திங்கள், 19 செப்டம்பர், 2011

இஸ்லாமிய அறிவியல்: ஷைத்தான் ஏன் காதில் உச்சா போகிறான்?

 

 

நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் ஷைத்தானின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள், சாப்பாடு, திருட்டுத்தனம், ஆகியவற்றை பற்றி விலாவாரியாக விளக்கியுள்ளார்கள். இந்த ஷைத்தான் மற்றும் ஷைத்தான்களை பற்றி நாம் அறிந்துகொள்வது இஸ்லாமிய கடமையாகும்.

நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களது நபிமொழி கூற்றுக்களின்படி ஷைத்தான்களை பற்றி சில முக்கியமான விஷயங்களை நாம் அறிகிறோம்

ஒன்று அல்லாஹ்வால் நிறைய அல்லாஹ்க்களாக ஆக முடியாது. ஒரே ஒரு அல்லாஹ்தான். அவர் அர்ஷில் உட்கார்ந்திருக்கிறார்.

ஆனால் ஷைத்தான் ஏராளமான ஷைத்தான்களாக ஆக வலிமை படைத்தவன்.

3210. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசி கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஓட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள்.
என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


புகாரி 1899. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(மேலே ஹதீஸின் படி ஷைத்தான்கள் என்ற பதத்துக்காகத்தான் காட்டியிருக்கிறேன். ரமலான் மாதத்தில் ஷைத்தான்களே இல்லாமல் ஒரே புனிதமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கக்கூடும். அப்படியெல்லாம் இல்லை. அதேமாதிரி உலகம் நரகமாகத்தான் இருக்கிறது என்று நமக்கு தெரியும். இதுக்கு பி ஜெயினுலாபுதீன் எதாவது விளக்கம் வைத்திருப்பார். முடிந்தால் கேட்கவும். அதற்கு விதண்டாவாதமாக பதில் கூறி, விதண்டாவாதம் என்று லிஸ்டில் சேர்த்துவிடுவார். அந்த லிங்கை இங்கே தரவும்)

ஆனால் உலகத்தில் மொத்தம் எத்தனை ஷைத்தான்கள் இருக்கிறார்கள் என்ற அறிவியற்பூர்வமான கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க முயல்வோம். இதற்கான பதில் நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் இந்த நபிமொழியில் உள்ளது.

Volume :1 Book :19

தொழாமல் உறங்குபவரின் காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான்.

1144. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்' என்று விடையளித்தார்கள்.


3270. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் காலை விடியும் வரை (தொழுகைக்கும் எழுந்திருக்காமல்) இரவில் தூங்கிய ஒரு மனிதரைப் பற்றிக் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், 'அந்த மனிதரின் இரண்டு காதுகளிலும் - அல்லது அவரின் காதில் - ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்" என்று பதிலளித்தார்கள்.
Volume :3 Book :59


நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னது ஒரு காதிலா இரண்டு காதிகளிலுமா என்று நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இரண்டு காதுகளிலும் ஷைத்தான் இருக்கிறான் என்றால் அவன் ஒவ்வொரு ஆளிலும் இரண்டு ஷைத்தான்கள் இருக்கிறார்கள் என்று அறியலாம்.

ஆனால் இன்னொரு ஹதீஸ் இருக்கிறது

இதன் படி மூக்கிலும் ஷைத்தான் இருக்கிறான்.

3295. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளூச் செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி தூய்மைப்படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கிறான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


(இந்த மூக்கு ஹதீஸ் ரொம்ப முக்கியமானது என்று அறியவும். ஏனெனில் நீங்கள் தொழுகை செய்தீர்களா செய்யவில்லையா என்பதெல்லாம் இங்கே ஷைத்தானுக்கு முக்கியமல்ல. முஸ்லீமா இல்லையா என்பதும் முக்கியமல்ல. ஒவ்வொருவரும் தூக்கத்திலிருந்து எழும்போது மூக்கில் நிச்சயம் ஷைத்தான் இருக்கிறான். நீங்கள் நீர் விட்டு கழுவினால் -- மூன்று முறை.. எண்ணிக்கை முக்கியம் -- தண்ணீரில் கரைந்து ஷைத்தான் போய் விடுவான். )

ஆகவே ஒருவர் முஸ்லீமாக இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, அவர்களது உடலுக்குள் மூன்று ஷைத்தான்கள் இருக்கிறார்கள் என்று அறியலாம். உலக மக்கள் தொகை 6,924,419,172 என்று சார்வாகனின் பதிவு சொல்கிறது. அதாவது ஏழு பில்லியனை தொட செல்கிறது. ஆகவே ஏழை மூன்றால் பெருக்கிக்கொள்ளவும். 21 பில்லியன் ஷைத்தான்கள் இருக்கின்றன.

ஆனால் இதில் பி ஜெயினுலாபுதீன் மாதிரி நம்முடைய கற்பனையை நாமே அவிழ்த்துவிடவும் செய்யலாம்.

ஒவ்வொரு ஆளிலும் ஒரு ஷைத்தாந்தான் இருக்கிறான். அவன் இந்த பக்கம் காதிலும் அந்த பக்கம் காதிலும் மூக்கிலும் அவ்வப்போது போய் வந்துகொண்டு இருக்கிறான் என்றும் கற்பனையை அவிழ்த்து விடலாம். இதற்கெல்லாம் நபி மொழி ஆதாரம் இல்லை. ஆகையால் நமது சொந்த சரக்கு. அப்படி ஒரே ஒரு ஷைத்தான்தான் காது மூக்கு எல்லாவற்றிலும் உச்சா போகிறான் என்றும் நபிஹள் நாயகம் சொல்லவில்லை. காதில் ஒரு ஷைத்தான், மூக்கில் ஒரு ஷைத்தான் என்றும் சொல்லவில்லை. அவர் சொல்லாததால் நாம் சொல்லுவதுதான் சரி என்பது பிஜே அவர்களது விவாத முறை.

சரி குறைந்த பட்சம் எவ்வளவு ஷைத்தான்கள் இருக்க வேண்டும்? உலகத்தில் எவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு சைத்தான்கள் இருக்க வேண்டும். ஆகவே குறைந்தது ஏழு பில்லியன் ஷைத்தான்கள் இருக்கின்றன என்று மதிப்பிடலாம்.நிச்சயமாக எல்லா இந்துக்கள், கிறிஸ்துவர்கள், யூதர்கள் காதுகளிலும் உச்சா போய் உச்சா போய் சைத்தானே துவண்டு போயிருப்பான். எல்லோருடைய மூக்கு அழுக்கிலும் ஷைத்தான் குடியிருக்கிறான். பாவம் அவன். அதுவும் இவ்வளவு காலம் இவ்வளவு பேர்களின் காதுகளில் உச்சா போவதற்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்றும் இஸ்லாமிய அறிவியல் முறைப்படி ஆராய்ந்தால் அவன் மீது பரிதாபம் வருவதை தவிர்க்க முடியாது.

ஷைத்தான்கள் காபிர்களின் காதுகளிலும், இணைவைப்பவர்கள் காதுகளிலும் உச்சா போவதால், இந்த காபிர்களின் காதுகளுக்கு ஒன்றும் கெடுதல் நடப்பது மாதிரி தெரியவில்லை. ஆனால், நபிஹள் நாயகம் பொய்யா சொல்லியிருப்பார்? அவர் என்றைக்காவது பொய் சொல்லியிருக்கிறாரா? அவரது எதிரிகள் கூட அவர் பொய் சொன்னதாக கூறியதில்லையே!

ஆனால் இந்த உண்மையை வைத்து நாம் இன்னொரு ஆராய்ச்சி செய்யலாம். இது இஸ்லாமிய அறிவியல் செய்பவர்களுக்கு அரிய வாய்ப்புமாகும்.

இதற்கு இப்படிப்பட்ட பரிசோதனையை வடிவமைத்தால் என்ன?

தினமும் தொழுகைக்கு போகும் முஸ்லீமின் காதுகளை ஒரு முறை நன்றாக சுத்தம் செய்து தொழுகைக்கு அனுப்ப வேண்டும்

தொழுகைக்கே போகாத ஒரு காபிர் அல்லது முஸ்லீமின் காதுகளையும் நன்றாக சுத்தம் செய்து தொழுகை நேரத்தில் தூங்கச் சொல்ல வேண்டும்.

இப்போது தொழுகைக்கு போகும் முஸ்லீமின் காதுகளில் ஷைத்தானின் உச்சா இருக்காது. ஆனால், தொழுகைக்கு போகாமல் தூங்கியவரின் காதுகளில் ஷைத்தானின் உச்சா இருக்கும்.

இரண்டு பேருடைய காதுகளையும் சுரண்டி வேதி முறைப்படி ஆராய வேண்டும். எந்த வேதிப்பொருட்கள் எல்லாம் தொழுகைக்கு போகாதவர் காதுகளில் இருக்கிறதோ அதெல்லாம் ஷைத்தானின் உச்சா.

(ஆனால், தொழுகைக்கு போனவரின் காதுகளில் எக்ஸ்ட்ராவாக எதாவது வேதிபொருள் இருந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை. அது அல்லாஹ்வின் உச்சா என்று தயவு செய்து சொல்லாண்டாம்)

ஒரு வித்தியாசமும் இல்லை என்று முடிவு வந்துவிட்டால் என்ன செய்வது என்பது இன்னொரு இஸ்லாமிய அறிவியல் கேள்வி.

இப்போதும் கற்பனையை அள்ளி விடலாம்.

இவ்வளவு காலம் உச்சா போய் உச்சா போய் துவண்டு ஒரே ஒரு சொட்டுகூட உச்சா வராமல் ஷைத்தான் போய் செத்துப்போய் விட்டால் என்ன செய்வது? ஆகவே ஷைத்தான் தெம்புக்கு நல்லா சாப்பிட்டு நல்லா தண்ணி குடிக்கணும்ல?

ஷைத்தான் சாப்பிடுகிறான் தண்ணீர் குடிக்கிறான் என்றும் நாம் அறிகிறோம். எப்படி? இதோ ஹதீஸ்.



இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் (4108)
3764 عَنْ جَدِّهِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِشِمَالِهِ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் யாரும் இடக் கையால் உண்ண வேண்டாம்; இடக் கையால் பருக வேண்டாம். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால் தான் உண்கிறான்; இடக் கையால் தான் பருகுகிறான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் (3764)

ஆனால் என்ன விஷயம் என்றால் அவன் இடது கையால் அருந்துகிறான் இடது கையால் சாப்பிடுகிறான். ( இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் உங்களுக்கு நண்பர்கள் ஏதும் இருக்கிறார்களா? எதற்கும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்)

இந்த ஷைத்தான் எதனை சாப்பிடுகிறான் எதனை குடிக்கிறான் என்று தெரியவில்லை.

ஆனால் ஏதோ ரொம்ப அவன் வயித்துக்கு கெடுதலான ஒன்றைத்தான் சாப்பிடுகிறான் என்று நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் தெரிவிக்கிறார்கள்.


ஏனென்றால் அடிக்கடி அவன் குசு விட்டு நாற்றமடிக்கிறான்

1222. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:.
பாங்கு சொல்லப்பட்டதும் பாங்கைக் கேட்கக் கூடாது என்பதற்காக ஷைத்தான் காற்றுவிட்டவனாக ஓடுகிறான். பாங்கு முடிந்ததும் முன்னே வருகிறான். இகாமத் சொல்லப்பட்டதும் திரும்பி ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் முன்னே வருகிறான். தொழுது கொண்டிருக்கும் மனிதரிடம் 'நீ இதுவரை நினைத்திராதவற்றையெல்லாம் நினைத்துப்பார்" என்று கூறுவான். முடிவில் அம்மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராகிவிடுவார்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மறதி ஏற்பட்டால் அமர்ந்த நிலையில் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யவேண்டும்" என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார் என அபூ ஸலமா கூறுகிறார்.

ஆகையால் ஷைத்தான் ரொம்ப கெட்ட நாத்தமடிக்கும் சாப்பாட்டைத்தான் சாப்பிடுகிறான் என்று தெரிந்துகொள்ளலாம்.

தொழுகை பண்ணுமிடத்தில் நிச்சயம் ஷைத்தான் இருக்கிறான் என்று அறியவும். இகாமத் முடிந்தவுடனேயே திரும்பி வந்துவிடுகிறான் என்று நபிஹள் நாயஹம் ஸல்ல்லாஹூ அலைஹிவஸல்லம் தெரிவிக்கிறார்கள். எதற்கு? தொழுகையை பறித்து செல்வதற்கு.

தொழுகையை எப்படி பறித்து செல்லமுடியும் என்று விதண்டாவாதமாக நீங்கள் கேட்கலாம். ஆகவே இங்கு சொல்லப்படாத விஷயங்களை இட்டு கட்டி நாம் பதில் சொல்லலாம். அதுவே பிஜெயினுலாபுதீன் வழி என்று அறிக.
தொழுகையை பறித்து செல்வது என்பது தொழுகைக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த வெகுமதிகளை பறித்து செல்வது என்று பொருள் என்று வைத்துக்கொள்ளலாம். அப்படியென்றால், ஷைத்தான் எவ்வளவு அதிகமான தொழுகை வெகுமதிகளை கையில் வைத்திருப்பான் என்று சிந்திக்க வேண்டும். உலகத்திலேயே மிக அதிகமான வெகுமதியை பெற்றவனாகக்கூட ஷைத்தான் இருக்கலாம். இதில் சிந்திப்பவர்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.

751. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். 'ஓர் அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் பறித்துச் செல்கிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகை முடிந்ததும் ஷைத்தோனோடு கட்டி புரண்டு சண்டை போட்டிருக்கிறார்கள். அவர் தூணில் கட்டி வைத்திருந்தார். அப்புறம் போனாப் போவுதுன்னு விட்டுட்டார். அவன் ஓடிட்டான். அப்பவே அவர் கட்டிப்போட்டிருந்தார் என்றால், இன்னிக்கு இவ்வளவு ஷைத்தான் அலும்பு பண்ணமாட்டான். ஜெயினுலாபுதீன் எல்லாம் வேலையில்லாம இருந்திருப்பார். நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பொய் சொல்லமாட்டார்.

புகாரி 1210. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்)அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதார்கள். (தொழுது முடித்ததும்) ஷைத்தான் எனக்குக் காட்சி தந்து என் தொழுகையை முறித்துவிட முயன்றான். அவனை அல்லாஹ் எனக்கு அடிபணியச் செய்தான். அவனை நான் பிடித்துக் கொண்டேன். அவனை ஒரு தூணில் கட்டி வைத்து காலையில் நீங்களெல்லாம் பார்க்க வேண்டுமென விரும்பினேன். எனக்குப் பின் யாருக்கும் வழங்காத ஆட்சியை எனக்கு வழங்கு (திருக்குர்ஆன் 38:35) என்று சுலைமான் நபி அவர்கள் கூறியதை நினைவுக்குக் கொண்டு வந்தேன். (அதனால் அவனைவிட்டு விட்டேன்) இழிந்தநிலையில் அவனை அல்லாஹ் ஓடச் செய்துவிட்டான் என்று கூறினார்கள்.

எங்கே ஓட செய்துவிட்டான்? என்று விதண்டாவாதமாக கேட்பவர்களுக்கு அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பதில் கூறுகிறார்

”நிச்சயமாக ஷைத்தான் ஆதமுடைய மக்களின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்' எனக் கூறினார்கள்.

புகாரி 2038. ஸஃபிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அவசரப்படாதே!" நானும் உன்னோடு வருகிறேன்" என்றார்கள். என் அறை உஸாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி(ஸல) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, 'இங்கே வாருங்கள், இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!' எனக் கூறினார்கள். அவ்விருவரும் 'ஸுப்ஹானல்லாஹ் - இறைத்தூதர் அவர்களே!" என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டு விடுவான் என நான் அஞ்சினேன்" என்று தெளிவுபடுத்தினார்கள்.

இவ்வாறு ஓடி ஓடி களைத்துவிடுகிறானல்லவா? அதனால், நேரே போய் காதில் உச்சா போய்விடுகிறான்.

இதிலிருந்து அல்குரான் நபிஹள் நாயகத்தின் படைப்பு அல்ல, அது அல்லாஹ் இறக்கிய இறைவேதம்தான் என்று தெளிவாகிறது அல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக