செவ்வாய், 25 அக்டோபர், 2011

தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன?


தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று"
- 'தமிழர் சமயம்' என்ற நூலில் தமிழ்ப் பெரும் புலவர், கா.சுப்பிரமணிய(ன்) பிள்ளை

'தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு, புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை'
- "மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு" என்னும் நூலில் பேராசிரியர் அ.கி.
பரந்தாமனார்

'தீபாவளி சமண சமயப் பண்டிகை. பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்கால நாளே தீபாவளியாகும். தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை' (தீபம் - விளக்கு, ஆவலி - வரிசை)
-"சமணமும் தமிழும்" என்ற நூலில் அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி '

ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி" "ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன், இராவணனன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவராயினர்.'-
- "தமிழர் மதம்" மற்றும்"வேளாளர் நாகரிகம்" ஆகிய நூல்களில்
தமிழ்க்கடல் - மறைமலை அடிகள்

தீபாவளியின் உண்மை அறிந்தவர்கள் ஒரு சிலரே ஆவார்கள். பெரும்பாலோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார் அந்த அரக்கனை அழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். நரகாசுரனைக் கொன்ற காரணத்தால் கொண்டா டப்படுவது தீபாவளி என்பது பிழை. ஓர் அசுரனைக் கொன்றதற்காக ஒரு கொண்டாட்டம் இருக்க முடியாது. அப்படி-யானால் இரணியன், இராவணன், இடும்பன் மகன் சலந்தரன், அந்தகன் முதலிய அரக்கர்-களைக் கொன்றதற்கு கொண்டாட்டம் இருக்க-வேண்டும். ஆகவே நரகாசுரனைக் கொன்ற-தற்கும் தீபாவளிக்கும் தொடர்பு இல்லை என உணர்க. நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டது அன்று.
- வாரியார் விரிவுரை விருந்து நூலில் திருமுருக கிருபானந்தவாரியார்.

1 கருத்து:

  1. நல்ல கருத்துகளை தொகுத்தளித்தமைக்கு நன்றி, அறிவொளி ஏற்றும் பணி தொடர்க. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு