செவ்வாய், 24 ஜனவரி, 2012

லூத் என்றொரு ”லூஸ்”




மனிதர்களை நல்வழிபடுத்த எண்ணற்ற தீர்க்கதரிசிகளை (நபி) மனிதர்களிடத்தில் அல்லாஹ் அனுப்பியுள்ளதாகவும், அந்த தீர்க்கதரிசிகள் அல்லாஹ்வின் செய்தியை மக்களிடையே கூறி, ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் வாழ்ந்தனர் என்கிறது குர்ஆன்.
ஆனால் உண்மை இதற்கு நேர் எதிரானது. குர்ஆனைப் பொருளுணர்ந்து வாசிக்கும் எவராலும் இதை அறியமுடியும். இந்த முரண்பாட்டை, இஸ்லாமிய அறிஞர்கள் அடைப்புக்குறிகளுக்குள் மறைத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.
இவர்களின் ஏமாற்று வேலையை எளிதாக புரிந்துகொள்ள நாம் இன்று லூத் (லோத்து) என்பவரின் கதையைப் பார்க்கலாம். குர்ஆனில் மிகக் குறைவாக கூறப்பட்டுள்ள கதைகளில் லூத்துவின் கதையும் ஒன்று. அது இவ்வாறு கூறுகிறது,
லூத் (சோதோம்-தற்பொழுதைய ஜோர்டான் பள்ளத்தாக்கு பகுதியில்) தூதராக அல்லாஹ்வால் நியமிக்கப்படுகிறார். இவர் அல்லாஹ்வின் மற்றொரு தூதரன இப்ராஹிமின் நெருங்கிய உறவினர்.
லூத் தனது தூதுப்பணியை செய்து கொண்டிருந்த சோதோம் பகுதில் இருந்த ஆண்கள் அனைவருமே மிகப்பெரிய அளவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்தனர். ஓரினச்சேர்க்கையை எதிர்த்து லூத் செய்த பிரச்சாரங்கள் எதுவும் பயனளிக்கவில்லை. அவர்கள் லூத்தின் அறிவுரைகளை தூக்கி எறிந்தனர். இந்நிலையில் அம்மக்களை அழிக்க அல்லஹ் முடிவு செய்து தனது உதவியாளர்களை (வானவர்கள்) அனுப்புகிறான்.
அந்த வானவர்கள்(உதவியாளர்கள்) முதலில் அல்லாஹ்வின் மற்றொரு தூதரான இப்ராஹிமை சந்திக்கின்றனர். தள்ளாத வயதிலும் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கும் செய்தியைத் தெரிவித்துவிட்டு, லூத்தின் நகரத்தை அழிக்க இருப்பதையும் தெரிவிக்கின்றனர்.
அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது, அறிமுகமற்றவர்களாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். "பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று அவர்கள் கூறினர்.
குர் ஆன் 11:70
இப்ராஹிம் பதறியவாறு, அங்கு லூத் இருப்பதை கூறுகிறார்.
இப்ராஹீமை விட்டு பயம் விலகி, நற்செய்தி வந்த போது, லூத்துடைய சமுதாயம் குறித்து நம்மிடம் தர்க்கம் செய்யலானார்.
குர் ஆன் 11:74
"அங்கே லூத் இருக்கிறாரே'' என்று அவர் கேட்டார். "அங்குள்ளவர்களை நாங்கள் நன்றாக அறிவோம். அவரையும், அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றுவோம். அவரது மனைவியைத் தவிர. அவள் (அழிவோருடன்) தங்கி விடுவாள்'' என்றனர்.
குர் ஆன் 29:32
"இப்ராஹீமே! இதை நீர் விட்டு விடுவீராக! உமது இறைவனின் கட்டளை வந்து விட்டது. தவிர்க்க முடியாத வேதனை அவர்களை வந்தடையும்'' (என்று இறைவன் கூறினான்.)
குர் ஆன் 11:76
"லூத்துடைய குடும்பத்தாரில் அவரது மனைவியைத் தவிர அவர்கள் அனைவரையும் நாங்கள் காப்பாற்றுவோம். அவள் அழிபவள் என்று நிர்ணயித்து விட்டோம்'' என்றனர்
குர் ஆன் 15:59,60
என்று கூறி, அந்த வானவர்கள் சோதோம் நகருக்கு செல்கின்றனர்.
வானவர்கள் (அழகிய) ஆண்கள் உருவில் லூத்தை சந்திக்கின்றனர். தாங்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி அதிகாலையில் சோதோம் நகரை தலைகீழாக புரட்டியும், சூடான கற்களை வீசியும் அழிக்க இருக்கும் திட்டத்தை கூறி, லூத்தையும் அவரது குடும்பத்தினரையும் மட்டும் நகரைவிட்டு பாதுகாப்பாக வெளியேருமாறு அறிவுறுத்திக் கூறுகின்றனர்.
"லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக் கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?'' என்றனர்.
குர் ஆன் 11:81
இதற்குள், லூத்தை சந்திக்க அழகிய ஆண்கள் வந்திருக்கின்றனர் என்ற செய்தி ஊருக்குள் பரவியது. சோதோமின் ஆண்களில் இளைஞர்களும், கிழவர்களும் லூத்தின் இல்லத்திற்குமுன் பெரும் கூட்டமாக கூடி, லூத்தை சந்திக்க வந்துள்ள ஆண்களிடம் தங்களது இச்சையைத் தீர்த்துக்கொள்ள அனுமதிக்குமாறு லூத்தை வற்புறுத்துகின்றனர். தனது விருந்தினர்களுக்கு அவமானம் நேர்ந்துவிடக்கூடாது என்று பதறிய லூத், வெளியில் காத்திருக்கும் அக்கூட்டத்தினரிடம், விருந்தினருக்கு பதிலாக தனது (இரு) மகள்களை வழங்க முன்வருகிறார்.
"இவர்கள் எனது விருந்தினர்கள். எனவே எனக்கு அவமானத்தை ஏற்படுத்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! என்னை இழிவுபடுத்தாதீர்கள்!'' என்று (லூத்) கூறினார்.
குர் ஆன் 15:68,69
அவரது சமுதாயத்தினர் அவரிடம் விரைந்து வந்தனர். இதற்கு முன் அவர்கள் தீமைகளைச் செய்து வந்தனர். "என் சமுதாயமே! இதோ என் புதல்விகள் உள்ளனர். அவர்கள் உங்களுக்குத் தூய்மையானவர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனது விருந்தினர் விஷயத்தில் எனக்குக் கேவலத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்! உங்களில் நல்ல ஓர் ஆண் கூட இல்லையா?'' என்று கேட்டார்.
குர் ஆன் 11:78
"நீங்கள் (ஏதும்) செய்வதாக இருந்தால் இதோ எனது புதல்விகள் உள்ளனர்'' என்று அவர் கூறினார்.
குர் ஆன் 15:71
தனது விருந்தினர்களைப் பாதுகாப்பதே லூத்தின் நேக்கமாக இருந்தாலும், பெரும் இச்சையுடன் இருக்கும் மாபெரும் கூட்டத்தின் தேவையை, லூத்தின் இரண்டு அல்லது மூன்று மகள்கள் தீர்த்துவைக்க முடியுமா? ஒருவேளை அவர்களுக்கு அத்தகைய ஆற்றல் இருந்தாலும் அந்த உறவிற்கு என்ன பொருள்?
                அதாவது லூத் தனது மகள்களை பாலியல் அடிமைகளாக வழங்க முன்வந்திருக்கிறார் என்பதுதான் இதன் நேரடிபொருள் இதை விளங்க எந்த தப்ஸீர் விளக்கவுரையும் தேவையில்லை. முஹம்மதின் காலத்தில் அவருடன் வாழ்ந்த ஸாஹாபாக்களுக்கு இது எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில்    மனைவியர்கள் மட்டுமல்லாது எண்ணற்ற அடிமைப்பெண்கள் என்ற வைப்பாட்டிகளாக வைத்திருப்பது அவர்களின் கலாச்சாரமாக இருந்தது. கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் அவர்களது வாழ்க்கைமுறையாகவே இருந்தது. பெண் என்ற பாலினத்தை  போகப்பொருளாகவே அவர்கள் நினைத்திருந்தனர். உதாரணத்திற்கு, முஹம்மது மெக்கவிலிருந்து தனது (70-80) தோழர்களுடன் குடிபெயர்ந்து மதீனா வந்தவுடன், அவர்களுக்கு பொருள்களையும் தங்களது மனைவியர்களையும் வழங்கி உதவி செய்தனர், என்பதை இன்றும் முஸ்லீம்களும் பெருமையாகக் கூறுவதை நீங்கள் காணலாம். முஹம்மதின் காலத்து மனைவியர்களின் நிலை அவ்வளவுதான். (அந்த விஷயத்தில் முஹம்மது ஒரு ‘Ultra Modern” பேர்வழிதான் போலும்!)
குர் ஆன் 11:78, 15:71-ன் மடத்தனம் பிற்கால இஸ்லாமிய அறிஞர்களுக்கு விளங்கியவுடன், லூத் தனது மகள்களை திருமணத்தின் மூலம் வழங்கவே முன் வந்தார் என்று விளக்கவுரைகளை எழுதி, அல்லாஹ்வின் உளறலை சரிக்கட்டினர்.
குர் ஆனின் 11:78, 15:71 வசனத்திற்கு என்னிடமுள்ள M.அப்துல் வஹ்ஹாப் M.A, B.Th,  K.A.நிஜாமுத்தீன் மன்பயீ, R.K.அப்துல் காதிர் பாகவி ஆகியோர் மொழிபெயர்ப்பு செய்துள்ள மற்றொரு தர்ஜமா இவ்வாறு கூறுகிறது.
... என்னுடைய சமூகத்தினரே! (இதோ!) இவர்கள் என்னுடைய புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணம் செய்து கொள்ள) மிக்க பரிசுத்தமானவர்கள்...
குர் ஆன் 11:78

"நீங்கள் (திருமணம்) ஏதும் செய்வதாக இருந்தால், இதோ என்னுடைய புதல்வியர்கள் இருக்கின்றனர்'' என்று அவர் கூறினார்கள்.
குர் ஆன் 15:71
லூத் திருமணம் செய்து தருவதாகவே கூறினார் என்பதை வாதத்திற்காக ஏற்பதாகக் கொண்டாலும், ஒரு பெரும் கூட்டத்திற்கு ஓரிரு பெண்களை எப்படி திருமணம் செய்து வைக்கமுடியும்? குர் ஆன் கூறும் ஒழுக்கநெறி உங்களுக்குப் புரிகிறதா? ஆனால் அந்த கூட்டத்தினர் தங்களது தேவையைக் குறித்து தெளிவாகவே இருந்தனர்.
"உமது புதல்விகளிடம் எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை என்பதை நீர் உறுதியாக அறிவீர்! நாங்கள் விரும்புவதையும் நீர் அறிவீர்'' என்றனர்.
குர் ஆன் 11:79
மேலும், வானவர்கள் தாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதையும், எவ்வாறு சோதோமை அழிக்க இருக்கிறோம் என்பதையும் லூத்திடம் தெளிவாகவே அறிவித்துள்ளனர். ஊரையே அழிக்க வந்தவர்களால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதா? இங்கு மடையர் அல்லாஹ்வா? இல்லை லூத்தா?
பின்னர் அல்லாஹ்வின் திட்டப்படி சோதோம் அழிக்கப்பட்டது.
 நமது கட்டளை வந்த போது, சுடப்பட்ட கற்களால் அவ்வூரின் மீது கல்மழை பொழிந்து, அதன் மேற்பகுதியைக் கீழ்ப் பகுதியாக்கினோம்.
குர் ஆன் 11:82
சோதோமிலிருந்து தப்பிச்சென்ற லூத் மற்றும் அவரது குடும்பத்தினரான (இரு) மகள்களைத் தவிர அந்த பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும் உயிரோடு சமாதியாயினர்.
தனக்குப் பிடிக்காத ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் லூத் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தவிர சோதோமை அழித்ததாக கூறும் அல்லாஹ், ஒன்றை கவனிக்க மறந்துவிட்டான். சோதோம் பகுதியில் ஆண்கள்மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. அவர்களுக்கென்று பெண்களையும், குழந்தைகளையும் உறுப்பினர்களாக உள்ளடக்கிய குடும்பங்களையும் அழித்ததாகவே இங்கு பொருள் விளங்குகிறது.
ஒரு பாவமும் அறியாத அப்பாவிகளும், பெண்களும், ஏதுமறியாத குழந்தைகளும் கூட ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்தனரா? கொடுமையாகத் தண்டிக்குமளவிற்கு இவர்கள் என்ன தவறு செய்தனர்? இந்த கதையின் மூலம் அல்லாஹ் தனது அடியார்களுக்குக் கூறும் நீதிதான் என்ன?
இனப்படுகொலை!
இது யாருக்குப் புரிந்ததோ இல்லையோ முஹம்மதுவிற்கு நன்றாகவே புரிந்தது. அவர் தனது இறுதி பத்து ஆண்டுகளில் இதைத்தான் மாற்று மத்தினர் மீது நிகழ்த்திக் காட்டினார்.
சோதோமின் அழிவிற்கு உண்மையான காரணம் என்ன? நபி லூத்தின் போதனைகள் சிறிதுகூட பயனளிக்காமல் போனது ஏன்?
இதற்கான பதிலை நான் கூறுவதைவிட தமிழகத்தின் நபியான அறிஞர் P.ஜைனுல் ஆபிதீன் கூறுவதே மிகப் பொருத்தமாக இருக்கும்.  அவரது திருக்குர் ஆன் விரிவுரையின் 81-வது குறிப்பிலிருந்து

81. நேர்வழியில் செலுத்துபவன் இறைவனே!
மனிதர்களை நேர்வழியில் செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அந்த அதிகாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) உள்ளிட்ட எந்த இறைத் தூதருக்கும் இல்லை என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
இறைத் தூதர்கள் மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காகத் தான் அனுப்பப்பட்டனர். மனித உள்ளங்களில் தமது போதனைகளை அவர்களால் சேர்த்து வைக்க முடியாது என்பதை இவ்வசனங்கள் அழுத்தமாகக் கூறுகின்றன.
இதனால் தான் எத்தனையோ இறைத் தூதர்களின் குடும்பத்தினர் தவறான வழி சென்றும் அவர்களால் தமது குடும்பத்தினரை நல்வழிப்படுத்த முடியவில்லை...
onlinepj.com
ஆக, மனிதர்களை நல்வழியை குறித்து சிந்திக்க விடாமல் நேர்வழிக்கு திரும்ப முடியாமல் செய்தது அல்லாஹ்தான். சோதோமின் ஆண்கள் ஓரினச்சேர்க்கையிலிருந்து மீளமுடியாதவாறு செய்ததும் அல்லாஹ்தான். நமது நபி அறிஞர் P.ஜைனுல் ஆபிதீனுக்குப் புரிந்த உண்மையை கூட உணராத லூத் ஒரு நபியா? இந்த அற்ப உண்மையை உணராமல் காலமெல்லாம் போதனை செய்து இறுதியில் தனது மகள்களையே பாலியல் அடிமைகளாக பலியிட முயன்ற நபி லூத் ஒரு லூஸ்தானே?
சரி... தப்பிச்சென்ற லூசு (மன்னிக்கவும்) லூத் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் (மகள்கள்) என்ன ஆனார்கள்?
குர்ஆன் தெளிவான, நன்கு விவரிக்கப்பட்ட, முரண்பாடற்ற புத்தகமாக இருப்பதனால் இதற்கான பதிலை பெற நாம் தலைகீழாக நின்றாலும் குர்ஆனிலிருந்து கிடைக்காது. எனவே முந்தைய வேதமான பழைய ஏற்பாட்டிற்குச் செல்வோம்.
லோத்துவின் கதை பைபிள் பழைய ஏற்பாட்டின் ஆதியாகமத்திலிருந்து...
19:23 சூரியன் உதயமானபோது லோத்து சோவார் நகரத்திற்குள் நுழைந்தான்.
19:24 அதே நேரத்தில் கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்க ஆரம்பித்தார். கர்த்தர் வானத்திலிருந்து நெருப்பையும் கந்தகத்தையும் அந்நகரின் மேல் விழுமாறு செய்து,
19:25 அந்த நகரங்களையும் அதன் முழு சமவெளியையும், அங்கிருந்த செடிகளையும், ஜனங்களையும் அழித்துவிட்டார்.
...
19:30 சோர்வாரில் தங்கியிருக்க லோத்துவுக்கு அச்சமாக இருந்தது. எனவே, அவனும் அவனது மகள்களும் மலைக்குச் சென்று அங்கு ஒரு குகையில் வசித்தனர்.
19:31 ஒரு நாள் மூத்தவள் இளையவளிடம், “உலகில் எல்லா இடங்களிலும் ஆண்களும் பெண்களும் மணந்துகொண்டு குடும்பமாக வாழ்கிறார்கள். ஆனால் நமது தந்தையோ வயதானவராக உள்ளார். நமக்கு குழந்தை தர வேறு ஆண்களும் இங்கே இல்லை.
19:32 எனவே நாம் தந்தைக்கு மதுவைக் கொடுக்கலாம். அவர் மயங்கியபின் அவரோடு பாலின உறவு கொள்ளலாம். இப்படியாக நமக்கு சந்ததி உண்டாக்க நம் தந்தையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாள்.

   
19;33 அன்று இரவு இரண்டு பெண்களும் தந்தைக்கு மதுவைக் கொடுத்து குடிக்க வைத்தனர். பிறகு மூத்தவள் தந்தையின் படுக்கைக்குச் சென்று அவரோடு பாலின உறவுகொண்டாள். லோத்துவுக்குத் தன் மகள் தன்னோடு படுத்ததும், எழுந்து போனதும் தெரியவில்லை. அந்த அளவுக்குக் குடித்திருந்தான்.
19:34 மறுநாள் மூத்தவள் இளையவளிடம்:  “நேற்று இரவு நான் தந்தையோடு பாலின உறவுகொண்டேன். இன்று இரவும் அவரை மீண்டும் குடிக்க வைப்போம். பிறகு நீ அவரோடு பாலின உறவு கொள். இதன் மூலம் நாம் குழந்தை பெற நம் தந்தையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நம் குடும்பமும் அழியாமல் இருக்கும் என்றாள்.
19:35 அதனால் இருவரும் அந்த இரவிலும் தந்தையை மது குடிக்கும்படி செய்தனர். பிறகு இளையவள் தந்தையோடு படுத்து பாலின உறவு கொண்டாள். லோத்து மதுவைக் குடித்திருந்தபடியால் அவள் படுத்ததையும், எழுந்து போனதையும் அறியாமலிருந்தான்.
19:36 லோத்தின் இருமகள்களும் கர்ப்ப முற்றனர். அவர்களின் தந்தையே அவர்களது பிள்ளைகளுக்கும் தந்தை.
அந்தப் பிள்ளைகளுக்கு லோத்து தந்தையா? தாத்தாவா? பதில் தெரிந்தவர்கள் கூறுங்கள்.
...
இதுதான் உலகின் இருபெரும் மதங்கள் தங்களது தீர்க்கதரிசிகள் மற்றும் வேதங்களின் வாயிலாக அடியார்களுக்கு போதிக்கும் மோட்சத்திற்குரிய வாழ்க்கைநெறி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக