புதன், 23 நவம்பர், 2011

கடவுள் என்றொரு மாயை ... 9

THE ‘GOOD’ BOOK AND THE CHANGING MORAL ZEITGEIST.

உலகத்தில் அரசியல் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றிருக்கிறது; ஆனால் மதங்கள் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்றிருக்கிறது. – Sean O’Casey

*

வேதப் புத்தகங்கள் இரு வழியில் நமக்கு நன்னெறி காட்ட முடியும். ஒன்று நேரடியான வழிகாட்டுதல்களால். இன்னொன்று கடவுளே நமக்கு ஒரு வழிகாட்டியாய் இருந்தும் வழிகாட்ட முடியும்.

*
9 நூற்றாண்டுகளாய் பலரால் எழுதப்பட்ட, திரிக்கப்பட்ட, தொடர்பற்ற நூலே பைபிள். (268)

*
bishop John Shelby Spong தான் எழுதிய The Sins of Scripture-ல் சொல்லியபடி தங்களுடைய வாழ்வின் நெறிகளை பைபிள் மூலமாக நடத்த நினைப்பவர்கள் ஒன்று முழுமையாக பைபிளைப் படித்திருக்க மாட்டார்கள்; அல்லது அதனை முழுவதுமாகப் புரிந்திருக்க மாட்டார்கள். (269)

*
கடவுள் மிகவும் மலிந்த ஒரு பார்வையை மனிதர்கள் மேல் வைத்திருந்தார் போலும். ஒரே ஒரு குடும்பத்தை – நோவாவின் குடும்பத்தை மட்டும் – காக்க நினைத்து, மற்ற பாவப்பட்ட மக்கள் எல்லோரையும், குழந்தைகளையும் அதோடு எந்தப் பாவமும் பண்ணாத மிருகங்களையும் சேர்த்து கூண்டோடு ஒழிக்கிறார். இதெல்லாமே 'சின்னப் பிள்ளைகள் கதை போல் இருக்கிறதல்லவா?)

*
தனி மனிதனின் ஒழுக்கங்கள் கூட கடவுளை மிகவும் பாதிக்கும் போலும். ஒரு தெய்வீகக் கடவுள், இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தைப் படைத்த அந்தக் கடவுள், ஒரு தனி மனிதனின் ஒழுக்கத்தின் மீது இவ்வளவு பெரிய அக்கறை கொள்ள வேண்டுமா? (270)

*
நோவாவைப் போலவே ஆபிரஹாமின் மருமகன் லோத் குடும்பத்தைக் காப்பாற்ற இரு ஆண் தேவதூதர்களை (angels; அதுசரி! ஆப்ரஹாமிய மதங்களில் தேவதைகளே கிடையாதோ? gender bias ... ?) அனுப்பி வைக்கிறார். ஆனால் லோத்தின் ஊர்க்காரர்களுக்கு அந்த தேவதூதர்களை 'know' செய்ய வேண்டுமென்று ஆவல். இதில் know என்பது அந்த 'ஆண்களைப் புணர்வதற்கு' என்ற கருத்தில்தான் வந்துள்ளது. Genesis19:5) ஆப்ரஹாமிய வேத நூல்களில் விஷயம் இப்படி இருக்க AIDS-க்கு எதிராக கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துங்கள் என்றாலோ, gay marriages போன்றவற்றிற்கோ இந்த மூன்று மதத்தினரும் 'கொடி பிடிப்பது' கொஞ்சம் வேடிக்கைதான்!

ஆனால் மிகவும் 'புத்திசாலித்தனமாக' அந்த தேவதூதர்களைக் காப்பாற்ற ஆண்களையே அறியாத தன் இரு மகள்களையும் அவர்களிடம் 'பண்டமாற்று' செய்துவிடுகிறார்.(Genesis 19:7-8)நல்ல வேளையாக அந்த தேவதூதர்கள் தங்களைப் பிடிக்க வந்த கிராமத்துக்காரர்களை குருடாக்கி விடுகின்றனர். அதோடு லோத்தை அந்த ஊரை விட்டு தன் கால்நடை, குடும்பத்தாரோடு தப்பி ஓடவைக்கின்றனர்; அதிலும் அந்தப் பாவப்பட்ட லோத்தின் மனைவி தப்பி ஓடும்போது பின்னால் நடந்த அழிவுக்காட்சியைக் காண திரும்பிப் பார்த்ததால் - மற்றவர்களின் குற்றங்களோடு ஒப்பிடும்போது, மிகச்சின்ன தவறு செய்திருந்தாலும் - சிலையாகி விடுகிறாள்.

கதை மேலும் தொடர்கிறது. மனைவியை இழந்த லோத் தன் மகள்களோடு ஒரு குகையில் தங்கியுள்ளான். ஆண்களைக் காணாத மகள்கள் இருவரும் தன் தந்தைக்கு மது வெறியேற்றி அவரோடு இருவரும் புணர்கிறார்கள்; கர்ப்பமடையவும் செய்கிறார்கள். (Genesis 19: 31-36)
//If this dysfunctional family was the best Sodom had to offer by way of moral, some might begin to feel a certain sympathy with God and his judicial brimstone.// இப்படித்தான் தங்கள் குடும்பங்களை சோடோம்காரர்கள் உருவாக்க வேண்டுமென கடவுள் நினைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நியாயத்தீர்ப்புகளால் அந்தக்கடவுளைப் பார்க்க நமக்கு பாவமாகத் தான் தோன்றுகிறது.

இதுபோல் இன்னொரு கதையும் உண்டு. (Judges 19:23-24; 19:25-26)லெவித்தியர் என்ற ஒரு குரு தன் மகளோடும் தன் வைப்பாட்டியோடும் அடுத்த ஊருக்குச் செல்லும்போதும், ஊர்க்காரர்கள் முன் கதை போலவே தேவதூதர்களைத் தேடி வருகிறார்கள். லெவித் முன் கதை போலவே தன் மகள், வைப்பாட்டி இருவரையும் - //.. humble ye them, and do with them what seemeth good unto you; but unto this man do not so vile a thing'// (Judges 19: 23-24) அடக் கடவுளே!

*
மேலே சொன்ன லோத்தின் மாமா தான் ஆபிரஹாம்/இப்ராஹீம்; யூதம், கிறித்துவம், இஸ்லாம் என்ற மூன்று 'ஒரே கடவுள்' மதங்களுக்கும் இவரே ஆரம்பம். அப்படிப்பட்டவர் எப்படி மனிதர்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆனால் அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? பஞ்சம் பிழைக்க தன் மனைவி சாராவுடன் எகிப்த்துக்குச் செல்கிறார். அங்கே உள்ளவர்களின் கண்கள் தன் மனைவிமேல் பட்டுவிடுமே என்றெண்ணி அவளைத் தன் சகோதரி என்று சொல்லிக் கூட்டிப் போகிறார். அங்கே ராஜாவின் கண்ணில் பட, அவர் சாராவைத் தன் அந்தப்புரத்தில் சேர்த்துக் கொள்கிறார். ஆபிரஹாமும் எக்கச்சக்கமான பணக்காரராக ஆகிவிடுகிறார். இதைப் பார்த்த கடவுளுக்குக் கோபம் வந்துவிடுகிறது -ஆனால் மன்னன் மேல் மட்டும்தான்; ஆபிரஹாமின் மேல் அல்ல! அந்தக் கோபத்தில் மன்னனின் குடும்பத்தின் மீது ப்ளேக் நோயைப் பரப்பி விடுகிறார் கடவுள். மன்னனுக்கும் சாரா யார் என்பது தெரிந்து விடுகிறது. ஆபிரஹாமையும் சாராவையும் எகிப்தை விட்டே விரட்டி விடுகிறார். (Genesis 12: 18-19)

ஆப்ரஹாம் இதோடு விடுவாரா என்ன? அடுத்த நாட்டுக்கு செல்கிறார். அங்கும் - Abimelech, the King of Gerar - ஆபிரஹாம் தன் பழைய கதையை எடுத்து விடுகிறார். (Genesis 20; 2-5)அந்த மன்னனும் சாராவைத் திருமணம் செய்து, மீண்டும் அரசர் புரிந்து விரட்டி விட ... கதை இப்படியே போகிறது. (இந்தக் கதையை எல்லாம் படித்துவிட்டு எப்படித்தான் தங்கள் பிள்ளைகளுக்கு மக்கள் ஆபிரஹாம்/இப்றாஹீம், சாரா போன்ற பெயர்களை வைக்கிறார்களோ?!)

*

தொடரும் ஆபிரஹாமின் கதையில் வரும் இன்னுமொரு நிகழ்வு இதுவரை நடந்ததையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாயுள்ளது. கடவுளுக்கு திடீரென ஒரு ஆசை. ஆபிரஹாமிடம் உன் மகனை எனக்கு பலியிடு என்கிறார். ஆபிரஹாமும் ஐசக் (கிறித்துவக் கதை), / இஸ்மாயில் (இஸ்லாமியக் கதை) என்ற தன் மகனைப் பலியிடத் தயாராகிறார். ஆனால் கடைசி வினாடியில் கடவுள் மனமிறங்கி விடுகிறார்! God was only joking after all, 'tempting' Abraham and testing his faith !!!!!! இப்போதைய காலத்தில் உள்ளவர் எப்படி இது அந்தக் குழந்தையைப் பாதிக்கும் என்று யோசிப்பார். ந்யூரம்பர்க் (Nuremberg)வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 'நான் எனக்கிட்ட் ஆணையை மட்டும் நிறைவேற்றினேன்' என்று சொல்வதுபோல்தான் இது உள்ளது. மூன்று ஒரு-கடவுள்-மதங்களின் அடிப்படைக் கருத்து இப்படியுள்ளது!

*
நாம் நமது ஒழுக்கங்களை நமது வேத நூல்களிலிருந்து பெற முடியாதென்பதற்காகவே இந்தக் கதைகளை இங்கே கொடுத்துள்ளேன்.

*
இன்னொரு கதை. (Judges chapter 11) இது Jephthah என்ற மன்னன் Ammonites என்ற தன் விரோதிகளோடு போரிடப் போகும்போது கடவுளிடம் வேண்டுகிறான். தான் வெற்றி பெற்று விட்டால் தன் கோட்டைக்குப் போகும்போது யார் முதலில் வெளிவந்து தன்னை வரவேற்கிறார்களோ அவர்களைச் சமைத்து உணவாக்கித் தருகிறேன் என்று வாக்குத் தருகிறான். வெற்றி பெற்று வரும்போது அவனது ஒரே மகள் எதிர் வருகிறாள். அவனும் அவளை சமைத்துக் கடவுளுக்குப் படைக்கிறான். ஏனோ இந்த தடவை கடவுள் வந்து Jephthah மன்னனது மகளைக் காக்கவில்லை!

*
பிற கடவுள்களை வணங்கும்போது இந்த ஆபிரஹாமியக் கடவுளுக்கு வரும் கோபம் மனிதர்களுக்கு வரும் பாலியல் பொறாமை, கோபம் மாதிரியே உள்ளது.

*
மோசஸ்/ மூஸா கடவுளைச் சினாய் மலையில் 'பார்க்க'ச் சென்ற போது அவரது மக்களான இஸ்ரவேலர்கள் அடுத்த கடவுளைக் கொண்டாட ஆரம்பித்து விடுகிறார்கள். பத்துக் கட்டளைகளை எடுத்துவரும் மோசஸுக்குக் கோபத்தில் அந்தக் கட்டளைகளைக் கோபத்தில் கீழே போட்டு விடுகிறார். (ஆனாலும் கடவுள் அதை replace செய்துவிடுகிறார்!) இதற்குப் பிறகு கடவுள் அந்த மக்களுக்குப் பெரும் தண்டனை தருகிறார். மூவாயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட, மீதி மக்களுக்கு ப்ளேக் நோய் வருகிறது. கடவுள் என்ன வைரஸ் அனுப்பினாரோ தெரியவில்லை - சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல், கோழிக்காய்ச்சல் ...ம்ம் ..ம் .. ???

*

மோசஸ் Midianites என்பவர்கள் மேல் படையெடுக்கும்படி கடவுள் ஆணையிடுகிறார். போர் முடிந்த பிறகு மோசஸ் தன் படையாட்கள் எதிரிகளின் குழந்தைகளையும், பெண்களையும் அழிக்காமல் விட்டிருப்பதைப் பார்த்து மிகுந்த கோபமடைந்து, எல்லா ஆண் குழந்தைகளைக் கொல்லவும், திருமணமான பெண்களைக் கொல்லவும், கல்யாணமாகாத பெண்களை அவரது வீரர்கள் அனுபவிக்கவும் கட்டளையிடுகிறார். (Numbers 31:18) இந்த மோசஸ் நமக்கு வழிகாட்டும் தூதரா?

*
அடுத்த கடவுளை வணங்குவதால் ஆபிரஹாமியக் கடவுளுக்கு வரும் கோபம் பற்றி பழைய ஏற்பாட்டில் மீண்டும் மீண்டும் வருகிறது.

*

பால் (Baal) என்ற 'எதிர்க்கடவுளை' வணங்கும் மக்களை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட மோசஸுக்கு ஆபிரஹாமியக் கடவுள் ஆணையிடுகிறார். (Numbers 25)

*

தாலிபான் அல்லது அமெரிக்க கிறித்துவ அடிப்படைவாதிகள் தவிர வேறு யாரும் இப்படி இந்த தேவ நூல்களில் சொல்லப்படும் நீதிகளை மேற்கொள்வதில்லை.

*

உங்கள் பிள்ளைகளை இது போன்ற நீதிகளைப் பழகிக்கொள்ளுங்கள் என்று சொல்லி இப்புத்தகங்களை நாம் அவர்களிடம் தருவோமா?

*
பழைய ஏற்பாட்டில் பல குற்றங்களுக்கு மரணமே தண்டனையாகச் சொல்லப்பட்டுள்ளது. (Where is that AMNESTY INTERNATIONAL??!) ஆனால் அதையெல்லாம் விடவும் (sabbath) ஓய்வு நாளன்று வேலை செய்பவர்களுக்கும் அதே கொலைத்தண்டனைதான். (Numbers 15)

*
ஒருவேளை புதிய ஏற்பாடு பரவாயில்லையோ?

ஏசு ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்பது போல் பேசியதும், ஓய்வு நாள் பற்றிக் கூறியதும் பழைய ஏற்பாட்டிலிருந்து மிகவும் மாறுபட்டதுதான். ஆனாலும் அவர் குடும்ப உறவுகளைப் பற்றிக் கூறியது மிகவும் கடுமையானது. எல்லாவற்றையும் விட்டு விட்டு வெறுத்து ஒதுக்கி விட்டு தன்னிடம் வரும்படி தன் சீடர்களுக்கு உத்தரவிட்டார்.

*

Christian focus is overwhelmingly on sin sin sin sin sin sin sin.

*
ஜோஷுவா தங்களுக்குக் கடவுளால் அளிக்கப்பட்ட Promised Land-யை வெற்றி பெற்ற கதையை வைத்து குழந்தைகளுக்கு ஒரு தேர்வு வைக்கப்பட்டது. அந்தக் கதையே அப்படியே சொல்லி குழந்தைகளை ஓட்டு போட வைத்தார்கள். அதன்பின் இன்னொரு குழந்தை குழுவிடம் கதைப் பெயர்களை, நாட்டினை மாற்றி வைத்து கதைசொல்லி ஓட்டிடச் சொன்னார்கள். நிஜக்கதைக்கு ஜோஷுவாவிற்கு ஓட்டு. ஆனால் மாற்றிச் சொன்ன கதைக்கு மாற்றிய ஓட்டு.
முதல் கதையில் ஜோஷுவாவின் காட்டுமிராண்டித்தனத்துக்கும், மாறிய கதையில் நியாயமானவைகளுக்கு ஓட்டும் என பிரிந்தன.

*
நமது நாட்டில் நடந்த மதப்பிரச்சனைகள் பற்றி சல்மான் ரஷ்தி தன் கட்டுரை ஒன்றில் எழுதியது:
What is there to respect in any of this, or in any of the crimes now being committed almost daily around the world in religion’s dreaded name? How well, with what fatal results, religion erects totems, and how willing we are to kill for them! And when we’ve done it often enough, the deadening of affect the results makes it easier to do it again.

So Indian’s problem turns out to be the world’s problem,. What happened in India has happened in God’s name.

The problem’s name is God.

*
மதங்கள் தவறு ஏதும் நேரடியாகச் செய்யாவிட்டாலும், அவைகள் தனிக் குழுமங்களை ஏற்படுத்தி அவைகள் ஒரு தீமைகளை உருவாக்கும் அமைப்பாகின்றன.

*
ஆபிரஹாம் ஐசக்கைப் பலியிட்டிருந்தால் இன்றைய நிலையில் அவர் மீது முதல்தர கொலைக்குற்றமல்லவா சாட்டப்பட்டிருக்க வேண்டும்.

*
கடவுள் மறுப்பு யாரையும் கெடுதல் செய்ய தூண்டுகிறது என்பதற்கு எவ்வித சிறு ஆதாரம்கூட கிடையாது.

*
கடவுள் பெயரைச் சொல்லி யுத்தங்கள் நடந்துள்ளன. ஆனால் கடவுள் மறுப்பை வைத்து எந்த யுத்தமும் வந்ததில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக