திங்கள், 9 ஜனவரி, 2012

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3


ஆரம்பத்தை நோக்கி: பகுதி 7


11. மாரியா

                எகிப்திலிருந்து கிடைத்த அழகிய பரிசு என அவர்களால் குறிப்பிடப்படுகிறார்அலெக்ஸான்டரியாவின் கவர்னருக்கு இஸ்லாமை ஏற்க கூறி ஹாபித் பின் அபூ பல்தா என்பவரை தூதுவராக அனுப்புகிறார். முஹம்மது நபியின் ரசனையை தெரிந்த, அலெக்ஸான்டரியாவின் கவர்னர் சாதுர்யமாக மறுத்து, நபி (ஸல்) அவர்களுக்கு, தன்னிடமிருந்த அழகிய இரண்டு பெண் அடிமைகளை பரிசாக வழங்குகிறார்.
இஸ்லாமை ஏற்க கோரிக்கை வைக்கப்பட்டால், கோரிக்கை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம் ஆனால் பெண்களை பரிசாக அனுப்பப்பட்டது ஏன்? முதலில் அச் செய்தி கோரிக்கை  என்பது தவறு இறுதி எச்சரிக்கை என்று கூறுவதே பொருத்தமானது. இஸ்லாம் வாள்முனையில்தான் விரிவடைந்தது என்பதற்கு உதாரணம்,
ஓமன் நாட்டு மக்களுக்கு நபி அனுப்பிய செய்தி
ஓமன் நாட்டின் ஜுலந்தா சகோதரர்களுக்கு (Julanda Brothers) முஹம்மது நபி தன் சகாக்கள் ‘அமர் பின் அல்-‘அஸ் அல்-சஹமி மற்றும் அபு ஜையத் அல்-அன்சாரி’ மூலமாக அனுப்பிய செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன்  ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை  உங்களுக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உங்கள் வலிமை அழிக்கப்படும். என் குதிரைகள் உங்கள் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உங்கள் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.”
[அரபி மொழியில் எழுதப்பட்ட இந்த கடிதம் "ஓமன் நாட்டின் சோஹார் கோட்டையில், பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது]
சோஹருக்கு முஹம்மதுவின் செய்தியாளர்கள் வந்துச் சென்ற இரண்டரை நூற்றாண்டுகளுக்கு பின்பு, சரித்திர ஆசிரியர் அல்-பலதூரி  கீழ் கண்டவாறு விவரிக்கிறார்.
“ஓமன் நாட்டு மக்கள் சத்தியத்தின் ஆதாரத்திற்கும், மற்றும் அல்லாஹ்விற்கும் அவரது நபிக்கும் கீழ் படிவதற்கு உறுதியளித்தபோது, அமர், அவர்களது அமீர் மற்றும் அபு ஜையத் இவர்கள் தொழுகையை நடத்துவதற்கும், இஸ்லாம் பற்றி விவரிப்பதற்கும், குர்‍ஆனை கற்றுக் கொடுப்பதற்கும் மற்றும் இஸ்லாம் மதத்தின் வழிமுறைகளைக் கற்றுக் கொடுப்பதற்கும் பொறுப்பாளிகளாக்கப்பட்டார்கள்.”
ஆனால் அல்லாஹ் குர்ஆனில் (2:256),
(இஸ்லாம்) மார்க்கத்தில் எவ்வித நிர்பந்தமும் இல்லை; நேர்வழியாகிறது வழிகேட்டிலிருந்து (பிரிந்து) திட்டமாகத் தெளிவாகிவிட்டது.
என்றும்
(நபியே) மக்களாகிய அவர்களை நேர்வழியில் செலுத்துவது உம்மீது (கடமை) யில்லை எனினும், அல்லாஹ்தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்                                    
(குர்ஆன் 2:256)
குர்ஆனின் அறிவுறுத்தலுக்கு முரண்பட்ட செயல். குர்ஆன் தனக்குதானே முரண்படுவதையும் பின்னர் காணலாம். இப்பொழுது, மரியாவின் கதைக்கு வருவோம்.
அவர்களில் ஒருவர் மரியா மற்றொருவர் ஷிரின். இருவரும் சகோதரிகள். எகிப்திய உயர்குல கிருஸ்துவ தந்தைக்கும் கிரேக்க தாய்க்கும் பிறந்தவர்வர்கள். வெள்ளை நிறத்துடன் சுருள் சுருளாக கருமையான கூந்தலும் கொண்டவர்  என்று அவரது அழகை குறிப்பிடுகின்றனர்.  முஹம்மது நபி அவர்கள் தன்னுடைய அறுபதாம் வயதில் பதினேழு வயதான மரியாவுடன் வாழ்க்கையைத் துவங்கினார்.  ஷிரினை, முஹம்மது நபி  விரும்பவில்லை செய்யவில்லை காரணம் அவர் ஒரு அரவாணி.  முஹம்மது நபி , தன்னுடைய கவிஞர் ஹசன் பின் தாபித்திற்கு ஷிரினை பரிசாக வழங்கினார். முஹம்மது நபி அவர்களுடன் மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். ஹிஜ்ரி 16 ம்ஆண்டு காலமானார். இவர்களுக்கு இப்ராஹிம் என்ற ஆண் குழந்தை பிறந்தது. நபி (ஸல்) அவர்களின் மனைவிகளில், முதல் மனைவி கதீஜாவிற்கு பிறகு குழந்தையை கொடுத்தவர் மரியா மட்டுமே. அக்குழந்தையும் பதினெட்டு மாதங்களில் இறந்தது. குழந்தை இப்ராஹிம் இறந்த அன்று சூரியகிரகணம் ஏற்பட்டது.  முஹம்மது நபி அவர்களுடன் இருந்த மக்கள் குழந்தை இப்ராஹிம் மரணமடைந்த காரணத்தால்தான் சூரியகிரகணம் ஏற்பட்டது என்று கூறினர்.
Bukhari 2.018.153
The sun eclipsed in the life-time of Allah’s Apostle on the day when (his son) Ibrahim died. So the people said that the sun had eclipsed because of the death of Ibrahim. Allah’s Apostle said, “The sun and the moon do not eclipse because of the death or life (i.e. birth) of some-one. When you see the eclipse pray and invoke Allah.”
Adds that when the sun eclipsed Muhammad ?he led the people in prayer,? by then the sun (eclipse) had cleared. He delivered the Khutba (sermon) and after praising and glorifying Allah he said, “The sun and the moon are two signs against the signs of Allah; they do not eclipse on the death or life of anyone. So when you see the eclipse, remember Allah and say Takbir, pray and give Sadaqa.” The Prophet then said, “O followers of Muhammad! By Allah! There is none who has more ghaira (self-respect – honor) than Allah as He has forbidden that His slaves, male or female commit adultery (illegal sexual intercourse). O followers of Muhammad! By Allah! If you knew that which I know you would laugh little and weep much.
Bukhari 2.018.161
“The Prophet then said, “The sun and the moon are two of the signs of Allah. They eclipse neither because of the death of somebody nor because of his life (i.e. birth). So when you see them, remember Allah.” The people say, “O Allah’s Apostle! We saw you taking something from your place and then we saw you retreating.” The Prophet replied, “I saw Paradise and stretched my hands towards a bunch (of its fruits) and had I taken it, you would have eaten from it as long as the world remains. I also saw the Hell-fire and I had never seen such a horrible sight. I saw that most of the inhabitants were women.” The people asked, “O Allah’s Apostle! Why is it so?” The Prophet replied, “Because of their ungratefulness.” It was asked whether they are ungrateful to Allah. The Prophet said, “They are ungrateful to their companions of life (husbands) and ungrateful to good deeds. If you are benevolent to one of them throughout the life and if she sees anything (undesirable) in you, she will say, ‘I have never had any good from you.’ “
இவ் ஹதீஸ்களின் முன்பகுதியில், கிரகணங்கள் யாருடைய மரணத்திற்காகவும் நிகழ்வதில்லை என்று பகுத்தறிவு வாதம் கூறும் நபி (ஸல்), பிற்பகுதியில் சிறிதும் தொடர்பற்ற வகையில் கள்ளத் தொடர்பு  என்னும் கூடா ஒழுக்கம் கொள்ளும் பெண்களால் நரகம் நிரம்பி இருக்கும் காட்சியை காண்பதாக கூறுகிறார்.  கதீஜா அம்மையாரைத் தவிர வேறு எந்த மனைவியிடமும் நபியின் வாரிசுகள் உருவாகவில்லை என்பதையும், நபியின் வீட்டு அடிமைப் பெண்களில் ஒருவர் மீது கள்ளத் தொடர்பு குற்றச்சாட்டு இருந்ததாக புஹாரி கூறுவதையும்  நினைவில் கொள்ள வேண்டும்.

12. ரைஹானா

புஹாரி ஹதீஸ் -2813
ஆயிஷா (ரலி)அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரி 4 அல்லது 5ஆம் ஆண்டில் நடந்த) அகழ் போரின் போது (போரின் முடிந்து) திரும்பி வந்து ஆயுதங்களை கீழே வைத்து விட்டு குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) தமது தலையை புழுதி மூடியிருக்க வந்தார்கள். நபி (ஸல்) அவர்களை நோக்கி நீங்கள் ஆயுதத்தை கீழே வைத்து விட்டீர்களா அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை கீழே வைக்கவில்லை என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் எங்கே (போர் புரியப்) போகிறீர்கள் என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் இதோ இங்கே! என்று பனூ குறைழா (என்னும் யூதக்) குலத்தினரை (அவர்கள் வசிக்கும் இடம்) நோக்கி சைகை காட்டினார்கள். ஆகவே அல்லாஹ்வின் தூதரும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்.
புஹாரி ஹதீஸ் -4118
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்ம் கிளையாரின் குறுகலாள வீதியில் நபி (ஸல்) அவர்கள் பனூ குறைழா குலத்தாரை நோக்கிச் சென்ற போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது படை பரிவாரங்களுடன் கம்பீரமாக பவனி வந்ததால் கிளம்பிய புழுதியை (இப்போது கூட) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
பனூ குறைழா யூதர்கள் போர் புரிய அஞ்சி கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டனர். பனூ குறைழா முற்றுகை இருபத்திஐந்து நாட்கள் நீடித்தது. பெரிதாக போர் எதுவும் நிகழவில்லை. வேறு வழியின்றி பனூ குறைழா யூதர்கள் நிபந்தனையின்றி சரணடைந்தனர். சரணடைவதற்கு முன்னால், முஹம்மது நபி என்ன தீர்ப்பு வழங்குவார்கள் எனபதைத் தெரிந்து கொள்ள தங்களிடம் நட்பாக இருக்கும் முஸ்லீம் அபூலுபாபாவை தூது அனுப்ப நபி (ஸல்)அவர்களிடம் கேட்டுக் கொண்டனர். அபூலுபாபா யூதர்களிடம் சென்ற பொழுது அங்கிருந்த யூத பெண்களும் குழந்தைகளும் அழுவதைக் கண்டு மனம் இளகிவிட்டார். தங்களுக்கு எந்தவகையான தீர்ப்பு வழங்கப்படும் என்று கேட்டனர் அதற்கு தலையை சீவுவது போல சைகை காட்டினார். நபியவர்களின் ரகசிய தீர்ப்பை வெளிப்படுத்தியதன் மூலம், நபி(ஸல்) அவர்களுக்க துரோகம் செய்துவிட்டதாக அபூலுபாபா மிகவும் வருந்தினார். தீர்ப்பு தெளிவாக தெரிந்த பின்னரும் தங்களின் கோட்டைகளிலிருந்து வெளியேறி நபி (ஸல்) அவர்களிடம் எவ்வித நிபந்தனைகளுமின்றி சரணடைந்தனர்.
முஹம்மது இப்னு மஸ்லமாவிடம் ஆண்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். பனூ குறைழா யூதஆண்கள் அனைவருக்கும் கைவிலங்கிடப்பட்டது. பெண்களும் குழந்தைகளும் தனியே நிற்க வைக்கப்பட்டனர். அவ்ஸ் என்ற யூத குழுவினர், நபி (ஸல்)அவர்களிடம் பனூ குறைழா யூதர்களிடம் நல்லமுறையில் நடந்து கொள்ள கோரிக்கை வைகின்றனர். அதற்கு “உங்கள் இனத்தைச் சேர்ந்தவர் இவர்கள் விஷயத்தில் தீப்பு செய்தால் ஏற்றுக் கொள்வீர்களா?” என வினவ அவர்கள் ஒப்புக்கொண்டனர். எனவே தீர்ப்பை யூதராக இருந்து முஸ்லீமாக மாறிய ஸாத் பின் முஅத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ஸாத் பின் முஅத் அகழ் போரில், அம்பு பாய்ந்ததால் ஏற்பட்ட காயம் காரணமாக மதீனாவில் தங்கியிருந்தார் அவர் வரவழைக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கும் பணிஅவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புகாரி ஹதீஸ் -4121
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது.
சஅத் பின் முஅத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக்கொண்டு (யூதர்களான) பனூ குறைளா குலத்தார் (தங்கள் கோட்டைகளிலிருந்து) இறங்கி வந்தனர். அப்போது நபி (ஸல்) சஅத் பின் முஅத் அவர்களுக்கு ஆளனுப்பிட , அன்னார் கழுதையின்மீது (சவாரி செய்தபடி) வந்தார்கள். (நபி (ஸல்) தற்காலிகமாக அமைத்திருந்த) தொழுமிடத்திற்கு அருகே அன்னார் வந்து சேர்ந்ததும்,  நபி (ஸல்) அவர்கள், உங்கள் தலைவரை …அல்லது  உங்களில் சிறந்தவரை …நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கி விடு)ங்கள் என்று அன்சாரிகளிடம் சொன்னார்கள். பிறகு, (சஅதே) இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கிவந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறீர்கள்) என்று கேட்டார்கள். சஅத் (ரலி), இவர்களில் போரிடும் வலிமை கொண்டவர்களை நீங்கள் கொன்றுவிட வேண்டும், இவர்களுடைய பெண்களையும், குழந்தைகளையும் நீங்கள் கைது செய்திடவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன் என்றார்கள். நபி கூறினார்; அல்லாஹ்வின் தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள் …அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள் என்று சொன்னார்கள்.
முஹம்மது நபி விரும்பியவாறே தீர்ப்பு கூறிய, சஅத் பின் முஅத் அவர்கள்  அம்பு தைத்த காயத்தின் காரணமாக கடுமையாய் நோய்வாய்ப்பட்டார்
புகாரி ஹதீஸ்  : 4122         
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
…(காயப்படுத்தப்பட்டு இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்த சமயம்) சஅத் (ரலி) அவர்கள், இறைவா! உன்னுடைய தூதரை நம்பாமல் அவர்களை (ஊரை விட்டு) வெளியேற்றிய சமுதாயத்தாரை எதிர்த்து உன் பாதையில் போர்புரிவதே மற்ற எதையும் விட எனக்கு மிகவும் விருப்பமானது என்பதை நீ அறிவாய். இறைவா! எங்களுக்கும் (குறைஷிகளான) அவர்களுக்கும் இடையிலான போரை நீ (இத்துடன்) முடிவுக்கு கொண்டு வந்துவிட்டாய் என்று நான் எண்ணுகிறேன். குறைஷிகளுடனான போர் ஏதேனும் மீதியிருந்தால் அதற்காக என்னை உயிருடன் இருக்கச் செய். நான் உன் வழியில் போர் புரிவேன். போரை (இத்துடன்) நீ முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் (காயும் நிலையில் இருக்கும் எனது காயத்தை) மீண்டும் (இரத்தம்) கொப்பளிக்கச் செய்து அதிலேயே எனக்கு மரணத்தை அளித்துவிடு என்று பிரார்த்தித்தார்கள். அன்னாரது நெஞ்சுப் பகுதியிலிருந்து (இரத்தம்) பீறிட்டது. (அவர்களது கூடாரத்திற்கு அருகில்) கூடாரம் அமைத்திருந்த பனூ ஃகிபார் குலத்தாருக்கு சஅத் அவர்களுடைய கூடாரத்திலிருந்து தங்களை நோக்கி வழிந்தோடி வரும் இரத்தம் தான் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது மக்கள் கூடாரவாசிகளே! உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கி(ப் பாய்ந்து) வருகிறதே, இது என்ன என்று கேட்டுக் கொண்டு, அங்கே பார்த்த போது காயத்திலிருந்த இரத்தம் வழிய சஅத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அந்தக் காயத்தினாலேயே சஅத் (ரலி) அவர்கள் இறந்தார்கள். அல்லாஹ் அன்னாரைக் குறித்து திருப்தி கொள்வானாக.
புகாரி ஹதீஸ்:3803
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சஅத் பின் முஆத் அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறை சிம்மாசனம் அசைந்தது-(34). இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து இதே ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதர் ஜாபிர் (ரலி) அவர்களிடம், பராஉ (ரலி) அவர்கள், சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைச் சுமந்து சென்ற (ஜனாஸாப்) பெட்டி தான் அசைந்தது என்று சொன்னதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், இந்த (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்) இரு குடும்பங்களுக்கிடையே குரோதங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள், சஅத் பின் முஆத் அவர்களின் இறப்பிற்காகக் கருணையாள(னான இறைவ)னின் சிம்மாசனம் அசைந்தது என்று சொல்ல நான் கேட்டிருக்கின்றேன் என்று பதிலிளத்தார்கள்.
(இந்த  கொடூரமான தீர்ப்பு கூறியவரின் மரணத்திற்காக இறைவனின் சிம்மாசனம் அசையுமா?ஏன்? சஅத் பின் முஅத்-ன் மரணத்தை அல்லாஹ்வால் தாங்கிக் கொள்ள முடியவில்லையா?)
                சஅத் பின் முஅத் அவர்களின்  தீர்ப்பை நிறைவேற்ற, போரிடும் வலிமையுள்ள ஆண்களைக் கண்டறிவதற்காக, ஆண்களில் பருவ வயதடைந்தவர்களை கண்டறிய அவர்களது ஆடைகள் கழற்றப்பட்டு அவர்களது உறுப்புகள் பரிசோதனை செய்யப்பட்டது அங்கு வெளிப்படையாக முடி முளைக்கப் பெற்றவர்களை பருவவயதடைந்தவர்களாக (ஆயுதம் ஏந்தி போரிடும் வலிமையுள்ளவர்களாக) கருதப் பெற்று கொலைக்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.
Sunan Abu-Dawud Book 38, Number 4390:
Narrated Atiyyah al-Qurazi:
I was among the captives of Banu Qurayzah. They (the Companions) examined us, and those who had begun to grow hair (pubes) were killed, and those who had not were not killed. I was among those who had not grown hair.
(அவ்வாறான சோதனையில் தன்னுடைய மறைவிடங்களில் முடிமுளைக்கப் பெறாத காரணத்தால் தான் கொல்லப்படவில்லை என்பதை யூதராக இருந்து முஸ்லீமாக மாறிய அதிய்யா அல் குரஸி என்ற ஸஹாபி அறிவிக்கிறார்)
The text of Sirat [Ibn Ishaq, page 464]:
Then they surrendered, and the apostle confined them in Medina in the quarter of d. al-Harith, a woman of B. al-Najjar. Then the apostle went out to the market of Medina (which is still its market today) and dug trenches in it. Then he sent for them and struck off their heads in those trenches as they were brought out to him in batches. Among them was the enemy of Allah Huyayy b. Akhtab and Ka`b b. Asad their chief. There were 600 or 700 in all, though some put the figure as high as 800 or 900. As they were being taken out in batches to the apostle they asked Ka`b what he thought would be done with them. He replied, ‘Will you never understand? Don’t you see that the summoner never stops and those who are taken away do not return? By Allah it is death!’ This went on until the apostle made an end of them.
Huyayy was brought out wearing a flowered robe in which he had made holes about the size of the finger-tips in every part so that it should not be taken from him as spoil, with his hands bound to his neck by a rope. When he saw the apostle he said, ‘By God, I do not blame myself for opposing you, but he who forsakes God will be forsaken.’ Then he went to the men and said, ‘God’s command is right. A book and a decree, and massacre have been written against the Sons of Israel.’ Then he sat down and his head was struck off.
(முஹம்மது நபி மதீனா சென்று அங்குள்ள கடைத் தெருவில் ஒரு பெரிய பள்ளம் தோண்ட ஏற்பாடு செய்தார். அப்பணியில் கைது செய்யப்பட்டவர்களும் ஸஹாபாக்களும் ஈடுபட்டனர். இந்த வண்ணமயமான நிகழ்ச்சியைகான மதீனாவாசிகள் அனைவரும் திரண்டுவந்தனர். கைதிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவாக கொலைக்களத்திற்கு கொண்டுவரப்பட்டனர். கைதிகளின் தலை தலையை வெட்டும் பணியில் முக்கிய தலைவர்கள் அபூபக்கர், உமர் போன்றவர்கள் ஈடுபட்டனர்.  சுமார் 800 – 900 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
பனூ குறைழா யூதர்களின் தலைவர், காப் பின் அஸதின் தலையை, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் அக்பர் என தக்பீர் முழக்கததுடன் வெட்டி வீழ்த்தி தலையை வெட்டும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.  மற்ற கைதிகளின் தலைகளும் துண்டிக்கப்பட்டது அவர்கள் அணிந்திருந்த உடைகளை ஸஹாபாக்கள் தங்களின் தேவைகளுக்காக எடுத்துக் கொண்டனர்.
பனூ நதீர் என்ற யூதகுல தலைவர் ஹூயயை பின் அக்தப் (ஷஃபியாவின் தகப்பனார்), பனூ குறைழாவினருக்கு உதவி செய்ய வந்தவர் அவரும் கைது செய்யப்பட்டிருந்தார். எப்பொழுதும் ஆடம்பரமாக ஆடையணிபவர். தன்னை கொலை செய்த பின்னர் தன்னுடைய உடையை யாரும் எடுக்கக்கூடாது என்ற நோக்கத்தில் உடைமுழுவதும் சிறிய துளைகளாக கிழித்துக் கொணடார். எனவே அவர் அணிந்திருந்த ஆடையை முஸ்லீம்களால் கைப்பற்ற முடியவில்லை!
Bukhari  Book 14, Number 2665:
Narrated Aisha, Ummul Mu’minin:
No woman of Banu Qurayzah was killed except one. She was with me, talking and laughing on her back and belly (extremely), while the Apostle of Allah (peace_be_upon_him) was killing her people with the swords. Suddenly a man called her name: Where is so-and-so? I asked: What is the matter with you? She said: I did a new act. The man took her and beheaded her. I will not forget that she was laughing extremely although she knew that she would be killed.
(பனூ குறைழா நிகழ்ச்சியில் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டார். காரணம் தன்னுடைய கணவரையும், உறவினர்களையும் கொடுரமாக கொல்லப்பட்டதைக் கண்டதால் மனநிலை பாதிக்கப்பட்டு அளவு கடந்து உரக்க சிரித்துக் கெண்டிருந்ததால், நபி (ஸல்) உத்தரவின்படி அப்பெண் கொல்லப்பட்டார்.)
Then the apostle divided the property, wives, and children . . . among the Muslims, and he made known on that day the shares of horse and men, and took out the fifth. A horseman got three shares, two for the horse and one for the rider. A man without a horse got one share (p. 466). Then the apostle sent Sa’d b. Zayd al-Ansari brother of b. ‘Abdu’l-Ashhal with some of the captive women of B. Qurayza to Najd and he sold them for horses and weapons. [page 466]
பனூ குறைழாவினரின் செல்வம், பெண்கள், குழந்தைகள், கால்நடைகள்  போரில் கலந்து கொண்ட முஸ்லீம்களுக்கு வீரர்களுக்கு ஒரு பங்கும், அவர்களது குதிரைகளுக்கு இரண்டு பங்குகள் என்ற முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஐந்தில் ஒரு பகுதியை அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உரியது என நபி (ஸல்) எடுத்துக் கொண்டார்.
போரில் கொள்ளையடிக்கப்பட்ட  உடைமைகள்  பகிர்ந்தளிக்கப்பட்டதிற்கு அல்லாஹ்வின் சட்ட விளக்கம்.
(முஃமின்களே) நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் (போரில்) கனீமத்தாகப் பெற்ற பொருளிலிருந்து நிச்சயமாக அல்லாஹ்வுக்கும் (அவன்) ரஸூலுக்கும் (அவருடைய) உறவிர்களுக்கும் ஐந்திலொன்று உரியதாகும்…
(குர்ஆன் 2:256)
The History of Tabari, vol 8, page 29-30
From his share of captive women, prophet gave his son-in-law, Ali a slave girl, Raytah bt Hilal to enjoy her at his will. He also presented Uthman b. Affan, his son-in-law, another slave girl Zainab b. Hayan, and bestowed another girl (name unknown) to his father in-law Omar Ibn Khattab. Omar gave that girl to his son Abdullah. Most of Prophet’s other elite companions received slave girls as gifts
(தன்னுடைய பங்கிலிருந்த அடிமைப் பெண்களை மருமகன்களுக்கு வழங்கினார். ரைத்தாஹ் பின்த் ஹிலால் என்ற பெண்ணை அலிக்கும், ஜைனப் பின்த் ஹையன் என்ற பெண்ணை உஸ்மானுக்கும் மேலும் தன்னுடைய மாமனார் உமருக்கும் ஒரு பெண்ணை வழங்கினார். உமர் அப்பெண்ணை தன்னுடைய மகன் அப்துல்லாவிற்கு பரிசாக கொடுத்துவிடடார்.)
The apostle had chosen one of their women for himself, Rayhana bint Amr . . . one of the women of . . . Qurayza, and she remained with him until she died, in his power. The apostle had proposed to marry and put a veil on her, but she said: “Nay, leave me in your power, for that will be easier for me and for you.” So he left her. She had shown repugnance towards Islam when she was captured and clung to Judaism. (Ibn Ishaq p. 466)
(ரைஹானா என்ற பதினைந்து வயது அழகிய பெண்ணை நபி (ஸல்) தனக்காக தேர்ந்தெடுத்தார். நபி (ஸல்) அவர்களின் அதிகாரத்தின் கீழே கடைசிவரை ரைஹானா இருந்தார். ரைஹானாவை திருமணம் செய்ய நபி (ஸல்) விரும்பினார் ஆனால், நபி (ஸல்) அவர்களின் அதிகாரத்தின் கீழே அடிமையாக இருப்பதே தனக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் சுலபமானது எனக் கூறி மறுத்துவிட்டார். அவர் இஸ்லாமின் மீது கடும் வெறுப்பை காண்பித்து, இறுதி வரையிலும் யூத நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்)
Tabari VIII: 39
“Then the Messenger of Allah sent Sa’d bin Zayd with some of the Qurayza captives to Najd, and in exchange for them he purchased horses and arms.”
(குதிரைகளையும், ஆயுதங்களையும் பண்டமாற்று முறையில் வாங்க நஜ்த்திற்கு, ஸாத் பின் ஜைத் என்பவரை சில பனூ குறைழா அடிமைகளுடன் நபி (ஸல்) அனுப்பிவைத்தார்)
பனூகுறைழா நிகழ்ச்சியை குர்ஆனின் 33: 26,27 குறிப்பிடுகிறது,
  1. வேதக்காரர்களிலிருந்து அவர்களுக்கு (பகைவர்களுக்கு) உதவி செய்தார்களோ அவர்களை அவர்களுடைய கோட்டைகளிலிருந்து அவன் இறக்கிவைத்து, அவர்களுடைய உள்ளங்களில் திடுக்கத்தையும் போட்டான்; (அவர்களிலிருந்து) ஒரு பிரிவினரை நீங்கள்  வெட்டினீர்கள்; மற்றொரு பிரிவினரை நீங்கள்  சிறைப்பிடித்தீர்கள்.
  2. அவர்களுடைய பூமி, அவர்களுடைய வீடுகள், அவர்களுடைய பொருட்கள் இன்னும (இதுவரை) எதனை நீங்கள் மிதிக்கவில்லையோ அத்தகைய (இதர பூமி ஆகியவற்றிற்கு உங்களை வாரிசாக்கினானான்.-அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவனாக இருக்கிறான்.
அல்லாஹ்விற்கு, தன் அடியார்களின் பொருளாதாரத் தேவைகளுக்கு, கல்வி, அறிவு, தொழில் நுட்பங்களின் மூலமாக அருளை ஏன் வழங்கத் தெரியவில்லை? இனப்படுகொலை, கொள்ளையடித்தல் என மூன்றாம் தர கொள்ளைக்காரான மாறியது ஏன்? (264 ஆயிரம்  கோடி ரூபாயை துச்சமாக நினைத்து தானம் செய்தவரா இவர்?)
திருட்டு, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் கைகளை துண்டித்து விட  குர்ஆன் கூறுகிறது.
திருடனும், திருடியும்- அவ்விருவரும் சம்பாதித்ததிற்கு பிரதியாக அல்லாஹ்விலிருந்துள்ள தண்டனையாய் அவ்விருவரின் கைகளை நீங்கள் துண்டித்து விடுங்கள்;…
(குர்ஆன் 5:38)
அவ்வாறு தண்டிக்கப்பட்டவர்களின் செய்தியைப் பார்ப்போம்
புஹாரி ஹதீஸ் :   6802      
 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
உக்ல் குலத்தைச் சேர்ந்த சிலர் நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆகவே, அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச் சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல், அந்த ஒட்டகங்களின் மேய்ப்பரை கொலையும் செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். ஆகவே, (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களுக்குப் பின்னால் நபி (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அவர்கள் பிடித்துவரப்பட்டு, அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டி அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு  அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அந்த நிலையிலேயே சாகும்வரை விட்டுவிடச் செய்தார்கள்.
புஹாரி  ஹதீஸ் : 6803       
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது
உரைனா குலத்தாரின் கை கால்களை நபி (ஸல்) அவர்கள் வெட்டச் செய்தார்கள். அவர்கள் இறக்கும் வரை அவர்களின் காயங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மருந்திடவில்லை.
கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. இதற்கு இவ்வளவு வன்முறை தேவையா? இதில் முஸ்லீம்களின் பொதுச் சொத்து  எவ்வாறு உருவாக்கப்பட்டது நாம் குறிப்பாக கவனிக்க வேண்டும். முஹம்மது நபியால் உருவாக்கப்பட்ட முஸ்லீம்களின் பொதுச் சொத்து மக்களின் வரிப் பணத்தினாலோ, செல்வந்தர்களின் தான, தர்மங்களினாலோ உருவாக்கப்படவில்லை. அது, அப்பாவி மக்களிடம் போரில் கொள்ளையிட்ட பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டது.
உண்மையைச் சொல்வதென்றால், முஸ்லீம்களின் பொதுச் சொத்திற்கு ஒட்டகங்களின் சாணம் கூட உரிமை கிடையாது.  உக்ல் குலத்தைச் சேர்ந்த சிலரால் திருடிச் செல்லப்பட்ட ஒட்டகங்கள், பனூ குறைழா, பனூ நளீர் பனூ முஸ்தலிக் போன்றவர்களிடமிருந்து முஹம்மது நபியால் கொள்ளையடிக்கப்பட்டவைகளே.  கொலை, கொள்ளை, கற்பழிப்புகளில் ஈடுபட்ட முஹம்மது நபியையும் அவரது கூட்டத்தினரையும் தண்டிப்பது யார்?

13. மைமூனா பின்த் ஹரித்

               
முஹம்மது நபி அவர்களைத் திருமணம் செய்வதற்கு முன்பே விவாகரத்தானவர் மற்றும் விதவையானவர். தன்னுடைய ஐம்பத்தி மூன்றாம் வயதில் முப்பது வயதான இவரை ஹஜ் பயணத்தின் பொழுது திருமணம் செய்தார்.  இவர் தானே முன்வந்து நபி அவர்களுக்காக தன்னை அர்பணித்ததாக அறியப்படுகிறது. முஹம்மது நபி  அவர்களின் மற்ற மனைவியரிடம் சக்களத்தி சண்டையிட்டதில்லை. நல்ல குணம் கொண்டவர். ஹிஜ்ரி ஏழில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

14.ஃபாத்திமா

கிலாபி குலத்தை சேர்ந்தவர். இவரை சுருக்கமான முறையில் திருமணம் செய்ததாக அறியப்படுகிறது.

15. ஹெந்த்

கருமியான  அபூ ஷுஃப்யானின் முன்னாள் மனைவியாவார்

16. அஸ்மா பின்த் நுக்மான

அல்ஜஹல் என்பவரின் மகள். இவர் ஒரு தொழுநோயாளி. இவருடன் வாழவில்லை சொர்கத்தில் அல்லாஹ் இடமளிப்பான் என கூறி விவாகரத்து கூறிவிட்டதாக ஹதீஸ்களில் காணப்படுகிறது.

17. அஸ்மா

ஸானா பின்த் அஸ்மா என அழைக்கப்பட்டவர். குறைழா  குலத்துடன் சுமூக உறவு ஏற் பட இவரைத் திருமணம் செய்ததாக காணப்படுகிறது.  நபி (ஸல்) அவர்கள்,   இவருடன் திருமண உறவைத் துவங்குவதற்கு முன் ஸானா பின்த் அஸ்மா இறந்துவிட்டார்.

18. உம்மு ஷரிக்

முந்தையை திருமணத்தின்மூலம் இவருக்கு ஷரிக் என்ற மகனிருந்ததாக அறியப்படுகிறது. தானே முன்வந்து நபிக்கு தன்னை அர்பணம் செய்ததாகவும். மிக வயதான காரணத்தால் இவரை மணவிலக்கு செய்ததாகவும் காணப்படுகிறது.

19. கவ்லா


அல் தபரியின் கூற்றுப்படி நபி (ஸல்) அவர்களின்  மனைவியாவர்.

20. முலைகா பின்த் தாவூத்

இவரை சுருக்கமான முறையில் திருமணம் செய்ததாக அல்-தபரியில் காணப்படுகிறது. முஹம்மதுவிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் எனக் கூறியதால் இவரை நபி (ஸல்) அவர்கள் மணவிலக்கு செய்ததாக  காணப்படுகிறது.

21. அல் ஷன்பா பின்த் அம்ர்

பனூ குரைழா வம்சத்தை சேர்ந்தவர். நபி (ஸல்) அவர்களின்  மகன் இப்ராஹிம் இறந்த பொழுது இவர் உண்மையான நபியாக இருந்தால் இவரது மகன் இறந்திருக்க மாட்டான் எனக் கூறியதால் மணவாழ்க்கை துவங்கும் முன் இவரை மணவிலக்கு செய்ததாக காணப்படுகிறது.

22. அம்ராஹ்  பின்த்  யஜீத்

இவர் ஒரு தொழுநோயாளி. எனவே நபி (ஸல்) அவர்கள் இவருடன் வாழவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக