புதன், 23 நவம்பர், 2011

WHY I AM NOT A MUSLIM ... 16

இஸ்லாமிய வேதாந்தங்களும், பிரிவுகளும், வேறுபட்ட கோட்பாடுகளும் இந்த பகுதியில் பேசப்படுகின்றன. (241 - 260)

CHAPTER 11: 

GREEK PHILOSOPHY AND SCIENCE AND THEIR INFLUENCE ON ISLAM
 பல காலக்கட்டங்களில் இருந்த ஸ்லாமிய வேதாந்தக் கோட்பாடுகளும், கிரேக்க வேதாந்தங்களும், அறிவியலும் இஸ்லாமிற்கு அளித்த தாக்கங்களும் பேசப்படுகின்றன. (261 - 275)

இவ்விரண்டு பகுதிகளும் நான் தொடர்ந்து எழுதி வரும் பகுதிகளுக்கு அத்தனை அவசியமானதில்லை என்று கருதுவதால் அவைகளைப் பற்றிய குறிப்புகளை இங்கே தராமல் அடுத்த பகுதிக்கு சென்றுள்ளேன்.

CHAPTER 12:

SUFISM OR ISLAMIC MYSTICISM

அன்றைய சூபிக்கள்,  ‘தான்’ என்ற நினைவையறுத்தவர்களாகவும், சந்நியாச நிலையில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்தார்கள். தெய்வீகத் தன்மைகளை விடவும் மேற்சொன்ன இரு பண்புகளையே போற்றி வந்தவர்கள்.  (277)

சூபிக்கள் இறையச்சத்தை விடவும் கடவுளின் மீதான அன்பு, ஞானம், தன்னிலை மறுத்தல், வெறும் கொள்கைப் பிடிப்போடு இல்லாது கடவுளுக்கான சேவையே சிறப்பானது என்ற கொள்கையோடும் இருப்பவர்கள். (278)

நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு நிற்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா?
 புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றி ஒரு தத்துவத்தை இஸ்லாம் முத்லில் இருந்தே வளர்த்து வந்துள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்புகள் bida - பிடா -  என்று அழைக்கப்படுகின்றன.

ஹடித்துகளின் படி ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புமே  நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒன்று; ஆகவே இது  தவறு; இத்தைகைய தவறுகள் மனிதர்களை நரகத்திற்கே இட்டுச் செல்லும். ஒவ்வொரு கண்டுபிடிப்புமே சுன்னாவிற்கு எதிரான ஒன்று. முன்னாள் இறை வல்லுனர்கள்  புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஒவ்வொருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கொள்கையைக் 
கொண்டிருந்தனர் ! ஆனால் வளர்ந்து வரும் அறிவியலோடு போட்டி போட முடியாததால், இந்த ‘பிடா’ இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டன. 

al-Shfi'i என்பவரால்,  குரானையோ, சுன்னாவையோ, ijmaவையோ மறுக்கும் எந்த ஒரு கண்டுபிடிப்பும் தவரான பிடா என்றும் (heretical bida),  இவைகளை மறுக்காத மற்ற கண்டுபிடிப்புகள் சரியான பிடா என்றும் (praiseworthy bida)  என்றும் கருதப்பட்டன. (278)
இஸ்லாம் மறுப்புகளை ஏற்றுக் கொள்வதுண்டா? ‘இல்லை’ என்பதே  இதற்கான பதில். Goldziher மறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பண்பு இஸ்லாமியரின் தோற்றக் காலத்தில் இருந்தது என்கிறார். (280)


CHAPTER 13

AL-MA'ARRI

சுய சிந்தனையாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள், மத நம்பிக்கைகளிலிருந்து மாறுபட்டு நிற்பவர்களை இஸ்லாமியத்தில் zindiqs என்றழைக்கிறார்கள். அப்படிப்பட்ட மிகச் சிறப்பான மூன்றாம் நிலையில் உள்ள ஒருவர்  Abu 'L-ala Ahmad al-Ma' rri (973 - 1057). இவரது பாடல்கள் எழுப்பும் சமயத்தொடர்பான, அதுவும் இஸ்லாமியத்திற்குத் தொடர்பான கேள்விகள் எந்த ’உண்மையான’ இஸ்லாமியரையும் நிலைகுலையச் செய்யும். 

அவரது சில பாடல்கள் மேற்கோள்களாக இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. சில பாடல்கள்;

                    Hanifs (= Muslims) are stumbling; Chrsitians all astray
                    Jews wildered, Magians far on error's way
                    We mortals are composed of two great schools
                    Enlightened knaves or else religious fools.

இஸ்லாமியத்தை மற்ற மதங்களோடு பிரித்துப் பார்க்கவில்லை. எல்லா சமயங்களுமே அவருக்கு ஒன்றுதான். சமயங்கள் எல்லாமே ‘முட்டாள்களின் தனிச்சொத்து’ என்கிறார்.

                  Mohammed or Messiah! Here thou me, 
                  The truth entire nor here not there can be;
                  How should our God who made the sun and the moon
                 Give all his light to One, I cannot see.

முகமதுவோ, ஏசுவோ முழுமையான உண்மைகள்  அங்குமில்லை; இங்குமில்லை.
எல்லாம் வல்ல, எல்லாவற்றையும் படைத்த ஒரு கடவுள் யாரோ ஒரே ஒரு மனிதருக்கு அவரின் முழுமையான அறிவைக் கொடுத்திருப்பாரா?
(285)

 இப்படியெல்லாம் கவிஞர்கள் எழுதிவிடுவார்கள் என்பதால்தான் இஸ்லாம் கவிதைகளுக்கு, பாடல்களுக்குத் தடை விதித்துள்ளது 
போலும் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக