். அந்த சூழலில் வளர்ந்த நான், இந்துக்கள் அல்லது சீக்கியர்கள், புத்தமதத்தினர் அல்லது பார்சிகளை சந்தித்ததே இல்லை. ஆகவே என் கதை முஸ்லீம் நாடுகளில் பிறந்து வளரக்கூடிய மில்லியன் கணக்கான குழந்தைகள் கதைகளை போலவே இருக்கும். இப்போது திரும்பி பார்க்கையில், நான் ஒரு மத குடும்பம், சமூக மற்றும் கலாச்சார, சமூக, மத மற்றும் கலாச்சார சூழ்நிலை நமது மூளையை எப்படி மாற்றும் என்று அறிந்துகொள்ள முடிகிறது. எவ்வாறு மற்ற முஸ்லீம்கள் வானத்திலிருக்கும் ஒரு இறைவன், புனித நூல், தீர்க்கதரிசிகள் மற்றும் மரணத்துக்கு பின்னான வாழ்க்கை ஆகியவற்றை ஏற்றுகொள்கிறார்களோஅதே போல நானும் ஏற்றுகொண்டு முஸ்லீமாக ஆனேன்.
ஒரு இளம்பருவத்தில் நான் அற்புதங்களை நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் அறிவியல் மற்றும் இய்றகை விதிகளை படித்த பின்னால், நான் எனது குருட்டு நம்பிக்கை மற்றும் மத மரபுகளை கேள்வி தொடங்கினேன்.
1965 ல் பாக்கிஸ்தான் இந்தியாவுடன் 17 நாள் நடத்திய போரின் போது, நான் என்னை சுற்றி விழும் குண்டுகளைப் பார்த்தேன்; தப்பிப்பதற்காக அகழிகளை தோண்டிகொண்டிருக்கும் மக்களைப் பார்த்தேன். பல மௌலானாக்கள், முஸ்லீம் மதகுருக்கள், ஆகியோர் நாம் புனிதப்போர் புரிந்துகொண்டிருக்கிறோம் என்றும் இந்துக்களுக்கு எதிராக ஜிகாத நடத்திகொண்டிருக்கிறோம் என்றும், அவர்கள் எதிரிகள் என்றும் அறிவித்தனர். அவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்ட நான், நானே ஒரு புனித போர்வீரன், ஒரு முஜாஹித், என்று கனவு காண ஆரம்பித்தேன்.
என்னுடைய இளம்பருவ வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது, அந்த காலத்தில் ..
நான், புனித போர்களில் நம்பிக்கை வைத்திருந்தேன்.
நான், அனைத்து முஸ்லிம் அல்லாவதர்களும் எனது எதிரிகள் என்று நம்பினேன்
நான், ஒரு புனித காரணத்துக்காக என் உயிரை கொடுக்க தயாராக இருந்தேன், மற்றும்
நான் கடவுளின் பெயரில் கொலை செய்ய தயாராக இருந்தேன்.
என் வாழ்க்கையின் அந்த பகுதியை நினைத்துப் பார்க்கும்போது வெட்கமாகவும் மற்றும் சங்கடமாகவும் இன்று உணர்கிறேன்.
இந்திய பிரிவினை பற்றிய பல கதைகள் எழுதிய சதத் ஹசன் மிண்டோ என்ற நன்கு மதிக்கப்படும் மனிதநேய எழுத்தாளரால் எழுதப்பட்ட பல கதைகள் ஒரு இளைஞனான என் தீவிரவாத மற்றும் அடிப்படைவாத கருத்துக்களுக்கு சவாலாக இருந்தன . அந்த கொலைகளை பற்றி அவரது கதைகளில் ஒன்றில், அவர், “200 பேர் கொல்லப்பட்டனர் என்னும் போது, ஏன் நீங்கள் 100 முஸ்லிம்கள் சுவனத்துக்கு போவார்கள் என்றும், 100 இந்துக்கள் நரகத்தில் எரித்து போவார்கள் என்றும் சொல்லுகிறீர்கள்? ஏன் நாம் 200 விலை மதிப்பற்ற மனித உயிர்களை இழந்துவிட்டோம் என்று சொல்வதில்லை?”, என்று எழுதினார். மிண்டோ அவர்கள் முஸ்லிம்கள், இந்துக்கள், கிரிஸ்துவர், யூதர்கள், பார்சிகள் அல்லது ஜொராஸ்டிரியர்கள் என்ற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு நாம் மனிதர்கள் என்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தினார்.
பாக்கிஸ்தானில் உள்ள அஹ்மதியாக்கள் முஸ்லிம்கள் அல்ல என்று அறிவிக்கபப்ட்டபோதும் அவர்களது நம்பிக்கைகளுக்காக அவர்கள் தண்டிக்கப்பட்ட போதும் மற்றும் துன்பப்பட்டபோதும் நான் மிகவும் மன உளைச்சலில் இருந்தேன், நான் ஒரு அஹ்மத்தியா குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல, ஆனால் என் நண்பர்கள் சில பேர் அஹ்மதியாக்கள். அவர்களின் வீட்டின் மீது மக்கள் குப்பைகளை எறிந்ததை பார்த்தது என்னை காயப்படுத்தியது. சில அடிப்படைவாத மாணவர்கள் கூட எங்களது அஹ்மதியா ஆசிரியர்களது வீடுகளை தீக்கிரையாக்கினார்கள். ஷியாக்களுக்கும் சன்னிகளுக்கும் இடையேயான உக்கிரமான விரோதத்தையும், தேவ்பந்திகளுக்கும் பரேல்விகளுக்கும் இடையேயான உக்கிரமான விரோதத்தையும் பார்த்தேன். கோபம், கசப்பு மற்றும் வன்முறை என்று அனைத்தையும் பார்த்துவிட்டு, இஸ்லாம் மீதே கசப்புடன் அதற்கு விடைகொடுக்க எண்ணினேன்.
நான் பகிரங்கமாக எனது கசப்பை பகிர்ந்துகொண்டபோது, சில முஸ்லீம் அறிஞர்கள், நான் இஸ்லாமை விட்டு வெளியேறும் முன்னர், குர்ஆன் மற்றும் இஸ்லாமிய வரலாற்றை படிக்க வேண்டும் என்றும், பிரச்னை இஸ்லாமில் இல்லை, முஸ்லீம்களிடம் தான் இருக்கிறது என்றும் பரிந்துரைத்தனர்
எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நான் தீவிரமாக முதல் வசனத்திலிருந்து கடைசி வசனம் வரைக்கும் குர்ஆனை படித்தேன். எனக்கு அரபு மொழி தெரியாததால், நான் பல மொழிபெயர்ப்புகளையும் குர்ஆன் பற்றிய விளக்கங்களையும் படித்தேன். குர் ஆனையும் இஸ்லாமையும் படிக்க படிக்க, எவ்வளவு முஸ்லீம்கள் இருக்கிறார்களோ அத்தனை இஸ்லாம்கள் இருக்கின்றன என்பதையும் எத்தனை முஸ்லீம் அறிஞர்கள் இருக்கிறார்களோ அத்தனை குரான் விளக்கங்கள் இருக்கின்றன என்பதையும் உணர்ந்துகொண்டேன். சில உதாரணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
முஸ்லீம் அறிஞர் அபுல் ஆலா மௌதூதி பரிணாமக் கோட்பாட்டை எதிர்க்கிறார், மற்றொரு முஸ்லீம் அறிஞர் அபுல் கலாம் ஆசாத் பரிணாமக்கோட்பாடுக்கு ஆதரவாக இருக்கிறார். nafs-UN-wahida என்ற வார்த்தையை பல முஸ்லீம் அறிஞர்கள் ஆதாம் என்று மொழிபெயர்க்கும்போது, ஆசாத் அதனை ஒருசெல் உயிரிகள் என்று மொழிபெயர்க்கிறார். அவற்றை அமீபாவாக கண்டு, பரிணாமவியல் கொள்கைகளுக்கும் குர் ஆனுக்கும் முரண்பாடு இல்லை என்று நிரூபிக்க முயல்கிறார். இதே போல, malaika என்ற வார்த்தையை பல முஸ்லீம் அறிஞர்கள் வானவர்கள் என்று மொழிபெயர்க்கும்போது, குலாம் அகமது பெர்வியாஜ் அவர்கள் இதனை இயற்கையின் விதிகள் என்று மொழிபெயர்க்கிறார். Reconstruction of Religious Thought in Islam என்ற தனது சொற்பொழிவுகளில் அல்லாமா மொஹம்மது இக்பால் அவர்கள் நரகத்தையும் சுவனத்தையும் ஒரு நிலைப்பாடுகள், அவை இடங்கள் அல்ல என்று கூறுகிறார். ஆதாம் ஏவாளின் கதையை ஆண் பெண்களின் கதை என்று கூறுகிறார். வெவ்வேறு மற்றும் முரண்பட்ட குர்ஆன் மொழிபெயர்ப்புகளையும் மற்றும் விளக்கங்களையும் படித்த பிறகு, ஒரு சிலர் நேரடி விளக்கங்கள், ஒரு சிலர் உருவகமான விளக்கங்கள் என்று அளிக்கும்போதும், நாம் அறிந்தது போல அரபி மொழியும் வாழும் மொழி என்பதால், சில நூற்றாண்டுகளிலேயே பெருத்தமாறுதலை அடைவதாலும்,
குர் ஆனுக்கு சரியான விளக்கத்தை அடையவே முடியாது என்ற நிலைப்பாடுக்கு வந்தேன். ஆகவே, குரான் என்பது நமது புராதன புராணக்கதைகளில் ஒன்றுதான், அது நமக்கு போதனை சொல்ல வந்த ஒரு கிராமிய இலக்கியம் என்பதையும் உணர்ந்துகொண்டேன்.
ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்க முனைந்த பல முஸ்லீம்கள், குர்ஆன் அடிப்படையில் சட்டங்களை உருவாக்க முயன்ற போது குரானுக்கான சரியான விளக்கம் அளிப்பது மிகவும் கடினமானது, சிக்கலானது என்பதை உணர்ந்தனர். அனைத்து முஸ்லிம்களும் ஒப்புக்கொண்ட எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ இஸ்லாமில் இல்லை என்பதால் முஸ்லீம் உலகில் பெரும் குழப்பமே நிலவுகிறது. எதிர்பாராதவிதமாக சூழ்நிலையாக சேறு போல் தெளிவாக உள்ளது எனலாம். திருமணம் மற்றும் விவாகரத்து, ஓரினச்சேர்க்கை, அடிமைகள், சிறுபான்மையினர் மற்றும் பல உள்நாட்டு மற்றும் குற்றவியல் விடயங்கள் தொடர்பாக வெவ்வேறு மாறான முரண்பட்ட இஸ்லாமிய சட்டங்கள் நம்பிக்கைகளை பல்வேறு முஸ்லீம் பிரிவுகள் கைக்கொண்டுள்ளன.
நான் இஸ்லாமிய வரலாற்றை படித்த போது நான் இஸ்லாமில் பல மரபுகள் உள்ளன என்று உணர்ந்தேன். அங்கு முஸ்லீம்கள் அறிவொளிமிக்க மக்களாக இருந்தனர் மற்றும் ராபியா பஸ்ரி, மன்சூர் ஹல்லாஜ் போன்ற சூஃபிகள் இருந்தனர். அவிசென்னா, ராஜி, கண்டி போன்ற தத்துவ மேதைகள் கிரேக்க தத்துவியலாளர்களை படித்து மொழிபெயர்த்துள்ளனர். ஆனால், படிப்படியாக அறிவொளி மிக்க இஸ்லாம் அடிப்படைவாதமாகவும், தீவிரவாத இஸ்லாமாகவும் ஆனது. முஸ்லீம்கள் வஹாபி, சலாபி பாரம்பரியங்களை பின்பற்ற துவங்கினர். பர்வேஸ் ஹூத்பய் தனது இஸ்லாமும் அறிவியலும் என்ற புத்தகத்தில் இந்த வார்த்தைகளை எழுதுகிறார்.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்லாமிய நாகரீகம் முற்றிலும் அறிவியல் திறனை இழந்தது. அப்போதிலிருந்து, ஓட்டோமேன் காலம் மற்றும் எகிப்தில் முகமது அலி காலத்தில் நட்ந்த சில முயற்சிகளை தவிர, அறிவியல் நோக்கத்தை மீட்க எந்த முயற்சிகளும் இல்லை. பல முஸ்லிம்கள் இந்த நிலையை ஒப்புக்கொண்டு இந்தற்கு ஆழ்ந்த வருத்தமும் தெரிவிக்கின்றனர். உண்மையில இஸ்லாம் நவீனமாகவேண்டும் என்று விரும்பும் பகுதியினரது முக்கிய வருத்தமே இதுவாகத்தான் உள்ளது. ஆனால் பெரும்பாலான பழமைவாதிகள் இதற்காக அக்கறையே படவில்லை. சொல்லபோனால், அறிவியலுக்கும் இஸ்லாமுக்கும் இடையேயான பிளவை விரும்புகின்றனர். இதன் மூலம் இஸ்லாத்தின் புனிதத்துவத்தை மதசார்பற்றவர்களிடம் தீய பாதிப்புகளிடமிருந்து காப்பாற்றலாம் என்று கருதுகின்றனர்

இஸ்லாமிய வரலாற்றை படித்துகொண்டிருந்தபோது, மதசார்பற்ற கருத்துக்களின் வரலாறு, ம்னிதநேய பாரம்பரியத்தின் வரலாறு ஆகியவற்றையும் படிக்க ஆர்வம் கொண்டவனாக் ஆனேன். இந்த பாரம்பரியங்கள் பிரபஞ்சத்தையும் மனித வாழ்க்கையையும் கடவுள் மதம் ஆகிய கருத்துக்கள் இல்லாமல் அணுக முயலும் பாரம்பரியங்கள். இந்த மதச்சார்பற்ற கருத்துக்களில் என்னை கவர்ந்தது சீனாவின் கன்பூஷியஸ், கிரீஸில் சோக்ரடீஸ், இந்தியாவின் புத்தர் ஆகியோர். இவர்களது போதனைகளின் மையக்கருத்துக்களை புத்தரது வாக்கியங்களில் பார்க்கலாம்.
ஞானவான் என்று சொல்லப்படுபவர் சொன்னார் என்பதால் எதையும் நம்ப வேண்டாம்.
பொதுவான நம்பிக்கை என்பதால் எதையும் நம்பவேண்டாம்.
புராதனமான புத்தகங்களில் சொல்லப்பட்டது என்பதால் எதையும் நம்பவேண்டாம்.
இறைவனின் வார்த்தை என்று சொல்லப்படுவதால் எதையும் நம்பவேண்டாம்.
மற்றவர்கள் நம்புகிறார்கள் என்பதால், எதையும் நம்பவேண்டாம்.
நீயே பரிசோதித்து நீயே நீதிபதியாக இருந்து உண்மை என்று உணர்ந்தால் மட்டுமே நம்பு.
ஒருவனது தனி அனுபவமே அவனுக்கு சிறந்த ஆசிரியர் என்று புத்தர் நம்புகிறார்.
சார்லஸ் டார்வின், சிக்மண்ட் பிராய்டு, கார்ல் மார்க்ஸ் மற்றும் ஜீன் பால் சார்த் போன்ற உயிரியல், உளவியல், சமூகவியல் மற்றும் இருத்தலியல்வாதிகளின் கண்டுபிடிப்புகள் கடவுள், தீர்க்கதரிசிகள் மற்றும் வேதங்களின் உதவி இல்லாமலேயே வாழ்க்கையை புரிந்து கொள்ளலாம் என்பதை எனக்கு உணர்த்தின
நாம் சமகால உலக அரசியலை ஆய்ந்தால், மனித குலம் 21ஆம் நூற்றாண்டில் ஒரு குறுக்குசாலையில் நிற்கிறது என்பதை உணர்கிறோம். 9 / 11 துயரத்துக்கு பின்னர், அனைவரும் நுணுக்கமாக முஸ்லீம் உலகத்தை பார்த்து வருகிறார்கள் . என்னுடைய கருத்தில், ஒரு பில்லியன் முஸ்லீம்கள் பின்வரும் மூன்று சாலைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்
1) அவர்கள் மத அடிப்படைவாத இஸ்லாமிய நாடுகளை உருவாக்கி, ஒசாமா பின் லேடன், ஆப்கானிஸ்தானின் முல்லா ஒமர், ஈரானி அயோத்துல்லா கொமேய்னி, ஒரு ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி சுல்பிக்கார் அலி பூட்டோவை தூக்கிலிட்ட ஜியா உல் ஹக் ஆகியோரை பின்பற்றலாம். பல முஸ்லீம் நாடுகளில் இஸ்லாமிய மயமாக்கலுக்கு முக்கிய காரணம், அவை அபுல் அலா மௌதூதி, அல்குவேதாவின் தத்துவாசிரியரான சையத் குதுப் போன்ற முஸ்லீம் அறிஞர்களின் “இஸ்லாமின் மீது யாரும் ஆதிக்கம் செலுத்தக்கூடாது, அது மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும். மற்றவர்கள் மீது கடுமையான சட்டங்களை விதித்து முழு உலகமும் இஸ்லாமிய மயமாக்க முனைய வேண்டும் ” போன்ற போதனைகள்.
2) நவீன அறிவியல், உளவியல் மற்றும் தத்துவம் படிக்க ஆதரவளிக்கும் குலாம் அகமது பெர்வியாஜ் போன்ற முஸ்லீம் அறிஞர்கள் போதனைகளை பின்பற்றி, முஸ்லீம் சோசலிச நலன்புரி மாநிலங்களை உருவாக்கலாம். அப்துல் சத்தர் எதி போன்ற சீர்திருத்த வாதிகள் கனவு காணும் முஸ்லீம் நலன்புரி நாடுகள் போன்று அமைக்க விரும்பலாம்.
3) நார்வெ, ஸ்வீடன் டென்மார்க், கனடா போன்ற மதச்சார்பற்ற நாடுகளை உருவாக்கி, மதத்துக்கும் அரசுக்கும் ஒரு சுவரை கட்டி மதம் ஒருவரது தனிப்பட்ட கருத்து என்பதை வலியுறுத்தி, அது சமூகத்திற்கு வரக்கூடாது, என்பதை நிலைநிறுத்து, மதச்சார்பற்ற மனிதநேயம் மிக்க அரசை உருவாக்கி எல்லா குடிமக்களும், பெண்களும் சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே என்பதை வலியுறுத்தி எல்லோருக்கும் சமமான உரிமைகளும் பொறுப்புக்களும் இருக்கின்றன என்பதை அடிப்படையாக கொண்ட அரசை உருவாக்கலாம்.
அறிவியல், தொழில்நுட்பம், தத்துவம், உளவியல் ஆகியவற்றின் முன்னேற்றங்களினால், உலகம் முழுவதும் மக்கள் மேன்மேலும் மதச்சார்பற்ற, மனிதநேய தத்துவங்களின் பின்னால் வந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நான் பார்க்கிறேன். எந்த விதமான மதத்தையும் பின்பற்றாதவர்களின் எண்ணிக்கை 1900இல் 1 சதவீதத்திலிருந்து 2000இல் 15சதவீதமாக உயர்ந்திருக்கிறது. கனடாவில் மட்டுமே 20 சதவீத மக்கள் தங்களை நாத்திகர்களாகவும், மதம் பற்றியோ கடவுளை பற்றியோ கவலைப்படாதவர்களாகவும் மனிதநேயர்களாகவும் பதிந்துகொண்டிருக்கிறார்கள். ஸ்காண்டிநேவிய நாடுகளில் 50 சதவீதத்துக்கும் மேலாக இந்த எண்ணிக்கை இருக்கிறது.
21 ஆம் நூற்றாண்டில் அடிப்படை கேள்வி. உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை மதரஸாக்களுக்கு அனுப்பி குரானையும் ஹதிஸ்களையும் படிக்க அனுப்பப்போகிறார்களா அல்லது நவீன அறிவியல், உளவியல் மற்றும் தத்துவம் படிக்க மதசார்பற்ற பள்ளிகளுக்கு அனுப்பபோகிறார்களா என்பதுதான். மனித குலத்தின் எதிர்காலத்துக்கு முக்கியமான விஷயம், மத்திய கிழக்கு முஸ்லீம்கள் அடிப்படைவாத, தீவிரவாத, வன்முறை மிகுந்த இஸ்லாமிய நாடுகளை உருவாக்கப்போகிறார்களா அல்லது மதசார்பற்ற, ஜனநாயக, மனித நேய நாடுகளை உருவாக்கப்போகிறார்களா என்பதுதான்.
நான் ஒரு மதசார்பற்ற மனிதநேயனாக இருப்பதால், அவர்கள் மதசார்பற்ற மனிதநேய வாழ்க்கை முறையையும் அரசியலையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்