புதன், 23 நவம்பர், 2011

கடவுள் என்றொரு மாயை ... 5

எனது கல்லூரி இளங்கலை நண்பன் ஒருவன் மிகவும் கடவுள் நம்பிக்கையாளன். அவன் ஒரு முறை தன் தோழியோடு ஸ்காட் தீவு ஒன்றில் தங்கியிருக்கும்போது நள்ளிரவில் சாத்தானின் குரல் கேட்டு விழித்தார்களாம். அந்தக் குரல் எழுப்பிய பய்ங்கரத்தைத் தன் வாழ்நாளில் மறக்க முடியாதெனக் கூறினான்.
பின்பு ஒரு முறை விலங்கியல் நிபுணர்கள் சிலரோடு இருக்கும்போது நான் இந்த நிகழ்வைப் பற்றிக் கூறிய போது அவர்கள் அதிரடியாகச் சிரித்து 'Manx shearwater' என்றார்கள். இந்தப் பெயருடைய பறவை ஒன்று இதுபோல் நாராசமான குரலெழுப்பக் கூடியது என்றும், அதனாலேயே அது 'Devil Bird' (பேய்ப் பறவை) என்று அழைக்கப் படுவதாகச் சொன்னார்கள்.

*

இதைப் போலவே நம்பிக்கையாளர்கள் பலரும் தங்களுக்குக் கடவுளின் 'தரிசனம்' கிடைத்ததாகக் கூறுவதுண்டு. எனக்கும் கூட அப்படி ஒரு "தரிசன அனுபவம்" என் இளவயதில் கிடைத்ததுண்டு. இன்னும் பசுமையாக அது மனதில் இருக்கிறது.

*

பீட்டர் (Peter Sutcliffe) என்ற ஒரு கொலைகாரன் தன் காதில் பெண்களைக் கொலை செய்யச் சொல்லி ஏசுவின் குரல் ஒலித்ததாலேயே தான் பெண்களைக் கொன்றதாகக் கூறினான். George Bush கடவுள் ஈராக் மீது படையெடுக்க தான் கடவுளால் ஏவப்பட்டதாகக் கூறித்தான் அப்போரைத் தொடங்கினார்.(pp112)

*

Sam Harris என்பவர் தன் 'The End of Faith' என்ற தன் நூலில் இவ்வாறு கூறியுள்ளார்: மிகுந்த நம்பிக்கையாளர்களை நாம் ('religious') மத நம்பிக்கையாளர்கள் என்கிறோம். அனால், அவர்களை mad, psychotic ,or delusional என்றே அழைக்க வேண்டும் ....

மத நம்பிக்கையாளர்கள் பொதுவாக புத்தி பிசகியவர்கள் அல்ல; ஆனல் அவர்களது அடிப்படை நம்பிக்கைகள் அறிவற்றவையே. (pp113)

*

மத்தேயுவும் லூக்காவும் தங்களது விவிலியங்களில் ஏசுவின் பிறப்பைப் பற்றிப் பேசுகையில் ஆளுக்கொரு விதமாக சொல்லியிருக்கிறார்கள். .. தாவீதின் குலத் தோன்றல் என்று எழுதப்பட்டிருப்பதை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில், லூக்கா ஏசுவும் மரியாளும் பெத்லேகம் சென்றதாக எழுதியுள்ளார். உண்மையிலேயே தாவீது இருந்திருந்தாலும் அவர் ஏசுவின் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பானவர். அவரது பிறப்பிடத்திற்குத்தான் அவரது வாரிசுகள் மக்கள் கணக்கெடுப்பிற்காக செல்ல வேண்டும் என்று எப்படி ரோமர்களால் நிர்ப்பந்திக்கப் பட்டிருப்பார்கள்? இதனாலேயே, Lane Fox தனது நூலான The Unauthorised Version-ல் லூக்காவின் கதை வரலாற்றுப்படி நடந்திருக்க முடியாததாக உள்ளது என்கிறார். (pp119)

*

Robert Gillooly ஏசு கதையில் வரும் - அவரது பிறப்பில் கீழ்த்திசையில் உதித்த விண்மீன், குழந்தை ஏசுவை ஆராதிக்க வந்த மூன்று அரசர்கள், அவர் வாழ்வில் ஏசு நடத்திய அதிசயங்கள், கொல்லப் பட்டது, உயிர்த்தெழுந்தது, பரலோகத்திற்கு எழுந்தருளியது - இவை எல்லாமே ஏற்கெனவே Mediterranean and New East regions-களில் இருந்துவந்த மதங்களில் இருந்துவந்த கதைகளே.

மத்தேயு், ஏசு தாவீதின் குடும்பத்தில் அவதரித்தவர், பெத்லேகமில் பிறந்தார் என்று சொல்லவேண்டிய கட்டாயத்திற்கும், லூக்கா, ஏசுவை மற்ற சாதியினருக்கும் பொதுவாக்க நினைத்ததால் கன்னிப்பிறப்பும், ஆராதிக்க வந்த மூன்று அரசர்கள் கதையையும் இணைக்க வேண்டிய கட்டாயத்திற்கும் நடுவில் எழுந்த பிரச்சனைகளே இந்த இருவரின் விவிலியங்களில் உள்ள வேற்றுமைகளுக்கான காரணம். ஆனாலும் இந்த வேற்றுமைகள் மிகத்தெளிவாக இருந்தாலும் அவைகளை நம்பிக்கையாளர்கள் கண்டு கொள்வதில்லை.

எப்படி இவைகள் வேத வார்த்தைகள் என்று நம்பும் மக்கள் இது போன்ற வித்தியாசங்களைக் கண்டு கொள்வதில்லை? மத்தேயு ஏசுவிற்கும் தாவீதுக்கும் நடுவே 28 பரம்பரைகள் இருந்ததாகச் சொல்கிறார். லூக்காவோ 41 பரம்பரைகள் நடுவில் இருந்ததாகச் சொல்கிறார். இரண்டிலும் வரும் பெயர்கள் ஒத்திருக்கவுமில்லை. அதோடு ஏசு உண்மையிலேயே கன்னித்தாயின் மூலமாகப் பிறந்திருந்தால் அவரது தந்த ஜோசப்பின் பரம்பரை தேவையற்றதாகி விடுகிறதே! (pp120)

*

புதிய ஏற்பாட்டின் 4 விவிலியங்களும் ஏற்கெனவே இருந்த பன்னிரண்டு விவிலியங்களுக்கும் மேலானவைகளிலிருந்து (தாம்ஸ், பீட்டர், நிக்கோடீமஸ், பிலிப். பார்த்தலோமியோ, மரிய மக்தலேனாள் போன்றோரின் விவிலியங்களிலிருந்து..)குத்து மதிப்பாக (arbitrarily) தெரிந்தெடுக்கப்பட்டவையே.(pp121)

*

மொழிபெயர்ப்புகளினால் ஏற்படும் பல மாற்றங்களுக்கு சில உதாரணங்களைத் தருகிறார்:
ஜோசப் தச்சு வேலை செய்தவர் என்று சொல்லப்படிகிறது. tekton என்ற க்ரீக் சொல்லுக்கு அந்தப் பொருளுண்டு.இந்த சொல்அராமிக் மொழியின் naggar என்ற சொல்லின் மொழியாக்கம். ஆனால் இந்த அராமிக் சொல்லுக்கு தச்சன் என்ற பொருளோடு, படித்தவன் என்ற பொருளும் உண்டு.

அடுத்து, ஹீப்ரு மொழியில் almah - இளம்பெண் - என்ற சொல்லே க்ரீக்கில் parthenos கன்னிப்பெண் என்று மொழி பெயர்க்கப்பட்டு ஏசுவின் பிறப்பு ஒரு கன்னித்தாயிடம் என்பதாக மாறியுள்ளது.

விவிலியங்களில் உள்ள இந்த மொழிபெயர்ப்பு வினோதங்களுக்குப் போட்டியாக குரானில் ஒரு வேடிக்கையான மொழி பெயர்ப்பு நடந்துள்ளது. Why I am not a muslim? என்ற நூலை எழுதிய Ibn Warraq தன் கட்டுரை ஒன்றில் கூறியுள்ளது: மார்க்கத்திற்காக தன் உயிரைக் கொடுக்கும் மதத் தியாகிகளுக்கு 72 "கன்னியர்கள்" சுவனத்தில் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருப்பது தவறு. ஏனெனில், கன்னியர்கள் என்பது ஒரிஜினல் சொல்லின் தவறான மொழியாக்கம்; உண்மையில் அது - white raisins of crystal clarity - அதாவது 72 நல்ல உலர்ந்த திராட்சைப் பழங்கள் கிடைக்கும் என்பதாகும்! இந்த உண்மை மட்டும் எல்லாருக்கும் தெரிந்திருந்தால் எத்தனை எத்தனை மனித வெடி குண்டுகள் வெடிப்பு தடுக்கப்பட்டு, எத்தனை எத்தனை மனித உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்க முடியும்? (pp123)

*

BERTRAND RUSSEL: பெரும் விஞ்ஞானிகள் பலரும் கிறித்துவ மதத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்தான். ஆனால் தங்கள் வருமானம் தடைபட்டுப் போய்விடுமே என்பதால் பலரும் அந்த உண்மையை மறைத்துவிடுகிறார்கள். (pp123)

*

Nobel prize-winning Scientific Christians பற்றியான ஒரே ஒரு வலை மனையில் (web site) ஆறே ஆறு விஞ்ஞானிகளின் பெயர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அதிலும் நால்வர் நோபல் பரிசு பெற்றவர்களில்லை! மீதி இரு்வரில் ஒருவர் சமூகக்காரணங்களுக்காக மட்டும் கோவிலுக்குச் செல்பவர் என்பது எனக்குத் தெரியும். (pp126)

அமெரிக்க மக்களை விடவும் அமெரிக்க விஞ்ஞானிகள் பலரும் மத நம்பிக்கையற்றவர்களே. .. and the most distinguished scientists are the least religious of all. (pp127)

*

Results of Paul Bell's meta-analysis in Mensa Magazine in 2002: படிப்பறிவோ புத்திசாலித்தனமோ அதிகமாக இருப்பவர்கள் மதங்களில் ஆழமான நம்பிக்கையில்லாதவர்களாக இருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக