ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

முகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்?


22
இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 54
முஸ்லீம்களுக்கு நான்கு பெண்கள் வரை முறைப்படி திருமணம் செய்து கொள்ளவும், மண உறவுக்கு அப்பாற்பட்டு விருப்பப்படி, வரம்பற்று அடிமைப் பெண்களுடன் உறவு கொள்ளவும் அனுமதி உண்டு என்பது அனேகருக்கு தெரிந்திருக்கும். ஆனால் முகம்மது எத்தனை பெண்களிடம் மண உறவு கொண்டார் என்பது தெரியுமா? தோராயமாக 31 பெண்கள்.

  1. கதீஜா,
  2. சவ்தா,
  3. ஆய்ஷா,
  4. ஆய்ஷாவின் அடிமைப் பெண்,
  5. உம்மு சலாமா,
  6. ஹஃப்ஸா,
  7. ஜைனப் பிந்த் ஜஹ்ஷ்,
  8. ஜுவைரியா,
  9. உம்மு ஹபீபா,
  10. ஷஃபியா,
  11. மைமூனா,
  12. ஃபாத்திமா,
  13. ஹிந்த்,
  14. ஸனா பிந்த் அஸ்மா,
  15. ஜைனப் பிந்த் கொஸாய்மா,
  16. ஹப்லா,
  17. அஸ்மா பிந்த் நோமன்,
  18. மரியா
  19. ரைஹானா பிந்த் ஸைத்
  20. உம்மு ஷரிக்,
  21. மைமூனா,
  22. ஸைனப்
  23. காவ்லா,
  24. முலைக்கா பிந்த் தாவூத்,
  25. அல் ஷன்பா பிந்த் அம்ர்,
  26. அல் அலிய்யா,
27 அம்ரா பிந்த் யாஸித்,
  1. பெயர் தெரியாத ஒரு பெண்,
  2. குதாய்லா,
  3. சனா பிந்த் சுப்யான்,
31 ஷரஃப் பிந்த் கலீஃபா

உலகிற்கே முன்மாதிரியாய் விளங்கும், ஆன்மீகத்தை போதிப்பதற்காக வந்த முகம்மது, இவ்வளவு பெண்களை ஏன் மணந்து கொள்ள வேண்டும்? இஸ்லாமிய மதவாதிகள் இதற்கு பல காரணங்களைக் கூறுகிறார்கள். அரசியல் காரணங்களுக்காகவும், இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகவும் அனாதைகளுக்கு வாழ்வளிக்கவுமே இத்தனை பெண்களை மனந்து கொண்டாரேயன்றி உடல் சுகத்துக்காக அல்ல என்று கூறுகிறார்கள். அதில் கொஞ்சமேனும் உண்மை இருக்கிறதா?

அரசியல் காரணங்கள் என்பதன் பொருள் என்ன? பகை கொண்டிருக்கும் இரண்டு அரச குடும்பங்களுக்கிடையில் திருமண உறவு ஏற்பட்டதன் மூலம் பகை மறந்து இணக்கமாயிருப்பது வரலாற்றில் சாதாரண நிகழ்வு. இப்படி ஏதாவது ஒரு நிகழ்வு முகம்மதின் வாழ்வில் நிகழ்ந்திருக்கிறதா? முகம்மதின் எந்த திருமணத்தின் மூலம் எந்த இரு குலங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டது விளக்கம் கூற முடியுமா மதவாதிகளால்?

இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக முகம்மதின் திருமணம் உதவியதா? மதவாதிகள் இப்படி கூறுவது இஸ்லாத்திற்கே முரணானது. ஏனென்றால், இஸ்லாமிய இறையியலின் படி முகம்மதின் பணி அல்லாவின் செய்தியைப் பரப்புவது தானே தவிர இஸ்லாத்தை விரிவடையச் செய்வதல்ல. இதற்கு முகம்மதின் வாழ்விலேயே ஒரு எடுத்துக்காட்டு இருக்கிறது. முகம்மதின் நெருங்கிய உறவினர் ஒருவர் மரணத்தருவாயில் இருக்கிறார். அவரை ஒரு முஸ்லீமாக மரணமடையச் செய்ய வேண்டும் என்று கடுமையாக முயற்சிக்கிறார் முகம்மது. ஆனால், முயற்சி பலிக்கவில்லை. அபோது அல்லா கூறுகிறான், ஒருவர் முஸ்லீமாக மாறுவதும் காஃபிராகவே இருந்து விடுவதும் என் விருப்பபடியே. உன் விருப்பபடி எதுவும் நடக்காது. உன் வேலை தூதுச் செய்தியை மனிதர்களிடம் எத்தி வைப்பது மட்டுமே என்றொரு வசனம் இறங்குகிறது. இஸ்லாத்தின் யதார்த்தம் இப்படி இருக்கையில் சிரமப்பட்டு திருமணங்கள் மூலம் இஸ்லாத்தை வளர்க்க வேண்டிய அவசியம் முகம்மதுவுக்கு இல்லையே.

அனாதைகளுக்கு வாழ்வளிக்கவா? இதைவிட அயோக்கியத்தனமான பதில் வேறொன்று இருக்க முடியாது. முகம்மது நடத்திய போர்களால் பல பெண்கள் அனாதைகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலரை முகம்மது மணந்திருக்கிறார். இதற்குப் பெயர் அனாதைகளுக்கு வாழ்வளிப்பது என்றால் அவர்களை அனாதைகளாக ஆக்கியதே முகம்மது தானே. போரில் கணவர்களை கொன்றுவிட்டு அவர்களின் மனைவியை மணப்பது அவர்களுக்கு வாழ்வளிப்பதற்கு என்றால், முகம்மதை இதைவிட வேறு யாரும் இவ்வளவு கேவலப்படுத்த முடியாது.

அரசியல் காரணங்களுக்காகவோ, இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகவோ, அனாதைகளுக்கு வாழ்வளிக்கவோ முகம்மது அத்தனை திருமணங்களைச் செய்யவில்லை என்றால் வேறு எதற்காக இந்த திருமணங்களைச் செய்தார்? பாலியல் வேட்கைக்காகத் தானே தவிர வேறு எதற்காகவும் இல்லை. இதை ஹதீஸ்கள், குரான் வசனங்கள் மூலமே நிரூபிக்க முடியும். இப்போது கீழ்க்காணும் சில ஹதீஸ்களைக் கவனியுங்கள்.

நபி அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள் என அனஸ் இப்னு மாலிக் கூறிய போது நான் அவரிடம், அதற்கு நபி அவர்கள் சக்தி பெறுவார்களா? என்று கேட்டதற்கு, அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் பேசிக் கொள்வோம் என அனஸ் கூறினார் என்று கதாதா கூறினார். புஹாரி 268

நபி அவர்கள் ஒரே இரவில் எல்லா மனைவியரிடமும் சென்று வருவார்கள். அன்று அவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர் என அனஸ் இப்னு மாலிக் கூறினார். புஹாரி 284

அல்லாவின் தூதர் கூறினார், ஜிப்ரீல் ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்ததை நான் ஆருந்தியதிலிருந்து எனக்கு நாற்பது ஆண்களின் பாலியல் பலம் கிடைத்துவிட்டது. இப்ன் சாத் எழுதிய “கிதாப் அல் தபக்கத் அல் கபீர்” பக்கம் 438,439

இந்த ஹதீஸ்கள் தெரிவிப்பது என்ன? ஒரே இரவில் ஒன்பதோ அல்லது பதினொன்றோ மனைவிகளுடன் முகம்மது வீடுகூடியிருக்கிறார் என்பதைத்தானே இவை தெரிவிக்கின்றன? மெய்யாகவே உடலியல் ரீதியாக அது அவருக்கு சாத்தியமா எனும் கேள்வியை ஒதுக்கி வைத்து விட்டாலும் இயல்பை மீறிய பாலியல் வேட்கை அவருக்கு இருந்திருக்கிறது என்பதே நமக்கு கிடைக்கும் செய்தி. அதைத்தான் மேற்கண்ட ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன.

முகம்மது மக்காவில் இருந்த காலம் வரை, அவரின் முதல் மனைவியான கதீஜா இறக்கும் வரை, ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகள் ஒரு திருமண பந்தத்தில் மட்டுமே – கதீஜாவுடன் மட்டுமே – வாழ்ந்திருக்கிறார். கதீஜா இறந்த சில மாதங்களுக்குப் பிறகு சவ்தா என்ற பெண்ணுடன் திருமணம். அதன் பின்னர் ஆய்ஷா. இவை தான் மக்காவில் நடந்த திருமணங்கள். இதன் பின்னர் மதீனாவில் அதிகாரம் கைகூடிய பின்னரோ இறப்பது வரை தோராயமாக ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று திருமணங்கள். சரி இப்போது இன்னொரு ஹதீஸைப் பார்ப்போம்.

.. .. .. நாங்கள் நபி அவர்களுடன் புறப்பட்டு அஷ்ஷவ்த் என்றழைக்கப்படும் தோட்டத்தை நோக்கி நடந்தோம் .. . .. அப்போது நபி அவர்கள் இங்கேயே அமர்ந்திருங்கள் என்று சொல்லிவிட்டு தோட்டத்திற்குள் சென்றார்கள். அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டு பேரீச்சத் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அப்பெண் உமைமா பிந்த் நுமான் இப்னி ஷராஹீல். அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். அப்பெண் இருந்த வீட்டினுள் நபி அவர்கள் நுழைந்து உன்னை எனக்கு அன்பளிப்புச் செய் என்று கூறினார்கள். அதற்கு அந்தப் பெண் ஓர் அரசி தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா? என்று கேட்டாள். அவளை அமைதிப்படுத்துவதற்காக  தங்களின் கரத்தை அவள் மீது வைக்கப் போனார்கள். உடனே அவள் உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன் என்று கூறினாள். அப்போது நபி அவர்கள் அவளை நோக்கி கண்ணியமானவனிடம் தான் நீ பாதுகாப்பு கோரியிருக்கிறாய் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள் .. .. .. புஹாரி 5255.

இந்த ஹதீஸ் என்ன கூறுகிறது? முகம்மதின் மனைவியர் பட்டியலில் இல்லாத இந்தப் பெண்னை பாலியல் நோக்கில் அணுகியிருக்கிறார் என்பதும், அந்தப் பெண் அதை மறுத்திருக்கிறாள் என்பதும் தெளிவாகிறது. ஒரே இரவில் எல்லா மனைவியர்களின் வீடுகளுக்கு சென்று வந்த பிறகும் கூட வேறொரு புதுப் பெண்ணிடம் கை நீட்டியிருக்கிறார் என்றால் இதை எப்படி புரிந்து கொள்வது? பாலியல் வேட்கை தவிர இதற்கு வேறெந்தக் காரணத்தையும் கூற முடியுமா? இதற்கு இஸ்லாமிய மதவாதிகள் அந்தப் பெண்ணுடன் முகம்மதுக்கு ஏற்கனவே திருமண ஒப்பந்தம் ஆகியிருந்தது என்று கூறுகிறார்கள். திருமண ஒப்பந்தம் ஆகியிருந்தது என்றால் ஏன் அந்தப் பெண் மறுக்கிறாள். அதுவும் தன்னை அரசியாகவும் முகம்மதை இடையராகவும் உவமைப்படுத்தி முகம்மதை கேவலப்படுத்துகிறாள் என்றால் எந்த அடிப்படையில் அது திருமண ஒப்பந்தம்?

முகம்மது இரண்டாவதாக மணம் புரிந்த ஸவ்தாவை அவள் வயது முதிர்ந்துவிட்டாள் என்பதற்காக விவாகரத்து செய்ய எண்ணுகிறார். உடனே ஸவ்தா என்னுடன் கழிக்கும் நாட்களை நான் உனக்கு விட்டுக் கொடுக்கிறேன். உனக்கு விருப்பப்பட்ட மனைவியுடன் அந்த நாளைக் கழித்துக் கொள்ளலாம் அதற்குப் பதிலாக என்னை விவாகரத்துசெய்ய வேண்டாம் உங்களுடைய மனைவி எனும் அந்தஸ்தில் இருக்க விரும்புகிறேன் என்று கேட்டுக் கொள்கிறாள். அதாவது, முகம்மதுவுக்கு பல மனைவிகள் இருந்தனர் என்பதால், ஒவ்வொரு மனைவியிடமும் இத்தனை நாள் தங்கியிருப்பது என்று முறை வைத்துக் கொண்டு தங்கியிருப்பது முகம்மதின் வழக்கம். இந்த அடிப்படையில் சவ்தா தன்னுடன் முகம்மது தங்கியிருக்கும் நாட்களை உனக்கு விருப்பமான மனைவியிடம் தங்கியிருப்பதற்காக எடுத்துக் கொள். அதற்குப் பதிலாக என்னை விவாகரத்து செய்யாமல் உன்னுடைய மனைவி எனும் அந்தஸ்திலேயே இருக்கச் செய் என்று கூறுகிறாள். இதை அங்கீகரித்து ஒரு குரான் வசனமும் இறங்குகிறது.

ஒரு பெண் தன் கணவனிடமிருந்து வெறுப்பையோ அல்லது புறக்கணிப்பையோ பயந்தால் அப்பொழுது அவ்விருவரும் தங்கள் இருவருக்கிடையே ஏதேனும் ஒரு சமாதனத்தை உண்டாக்கிக் கொள்வது அவ்வருவரின் மீதும்  குற்றமில்லை .. .. .. குரான் 4:128

இந்த ஸவ்தா வயதானவளாகவும் அழகற்றவளாகவும் இருந்தாள் என்பதே முகம்மது விவாகரத்து செய்ய எண்ணியதற்கான காரணம். இதில் முகம்மதை எந்த எண்ணம் உந்தியிருக்கும் என்பதை புரிந்து கொள்வது கடினமா என்ன?

ஜுவைரியாவை முகம்மது மணந்த கதையும் முகம்மதின் பாலியல் நாட்டத்தை நமக்கு தெரிவிக்கிறது. பனூ முஸ்தலிக் எனும் யூத குலத்தின் மீது திடீரென எந்த முன்னறிவிப்பும் இன்றி போர் தொடுக்கிறார் முகம்மது. அதில் முஸ்லீம்கள் வெற்றியடைகிறார்கள். பல்லாயிரம் கால்நடைகள் உட்பட பிடிபட்டவர்கள் அனைவரும் அடிமைகளாக்கப்படுகின்றனர். இந்தப் போரில் அடிமைகளாக பிடிபட்டவர்களில் ஃபாரா எனும் பெண்ணும் அடக்கம். இவள் அந்த யூத குலத்து தலைவனின் மகள், நடந்த போரில் இவள் கணவன் கொல்லப்பட்டு விட்டான். அடிமைகளைப் பங்கிடும் போது இவள் ஒரு குதிரை வீரனுக்கு ஒதுக்கப்படுகிறாள். ஆனால் ஒரு தலைவனின் மகளான தன்னை சாதாரண வீரனுக்கு அடிமையாக்கியது தகாது என எண்ண அவளை முகம்மது ஜுவைரியா என்று பெயர் மாற்றி மணந்து கொள்கிறார். மட்டுமல்லாது மதீனா திரும்பும் வழியிலேயே அவர்களுக்குள் உறவும் நடக்கிறது. இந்த விபரங்கள் புஹாரி நூல் 46 எண் 717 ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு பெண், அவள் கணவன் போரில் கொல்லப்பட்ட அதே நாளில் அல்லது மறு நாளில் திருமணம் செய்து உறவும் கொள்ளுதல் என்பது அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு கொடூரமான அனுபவமாக இருக்கும். இந்த நிகழ்வில் முகம்மதுவிடம் வெளிப்பட்டது என்னவிதமான மனோநிலை? காமத்தைதவிர வேறு ஏதாவது இதை உந்தியிருக்குமா?

இதோபோல் ஷஃபியாவுடனான திருமண நிகழ்வும் முகம்மதின் பாலியல் வேட்கையை வெளிப்படுத்துகிறது. கைபர் போரில் பெரிய அளவில் போர் புரியாமலேயே எளிதில் பனூ நதீர் எனும் யூத குல மக்கள் முகம்மதின் கைகளில் விழுகிறார்கள். இந்த யூத குழுவின் தலைவனான கினானா இப்ன் அல் ரபீ பனூ நதீர் குலத்தின் கருவூலத்தை காண்பிக்கும்படி சித்திரவதை செய்யப்படுகிறான். இந்த சித்திரவதை தாங்காமல் கினானா இறந்தும் விடுகிறான். இந்த கினானாவுடைய மனைவி தான் ஷஃபியா. வழக்கம் போல அடிமைகள் பகிர்ந்தளிப்பில் ஷஃபியா திஹ்யா என்பவருக்கு ஒதுக்கப்படுகிறாள். ஆனால் ஷஃபியா குறித்து முகம்மதின் சீடர்கள் முகம்மதிடம் விபரம் தெரிவிக்க அவர்களை அழைத்து வருமாறு பணிக்கிறார் முகம்மது. திஹ்யா, ஷஃபியா, கினானாவின் சகோதரி ஆகியோரை போர்க்களத்தினூடே அழைத்து வருகிறார். தனக்கு வேண்டியவர்கள் எல்லாம் கொல்லப்பட்டு வீழ்ந்து கிடக்க அதனிடையே அழைத்து வரப்படும் கினானாவின் சகோதரி வாய்விட்டு கதறி அழுகிறார், ஷஃபியாவோ அழவும் திராணியற்றி வெறித்துப் பார்த்தவாறு வருகிறார். அழும் இந்த ஷைத்தானை வெளியேற்றுங்கள் என்று தன் அடிமை பிலாலுக்கு உத்திரவிட்டுவிட்டு ஷஃபியாவை தன் மனைவியாக அறிவிக்கிறார். இந்த நிகழ்வில் யூத முஸ்லீம் சமூக நல்லிணக்கம் பொங்கி வழிகிறதா? அல்லது காமமா?

முகம்மது அரசியல் காரணங்களுக்காகத் தான் பல திருமணங்களை செய்து கொண்டார் என்பது இன்று அது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட பின் இஸ்லாமிய பரப்புரையாளர்கள் செய்யும் சப்பைக்கட்டு. என்ன காரணங்கள் கூறப்பட்டாலும் காமமே அதில் மிகைத்திருந்தது என்பது உறுதி. இதை கீழ்காணும் குரான் வசனங்கள் உறுதி செய்கிறது.

இது மற்ற மூஃமீன்களுக்கன்றி உமக்கே. அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம். உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே .. .. .. குரான் 33:50

ஏனைவர்களுக்கு நான்கு திருமணத்திற்கு மேல் கூடாது என்று வரம்பு விதித்திருந்தாலும் நிர்ப்பந்தம் ஏதும் ஏற்பட்டு விடாதிருக்கும் பொருட்டு நான்கு எனும் வரம்பு முகம்மதுக்கு இல்லை என்று விதி விலக்களிக்கிறது இந்த வசனம். அப்படி என்ன நிர்ப்பந்தம் முகம்மதுக்கு இருந்தது? அரசியல் நிர்ப்பந்தமா? இஸ்லாத்தை வளர்த்தெடுக்க வேண்டுமே எனும் கவலையா? தாம் மணம் முடிக்காவிட்டால் அவர்கள் அனாதைகளாகவே இருந்துவிட நேருமே எனும் பதைபதைப்பா? என்ன நிர்ப்பந்தம் இருந்தது முகம்மதுக்கு? நாற்பது ஆண்களின் பலம் முகம்மதுவுக்கு இருந்தது என்பதை பொருத்திப் பார்த்தால் அவருக்கு ஒரே ஒரு நிர்ப்பந்தம் மட்டுமே இருந்திருக்க முடியும். இன்னோரு குரான் வசனத்தை பார்ப்போம்.

இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆக மாட்டார்கள். இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும். அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே – ஹாலால் இல்லை – மேலும் அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். குரான் 33:52

இதில் கவனிக்க வேண்டிய ஒரு வாக்கியம் “அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே” என்பது. ஆக முகம்மதின் திருமணங்களில் அவர்களின் அழகு முகம்மதை கவர்வது முக்கியமான அம்சமாக இருந்திருக்கிறது என்பது இந்த வசனத்தின் மூலம் உறுதியாகிறது. இதற்கு வெளியே மதவாதிகள் என்ன வியாக்கியானங்களை, சப்பைக்கட்டுகளைக் கூறினாலும் அது குரானுக்கு முரணான கருத்தாகவே இருக்கும். இதன் மூலம் முகம்மதின் திருமணங்களில் காமமே மிகுந்து இருந்திருக்கிறது. அதுவும் சராசரி மனிதனுக்கு இருப்பதைவிட வெகு தூக்கலாய். இது தான் ஒரு யுக முன் மாதிரி மனிதனுக்கான தகுதியா?

முகம்மதும் ஆய்ஷாவும்


child marriage
இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 55
முகம்மது புரிந்த மூன்றாவது திருமணம் விவகாரமானதும், இதை சரி காண முஸ்லீம்கள் திணறிக் கொண்டிருக்கும் திருமணமாகவும் அமைந்து விட்டது. அது தான் ஆய்ஷாவுடனான திருமணம். இந்த திருமணம் நடக்கும் போது முகம்மதின் வயது ஐம்பதுக்கும் அதிகம். ஆனால், ஆய்ஷாவின் வயதோ வெறும் ஆறு தான். இந்தத் திருமணம் தான் இஸ்லாத்தை விமர்சிக்க அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மட்டுமல்லாது முகம்மதின் வாழ்க்கை முஸ்லீம்களுக்கு ஒரு முன்மாதிரி என்பதாலும் குழந்தத் திருமணம் கூடாது என்று குரான் வசனங்கள் எதுவும் தடுக்கவில்லை என்பதாலும் இன்றும் முஸ்லீம்கள் இது போன்று குழந்தைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஒரு குழந்தையைத் திருமணம் செய்து கொள்ள மத ரீதியாக இஸ்லாமியர்களுக்கு தடை ஒன்றும் இல்லை.

முகம்மதின் மக்கா வாழ்வின் இறுதியில் நடந்த இந்த திருமணம் முகம்மதினுடைய ஆசையின் பேரிலேயே நடந்திருக்கிறது என்பதை ஒரு ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. தன்னுடைய நெருங்கிய நண்பரும், தனக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவருமான அபூபக்கரின் மகள் தான் ஆய்ஷா. ஆய்ஷா குழந்தையாக இருக்கும் போது தன்னுடைய ஆசையை அபூபக்கரிடம் வெளிப்படுத்துகிறார் முகம்மது.

நபி அவர்கள் அபூபக்ர் அவர்களிடம் ஆயிஷா அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் அவர்கள் நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு ஹலால் – மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம் என்று சொன்னார்கள். புஹாரி 5081

சிறுமியின் தந்தையான அபூபக்கருக்கு விருப்பமில்லை என்றாலும் முகம்மதின் வற்புறுத்தலினாலேயே சம்மதிக்கிறார் அதும் சிறுமியாக இருப்பதால் மூன்று ஆண்டுகள் அவகாசம் வேண்டும் என்கிறார். முகம்மது பெருந்தன்மையுடன்(!) அதனை ஏற்று ஆறு வயதில் புறத் திருமணம் முடிந்தாலும் ஒன்பது வயதிலேயே மெய்யான திருமண வாழ்வை தொடங்குகிறார்.

நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரீஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்கு காய்ச்சல் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு முடி வளர்ந்து அதிகமாகிவிட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த போது என் தாயார் உம்மு ரூமான் அவர்கள் என்னிடம் வந்து என்னை சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையையும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள் நன்மையுடனும் அருள் வளத்துடனும் வருக! நற்பேறு உண்டாகட்டும் என்று கூறினர். உடனே என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க அவர்கள் என்னை அலங்கரித்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன். புஹாரி 3894

மேலுள்ள ஹதீஸ்கள் முகம்மதின் விருப்பத்தினால் ஆறு வயதில் திருமணம் செய்யப்பட்டு ஒன்பது வயதில் முதலிரவு (முதல் பகல்) நடந்திருக்கிறது என்பதை தெரிவிக்கின்றன. இந்த மூன்று ஆண்டு இடைவெளி கூட அபூபக்கர் விதித்த நிபந்தனையினால் தான். ஆனால் முகம்மது குழந்தைத் திருமணம் செய்ததன் வீரியத்தை நீர்த்துப்போகச் செய்ய முஸ்லீம்கள் பல காரணங்களை அடுக்குகிறார்கள். இப்படி குழந்தத் திருமணம் செய்வது கூடாது என்று பின்னாளில் தடுக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். ஆனால் அப்படியான தடை எதுவும் குரானிலோ ஹதீஸ்களிலோ இல்லை. இன்றும் இது போன்ற திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. மட்டுமல்லாது முகம்மதின் பேத்தி உம்மு குல்ஸுமை உமர் திருமணம் செய்யும் போது அவள் சிறுமி தான்.

இஸ்லாமிய மதவாதிகள் இந்தத் திருமணம் குறித்து வாதிடும் போது முதன்மையானதாக இரண்டு விசயங்களை முன்வைக்கிறார்கள். 1. குழந்தைத் திருமணம் என்பது அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்த ஒன்று தான் 2. புத்திக் கூர்மை கொண்ட ஆய்ஷாவை திருமணம் செய்ததன் மூலம் இஸ்லாமின் இல்லற வாழ்வியல் குறித்த நுணுக்கமான தகவல்கள் தெரியவந்தன. இந்த இரண்டுமே பொருத்தமற்றவை.

குழந்தைத் திருமணம் பழங்காலத்தில் நடைமுறையில் இருந்தது தான் என்றாலும் முகம்மது புரிந்தது வழக்கத்தில் இருந்த குழந்தைத் திருமணத்துடன் இணைக்க முடியாதது. வழக்கத்தில் இருந்த குழந்தைத் திருமணம் என்பது ஒரு சிறுவனுக்கும் சிறுமிக்கும் இடையே நடத்தி வைக்கும் அல்லது ஒப்பந்தம் செய்யும் திருமணம். இன்னும் ஒரு வழக்கம் கூட இருந்தது. வயது முதிர்ந்த கிழவர்கள் தங்கள் பொருளாதார பலம் கொடுக்கும் திமிரினால் இளவயது கன்னிப் பெண்களை திருமணம் புரிந்தார்கள். ஆனால் முகம்மதுவின் திருமணம் ஐம்பதுக்கும் அதிகமான வயதுடைய கிழவராக இருக்கும் போது ஆறு வயதாக இருந்த சிறுமியை மணந்த திருமணம். இது வழக்கத்தில் இருந்திராதது. எனவே, இதை வழக்கத்தில் இருந்தது தான் என கடந்து போக முடியாது. அல்லது முகம்மதுக்கு முன்பு இவ்வாறான திருமணம் நடந்திருக்கிறது அரபு இலக்கியங்களிலிருந்து எதையாவது எடுத்துக்காட்ட முடியுமா இஸ்லாமிய மதவாதிகளால்? அது யுக முன்மாதிரியான முகம்மதுதின் தகுதிக்கு ஏற்றதா?

ஆய்ஷா எனும் பெண்ணுக்கு மிகுந்த புத்திக் கூர்மை இருக்கும், அது இஸ்லாமிய இல்லற விழுமியங்களுக்கு பயன்படும் என்று ஆறு வயதேயான சிறுமியை கண்டு முகம்மது தெரிந்து கொண்டாரா? என்றொரு கேள்வியை எழுப்பினால் இஸ்லாமிய மதவாதிகள் இப்போது கூறிக் கொண்டிருக்கும் காரணங்கள் எவ்வளவு அபத்தமானவை என்பது புரியும். ஆய்ஷா அறிவித்த ஹதீஸ்களில் இஸ்லாமிய இல்லறவியலுக்கான என்ன நுணுக்கமான தகவல்கள் இருக்கின்றன? ஆய்ஷ அறிவித்த ஹதீஸ்களை அறிவிக்க புத்திக் கூர்மை இருக்க வேண்டியது அவசியமா? அப்படி ஒன்றுமில்லை. ஆய்ஷா அறிவித்த ஹதீஸ்களின் கருத்துக்கள் வெகு சாதாரணமானவை. எந்தப் பெண்ணும் எளிதில் அறிவிக்க முடிந்தவை. தவிரவும் ஒரே செய்திய கூறும் போது கூட தவறான தகவல்களை கூறக் கூடிய நிலைமையிலேயே ஆய்ஷா இருந்திருக்கிறார். எடுத்துக்காட்டு புஹாரி 4912 மற்றும் புஹாரி 5268 (இந்த இரண்டு ஹதீஸ்களைப் பற்றிய விபரம் அடுத்த தலைப்பில் விரிவாக இடம்பெறவிருக்கிறது) ஆகவே, அந்தக் கால வழக்கம், ஆய்ஷாவின் புத்திக்கூர்மை இஸ்லாத்துக்கு பயன்பட்டிருக்கிறது என இஸ்லாமிய மதவாதிகள் செய்யும் பரப்புரைகள் நடந்த தவறை நியாயப்படுத்தும் சமாளிப்புகள் என்பதைத் தாண்டி வேறொன்றுமில்லை.

அந்தக் கால வழக்கம், புத்திக் கூர்மை என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். முகம்மது திருமணம் செய்த பெண்களிலேயே கன்னிப் பெண் ஆய்ஷா மட்டும் தான். முகம்மதின் விருப்பத்திற்குறிய மனைவியும் ஆய்ஷா தான். எந்த அளவுக்கு என்றால் ஆய்ஷாவுடனிருக்கும் நாளை அதிகம் விரும்பியவராகவும், மரண வேளையில் ஆய்ஷாவின் மடியிலேயே என் உயிர் பிரிய வேண்டும் என விரும்பியவராகவும் இருந்திருக்கிறார். இவ்வளவு நேசத்துக்குறிய மனைவியான ஆய்ஷா ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்ட போது முகம்மது சராசரிக்கும் கீழான ஒரு மனிதராக நடந்து கொண்டார் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

ஒரு போரை முடித்து விட்டு மதீனாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் முகம்மதும் அவரது படையினரும். முகம்மதுவுடன் ஆய்ஷாவும் இருக்கிறார். ஒரு இடத்தில் ஓய்வுக்காக தங்குகிறார்கள். அங்கு ஆய்ஷா தன்னுடைய நகை ஒன்றை காணாமல் தேடிச் செல்ல, திரும்பி வருவதற்குள் இராணுவக் கூட்டம் கிளம்பி விடுகிறது. திரும்பி வந்து பார்த்து கூட்டத்தைக் காணாததால் யாரேனும் தேடி வரக் கூடும் என எண்ணி அங்கேயே இருந்து தூங்கி விடுகிறார் ஆய்ஷா. பின்னர் தாமதமாக வந்த ஸுப்வான் பின் முஅத்தல் என்பவர் ஆய்ஷாவைக் கண்டு தன் ஒட்டகத்தில் ஏற்றிக் கொண்டு வருகிறார். மதிய உணவிற்காக வேறொரு இடத்தில் தங்கியிருந்த போது ஆய்ஷாவும் ஸுப்வான் பின் முஅத்தலும் இராணுவக் கூட்டத்தோடு சென்று சேர்கின்றனர். இதை காரணமாக வைத்து ஆய்ஷாவுக்கும் ஸுப்வான் பின் முஅத்தலுக்கும் இடையே முறைகேடான உறவுகள் இருப்பதாக கதை கட்டப்பட்டு வதந்திகள் உலா வந்தது. இதை முகம்மதுவும் கொஞ்சம் கொஞ்சமாக நம்பத் தொடங்குகிறார். அதனால் ஆய்ஷாவை விவாகரத்து செய்வதற்கும் எண்ணுகிறார். இந்த நிலையில் தான் குரான் வசனங்கள் ஆய்ஷா குற்றமற்றவர் எனக் கூறுகிறது அதன்பிறகே முகம்மது நிம்மதியடைகிறார்.  நீளமான ஹதீஸான புஹாரி 2661 ன் சுருக்கம் இது.

இந்த விசயத்தில் முகம்மது நடந்து கொண்ட முறை எப்படிப்பட்டதாக இருந்தது? ஒரு யுக முன்மாதிரி மனிதர் நடந்து கொள்ள வேண்டிய தன்மையில் இருந்ததா? முகம்மதின் நண்பர்கள், ஒரு மனைவி, ஒரு பணிப்பெண் இவர்களெல்லாம் திடமாக ஆய்ஷா அப்படிப்பட்டவர் இல்லை. என்று கூறும் போது தன் காதல் மனைவி மீது அப்படியான எண்ணம் ஏன் முகம்மதுவுக்கு இல்லாமல் போயிற்று? ஆய்ஷாவிடம் சென்று நீ பாவம் செய்தவளாக இருந்தால் அல்லாவிடம் பாவ மன்னிப்பு தேடிக் கொள் என்று கூறுவது எத்தனை வன்மமானது? குரூரமானது? இந்த விவகாரத்தில் வெளிப்பட்ட குரான் வசனங்கள் மக்களைப் பார்த்து கீழ்க்கண்டவாறு கேள்விகளை எழுப்புகிறது. தொடர்ச்சியாக பதினோரு வசனங்களில் அன்றைய மக்களைப் பார்த்து அல்லா கேள்விகளை எழுப்புகிறான்.

முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் இதைக் கேள்வியுற்ற போது தங்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்டு “இது பகிரங்கமான வீண் பழியேயாகும்” எனக் கூறியிருக்க வேண்டாமா? குரான் 24:12

அவர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில் அவர்கள் தாம் அல்லாவிடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள். குரான் 24:13

இன்னும் இதை நீங்கள் செவியுற்றபோது “இதைப்பற்றி பேசுவது நமக்கு இல்லை. நீயே தூயவன். இது பெரும்பழியாகும்” என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா? குரான் 24:16

என்றெல்லாம் அன்றைய மக்களை நோக்கி குரான் வினவுகிறது. ஆனால் மக்களை நோக்கி குரான் இப்படி கேள்வி எழுப்புவதில் ஏதாவது நேர்மை இருக்கிறதா? நேர்மை இருந்திருந்தால் இந்தக் கேள்விகள் முகம்மதை நோக்கியல்லவா எழுப்பப் பட்டிருக்க வேண்டும். ஒரு பெண்ணின் மீது அவதூறு கொண்டு வருபவர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும் என்று குரான் கூறியிருந்த விதியை முகம்மது மறந்து விட்டாரா? முகம்மது ஒரு சராசரி மனிதராகவாவது இருந்தால் அவதூறு கூறியவர்களை நோக்கி நீங்கள் கூறுவதற்க்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? என்றல்லவா கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு எதையுமே செய்யாமல் மாதக்கணக்காய் குழம்பிக் கொண்டிருந்துவிட்டு, விவாகரத்து எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டு, (இந்த நேரத்தில் இறைச் செய்தி வருவதும் தற்காலிகமாக நின்று போனது என்பது தான் வேடிக்கை – அல்லாவுக்கே குழப்பம் வந்து விட்டது போலும்) கடைசியில் நீங்கள் அவதூறு என்று கூறியிருக்க வேண்டாமா? என்று மக்களைப் பார்த்து கேள்வி கேட்பது எந்த விதத்தில் சரி? இதில் என்ன முன்மாதிரி இருக்கிறது?

சொந்த மனைவி மீது சிலர் அவதூறு பேசும் போது அதில் உண்மை இருக்கிறதா? இல்லையா? என்பதை அலசிப் பார்த்து  உறுதியாக நின்று சரியான முடிவு எடுக்க இயலாத வெகு சதாரணமான ஒரு மனிதர், லேசான நெருக்குதல் வந்த உடனேயே உடைந்து போய் விட்ட ஒரு மனிதர் தானா இனி உலகம் உள்ளவரை வரும் அனைத்து பிரிவினருக்கும், சந்ததிகளுக்கும் வழிகாட்டக் கூடியவர்? முஸ்லீம்கள் பரிதாபமானவர்கள் தாம்.

முகம்மது தேன் குடித்த கதை


isl 55
இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 56
நபியே உம் மனைவியரின் திருப்தியை நாடி அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? .. .. .. குரான் 66:1

இப்படி ஒரு வசனம் குரானில் உண்டு. அல்லா அனுமதித்த எதை முகம்மது தம் மனைவிகளின் விருப்பத்திற்காக விலக்கினார்? என்றொரு கேள்வியை எழுப்பினால் விடையாகக் கிடைப்பது தான் முகம்மது தேன் குடித்த கதை. அதாவது முகம்மது தன் பல மனைவியர்களின் வீட்டில் முறைவைத்து தங்கும் போது ஒரு மனைவியின் வீட்டில் தேன் குடிக்கிறார். இது ஏனைய மனைவியர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் இனிமேல் தேன் குடிக்க மாட்டேன் என்று அல்லாவின் பெயரால் சத்தியம் செய்து விடுகிறார். ஆனால் முகம்மது தேன் குடிக்கவில்லை என்று தெரிந்தால் உலகின் அனைத்து முஸ்லீம்களும் தேன் குடிப்பதை நிறுத்தி விடுவார்களே, அதனால் தான் அல்லா முகம்மதை கண்டித்து மீண்டும் தேன் குடிக்க வைத்தான். இது தான் அந்த தேன் குடித்த கதை என்று இப்பொழுது பொழிப்புரை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய பரப்புரையாளர்கள்.

இது மெய்தானா? இது முகம்மது தேன் குடித்ததை குறிப்பிடும் வசனங்கள் தாமா? இந்த தேன் குடித்த கதைக்குப் பின்னர் வக்கிரம் பிடித்த ஒரு வரலாறு மறைந்து கிடக்கிறது. இதை விரிவாகப் பார்க்கலாம். இந்த தேன் குடித்த கதை தொடர்பாக மேற்கண்ட வசனம் மட்டுமல்ல வேறு சில வசனங்களும் குரானில் இடம் பெற்றிருக்கின்றன.

நபியே உம்முடைய மனைவியரின் திருப்திகளை நீர் நாடி அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர்? அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன் மிகக் கிருபையுடையவன்.

உங்களுடைய சத்தியங்களை முறிப்பதை அல்லாஹ் உங்களுக்கு திட்டமாகக் கடமையாக்கி இருக்கிறான். அல்லாஹ் உங்களுடைய எஜமான் அவன் முற்றும் அறிந்தவன் ஞானமுள்ளவன்.

இன்னும் நபி, தம் மனைவியரில் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக ஆக்கிவைத்த போது அதனை அவர் அறிவித்து, அல்லாஹ் அவருக்கு வெளியாக்கிய போது, அவர் அதில் சிலதை அறிவித்தும் மற்றும் சிலதை புறக்கணித்தும் விட்டார். அவர் அதனை அவருக்கு அறிவித்த போது இதனை உமக்கு அறிவித்தவர் யார்? என்று அவர் கேட்டார் முற்றும் அறிந்தவனும் தெரிந்தவனாகிய அல்லாஹ் எனக்கு அறிவித்தான் என்று அவர் கூறினார்.

நீங்கள் இருவரும் அல்லாஹ்வின்பால் மீண்டால் ஏனெனில் உங்களிருவருடைய இதயங்களும் அவ்வேளையில் திட்டமாக சாய்ந்து விட்டன; நீங்கள் இருவரும் எதிராக உதவி செய்து கொண்டால், அப்போது நிச்சயமாக அல்லாஹ் அவருடைய உதவியாளனாக இருக்கிறான். இன்னும் ஜிப்ரீலும் முஃமின்களில் ஷாலிஹானவர்கள் அவருக்கு உதவியாளர்களாவார்கள். அதற்குப் பின்னும் மலக்குகள் உதவியாளர்களாவார்கள்.

அவர் உங்களை தலாக் சொல்லி விட்டால் உங்களை விடச் சிறந்த முஸ்லிம்களான, முஃமினான, வழிபட்டு நடப்பவர்களான, தவ்பாச் செய்பவர்களான, வணங்குபவர்கலான, நோன்பு நோற்பவர்களான, கன்னிமை கழிந்தவர் இன்னும் கன்னிப் பெண்டிர் இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு பகரமாக மனைவியராய் கொடுக்கப் போதுமானவன்.
குரான் அத்தியாயம் 66 தஹ்ரீம் வசனங்கள் ஒன்றிலிருந்து ஐந்து வரை

முதல் வசனத்திற்குப் பிந்திய நான்கு வசனங்களும் இஸ்லாமிய பரப்புரையாளர்கள் கூறும் தேன் குடித்த கதைக்கு பொருந்துகிறதா? வெகு சாதாரணமான நிகழ்வான முகம்மது தேன் குடித்தததை, முகம்மதுக்கு எதிராக நீங்கள் சதி செய்து விட்டீர்கள் என்றும், இருவரும் அல்லாவிடம் மன்னிப்பு கேழுங்கள் என்றும், முகம்மதுக்கு உதவி செய்ய அல்லாவும், வானவர்களும் இன்னும் ஏராளமானவர்களும் இருக்கிறார்கள் என்றும், உங்களை விவாகரத்து செய்து விட்டால் உங்களுக்குப் பதிலாக சிறந்த மனைவியர்கள் முகம்மதுவுக்கு கிடைப்பார்கள் என்றெல்லாம் முகம்மதின் மனைவியர்களை அல்லா மிரட்ட வேண்டிய அவசியம் என்ன? இது மட்டுமா? எந்த முக்கியத்துவமும் இல்லாத இந்த தேன் குடித்த கதையால் சஞ்சலத்துக்கு உள்ளான முகம்மது தன்னுடைய அனைத்து மனைவிகளையுமே ஒட்டுமொத்தமாக விவாகரத்து செய்து விடும் அளவுக்கு சென்றார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மைதான் என்பதை ஒரு ஹதீஸ் உறுதி செய்கிறது.

ஒரு நாள் காலை நபி அவர்களுடைய துணைவியர் அழுது கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அருகில் அவரவர் குடும்பத்தினரும் இருந்தனர். .. .. .. உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, தங்கள் துணைவியரை விவாக ரத்துச் செய்துவிட்டிர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், இல்லை. ஆனால், ஒரு மாத காலம் நெருங்க மாட்டேன் எனச் சத்தியம் செய்து விட்டேன் என்று பதிலளித்தார்கள். அங்கு நபி அவர்கள் இருபத்தொன்பது நாட்கள் தங்கியிருந்துவிட்டுப் பிறகு தம் துணைவியரிடம் சென்றார்கள்.
புஹாரி 5203

ஒரு மனைவியின் வீட்டில் தேன் குடித்தது இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகுமா? ஒட்டு மொத்தமாக அத்தனை மனைவியர்களையும் விவாகரத்து செய்து விடுமளவுக்கு தேன் குடித்தது அவ்வளவு பெரிய குற்றச் செயலா? தன்னுடைய நெருங்கிய நண்பரும், மாமனாருமாகிய உமர் கேட்கும் போது விவாகரத்து செய்யவில்லை. ஒரு மாத காலம் அனைத்து மனைவியர்களை விட்டும் விலகி இருக்கப் போகிறேன் என்று கூறி 29 நாட்கள் விலகி இருக்கும் அளவுக்கு தேன் குடித்தது ஒரு மன்னனை கலங்க வைக்குமா? நிச்சயம் இருக்காது. குரானின் அந்த வசனங்களும், புஹாரியின் இந்த ஹதீஸும் தெட்டத் தெளிவாக அது தேன் குடித்த கதையல்ல வேறு எதுவோ ஒன்று அதில் மறைந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. அது என்ன? இந்த தேடலை முகம்மதின் பிரியத்திற்குறிய மனைவி ஆய்ஷா அறிவித்த இரண்டு ஹதீஸ்களிலிருந்து தொடங்கலாம்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம், அவர்களது தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் தங்கி விடுவார்கள். நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம். தேன் சாப்பிட்ட பின் நம்மவரில் எவரிடம் நபி அவர்கள் முதலில் வருவார்களோ, அவர், நபி அவர்களிடம் கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா உங்களிடமிருந்து பிசினின் துர்வாடை வருகிறதே என்று கூறி விட வேண்டும். வழக்கம்போல ஸைனப்பின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டு விட்டு நபி அவர்கள் வந்த போது நாங்கள் பேசி வைத்த பிரகாரம் கூறியதற்கு அவர்கள் இல்லை ஸைனப் பின்த் ஜஹ்ஷ் தேன் குடித்தேன். நான் ஒரு போதும் அதைக் குடிக்க மாட்டேன், நான் சத்தியமும் செய்து விட்டேன் என்று கூறிவிட்டு இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே என்று கூறினார்கள்.
புஹாரி 4912

இது ஒரு ஹதீஸ். இன்னொரு ஹதீஸையும் பார்க்கலாம்.

அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்குத் தேனும் இனிப்பும் மிக விருப்பமானவைகளாக இருந்தன. அஸ்ர் தொழுகையை முடித்ததும் நபி அவர்கள் தம் துணைவியாரிடம் செல்வார்கள்: அவர்களில் சிலருடன் நெருக்கமாகவும் இருப்பார்கள். இவ்வாறு தம் துணைவியால் ஒருவரான ஹஃப்ஸா பின்த் உமர் அவர்களிடம் நபி அவர்கள் சென்று வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்து விட்டார்கள். ஆகவே நான் ரோஷப்பட்டேன். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கிளாள் என்றும் அதிலிருந்து தயாரித்த பானத்தை நபி (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. உடனே நான் அல்லாஹ்வின் மீதாணையாக இதை நிறுத்துவதற்காக ஒரு தந்திரம் செய்வோம் என்று கூறிக் கொண்டு நபி அவர்களின் துணைவியரில் சவ்தா பிந்த் ஸம்ஆவிடம் நபி அவர்கள் உங்கள் அருகில் வருவார்கள். அப்போது கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள் .. .. ..
புஹாரி 5268

மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களிலும் கூறப்பட்ட நிகழ்வு ஒன்று தான், அறிவித்தவரும் ஒருவர் தான். ஆனால், அதில் ஈடுபட்ட மனைவியரில் மட்டும் ஆள்மாறாட்டம். முகம்மது தேன் குடித்தது யார் வீட்டில்? ஜைனப் வீட்டிலா? ஹப்ஸா வீட்டிலா? அல்லா எச்சரித்த இரண்டு மனைவியர்கள் யாவர்? ஒருவர் ஆய்ஷா இன்னொருவர் யார்? ஹப்ஸாவா? சவ்தாவா? ஆய்ஷாவும் ஹப்ஸாவுமா? ஆய்ஷாவும் சவ்தாவுமா? எந்த ஆய்ஷாவை ஆறு வயதிலேயே இவரைத் திருமணம் செய்து கொண்டால் இல்லறம் குறித்த அறிவிப்புகளை தெளிவாகவும் துல்லியமாகவும் அறிவிப்பார்கள் என்று கண்டு பிடித்து முகம்மது திருமணம் செய்து கொண்டதாக மதவாதிகள் கூறுகிறார்களோ, அந்த ஆய்ஷா தான் இப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த குழப்பத்தை இன்னொரு ஹதீஸ் தெளிவிக்கிறது.

.. .. .. அப்போது நான் அவர்களிடம், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே நபி அவர்களுடைய துணைவியரில், நபியவர்களைச் சங்கடப் படுத்தும் வகையில் கூடிப் பேசிச் செயல்பட்ட இருவர் யார்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் தாம் அந்த இருவர் என்று பதிலளித்தார்கள் .. .. .. அதற்கு நான், அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதர் அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன். அருமை மகளே தன்னுடைய அழகும், அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தம் மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை-ஆயிஷாவை-ப் பார்த்து நீயும் துணிந்து விடாதே என்று சொன்னேன். பிறகு நான் புறப்பட்டு, நபி அவர்களின் மற்றொரு துணைவியாரான உம்மு சலமாவிடம் அறிவுரை கூறச்சென்றேன். ஏனெனில், அவர் என்  உறவினராவார். இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு சலமா, கத்தாபின் புதல்வரே உம்மைக் கண்டு நான் வியப்படைகின்றேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டு வந்த நீங்கள் இப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையும் தலையிடும் அளவிற்கு வந்துவிட்டீர்கள் என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக உம்மு சல்மா தம் பேச்சால் என்னை ஒரு பிடி பிடித்து விட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி கோப உணர்ச்சியை உடைத்தெறிந்து விட்டார் .. .. ..
புஹாரி 4913

இந்த ஹதீஸ் இரண்டு விபரங்களைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டுள்ளது. ஒன்று, எந்த இருவர் என்பதற்கு ஆய்ஷாவும் ஹப்ஸாவும் என்பது. அடுத்தது, இந்த விவகாரத்தில் உமர் முகம்மதுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்து முகம்மதின் ஒவ்வொரு மனைவியராக சந்தித்து அறிவுரை கூறி எச்சரிக்கிறார். ஆனால் உம்மு சலமா உமர் வாயடைத்துப் போகும் அளவுக்கு அவரை கேள்விகளால் திணறடித்து விடுகிறார். உமரால் பேச முடியாமல் போகும் அளவுக்கு தேன் குடித்ததில் அத்தனை பெரிய விவகாரம் என்ன இருந்து விட முடியும்? ஆக ஒன்று தெளிவாய் புரிகிறது. ஹதீஸ்களும் குரான் வசனங்களும் நடந்த ஏதோ ஒன்றை மறைத்து தேன் குடித்தார் என்று பூசி மெழுகுகின்றன. இது தேன் குடித்த கதையல்ல என்பது தெளிவாகி விட்டது. என்ன நடந்தது என்று எப்படி அறிந்து கொள்வது? இஸ்லாமிய மதவாதிகள் ஒருபோதும் இதற்கு பதில் கூறப் போவதில்லை. குரான் வசனங்களிலும், ஆதாரபூர்வமானவை என்று மதவாதிகள் நீட்டி முழக்கும் ஹதீஸ் தொகுப்புகளிலும் தலைகீழாக நின்று தேடினாலும் இதற்கான விபரம் கிடைக்கப் போவதில்லை. அப்படியானால் எப்படி அதை தெரிந்து கொள்வது? எதில் இதற்கு விளக்கங்கள் கிடைக்கும்?

இப்ன் ஸாத் என்பவர் எழுதிய தபாக்கத் எனும் நூலை முகம்மது மஹ்தவி தம்ஹானி என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அதில் 223ம் பக்கத்தில் முகம்மது என்ன தேனைக் குடித்தார் எனும் விபரம் கிடைக்கிறது.

நபி, ஒவ்வொரு மனைவியின் வீட்டிற்கும் தினமும் செல்லும் வழக்கமுடையவர். அவ்வாறு அன்று ஹப்ஸாவின் வீட்டிற்கு வரும் முறை, ஹப்ஸாவிடம், உனது தந்தையார் உமர் கத்தாப் உன்னை பார்க்க விரும்புகிறார் என்று கூறுகிறார் முகம்மது. ஹப்ஸாவும், நபியின் ஆணையை ஏற்று தந்தையை காணச் சென்று விடுகிறார். இதற்கிடையில் அடிமைப் பெண் மரியத்துல் கிப்தியாவுடன் கலவியில் ஈடுபட்டு விடுகிறார். சற்று விரைவாகவே வீடு திரும்பிய ஹப்ஸா நடந்த நிகழ்ச்சியை அறிந்து கோபமடைகிறார். அவர் நபியிடம் கூறுகிறார், “அல்லாஹ்வின் தூதரே, என் வீட்டிலா இதைச் செய்தீர்கள் அதுவும் என்னுடன் (இருக்க வேண்டிய) முறையில்?”  என்று கோபப்பட ஹப்ஸாவை சமாதானம் செய்ய, வேறு வழியின்றி அல்லாஹ்வால் ஹலால் ஆக்கப்பட்ட மரியத்துல் கிப்தியா இனி தனக்கு ஹராம் எனக் கூறி ஹப்ஸாவை சமாதானம் செய்கிறார். அதற்கு ஹஃப்ஸா அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறினால் தவிர என்னால் ஏற்க முடியாது என்கிறார். வேறு வழியின்றி இனி மரியத்துல் கிப்தியாவுடன் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகிறார். இந் நிகழ்சியை யாரிடமும் கூறக்கூடாது எனவும் கூறுகிறார். ஆனால் ஹப்ஸா, தன் தோழியான ஆயிஷாவிடம் கூற விஷயம் வெளியாகிறது.

ஆக முகம்மது குடித்த தேன் மரியத்துல் கிப்தியா. இப்போது குரான் வசனங்கள் ஹதீஸ்கள் ஆகியவை கூறும் செய்திகளை தொகுத்துப் பாருங்கள். அவை மரியத்துல் கிப்தியவை உறுதி செய்கின்றன. அசிங்கமான வக்கிரமான இந்த வரலாற்றை மறைப்பதற்காகத் தான், தேன் கதையை புனைந்து பரப்பியிருக்கிறார்கள். மட்டுமல்லாமல், இஸ்லாமியர்கள் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் தொகுப்பு என்று கூறும் தொகுப்புகளின் லட்சணம் இப்படி உண்மையை மறைப்பதற்குத் தான் உதவியிருக்கிறது. அதனால் தான் மதவாதிகள் ஆதரபூர்வ தொகுப்புகள் என்று கூறப்படும் ஆறு தொகுப்புகளுக்கு [ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும் எனும் தலைப்பில் பார்க்க] முந்திய தொகுப்புகளான தபரி, இபின் இஷாக், இபுன் ஸைத் போன்றவர்களின் முகம்மதின் வரலாறு எதையும் ஏற்க மறுக்கிறார்கள்.

முப்பத்து ஒன்று அதிகாரபூர்வ மனைவிகள், அதற்குமேல் அடிமைப் பெண்கள், வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் அதன் பிறகும் தொடரும் இது போன்ற வக்கிரங்கள். உலகில் பிறக்கும் அத்தனை மனிதர்களுக்கும் முன் மாதிரி என்று விதந்து போற்றப்படும் ஓர் ஆறாம் நூற்றாண்டு மனிதனின் ஆளுமைகள் அவ்வாறான போற்றுதல்களுக்கு கொஞ்சமாவது தகுதியைக் கொண்டிருக்கின்றனவா என்பதை முஸ்லீம்கள் சிந்திக்கட்டும்.

முகம்மதின் மரணத் தருவாயில் நடந்த குழப்பங்கள்


ph moh's death
 இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 57
தவறாக அன்றி ஒரு மூஃமின் பிரிதொரு மூஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல .. .. .. எவனேனும் ஒருவன் ஒரு மூஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும்என்றென்றும் அங்கேயே தங்குவான் .. .. .. குரான் 4:92, 93

இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்ய வேண்டாம்ஏனெனில் உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்திவிடக்கூடும்அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்து விடக்கூடும்புஹாரி: 7072

ஒருவர் தம் சகோதரரிடம் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமலிருப்பது அனுமதிக்கப்பட்டதன்று .. .. .. புஹாரி 6077

மேலுள்ள ஹதீஸ்களும் குரான் வசனமும் தெளிவாக கூறுவது என்னவென்றால் முஸ்லீம்கள் தங்களுக்குள் ஒருவருக்கு எதிராக மற்றொருவர் ஆயுதம் ஏந்தக் கூடாது என்பது தான்இந்த அறிவுரைகள் முகம்மது வாழ்ந்த அந்தக் காலத்திலிருந்து இன்னும் மனிதன் வாழப்போகும் அத்தனை காலம் வரை உள்ள முஸ்லீம்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்ஆனால் இந்த வழிகாட்டல்களை முகம்மதுடன் வாழ்ந்தமுகம்மதுவுக்கு உற்ற உறவினர்களாக இருந்த,முகம்மதுவுக்கு நெருங்கிய தளபதிகளாக இருந்தமுகம்மது யாரை சொர்க்க வாசிகள் என முன்னறிவிப்பு செய்தாரோ அவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக் கொண்டார்கள் என்றால் அதை உங்களால் நம்ப முடியுமாஆனால்நடந்தது அது தான்இதை எப்படி புரிந்து கொள்வதுமுகம்மது கூறிய கொள்கையை முகம்மதுக்கு நெருக்கமாக உடன் வாழ்ந்தவர்களே செயல்படுத்தாமல் அலட்சியப் படுத்தி விட்டார்கள் என்றாமுகம்மது இறந்த பிறகு அவர்களால் கூட முகம்மதின் கொள்கை செயல்படுத்த முடியாததாக இருந்தது என்றா?அல்லது முகம்மதின் கொள்கை காலத்துக்கு ஒவ்வாததாக இருந்தது என்றாஎப்படியானாலும் முகம்மதின் காலத்திலேயே அவரின் கொள்கைகளுக்குஅவரின் சொல்லுக்கு மதிப்பில்லாமல் போனது என்பது தான் உண்மை.

முகம்மதுக்குப் பிறகு ஆட்சி புறிந்த நான்கு கலீபாக்களில் அபூபக்கர் தவிர ஏனைய மூன்று கலீபக்களான உமர்உஸ்மான், அலி ஆகியோர்கள் கொல்லப்பட்டுத் தான் இறந்திருக்கிறார்கள்அந்த ஆட்சித் தலைவர்களைக் கொன்றவர்கள் மத ரீதியில் எதிரிகளான யூதர்களோ,வணக்க வழிபாட்டு ரீதியில் எதிரிகளான மக்கத்து குரைஷிகளோ அல்லர்.எந்த முஸ்லீம்கள் முகம்மதையும் அவரின் கொள்கையையும் தம் உயிரினும் மேலானதாக ஏற்றுக் கொண்டார்களோ அந்த முஸ்லீம்கள்.இனி உலகம் அழியும் வரை பிறக்கும் அனைவருக்கும் முகம்மதே அழகிய முன்மாதிரி என்று வியந்து போற்றினார்களோ அந்த முஸ்லீம்கள்.அவ்வளவு ஏன்தனக்குப் பிறகுதன்னுடைய அரசியல் வாரிசாக முகம்மதால் தேர்ந்தெடுக்கப்பட்ட அபூபக்கரிடமே முகம்மதின் இரத்த வாரிசான முகம்மதின் நேசத்துக்குறிய மகள் ஃபாத்திமா பகைமை கொண்டு இறந்து போகும் வரை பேசாமலிருந்தார் என்று ஒரு ஹதீஸ் தெரிவிக்கிறது.

ஃபாத்திமாவுக்கு அபூபக்கர்இறைத்தூதர் அவர்கள் எங்கள் சொத்துக்கு வாரிசாக யாரும் வர முடியாதுநாங்கள் விட்டுச் செல்பவை எல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று பதிலளித்தார்கள்இதனால் பாத்திமா கோபமுற்று அபூபக்கர் அவர்களிடம் பேசுவதை விட்டு விட்டார்கள்அவர்கள் மரணிக்கும் வரை அபூபக்கர் அவர்களிடம் பேசாமலேயே இருந்துவிட்டார்கள் .. .. .. புஹாரி3093

தனக்குப் பின்னால் மக்கள் எப்படி இருக்க வேண்டும் என முகம்மது விரும்பினாரோ அதன்படி அவருக்கு நெருக்கமானவர்களே இருக்கவில்லைசொத்துக்காகவும் அதிகாரத்திற்காகவும் ஒருவர் மீது ஒருவர் போர் தொடுத்துக் கொண்டார்கள்முகம்மது இறந்தவுடன் அன்சாரிகளும் குரைஷிகளும் அதிகாரத்திற்காக மோதிக் கொண்டது புஹாரி 6830 ல் மிக விரிவாக கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது கலீபாவான உஸ்மான் கொல்லப்பட்டுவிட அதற்கு காரணமானவர்களை தண்டிப்பேன் என்று கூறி ஆட்சியேறிய நான்காவது கலீபாவான அலீஉஸ்மானை கொலை செய்தவர்களை கண்டுபிடிப்பதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லைஇதைக் கண்டித்து முகம்மதின் நேசத்திற்குறிய மனைவி ஆய்ஷா ஆட்சித்தலைவரான அலீயின் மீது போர் தொடுத்தார்ஆய்ஷாவின் ஒட்டகத்தை குறிவைத்து நடத்தபட்ட போர் என்பதால் ஒட்டகப் போர் என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் இந்தப் போரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் மடிந்து போனதாக குறிப்புகள் கூறுகின்றன.

இப்படி இவர்கள் சொத்துக்காகவும் அதிகாரத்திற்காகவும் சண்டையிட்டுக் கொண்டதற்கு இன்றைய மதவாதிகள் விளக்கத்திற்கு மேல் விளக்கமாக கூறிக் கொண்டிருக்கிறார்கள்அப்படி சண்டையிட்டுக் கொண்டதற்கு ஆயிரம் சமாதானங்கள் கூறினாலும் முகம்மதின் போதனைகளை தங்களை முஸ்லீம்களாக அறிவித்து அதிகாரத்தையும் சொத்துகளையும் அனுபவித்துக் கொண்ட அவரின் நெருங்கிய உறவினர்கள் கூட செவிமடுக்கவில்லையே ஏன்? என்பது தான் முதன்மையான கேள்வி.

முகம்மது என்பவர் இஸ்லாத்தின் முழுமைமுகம்மது இல்லாமல் இஸ்லாம் எனும் மதம் இல்லைஅவரின் ஒவ்வொரு சொல்லும் செயலும் பின்பற்றத்தக்கதுமட்டுமல்லாமல் அவைகளுக்கு விரோதமாக செயல்படுபவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் குற்றவாளிகள்அதற்கு தண்டனையாக நரகத்தை அடைவார்கள் என்பது தான் மதத்தின் தீர்ப்பு.இதுமட்டுமல்ல முகம்மது வாழும் காலத்தில் அவரை முஸ்லீம்கள் எந்த உயரத்தில் வைத்திருந்தார்கள் என்பதை கீழ்காணும் ஹதீஸ் விளக்கும்.

.. .. .. பிறகு தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி அதில் தம் இரு கைகளையும்தம் முகத்தையும் கழுவி அதில் உமிழ்ந்தார்கள்பிறகு எங்களிடம் இதிலிருந்து சிறிது அருந்திவிட்டு உங்கள் முகங்களிலும் மார்புகளிலும் ஊற்றிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்எனவே நாங்கள் இருவரும் அவ்வாறே செய்தோம்அப்போது உம்மு ஸலமா திரைக்குப் பின்னாலிருந்து எங்களை அழைத்து உங்கள் அன்னைக்காகவும் அதிலிருந்து சிறிது மீதி வையுங்கள் என்று கூறினார்கள்அவ்வாறே நாங்கள் இருவரும் அவர்களுக்காக அதில் சிறிது மீதி வைத்தோம்புஹாரி 4328

ஒருபுறம் இப்படி மூடத்தனமான கண்மூடித்தனமான பக்திமறுபுறம் முகம்மதின் மருமகன் அலீ முகம்மதை எப்படி கிண்டல் செய்கிறார் என்று பாருங்கள்,

நபி அவர்கள் ஓர் இரவில் என்னிடமும் ஃபாத்திமா அவர்களிடமும் வந்தார்கள்நீங்கள் இருவரும் தொழவில்லையா என்று கேட்டார்கள்.அப்போது நான் நபி அவர்களே எங்களின் உயிர்கள் அல்லாஹ்வின் கையிலுள்ளனஅவன் எழுப்பும் போதே நாங்கள் எழ முடியும் என்று கூறினேன்இதை நான் கூறிய போது எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லலானார்கள்பின்னர் தம் தொடையில் அடித்து மனிதன் அதிகமாக தர்க்கம் செய்பவனாக இருக்கிறான் என்று கூறிக் கொண்டே திரும்பிச் சென்றார்கள்புஹார் 1127

அதாவதுமுகம்மது தம் மகளும் மருமகனான அலியும் வசிக்கும் வீட்டுக்கு ஓர் இரவில் வருகிறார்நீங்கள் இரவுத் தொழுகையை தொழவில்லையாஎன்று கேட்கிறார்இதற்கு அலி செய்யும் கிண்டலை புரிந்து கொள்ள இன்னொரு ஹதீஸுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.இரவில் தூங்குவது குட்டி மரணம் போன்றது. மரணத்தில் உயிர்களைக் கைப்பற்றுவது போலவே தூக்கத்திலும் கைப்பற்றப்படுகிறது.கைப்பற்றப்பட்ட உயிர் திரும்ப வழங்கப்பட்டால் அது தூக்கமாக கருதப்படுகிறதுமாறாக உயிர் திரும்ப வழங்கப்படாவிட்டால் அது மரணமாகி விடுகிறதுஎனும் பொருளில் ஏற்கனவே ஒரு ஹதீஸை அருளியிருக்கிறார் முகம்மதுஇந்த ஹதீஸை மனதில் வைத்துக் கொண்டுதான் மேற்கண்ட பதிலை அலி தன் மாமனாருக்கு தெரிவிக்கிறார்தூக்கத்தில் எங்கள் உயிரை இறைவன் கைப்பற்றி வைத்துக் கொண்டு அவன் எழுப்பி விடாத போது நாங்கள் எப்படி விழித்தெழுந்து தொழ முடியும்? என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார்.இதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல்பதில் சொல்லவும் இயலாமல் தான் முகம்மது தொடையில் அடித்துக் கொண்டே திரும்பச் சென்று விட்டார்.

இதை மருமகன் மாமனாருக்கிடையேயான கிண்டல் கேலி என்று எடுத்துக் கொள்ள முடியுமாஅனைத்து முஸ்லீம்களுக்கும் முகம்மது முன்மாதிரி என்றால் அது மருமகனுக்கு பொருந்தாதா? முகம்மதின் கட்டளைக்கு கீழ்ப்படியாதவன் முழுமையான முஸ்லீமாக முடியாது.முகம்மதை தம் உயிரிலும் மேலாக மதித்துப் போற்றாத யாரும் முழுமையான முஸ்லீமாக முடியாது என்று கூறும் கூற்றுகளுக்கெல்லாம் என்ன பொருள்கீழ்க்காணும் வசனம் எச்சரிப்பதைப் பாருங்கள்.

மேலும்அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால்அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லைஆகவேஅல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்குரான் 33:36

கேலி செய்வதாவது பரவாயில்லைமாமனார்மருமகன் விவகாரம் என்று பொறுத்துக் கொள்ளாலாம்ஆனால்உயிரினும் மேலாக மதிக்க வேண்டியவரை கிள்ளுக் கீரையாக நினைத்தால்அதுவும் மரணத் தருவாயில்அதையும் ஒரு ஹதீஸ் பதிவு செய்திருக்கிறது.

நபி அவர்களின் மரண வேதனை அதிகமானபோது என்னிடம் ஓர் ஏட்டைக் கொண்டு வாருங்கள் எனக்குப் பிறகு நீங்கள் வழி தவறி விடாதிருக்க ஒரு மடலை நான் உங்களுக்கு எழுதித்தருகிறேன் என்று கூறினார்கள்நபி அவர்களுக்கு வேதனை அதிகமாகி விட்டதுநம்மிடம் அல்லாஹ்வின் வேதம் இருக்கிறது அது நமக்குப் போதுமானது என்று உமர் கூறினார்உடனே கருத்து வேறுபாடு எழுந்து கூச்சலும் குழப்பமும் மிகுந்து விட்டனஇதைக் கண்ட நபி அவர்கள் என்னை விட்டு எழுந்து செல்லுங்கள்என் முன்னிலையில் இது போன்ற சச்சரவுகள் எதுவும் இருக்கக் கூடாது என்றார்கள்நபி அவர்களுக்கும் அவர்கள் மடலுக்கும் குறுக்கே தடையாக நிகழ்ந்து விட்ட சோதனை பெரும் சோதனைதான் என்று கூறியவராக அங்கிருந்து இப்னு அப்பாஸ் வெளியேறிவிட்டார்புஹாரி 114

இந்தச் சூழலை புரிந்து கொள்ள முடிகிறதாபுரிந்து கொள்ள முடியும் என்றால் இன்றைய இஸ்லாமியர்கள் முகம்மதுவுக்கு கொடுக்கும் அத்தனை மரியாதையும்வழிகாட்டி எனும் மதிப்பும்இறைவனுக்கு அடுத்த இடத்தில் வைத்திருக்கும் பாங்கும்ஐயத்துக்கு இடமின்றி முகம்மது உயிருடன் இருக்கும் போதே அடித்து நொருக்கப்பட்டிருக்கிறது என்பது எவ்வளவு நிதர்சனம்.

முகம்மதுக்கு இஸ்லாமியர்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை பில்ட்டப்புகளையும் இந்த ஒற்றை ஹதீஸ் தகர்த்து விட்டதுமரணத் தருவாயில் முகம்மது கூற விரும்பியது என்ன? “எனக்குப் பிறகு நீங்கள் வழி தவறிவிடாதிருக்க என்று கூறியிருக்கிறார் என்றால்வழி தவறி விடுவார்கள் என்று முகம்மது எண்ணியிருக்கிறார்அதை சரிப்படுத்த வேண்டும் என்றும் முயன்றிருக்கிறார்என்றால் முகம்மது சரிப்படுத்த விரும்பிய வழி எதுதற்போதைய இஸ்லாத்திற்கும் முகம்மது கூற விரும்பிய கொள்கைக்கும் இடையே வேறுபாடு இருக்கிறதாதங்களை இஸ்லாமியர்களாக கருதிக் கொள்வோர் எவரேனும் பதிலளிக்க முன்வருவார்களா?