செவ்வாய், 29 நவம்பர், 2011

மகரஜோதி கடவுள் சக்தியல்ல மனிதர்கள் செய்யும் ஏற்பாடே-திருவாங்கூர் தேவசம் போர்டு

 

சபரிமலையில் `மகர ஜோதி' மனிதர்களால் தான் ஏற்றப்படுகிறது என்று திருவாங்கூர் தேவ சம் போர்டு அறிவித் துள்ளது.

சபரிமலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி புல்லுமேடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில், மகர ஜோதியை தரிசித்து விட்டு ஊர் திரும்பிய அய்யப்ப பக்தர்கள் 104 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை கேரளா உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

சமீபத்தில் நடந்த விசாரணையின் போது, பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி மனிதர் களால் ஏற்றப்படுகிறதா? அல்லது வானத்தில் தோன்றும் நட்சத்தி ரமா? என்பதை திருவாங் கூர் தேவசம் போர்டு விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், திரு வாங்கூர் தேவசம் போர்டு கூட்டம் அதன் தலைவர் எம்.ராஜகோ பாலன் நாயர் தலைமை யில் நேற்று நடந்தது. சபரிமலை அய்யப்பன் கோவில் மேல் சாந்தி கண்டரரு ராஜீவரரு, கன் னிபையூர் நாராயணன் நம்பூதிரி (வாஸ்து) மற் றும் பல உயர் பூசாரி கள், திருவாங்கூர் தேவ சம் போர்டு உறுப்பினர் கள், பந்தளம் அரச குடும்பத்தினர், அய்யப் பன் கோவில் நிருவாகி கள், கட்டடக்கலை வல் லுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிவில் தேவசம் போர்டு தலை வர் ராஜகோபாலன் நாயர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

மனிதர்களால்தான் ஏற்றப்படுகிறது

பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியை மனிதர் கள் தான் ஏற்றுகிறார் கள். இது எல்லோருக் கும் தெரியும். அதை திருவாங்கூர் தேவசம் போர்டும் அங்கீகரித்து உள்ளது. மகர ஜோதி ஏற்றப்படும் விஷயத்தில் இந்துக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது.

அந்த நம்பிக்கையில் தேவசம் போர்டு தலை யிட விரும்பவில்லை. மனிதர்களால்தான் மகர ஜோதி ஏற்றப்படுகிறது என்று பிரசாரம் செய்ய வும் தேவசம் போர்டு விரும்பவில்லை.

மகர ஜோதி பிரச் சினை பற்றி விவாதிக்க மட்டும் இன்றைய கூட் டம் கூட்டப்பட வில்லை. மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களான நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் அய்யப் பனைத் தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் அளவுக்கு அதிகமாக உள்ளது.

ஆகவே கூட்ட நெரிசலைத் தவிர்க்க, வருடம் முழுவதும் கோவிலைத் திறந்து பக்தர்களை தரிசனத் துக்கு அனுமதிக்கலாமா என்பது பற்றியும் கூட் டத்தில் விவாதிக்கப்பட் டது.

18ஆம் படியை அகலப்படுத்தக்கூடாதாம்!

வருடம் முழுவதும் கோவிலை திறந்து வைப் பது சம்பிரதாயத்துக் கும், வழக்கத்துக்கும் மாறானது. ஆகவே ஆண்டு முழுவதும் கோவிலைத் திறக்க வேண்டாம் என்று ஏக மனதாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதே போல், பக்தர் களின் நெரிசலைக் குறைப் பதற்காக புனிதமான 18-ஆம் படியை அகலப் படுத்தலாம் என்ற யோசனைக்கும் அனைத்து தரப்பினரும் பலத்த எதிர்ப்பு தெரி வித்தனர். புனித 18ஆம் படியை அகலப்படுத்து வது, கோவில் கட்டப் பட்ட ஆகம விதிக்கு விரோதமானது. அத்து டன் 18ஆம்படி சன்னி தானத்துடன் புனிதம் வாய்ந்ததும் ஆகும். ஆகவே 18ஆம் படியை அகலப்படுத்துவது சரி யல்ல என்றும் கூட்டத் தில் முடிவு செய்யப்பட் டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் அறிக்கை

இந்த விவரங்களை பதில் மனுவாக உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இதுவரை பக்தர் களை மோசடி செய்தவர் கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி வெடித்துக் கிளம்பியுள்ளது.
http://viduthalai.in/new/page1/2522.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக