வியாழன், 30 மே, 2013

கடவுள் நம்பிக்கை குறைகிறது!





2005 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 87 சதவிகி தத்தினர் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். இப்பொழுது எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு கணக்கெடுப்பு மேற்கொண்ட போது அதில் ஆறு சதவிகிதம் குறைந்து 81 சதவிகிதத்தினரே கடவுள் நம்பிக்கை உள்ள வர்களாக உள்ளனராம்.

இதுபோன்ற கணக்குகள் துல்லியமாக இருக்கின்றனவா என்பது கேள்விக் குறியே! இன்னும் கூடுதலாக நாத்திகர்கள் இருக்கக் கூடும்.

சீனாவில் 14 சதவிகிதத்தினரும், ஜப்பானில் 16 சதவிகிதத்தினரும், செக் குடியரசில் 20 சத விகிதத்தினரும், பிரான்சில் 37 சதவிகிதத் தினரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
அறிவியல் அறிஞர்களைப் பொறுத்தவரை பெரும் அளவில் நாத்திகர்களே. அமெரிக்கா விலிருந்து வெளிவரும் நேச்சர் (இயற்கை) என்ற இதழ் உலகம் முழுவதும் உள்ள ஆயிரம் அறிவியல் அறிஞர்களிடம் கடவுள் பற்றிய வினாவைத் தொடுத்திருந்தது.

93 விழுக்காட்டினர் 1999இல் தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்த தாகவும் 1993ஆம் ஆண்டிலோ அது 85 விழுக்காடு என்று நேச்சர் இதழ் தெரிவித்தது. 1914ஆம் ஆண்டிலே விஞ்ஞானிகள் 72 விழுக் காட்டினர் கடவுள் மறுப்பாளர்களாக இருந்தனர்.

                     -----------------------------------------(ராணி 11.7.1999).

ஆண்டுகள் வளர வளர நாத்திகர்களின் எண்ணிக்கையும் வளர்கிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (5.6.2010) ஒரு தகவலைக் கூறியதுண்டு.

"கடந்த பத்து ஆண்டுகளாக நடந்த ஆய்வில் இவ்வுலகில் 50 முதல் 70 கோடி மக்கள் வரை கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
அய்ரோப்பில் நாத்திகம் பரவலாக உள்ளது. அமெரிக்காவில் 2007இல் 5 விழுக்காட்டினரும், 2008 இல் 19 விழுக்காட்டினரும் நாத்திகர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

வியட்நாம் 81, சுவீடன் 46.85, டென்மார்க் 43.80, நார்வே 31.72, ஜப்பான் 64.65; செக் குடியரசு 54.61; பின்லாந்து 26.80, பிரான்சு 43.54, தென் கொரியா 30.52, எஸ்டோனியா 49 விழுக்காடு மக்கள் நாத்திகர்கள் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது (5.6.2010).

அதற்கு இரண்டாண்டுகளுக்குமுன்  இதே டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (13.6.2008) முக்கியமானதோர் தகவலை வெளியிட்ட துண்டு. Brainy People Outlive others by 15 years  என்ற தலைப்பில் வெளியான தகவல் அது.

அதிக மூளைத்திறன் கொண்டவர்கள் மற்றவர்களைவிட 15 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கிறார்கள் என்றது.

அறிவார்ந்த மக்களின் மூளை மிக மெதுவாகவே மூப்பு அடைவதால், அவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்று இத்தாலி நாட்டு கலாப்ரியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உண்மையிலேயே அவர்களை அறிவாளி களாக்கும் எஸ்.எஸ்.ஏ.டி.எச். என்ற மரபணு வுக்கே தான் நன்றி கூற வேண்டும்.

இன்னொரு தகவல் மிக மிக முக்கியமானது.  உல்ஸ்டர் பல்கலைக் கழக பேராசிரியர் ரிச்சர்ட்லின் தலைமையில் ஆய்வினை மேற் கொண்டவர்கள் அறிவாற்றல் கொண்ட மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்ப தில்லை. அறிவாற்றலுக்கும், நாத்திகத்துக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இனிவரும் காலத்தில் இந்த நிலை தவிர்க்க முடியாதது - கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடையே நிலவும் பக்திகூட சடங்காச்சாரமாக இருக்கிறதே தவிர, கடவுள்மீது அழுத்தமான நம்பிக்கை என்றெல்லாம் ஒன்றும் கிடையாது என்பது வெளிப்படை!
                  --------------------------"விடுதலை” தலையங்கம் 29-5-2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக