திங்கள், 2 ஜனவரி, 2012

ஃபிர்அவ்னும் குர் ஆனின் கட்டுக் கதைகளும்



குர் ஆனின் பெருமைகளை கூறும் சொற்பொழிவுகளில் பாதுகாக்கப்பட்ட பிர்அவ்னின் உடலுக்குதனி இடம் எப்பொழுதும் உண்டு.

10:92 எனவே, இன்று உன்னை - உன்னுடைய உடலோடு உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு நீ ஒரு படிப்பினையாய் இருப்பதற்காக நாம் பாதுகாப்போம்...

என்ற குர் ஆன் வசனத்தையும் மனிதர்களால் பாதுகாக்கப்பட்ட இரண்டாம் ரமேசஸ்-ன் உடலையும் பக்குவமாக இணைத்துக் கூறி அப்பாவி வெகுமக்களை வியப்பினால் புல்லரிக்கச் செய்துவிடுகின்றனர். 

இதில் வியப்பதற்கு எதுவுமில்லை. பிர்அவ்ன்-ஃபேரா (Pharaoh) என்பது, அரசர், மன்னர், பிரதமர், முதலமைச்சர் என்று ஆட்சியாளர்களைக் குறிப்பிடுகின்றதைப் போன்ற பொதுப்படையான பெயர்ச் சொல். குறிப்பாக கூறுவதென்றால், பிர்அவ்ன்-ஃபேரா (Pharaoh) என்பது பண்டய எகிப்திய அரசர்களின் பட்டப்பெயர்கள். பிர்அவ்ன் என்ற இறந்த அரசர்களின் உடல்கள் பிரமிடுகளில் வைத்து பாதுக்காக்கப்படுவது, முஹம்மது அவர்களின் காலத்து மக்கள் மட்டுமல்ல இறந்த உடல்களை மம்மிகளாக பாதுகாக்க துவங்கிய காலத்திலிருந்தே அனைவரும் அறிந்திருந்த ஒரு மிகச் சாதாரணமான செய்திதான் என்று மறுப்புக்களை கூறினாலும் இஸ்லாமியர்கள், பாதுகாக்கப்பட்ட பிர்அவ்னின் உடலை விடுவதாக இல்லை. அப்பாவி முஸ்லீம்களின் கைப்பேசிகளிலும் இன்றும் காணப்படும் இரண்டாம் ரமேசஸ்-ன் உடலை காண்பிக்கும் வீடியோ காட்சிகளே இதற்கு உதாரணமாகும்.

காலம் சென்ற சவுதி அரசர் ஃபைஸல் அவர்களின் குடும்ப மருத்துவர் மாரீஸ் புகைல் என்பவர் 1976-ல் இதற்கு திரைக்கதை அமைத்தார். அவர் எழுதிய “The Bible, The Quran and Science” என்ற புத்தகம், இஸ்லாமிய உலகின் பட்டிதொட்டிகளில் எல்லாம்  டாலர்களைக் குவித்தது. ஏறக்குறைய எல்லா முஸ்லீம் நாடுகளும் இப்புத்தகத்தை தங்களது தாய்மொழியில் மொழிபெயர்த்து புண்ணியம் தேடிக் கொண்டன. இன்று மதரஸாக்களிலிருந்து வெளியேரும் ஒவ்வொரு முல்லாவும் தவறாமல் படிக்கின்ற வேதபுத்தகமாகவும் இது ஆகிவிட்டது. 

நாம் குர் ஆன் கூறும் பிர்அவ்னின் கதையைத் தொடர்வோம்.

எகிப்திலிருந்த யூதர்களை  பிர்அவ்ன், அவர்களது பச்சிளம் ஆண்மக்களைக் கொன்றும், பெண்மக்களை அடிமைகளாக வாழவிட்டும் கொடுமை செய்தான். இக்கொடுமையிலிருந்து யூதர்களைக் காப்பாற்ற, அல்லஹ், மூஸாவையும், அவரது சகோதரர் ஆரூனையும் தனது தூதராக பிர்அவ்னிடம் அனுப்புகிறான். அங்கு நிகழும் மாயாஜாலப் போட்டியில் மூஸாவின் வெற்றி, பிர்அவ்னைக் கோபப்படுத்துகிறது. இருப்பினும் யூதர்களை மூஸாவுடன் அனுப்ப ஒப்புக்கொள்கிறான். மூஸாவின் தலைமையில் செல்லும் யூதர்களை அழிக்க பின்தொடந்த பிர்அவ்னையும் அவனது படைகளையும் செங்கடலில் மூழ்கடித்து அழித்ததாக அல்லாஹ் கூறுகிறான். 

தண்ணீரில் அமிழ்த்திக் கொன்றதாக அல்லாஹ் உரிமைகோரும் பிர்அவ்னின் பெயரையோ, அவனது உடல் பாதுகாக்கப்பட்ட முறையையோ, இடத்தையோ குர்ஆன் குறிப்பிடவில்லை. 

Onlinepj.com-ன் வருமுன் உரைத்த இஸ்லாம் என்ற நூலில் 33 பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல் எனும் தலைப்பிலிருந்து...

கிபி 1800 களில் ஃபிர் அவ்ன் ரமேசஸ்-ன் உட்பட அரசகுடும்பத்தினரின் பெரும்பாலான பாதுகாக்கப்பட்ட உடல்கள் நைல் நதிக் கரையில் கட்டப்பட்டிருந்த பிரமிடுகளிருந்துதான் கண்டெடுக்கப்பட்டன. ஃபிர்அவ்ன் ரமேசஸ் உடல், வரலாற்று ஆய்வாளர்களால்  KV7 என்று குறிப்பிடப்படும் பிரமிடுவில்தான் வைக்கப்பட்டிருந்தது. கொள்ளையர்களை அஞ்சிய அன்றைய மதகுருமார்கள், ஃபிர்அவ்ன் ரமேசஸ்-ன் உடலைப் பாதுகாப்பான வெவ்வேறு இடங்களுக்கு இடம்மாற்றினர். இத்தகவல்கள் அனைத்தையும் ரகசியக் குறியிடுகளாக ஃபிர்அவ்ன் ரமேசஸ்ன் உடலைச் சுற்றியுள்ள துணியில் பதிந்துள்ளனர்.

உண்மை இவ்வாறிருக்க பனிப்பாறைகளுக்கிடையே ஃபிர்அவ்ன் ரமேசஸ்-ன் உடல் இருந்ததாக கதையளக்கிறார் பீஜே. ஃபிர்அவ்ன் ரமேசஸ்-ன் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பள்ளத்தாக்கு இதுதான். பனிப்பாறை தென்பட வாய்ப்பிருக்கிறதா? என்பதை நீங்களே பாருங்கள்

பீஜே இப்படி கதையளந்தற்கு காரணம் உள்ளது. பின்வரும் படத்தைப் பாருங்கள்
       
Mummy of Ramses II

இந்த உடல் மனிதர்களால் பாதுகாக்கப்பட்டதுதான் என்பது பார்த்தவுடன் எளிதாக சொல்ல முடியும். அல்லாஹ்வின் வித்தை இதில் ஏதுமில்லை என்பது பீஜேவும் உணர்ந்திருக்கிறார். எனவேதான் பனிப்பாறை கதையை நுழைக்க முயற்சிக்கிறார்.

1974-ல் ஃபிர் அவ்ன் ரமேசஸ்-ன் உடல் பூஞ்சை தாக்குதல் காரணமாக விரைவாக பாதிப்படையத் துவங்கியது. அப்பொழுதும் அல்லாஹ் எந்த தடுப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. ஆய்வாளர்களின் முயற்சியால் கடவுச்சீட்டு சகிதமாக ரமேசஸ்-ன் உடல் பாரீஸூக்கு அனுப்பி அரசரின் பூஞ்சை நோய்க்கு மருத்துவம் செய்து அவரது உடல்நிலை சரிசெய்யப்பட்டது. இந்த ஆய்வின் பொழுது அரசரின் உடல் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், போர்க் காயங்கள், மூட்டுவலி போன்றவைகளால் இயற்கையாக மரணமடைந்திருக்க வேண்டுமென்றும் கண்டறியப்பட்டது. 

வாதத்திற்காக குறிப்பிட்ட அந்த உடல் குர் ஆன் குறிப்பிடும் பிர்அவ்னின் உடல்தான் எனக் கொண்டாலும்,  செங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஃபிர்அவ்ன் ரமேசஸ், பாதுகாக்கப்பட்ட மம்மியாக மாறியது எப்படி? நைல் நதிக்கரைக்கு வந்தது எப்படி? என்ற எளிமையான கேள்விகளுக்கு விடையில்லை. 

இந்த இரண்டாம் ரமேசஸ்-ற்கும் ஆயிரம் ஆண்டுகள் முன்பு ஆட்சி செய்த பல்வேறு ஃபிர்அவ்ன்களின் உடல்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவைகளைப் பாதுகாத்த மனிதனின் திறமை, அல்லாஹ்வையும் விஞ்சி நிற்கிறதே?

இக்கதையை இட்டுக்கட்டி கதையை உருவாக்கியவர்கள், குர் ஆனின் மற்ற வசனங்களை கவனிக்கத் தவறி விட்டனர்.

7:137 ... இன்னும் உம்முடைய ரப்பின் வாக்கு பனீ இஸ்ராயீலின் மீது-அவர்கள் பொறுமையாக இருந்த காரணத்தால் நிறப்பமாய் விட்டது; பிர் அவ்னும் அவனுடைய சமூகத்தினரும் உண்டாக்கியிருந்தவற்றையும், அவர்கள் உயரமாகக் கட்டியிருந்தவற்றையும் நாம் அழித்து விட்டோம்.

அதாவது, ஃபிர்அவ்னையும் அவனது படைகளையும் செங்கடலில் மூழ்கி அழியுமாறு செய்ததுடன் அல்லாஹ்வின் கோபம் அடங்கவில்லை. மேலும்  தண்டிப்பதற்காக, ஃபிர்அவ்னால் கட்டப்பட்ட அனைத்தையும் தரைமட்டமாக்கி அழித்து விட்டதாக அல்லாஹ் கூறுகிறான். அழிக்கப்பட்ட கட்டிடங்கள் எவை?

எகிப்து, உலகின் பெரும் நாகரீகங்கள் தோன்றிய இடங்களில் ஒன்று. அதனை ஃபரோஹ் (பிர்அவ்ன்) என்றழைக்கப்பட்ட அரசர்கள் ஆட்சி செய்து வந்தனர். பெரும் எண்ணிக்கையிலான அரண்மனைகளும், நினைவுச் சின்னங்களும், வழிபாட்டுத்தளங்களும் கிமு 2686 முதல் கிமு 2134 வரை கட்டப்பட்டன. ஃபிர்அவ்ன்கள் இறந்த பிறகு அவர்களது உடல்களை வைப்பதற்காக பிரமிடுகளும் கட்டப்பட்டன.

அவர்கள் உயரமாகக் கட்டியிருந்தவற்றையும் நாம் அழித்து விட்டோம்என்பது பிரமிடுகளையும் இதர கட்டிடங்களையும் குறிப்பிடுகிறது என்பதில் சந்தேகமில்லை. 

இன்றும் கம்பீரமாக, உலக அதிசயங்களில் ஒன்றாக, வானுயர்ந்து நிற்கும் பிரமிடுகளையும், பண்டைய வழிபாட்டுத்தலங்களையும், சிங்க உடலும் மனிதத்தலையும் கொண்ட பிரம்மாண்ட  சிற்பங்களும் குர்ஆனின் வார்த்தைகளிலுள்ள ஓட்டையை விளக்குகிறது.

பிரமிடுகளிகள் மட்டுமல்ல, ஃபிர்அவ்ன் ரமேசஸ் தன்னைத்தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்டவன். தனக்காக வழிபாட்டு தலங்களையும், தனது சிலைகளையும் நிறுவிக் கொண்டவன்.

இன்றும் அபூசிம்பலில் கம்பீரமாக நிற்கும் ஃபிர் அவ்ன் ரமேசஸ்-ன் கோவில்

          
         

ஃபிர் அவ்ன் ரமேசஸ்-ன் சிலை
இவைகள், அவர்கள் உயரமாகக் கட்டியிருந்தவற்றையும் நாம் அழித்து விட்டோம்”  என்ற அல்லாஹ்வின் கொக்கரிப்பை அர்த்தமற்றது என்று நிரூபித்துவிட்டது. அல்லாஹ், பொய்யான செய்திகளைக் கூறி ஏழாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மக்களை முட்டாள்களாக்கி விட்டான். ஒரு பொய்யன் இறைவனாக இருக்க முடியாது. முழுக் குர்ஆனும், தற்குறி முஹம்மதின் கற்பனைகளே என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக