ஞாயிறு, 18 டிசம்பர், 2011

நீங்கள் இந்துவா ? உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் !

 

 

நீங்கள் இந்துவா ? இல்லையா என்பதை திரு லட்சுமி நாராயணன் அவர்கள் எழுதி இருப்பதையும், முன்னாள் தமிழ்மண பதிவர் திரு ஜெயராமன் அவர்களின் இடுகையை வைத்து தெரிந்து கொள்ளுங்கள்.


பி.கு. இந்துவாகப் பிறந்ததால் ஒருவன் இந்து இல்ல. இந்து மதக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாமல், வேதங்கள் பொய் என்று சொல்லிக் கொண்டு திரியும் எவனோருவனும் இந்து இல்ல என்பதே என் தாழ்மையான கருத்து,

- மேற்கண்ட இந்த பொன்னெழுத்தை நான் கண்டது, திரு லட்சுமிநாரயணன் அவர்களின் பார்பனர்கள் தமிழர்களா ? என்ற பதிவில்.

பார்பனர்கள் தாங்களே தமிழர்கள் இல்லையா என்று பேச ஆரம்பத்துவிட்டதிலிருந்தே எனக்கு அதில் கருத்து கூற ஒன்றும் இல்லை. இங்கே இவர் சொல்கிறார், 'இந்து' என்பதற்கு அடையாளம் இருக்கிறதாம், இந்து மதக்கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாதவன் இந்து இல்லையாம் ?

இந்துமதக் கோட்பாடு என்றால் என்னவென்று யாருக்காவது தெரியுமா ? பகவத்கீதை என்ற மனுச்சார்பு, வைணவசார்பு நூல் தவிர்த்து இந்துமதம் சார்பாக எதாவது நூலோ கோட்பாடோ இருக்கிறதா ? அடுத்து இவர் சொல்கிறார், வேதங்கள் பொய் என்று சொல்லிக் கொண்டு திரிபவர் இந்து இல்லையாம் ? வேதங்கள் உண்மை என்று தானே ஆராய்ச்சியாளர்கள் கூடச் சொல்கிறார்கள், அது உண்மை இல்லை என்றால் தஸ்யூக்களை அழித்தகதையும், இந்திரனுக்கு பிடித்த பாணம் சோமபானம் என்றும் அதை ஆரியர்கள் அமுதமாகவே பருகினார்கள் என்றே தெரியவந்தது. வேதங்கள் உண்மைதான் ஐயா. சத்தியமான உண்மை, ஆனால் அந்த வேதங்கள் யாருக்கானது என்பது தெரிந்ததால் தான் பார்பனர்தவிர்த்து மற்றவர்கள் அதில் எந்த ஈடுபாடும் காட்டுவதில்லை. பார்பனர் வேதத்ததை பார்பனர் அல்லோதோர் படித்துவிடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை கொண்டு வரத்தானே பார்பனர் அல்லோதோர் (சூத்திரன்) வேதம் படித்தால் அவன் காதில் ஈயத்தை காய்த்து ஊற்ற வேண்டும், நாவை அறுக்க வேண்டுமென்றெல்லாம் மனுவேதம் இயற்றி அதை மன்னர்களால் செயல்படுத்த வைத்து, நிறைவேற்றாவிடில் ஆட்சிக்கு அபச்சாரம் நேர்ந்துவிடும் என்றெல்லாம் கதைகட்டி விட்டார்கள். இதையெல்லாம் இந்து என்பதால் பார்பனர் அல்லோதோர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பது என்ன வகையான கட்டாயம் ? முதலில் இந்து என்ற அடையாளம் இதுவெல்லாம் என்று எதாவது இருக்கிறதா ? என்னைக் கேட்டால் காதுக் குத்திக் கொள்ள மறுப்பவன் இந்து இல்லை என்று சொல்லலாமா ? இல்ல (குடும்ப) வழக்கத்தின் காரணமாக பகுத்தறிவாளர்கள் கூட காது குத்திக் கொள்ளவது உண்டு.

லட்சுமி நாராயணன் அவர்களே, வேதங்களில் சொல்லி இருப்பது போல் மூவர்ணத்தாரில் யார் யாரெல்லாம் பூணூல் அணியவில்லையோ அவர்களெல்லாம் இந்து இல்லை என்று ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை ? இந்தியாவில் இருக்கும் 50 விழுக்காடு மக்கள் தொகை பழங்குடியினர் மற்றும் தலித் பெருமக்களே, இவர்களையெல்லலம் சுதந்திர போராட்ட காலத்தில் ஒரே இரவில் இந்துவாக அறிவித்தது அவர்களைக் கேட்டுத்தான் என்பதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா ? இல்லை அவர்கெளெல்லாம் நீங்கள் சொல்லும் இந்து மத கோட்பாடுகளை, வேதங்களை ஏற்றுக் கொண்டு இந்துவாக மாறினார்களா ?

நீங்கள் சொல்லும் இந்துமதக் கோட்பாடுகளையும், இந்துவேதங்களையும் பார்னர்கள் தான் ஏற்றுக் கொள்கிறார்கள், ஆகவே இதை வைத்து உறுதியாகச் சொல்ல முடியும், பார்பனர் தவிர்த்து, இந்து அரசியல் தெரியாதவர்கள் தவிர்த்து எவருமே இந்து இல்லை, மற்றவர்கள் எல்லோரும் வயிற்றுக்குள் சுமக்கும் மலம் போல, வேறு வழியின்றி இந்து மதம் என்ற பெயரை சுமந்து கொண்டு இருக்கிறார்கள். பெரியாருக்கும் முன் கோவில் வாயில் கதவுகளையும் சாத்தி வைத்திருந்தது தான் தாங்கள் சொல்லும் கோட்பாடு என்ற பெயரில் கட்டுப்பாட்டில் இருந்த இந்துமதம்.

நீங்கள் சொல்வது போல் இல்லாவிடில் ஒருவர் இந்து இல்லை என்று வைத்துக் கொள்வோம், ஒருவன் ஒரு பார்பனன் இல்லை என்று எவ்வாறு சொல்வீர்கள் ?

ஒரு வேண்டுகோள், பிறப்பினால் பார்பனாக பிறந்ததால் ஒருவன் பார்பனன் இல்லை என்றும், யார்யெரெல்லாம் பார்பனர் இல்லை என்று தெரிவித்து ஒரு பட்டியல் அளித்தால் நன்றாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக