திங்கள், 19 செப்டம்பர், 2011

இஸ்லாம் அமைதி மார்க்கமா?

 

இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று பிரச்சாரம் செய்வதால் நமது ஈமானுள்ள மூமீன்கள் செய்பவற்றை எல்லாம் முழுப்பூசணியை சோற்றில் மறைப்பது போல மறைத்து தாவா செய்துவருகிறோம்.

ஆனால் இந்த தாவாவில் நமது முஸ்லீம்களே ஏமாந்து போய் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று ஏமாந்துவிடக் கூடிய சூழ்நிலை இருப்பதை கவனத்தில் வைத்து சில விஷயங்களை தெளிவு படுத்திவிட வேண்டியுள்ளது.

இஸ்லாம் வன்முறையை ஆதரிப்பதில்லை என்று காட்டுவதற்காக நம் முஸ்லீம்கள் அடிக்கடி குரான் வசனம் 5:32ஐ மேற்கோள் காட்டுவார்கள்.

“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இது நபிகள் நாயகம் முகம்மதின் போதனை அல்ல. இது யூத புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்.

“Whoever destroys a soul, it is considered as if he destroyed an entire world. And whoever saves a life, it is considered as if he saved an entire world.” Jerusalem Talmud Sanhedrin 4:1 (22a)

ஒரு மனிதனை கொல்லுவதும் ஒரு மனித குலத்தையே கொல்லுவதற்கு ஈடானதா? யூதர்கள் எழுதிய பைபிளிலேயே கர்த்தர் பலரை போட்டுத்தள்ளியிருக்கிறார். சிறு குழந்தைகளை கல்லில் அடித்து கொல்லச் சொல்லுகிறார். அப்படியென்றால், எத்தனை மனிதகுலங்கள் போயிருக்கும். ஆகவே எந்த சந்தர்ப்பத்தில் இது எழுதப்பட்டது என்பதை வைத்து இடம் சுட்டி பொருள் விளக்கம் சொன்னால்தான் இதன் பொருள் புரியும்.

இது யூத புராணத்தில் வரும் காயீன் ஏபெல் என்ற இருவரது கதையை சொல்லும்போது எழுதப்பட்டது. அந்த கதையின் படி அந்த காலத்தில் இருந்த இரண்டே இரண்டு ஆண்கள் அவர்கள். ஒருவரை கொன்றாலும் அவரது மூலமாக சந்ததியே இல்லாமல் போய் மனித குலமே வந்திருக்காது போயிருக்கலாம்.

ஆகவே இஸ்லாம் வன்முறை மார்க்கமல்ல என்று சொல்ல விழையும் அரைகுறை முஸ்லீம்கள் சொல்வது போல, இது அல்லாஹ்வின் போதனையே அல்ல. நபிகள் நாயகம் முகம்மதுவின் போதனையும் அல்ல. முழுமையான வசனம் இங்கே.

5:32. இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.

5:32 مِنْ أَجْلِ ذَٰلِكَ كَتَبْنَا عَلَىٰ بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا ۚ وَلَقَدْ جَاءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِّنْهُم بَعْدَ ذَٰلِكَ فِي الْأَرْضِ لَمُسْرِفُونَ

5:32 “On account of this, WE prescribed for the Children of Israel that whosoever killed a person it shall be as if he killed all mankind; -unless it be for murder or for spreading mischief in the land- and whoso saved a life, it shall be as if he had saved the life of all mankind. And our Messengers came to them with clear Signs, Yet even after that, many of them commit excesses in the land.”

அல்லாஹ் யூத பைபிளின் கதையைத்தான் சொல்கிறார். பிறகெப்படி முஸ்லீம்கள் அதற்கு உரிமை கொண்டாட முடியும்?

பிரச்னை அங்கே மட்டும் முடியவில்லை. தால்முத் என்று சொல்லப்படும் இந்த புத்தகம் யூதர்களாலோ மற்றும் யாராலும் இறைவனின் வார்த்தையாக கருதப்படுவதில்லை!!!! இது ரப்பை என்று அழைக்கப்படும் யுத குருமார்கள் சொன்ன யூத சட்டங்கள், விவாதங்கள் அடங்கிய புத்தகம்!!!.

ஆகவே எப்படி அல்லா “நான் இஸ்ரேலின் குழந்தைகளுக்கு இதனை வலியுறுத்தினேன்” என்று கூறமுடியும்?

ஆனால் குரானில் அல்லாஹ் அவர் கூறாத விஷயங்களை தானே கூறினேன் என்று எப்படி கூறமுடியும்?

தான் சொல்லாத ஒரு வார்த்தையை அல்லாஹ் எப்படி சொந்தம் கொண்டாட முடியும் என்று நம்மால் விளக்கமுடியவில்லை. அந்த வசனம் பைபிளில் இல்லை. அது தால்முது என்னும் விவாத புத்தகத்தில் உள்ள விஷயம்.

இருக்கவும், இந்த வசனமோ கொலை செய்வது தவறு என்று வலியுறுத்துகிறது. ஆனால் முகம்மதோ தன்னை பின்பற்றுபவர்களை போர் செய்யவும், போராடுவதும், கொலைசெய்வது சிறப்பானவை என்றும் அவற்றுக்கு ஏராளமான வெகுமதி உண்டு என்றும் சொல்கிறார்.

“O you who believe! Shall I guide you to a commerce that will save you from a painful torment? That you believe in Allah and His Messenger and that you strive hard and fight in the Cause of Allah with your wealth and your lives… (Q .61:10-11)

இருந்தாலும் நாம் இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். தால்முத் புத்தகத்தில் உள்ளதை பேசும்போது, இவராக “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, “ என்று சேர்த்துகொள்கிறார். இது தால்முத் புத்தகத்தில் இல்லை

இந்த விலக்கு அளிக்கப்பட்டதால். மூமீன்கள் ஏக சுதந்திரத்துடன் முஸ்லீமாக மாறாதவர்களை கொல்லவும், கொள்ளையடிக்கவும் அனுமதி பெற்றுவிடுகிறார்கள். இஸ்லாமை எதிர்ப்பவர்களும், இஸ்லாமுக்கு மாற மாட்டேன் என்பவர்களும் விஷமத்தை பரப்புபவர்களாக ஆகிவிடலாம்.

இங்கே ஃபிட்னா என்று கூறப்பட்டுள்ள வார்த்தையையே தமிழில் மொழிபெயர்க்கும்போது குழப்பம் என்று மொழிபெயர்க்கிறார்கள். ஆனால், ஃபிட்னா என்றால், எதிர்ப்பு, மறுப்பு, துரோகம் ஆகியவையே பொருள். இஸ்லாமுக்கு மாறான கருத்தை வைத்திருந்தாலோ, அல்லது இஸ்லாமை எதிர்த்தாலோ, துரோகம் செய்து குழப்பத்தை பரப்புவதாக கருதப்படுவார்கள். நீங்கள் இஸ்லாமுக்கு எதிரான போர் புரிவதாக கருதப்படுவார்கள். இந்த போர் வன்முறை போராக இருக்க வேண்டியதில்லை. இஸ்லாமுக்கு மாறான கருத்து வைத்திருப்பதே இஸ்லாமுக்கு எதிரான போர் புரிவதாக கருதப்படும். இஸ்லாமை விமர்சித்தாலோ, இஸ்லாம் தவிர்த்த வேறொரு மதத்தை பின்பற்றினாலோ, நீங்கள் துரோகம் இழைக்கிறீர்கள். இது எல்லாமே குழப்பம் செய்வதுதான்.

குழப்பத்தை பரப்புபவர்களுக்கு என்ன தண்டனை? அடுத்த வசனத்திலேயே பதில் இருக்கிறது.

“The punishment of those who wage war against Allah and His Messenger, and strive with might and main for mischief through the land is: execution, or crucifixion, or the cutting off of hands and feet from opposite sides, or exile from the land: that is their disgrace in this world, and a heavy punishment is theirs in the Hereafter.” 5:33.
அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.

இஸ்லாம் வன்முறைக்கு எதிரானது என்று கூற வழிதவறிய முஸ்லீம்கள் உபயோகிக்கும் ஒரே ஒரு வசனமும் யூத குருமார்கள் எழுதிய புத்தகத்திலிருந்து திருடப்பட்டது. அதனை தவறாக அல்லாஹ் சொன்னதாக குரான் சொல்கிறது. அதிலும் விலக்கு இருக்கிறது. அந்த விலக்கு மூலம் இஸ்லாமோடு ஒத்துப்போகாத எல்லோரையும் கொல்ல ஆணையும் இருக்கிறது.

ஆகவே முஸ்லீம்களுக்கு சில கேள்விகள்

இந்த வசனங்களை பொறுத்து நாம் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும்?

1. அல்லாஹ் ரப்பைகளின் கருத்தை திருடி தன் கருத்தாக சொல்லி ஏமாற்றிவிட்டார் என்று சொல்லமுடியுமா?

2. அல்லாஹ் ஒரு குழப்பத்தில் மறந்துபோய் தன்னுடைய வார்த்தைகளாக நினைத்துவிட்டார் என்று சொல்லலாமா?

3. இது அல்லாஹ்வின் வார்த்தைகள் அல்ல. நபிகள் நாயகம் முகம்மது தன்னிடம் சாத்தான் அடிக்கடி வந்து காதில் கிசுகிசுவென்று பேசுவதாக சொல்லியிருக்கிறார். அப்படி இந்த வசனமும் சாத்தானின் வசனம் என்று சொல்லலாமா?

4. முகம்மது பொய் சொன்னார். குரான் அல்லாவின் வார்த்தை இல்லை என்று சொல்லலாமா?.

என்று மேற்கண்ட நான்கில் எது சரியானது என்று நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை எழுதுங்கள்


-

நக்லா கொள்ளை பற்றிய குறிப்பு


நக்லா கொள்ளையின் போதுதான் அல்-ஃபிட்னா என்ற வார்த்தை முதன்முதலில் குரானில் வருகிறது

இதனை பற்றிய அருமையான வரலாற்று நிகழ்வு விளக்கம் இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

அத்தோடு என் விளக்கத்தையும் சேர்த்து கொடுத்திருக்கிறேன்.

http://chenaitamilulaa.bigforumpro.com/t3501p220-topic
8) ‘நக்லா“

ஹிஜ் 2, ரஜப் (கி.பி. 624 ஜனவ) மாதம் நபி (ஸல்) 12 முஹாஜிர்களுடன் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் அல்அஸதி (ரழி) அவர்களை ‘நக்லா’ என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். இருவருக்கு ஓர் ஒட்டகம் வீதமாக இவர்கள் ஒருவர் மாறி ஒருவர் பயணம் செய்தனர்.

நபி (ஸல்) ஒரு கடிதத்தை எழுதி இரண்டு நாட்கள் கழிந்த பின்தான் கடிதத்தைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று கூறி, அதை அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷிடம் கொடுத்தார்கள். அப்துல்லாஹ் (ரழி) அப்படையை அழைத்துக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து, கடிதத்தைப் படித்துப் பார்த்தார்கள்.

அக்கடிதத்தில் “நீர் எனது இந்தக் கடிதத்தைப் படித்த பிறகு, மக்கா மற்றும் தாம்ஃபிற்கு மத்தியிலுள்ள ‘நக்லா’ என்ற இடத்தை அடையும் வரை தொடர்ந்து செல்லுங்கள். அந்த இடத்தை அடைந்து விட்டால் அங்குத் தங்கி குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை எதிர்பார்த்திருங்கள், அவர்களின் வருகையை அறிந்து எனக்கு செய்தி அனுப்புங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் படித்த அப்துல்லாஹ் (ரழி) “செவிமடுத்தோம் வழிப்பட்டோம்!” என்று கூறியவராக, இச்செய்தியை தங்கள் தோழர்களுக்கு அறிவித்தார்கள்.

“நான் உங்களை நிர்பந்திக்கவில்லை. யார் வீரமரணம் அடைய விரும்புகிறாரோ அவர் என்னுடன் வரலாம். யார் மரணிப்பதை வெறுக்கிறாரோ அவர் திரும்பிவிடலாம். ஆனால், நான் போர் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று அப்துல்லாஹ் (ரழி) தங்கள் தோழர்களிடம் கூறினார். அவர்களது தோழர்கள் “போருக்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்கள். இவ்வாறு இவர்கள் தங்களதுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த போது வழியில் ஸஅது இப்னு அபீவக்காஸும், உத்பா இப்னு கஸ்வானும் தாங்கள் வாகனித்த ஒட்டகத்தைத் தவற விட்டதால், அதைத் தேடுவதில் ஈடுபட்டு படையிலிருந்து பின்னடைந்து விட்டனர்.

அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) படையுடன் ‘நக்லா’ என்ற அந்த இடத்தை வந்தடைந்தார்கள். அங்குக் குறைஷிகளில் அம்ர் இப்னு ஹழ்ரமீ, உஸ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு முகீரா, நவ்ஃபல் இப்னு அப்துல்லாஹ் இப்னு முகீரா மற்றும் முகீரா கிளையினரின் அடிமையான ஹகம் இப்னு கைஸான் ஆகியோருடன் வியாபாரக் குழு ஒன்று உலர்ந்த திராட்சை, பதனிடப்பட்ட தோல் மற்றும் வியாபாரப் பொருட்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் தங்களது தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். “நாம் சங்கைமிக்க மாதமாகிய ரஜப் மாதத்தின் கடைசித் தேதியில் இருக்கிறோம். இப்போது அவர்களுடன் நாம் சண்டையிட்டால் சங்கைமிக்க மாதத்தின் கண்ணியத்தைப் பாழ்படுத்தியவர்களாகி விடுவோம். ஆனால், போர் செய்யாமல் இன்றிரவு விட்டுவிட்டால் இவர்கள் ஹரம் பகுதிக்குள் நுழைந்து விடுவார்கள்” - இவ்வாறு விவாதம் நடைபெற்ற பின்பு, அவர்களிடம் சண்டையிடலாம் என்று முடிவானது. அதன் பிறகு முஸ்லிம்களில் ஒருவர் அம்ர் இப்னு ஹழ்ரமியை அம்பெய்துக் கொன்றார்.

அடுத்து, முஸ்லிம்கள் உஸ்மான் மற்றும் ஹகம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஆனால் நவ்ஃபல் தப்பித்துவிட்டார். பின்பு இரண்டு கைதிகள், வியாபாரப் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு மதீனா வந்தனர். இந்த கனீமாவில்” அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் ஐந்தில் ஒரு பங்கை ஒதுக்கினார்கள். இதுதான் இஸ்லாமில் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் ஒதுக்கப்பட்ட முதல் கனீமா பங்காகும். இப்போரில்தான் முதன் முதலில் ஒரு எதிரி கொலை செய்யப்பட்டான். மேலும், இப்போரில்தான் முதன் முதலாக எதிரிகள் கைது செய்யப்பட்டனர். இங்கே அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்பது எல்லாமே நபி (ஸல்) அவர்களுக்குத்தான். குரானில் கூட இப்படி வசனங்கள் வரும். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்றால் நபிக்கு கீழ்ப்படிய வேண்டும் என்றுதான். ஏனெனில் அல்லாஹ் நபியின் வாயில்தானே வருகிறார்? இதற்காகத்தான் சிந்திக்க மாட்டீர்களா என்று மூமீன்களிடம் அல்லாஹ் நபி(ஸல்) வாயிலிருந்து கூறுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக வெறுத்தார்கள். மேலும், “சங்கைமிக்க மாதத்தில் போர் செய்ய நான் உங்களுக்குக் கட்டளையிடவில்லையே!” என்று கண்டித்து விட்டு கைதிகள் மற்றும் வியாபாரப் பொருட்கள் விஷயத்தில் மௌனம் காத்தார்கள். ஆனால், பங்கை வாங்கிகொண்டார்கள். ஐந்தில் ஒரு பாகம் என்றால் சும்மாவா?

இந்நிகழ்ச்சியை முஸ்லிம்கள் மீது பழிசுமத்த நல்லதொரு சந்தர்ப்பமாக இணைவைப்போர் பயன்படுத்தினர்.

முஸ்லீம்களும் நபிகள் நாயகத்தை நெருக்கினர். இணைவைப்போரும், அநாகரிகமாக சங்கை மிக்க மாதங்களில் போர் தொடுத்ததை சொல்லி முஸ்லீம்களை அவமரியாதை செய்தனர். மேலும் ஏற்கெனவே சங்கை மிக்க மாதங்களில் போர் செய்வதை அல்லாஹ் தடுத்திருக்கிறார். இப்போது சங்கை மிகுந்த மாதத்தில் இப்படி வரும்படி வந்திருக்கிறது. என்ன செய்வது? முதலில் வந்த வரும்படி. அதனை விட்டுவிட்டால், இவ்வாறு நமக்கு கொண்டுவந்து கொடுத்த ஆட்கள் ஓடிவிடுவார்கள். ஆகவே அல்லாஹ்வை கூப்பிட வேண்டியதுதான் என்று நபி(ஸல்) முடிவு செய்கிறார்.

முஸ்லிம்கள் மீது பலவாறு பழி சுமத்தினாலும் அந்த அனைத்துப் பழிகளையும் பொய்யான கூற்றுகளையும் முற்றிலும் தகர்த்தெறியும்படி ஒரு வசனத்தை அல்லாஹ் நபி(ஸல்) வாயில் இறக்கினான். அந்த வசனத்தில் முஸ்லிம்கள் செய்ததை விட இணைவைப்போரின் செயல் மிகப்பெரிய மன்னிக்க முடியாத குற்றம் என்று தெளிவுபடுத்தினான்.

(நபியே! துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இச்)சிறப்புற்ற மாதங்களில் போர் செய்வதைப் பற்றி உங்களிடம் அ(ந்நிராகரிப்ப)வர்கள் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: “அவற்றில் போர் புரிவது பெரும் பாவம்(தான்.) ஆனால், (மனிதர்கள்) அல்லாஹ்வுடைய மார்க்கத்(தில் சேருவ)தை (நீங்கள்) தடுப்பதும், அல்லாஹ்வை (நீங்கள்) நிராகரிப்பதும், (ஹஜ்ஜுக்கு வருபவர்களை) மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரவிடாது தடுப்பதும், அதில் வசிப்போ(ல் நம்பிக்கை கொண்டோ)ரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில், (அதை விட) மிகப் பெரும் பாவங்களாக இருக்கின்றன. தவிர (நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் செய்துவரும்) விஷமம் கொலையை விட மிகக் கொடியது. (அல்குர்ஆன் 2:217)

அதாவது இணைவைப்பது மிகப்பெரிய குற்றம். அதற்காக அவர்களை கொலை செய்வது தப்பே இல்லை. அந்த புனிதமான மாதங்களில் கொன்றாலும் பிரச்னை இல்லை. என்பதுதான் நபி(ஸல்) வாயின் வழியாக அல்லாஹ் சொன்னது. நாம் மொழிபெயர்க்கும்போது எவ்வளவு பிராக்கெட் போட்டு குழப்புகிறோம் என்று சிந்தியுங்கள்.

அதாவது, முஸ்லிம்கள் விஷயத்தில் இணைவைப்போர் ஏற்படுத்திய இந்தக் குழப்பங்களும் கூச்சல்களும் அடிப்படையற்றவை. ஏனெனில், முஸ்லிம்கள் விஷயத்தில் இவ்வாறு கூறுவதற்கு அந்த இணைவைப்போருக்குத் தகுதியே கிடையாது. இஸ்லாமை எதிர்ப்பதற்கும் முஸ்லிம்கள் மீது அநியாயமிழைப்பதற்கும் இந்த இணைவைப்போர் எவ்விதத்திலும் தயக்கம் காட்டவில்லை. முஸ்லிம்கள் சங்கைமிக்க மக்காவில் தங்கியிருந்த போது அவர்களது பொருட்கள் அபகரிக்கப் பட்டன. நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்ய வெறியுடன் அலைந்தனர். இன்னும் புனிதமிக்க எத்தனையோ கடமைகளையும் உரிமைகளையும் பாழாக்கிய இவர்களுக்கு புனிதத்தைப் பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? புனிதங்களையே மதிக்காத இவர்களுக்கு இப்பொழுது மட்டும் புனிதத்தைப் பற்றி பேசுவதற்கு தகுதி எங்கிருந்து வந்தது? எனவே, முஸ்லிம்கள் இந்தப் புனிதத்தைப் பாழாக்கியது எந்த வகையிலும் அசிங்கமோ குற்றமோ இல்லை. ஆகவே, இணைவைப்பவர்கள் பரப்பிய இந்த வதந்திகள் முற்றிலும் கேவலமான ஒன்றே!

இதுவே அல்லாஹ்வின் வழி. நபிகள் நாயகத்தின் வாயிலிருந்து வரும் முத்துக்கள் எந்த புனிதமான விஷயத்தையும் கடாசிவிட்டு செல்பவை. கொலை கொள்ளை எல்லாவற்றையும் எந்த நீதி நேர்மை நியாயம் புனிதம் பார்க்காமல் செய்யலாம் என்பதே அல்லாஹ் நபி(ஸல்) அவர்களின் வழி. ஆகவே நாம் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று குஃபாரிடம் இப்போது பேசினாலும், நாமே ஏமாந்துவிடக்கூடாது.

இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக