திங்கள், 9 ஜனவரி, 2012

அகண்ட பாரதம் பேசும் ஆர் எஸ் எஸ் சொறிநாய்கள் முல்லைப் பெரியாறு என்றால் மூடிக் கொண்டு போவதேன்?

 



யப்பனை தரிசிக்கச் சென்ற தமிழக பக்தர்கள் கேரளாவில் தாக்கப்பட்டுள்ளார்கள். தாக்கியவர்களை தண்டிக்க ஐயப்பன் அவதாரம் எடுத்து வரவேண்டாம், குறைந்த பட்சம் இந்துக்களுக்கு, இந்து ராஜ்யம் காண அகண்ட பாரதம் பேசும் ஆர் எஸ் எஸ் அடிமடையர்களாவது குரல் கொடுத்திருக்க வேண்டாமா?கொடுக்கவில்லையே? ஏன்? இவர்களின் அகண்ட பாரதத்தில் தமிழர்களுக்கு இடமில்லையா? அல்லது கேரளாவில் தமிழர்களை தாக்கியதே ஆர் எஸ் எஸ் கோமாண்டிகள் என்பதால் வாயை மூடிக் கொண்டார்களா?

‘இந்து’ பக்தர்களை தாக்கியவர்களை எதிர்க்க வக்கற்ற இந்த சொறிநாய்கள் பாபர் மசூதி இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டு என்று ஆர்பாட்டம் செய்து கைதாகியுள்ளனர். ‘இந்து’ தமிழ் பக்தர்களின் வழிபடும் உரிமையை தடுத்ததை எதிர்க்க வக்கற்றவர்கள் சிரிரங்கம் பார்ப்பனர்களின் வர்ணாஸ்ரம் கொழுப்பேறிய கோயில் உலா சடங்கிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டுகின்றனர். ஆக, ஆர் எஸ் எஸ்ன் அகண்ட பாரத கோமனத்தின் அடிமடி ஓட்டையிலே கேரள முல்லை பெரியாறு கிழிந்து தொங்குகிறது அதை மூடி மறைக்கக் கூட முயற்சி செய்யாமல் மதவெறி, சாதி வெறி பேசி வளம் வருகிறார்கள் சொறிநாய்கள்.

இங்கு ஒரு விசயம் கவனிக்க வேண்டியுள்ளது. கேரளாவில் வாழும் தமிழர்களையோ அல்லது தமிழகத்தில் வாழும் கேரள மக்களையோ யாரும் தாக்கவில்லை. சாதாரண மக்கள் பல்வேறு சமூக நடவடிக்கைகளின் ஊடாக மொழி, இன, மத பேதமின்றி இயல்பாக பழகியே வருகிறார்கள். இவற்றை உடைத்து ஒரு மோதல் நடக்க வேண்டுமென்றால் அது அமைப்பு வழிப்பட்ட முறையினால் மட்டும்தான் நடக்க இயலும். அப்படித்தான் குஜராத்-ஒரிஸ்ஸா-மும்பை இனவெறி தாக்குதல்களாகட்டும், அல்லது காங்கிரசு நடத்திய பஞ்சாப் படுகொலைகளாகட்டும் நடந்துள்ளன.

அத்தகைய அமைப்புகளாக அங்கு மொழி வெறி கிளப்பி சதி வேலைகள் செய்வதில் முன்னணியில் இருப்பவர்கள் ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளும், காங்கிரசும். இவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சி பி எம்மு மொழி வெறி கிளப்பி வருகிறது. தமக்கு வோட்டுப் பொறுக்க வசதியான கேரளாவில் மொழி வெறி கிளப்பி தமிழர்களை தாக்கும் இக்கட்சிகள், இங்கு தமிழர்களின் நலன் என்று ராமர் கோயிலையும், கூடங்குளம் அணு உலையையும் முன்னிறுத்தி ஏய்க்கின்றனர்.

மதவெறியும், சாதிவெறியும், மொழி வெறியும் தான் ஆர் எஸ் எஸ் போன்ற இக்கட்சிகளின் மூலமந்திரம். மக்களை பிரித்து ஏய்க்க இது போல தகிடு தத்தம் செய்யும் தேசிய கட்சிகளையும், மத வெறி பயங்கரவாதிகளையும் ஆப்படித்து அடித்து விரட்டினால் மட்டும்தான் முல்லை பெரியாறு விசயத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியும். அதை செய்ய முதுகெலும்புள்ளவர்கள் அணி திரள வேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக