வியாழன், 15 டிசம்பர், 2011

ஆபாச திருமண மந்திரங்கள். உடலுறவின் போது...



ஆணும், பெண்ணும் உடலுறவு கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள்.

உடலுறவை கண்காணிக்கும் தேவதைகள்.பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 43.

`விஷ்ணுர் யோனி கர்ப்பயது...’ எனத் தொடங்கும் இந்த மந்த்ரத்தின் அர்த்தம்தான் என்ன? 

பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. யோனி, மத்யமம், உபஸ்தம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது.


அதாவது, விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய தேவதைகள் இம்மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக்கிறார்கள். 


இவர்கள்தான்... ஆணும், பெண்ணும் தேக ஸம்பந்தம்உடலுறவுகொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள். 

அதாவது... நாம் தேக ஸம்பந்தம் கொள்வதை கூட விஷ்ணு உள்ளிட்ட தேவதைகள் அருகில் இருந்து, இன்னும் சொல்லப்போனால் அந்த இடத்திலேயே இருந்து கவனிக்கிறார்கள்.

இவ்வாறு கவனிக்கும் தேவதைகள் விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய சக்திகள் அவளுக்கு கர்ப்பத்தை உண்டாக்க அருள்புரிய வேண்டும்... என்கிறது இந்த மந்த்ரம்.

நாம் பெண் என்றால் தெய்வம் என்கிறோம். ஆனால், பெண்ணின் ஓர் உறுப்பிலேயே மூன்று தெய்வங்கள் எல்லை பிரித்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றன என்கிறது இந்த மந்த்ரம்.

இதை நீங்கள் பெண்மையின் உயர்வாகவே எடுத்துக் கொள்ளலாம். `அந்தரங்கம்’ எல்லாம் `அந்தரங்கன் அறிவான்’ என கண்ணதாசன் சொல்லி வைத்ததற்கு முதல் முதன் முன்னோடியாக விளங்கியிருக்கிறது என்றும் வைத்துக் கொள்ளலாம்.இங்கே முக்கியமானதொன்று... வேத திருமணங்கள் பெரும்பாலும் கர்ப்பாதானம்ம என்றே அழைக்கப்பட்டிருக்கின்றன.

விவாஹம் என்றால் தூக்கிக் கொண்டு ஓடுதல் என்றும், பாணிக்ரஹணம் என்றால் கைப்பிடித்தல்என்றும் பார்த்திருக்கிறோம். வையெல்லாம் எதற்காக? கர்ப்பாதானம் செய்து... குழந்தைகள் பெற்று மகிழ்ந்து வாழத்தானே. அதனால்தான் திருமணத்தை கர்ப்பாதானம் என்றே குறிப்பிட்டது வேதம்.

இதற்காகவே கணவனுக்கும், மனைவிக்கும் மணமேடையில் நிகழும் உரையாடலாக வேதம் இப்படி பதிவு செய்திருக்கிறது.

அவள் கேட்கிறாள்.``மணாளா... நீங்கள் எனக்கு புருஷனாக கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இந்த கன்னி செய்த புண்ணியத்தால் உன்னை கைப்பிடித்தேன். நீ சம்பாதிக்கும் செல்வத்தையெல்லாம் வீட்டுக்கே கொண்டு வரவேண்டும். அதுபோல உனது இந்த்ரிய சந்தோஷத்தையும் நீ என்னிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ள வேண்டும். வேறு வேறு பெண்களை நாடி நீ போகக்கூடாது... என்ன சரியா?’’ என்கிறாள்.

அவன் இதற்கு பதில் சொல்கிறான்.``நீ பெண் என்பதால் தெளிவாகவே இருக்கிறாய். நான் ஈட்டும் பொருள் அனைத்தையும் உன்னிடம்தான் ஒப்படைப்பேன்.

அதேநேரம்...இந்த்ரிய சந்தோஷத்தை உன்னுடன் தான் அனுபவிக்கவேண்டும் என்று நீ என்னை கட்டளையிடக் கூடாது. நீ வேண்டுமானால் அதற்கான அழகோடு எப்போதும் இரு. உன் அழகை நீ காப்பாற்றி வைத்திருந்தால் நான் உன்னை விட்டு விலகிச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் நேராது...’’ என்கிறான் அவன்.

இதை தான்...``உதுத்தரம் மாரோஹந்திமுர்த்தானம் பத்யு ராரோஹ’’கல்யாணம் செய்து போன பெண்... கணவனது தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ளவேண்டும்.

அதாவது... அவனது சிந்தனைகளில் எல்லாம் இவளே நிரம்பி இருக்கவேண்டும். அவனது மூளையில் இவளே முழுதும் இருக்கவேண்டும். அப்போது அவன் பிற பெண்ணை நாடிச் செல்லமாட்டான் அல்லவா? என்கிறது வேதம்.


கணவன் மூளைக்குள் தன்னை நிரப்பவேண்டும் என்றால் இவள் எப்படி குடும்பம் நடத்தவேண்டும்?

``ஸ்த்ரீனாஞ்ச பதிதேவானாம்தஷ்ஸ்ருஹா அனுகூலதா தத்பந்துஹீஅனுமிருத்யஸ்ஸ நித்யம் தத்வத தாரணம்சம்மார்ஜன அனுரே பாப்யாம்க்ரஹ மண்டல வர்த்தனாஹி ஆத்மானும்பூஷ்ஹேஸ்யதா’’

கைப்பிடித்த நொடியிலிருந்து அவன்தான் உனக்கு தெய்வம். அவனை விட்டுவிட்டு வெளியே நீ எங்கேயும் போகக்கூடாது. வென்னீர் போடு, கால் பிடி, கைபிடி, தூங்கினால் விசிறி விடு... இப்படி செய்வதால்தான் அவன் மூளையில் நீ குடியேற முடியும்.

சரியப்பா... அவள் இப்படித்தான் வாழ்கிறாள்... கணவனின் தலையில் ஏறி உட்கார்ந்திருக்கிறாள். சந்தோஷமாக வாழ்க்கை போகிறது.

ஒருநாள்... வயதானதாலோ, தேகப் பிரச்சினைகளாலோ கணவன் தலை சாய்ந்து விடுகிறான். அதாவது மரணம் சம்பவிக்கிறது. குடும்பமே அழுகிறது. குழந்தைகள் ஒன்றும் தெரியாமல் தன் பிதாவின்மீது விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தன்மேல் பிரேமம் வைத்தவன், இப்படி பிரேதமாகக் கிடக்கிறானே என அந்த இளம்பெண் கண்களிலிருந்து நதிகளை பிரசவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில்... அவளுக்கு என்ன தேவை? ஆறுதல் மொழிகள்தானே...

``கவலைப்படாதேம்மா... அவன் விதி அவனை கொண்டு போய்விட்டது. உன்னை நம்பி குழந்தைகள் இருக்கிறார்கள். பாவம், அவர்களை நீ தான் நல்லபடியாக வளர்க்கவேண்டும்... அழு... அழுதுவிட்டு உன் குழந்தைகளோடு சந்தோஷமாக இரு...’’- இப்படித்தானே சொல்லவேண்டும்?

அவளுக்கு வேதம் ஒரு மொழியை வழங்குகிறது பாருங்கள்.

`பத்யுர் ஜனித்வம் அபி சம்ப பூவ...’இப்படி தொடங்கும் மந்த்ரத்துக்கு என்ன அர்த்தம்?

``உன் ஆம்படையான் இறந்துவிட்டான். பாவம்... இனி உன்னை யார் காப்பாற்றுவது? இனி நீ அவன் வீட்டிலேயே இருந்தால் பாரம்தானே? சுமைதானே? உன்னை ஆம்படையான் குடும்பத்தினர் எப்படி தாங்குவார்கள்? அதனால்...
அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
(தொடரும்)
================================
தொடர்பு உள்ளவை...

ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.

விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவதுஇதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.

இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத் தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான்.

மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!

பொருள்: விசுவாசு என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.

மந்திரம்: உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி

பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.

விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.அதாவது கலியாணமான அந்த மணப் பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்ட இந்த மணமகன் தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான்என்பதாகும்.

ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த போதினி.
ஆக்கியோர்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்., (பக்கங்கள்:முறையே: 22-59)
http://www.yarl.com/forum3/index.php?showtopic=38763
==================

திருமணம் நடத்தி வைக்கும் புரோகிதப் பார்ப்பனர் சமஸ்கிருதமாகிய வடமொழியில் தான் திருமணத்திற்குரிய `மந்திரங்களைக் கூறுவார். அப்படித் திருமணங்களில் கூறப்படும் மந்திரங்களில் ஒன்று.

மணப் பெண்ணைப் பார்த்துக் கூறுவதாவது: 
சோமன் (சந்திரன்) முதலில் இவளை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாம் கணவன் அக்னி. உன்னுடைய நான்காம் கணவன் மனித ஜாதியில் பிறந்தவன்.

சோமன் உன்னைக் கந்தர்வனுக்குக் கொடுத்தான். கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான். அக்னி தேவன் இவளுக்குச் செல்வத்தையும் மக்களையும் கொடுத்து, பிறகு எனக்குத் தந்தான்.

இவ்வாறு அர்த்தம் கொண்ட கீழ்க்காணும் சமஸ்கிருத ஸ்லோகங்களை மணமகனின் சார்பில் புரோகிதர் சொல்லுவார்.

``ஸோம: ப்ரதமோ விவிதே
கந்தர்வோ விவித உத்தர:
த்ருதீயோ அக்நிஷ்டே பதி:
துரீயஸ்தே மநுஷ்யஜா.
``ஸோமோ (அ)தத் கந்தர் வாய
கந்தர்வோ (அ)தத் அக்நயே
ரயிஞ்ச புத்ராகும்ச அதாத்
அக்நிர் மஹ்யமதோ இமாம்

அகலிகை - அருந்ததி

மற்றொரு சடங்கு அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் என்பதாகும்.

கௌதம முனிவரின் மனைவி அகலிகை இந்திரனிடம் சோரம் போனதால் அவளைக் கல்லாகச் சபித்தார் அம்முனிவர் என்பதை வைத்து, கற்புக்கரசியாக வாழ வேண்டும் என்பதை நினைவூட்டவே அது என்று கூறப்படுகிறது!

கற்பிழந்தவள், சோரம் போனவளை அந்த நாளில் காட்டி, அச்சுறுத்தித்தான் மணப் பெண்ணைக் கற்பு நெறியில் நிற்கச் செய்ய வேண்டும் என்பது மிகவும் விசித்திரமான ஒன்றல்லவா?

அருந்ததி என்பது ஒரு நட்சத்திரம் என்று கூறி அதனைப் பட்டப் பகலில் அதுவும் பந்தலுக்குள் மணமகளை நிறுத்தி `அருந்ததி பார்த்தாயா என்று கேட்பதும், `ஆம் என்று பொய் சொல்லப் பழக்குவதும் மிகவும் வேடிக்கையான ஒன்று அல்லவா?

சூத்திரர்களுக்கு மண உரிமை இல்லை என்பதற்கு மற்றொரு நடைமுறை ஆதாரம் என்னவென்றால், பார்ப்பனப் புரோகிதர் வந்து நடத்தி வைக்கும் வைதீக பழைய திருமணங்களில், மணமகனுக்கு உடம்பில் பூணூல் அணிவித்து பிறகுதான் திருமணத்தை நடத்தி வைப்பார்கள்.

மற்றொரு வேடிக்கை. அத்திருமணத்திற்கு சாட்சி அக்னியும் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும் மற்றும் கின்னரர்களும், கிம்புருடர்களும் மணமக்களில் எவருக்காவது ஒரு சிறு விவகாரம் ஏற்பட்டு நீதிமன்றத்துக்கு அவர்கள் சென்றால், இவர்களில் எந்த சாட்சியினர் வருவார்களோ!

``பெண்களைக் கேவலப்படுத்தும் `சம்பந்த திருமண முறையும் ஆரிய ஒழுக்கமும்!

ஆரிய ஒழுக்கத்தைப் படம் பிடித்துக் காட்டும், `பாபா சாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் கருத்துக்கள் கீழே தரப்படுகின்றன.

“Taking the attitude of the people, the person of the Brahmin is sacred. In ancient time, he could not be hanged no matter what offence he committed. As a sacred person he had immunities and privileges which were denied to the servile class.

He was entitled to first fruits. In Malabar, where the Sambandham marriage prevails to first fruits. In Malabar, where the sambandham marriage prevails, the service classes such as the Nairs regard it an honour to have their females kept as mistresses by Brahmins. 

Even kings invited Brahmins to deflower their queens on prima noctis. 

There was a time when no person of the servile class could take his food without drinking the water in which the toes of the Brahmins were washed. Sir P.C. Ray once described how in his childhood, rows of children belonging to the servile classes used to stand for hours together in the morning to the roadside in Calcutta with cups of water in their hands waiting for a Brahmin to pass ready to wash his feet and take it to their parents waiting to sip it before taking their food. Under the British Government and by reason of its equalitraian jurisprudence these rights, immunities and privileges of the Brahmins have ceased to exist. Nonetheless the advantages they gave still remain and the Brahmin is still pre-eminent and sacred in the eyes of the servile classes and it still addressed by them as ‘Swami’ which means ‘Lord’.
(What congress and Gandhi have done to the unthouchables - pp, 205-206)

இதன் தமிழாக்கம் வருமாறு:

``பிராமணனைப் புனிதமானவனாக மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அவன் எத்தகைய குற்றங்களை இழைத்தாலும் அவனுக்குத் தண்டனை கிடையாது என்பது தான் பழங்காலத்து நிலையாகும். அவன் புனிதமானவன் என்பதால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட பல விதிவிலக்குகளும், உரிமைகளும் அவன் பெற்றிருந்தான்.

முதல் அனுபவப் பாத்தியதை அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. மலபாரில் `சம்பந்தம் மணமுறை நடைமுறையிலிருந்தது. அங்கிருந்த நாயர்கள், அவர்களுடைய மனைவியர் பிராமணர்களால் ஆசை நாயகிகளாக வைத்துக் கொள்ளப்படுவதை அவர்களுக்குக் கிடைத்த பெருமையாகக் கருதினர். 
=============

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
உற்றார் சம்மதத்துடன் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு. பிராமணர்களால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை. பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள் 
===============

அரசர்களும்கூட அவர்களுடைய அரசியருடன் முதல் உடல் உறவு கொள்ள பிராமணர்களுக்கே அழைப்பு விடுத்தார்கள்.

பிராமணரின் கால் விரலைக் கழுவிய தண்ணீரைக் குடிக்காமல் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்கள் யாரும் உணவு உட்கொள்ளக் கூடாது என்று சொல்லப்பட்ட காலம் ஒன்று இருந்தது.

ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் காலை வேளைகளில் கல்கத்தாவின் சாலை ஓரங்களில் கைகளில் நீர் நிறைந்த குவளைகளை வைத்துக் கொண்டு மணிக்கணக்காகக் காத்து நிற்பார்களாம்.

அந்த வழியாகப் போகின்ற பிராமணரின் காலைக் கழுவிய நீரைக் கொண்டு போய்த் தங்கள் பெற்றோர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று அப்படிக் காத்துக் கிடப்பார்களாம். அந்த நீரைக் கொண்டு போய் அவர்களது பெற்றோர்களுக்குக் கொடுப்பார்களாம்.

பிராமணர் கால் கழுவிய அந்த நீரை ஒரு மடக்குக் குடித்த பிறகே உணவு உண்பார்களாம். இதற்காக அந்தப் பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் சாலை ஓரங்களில் காத்துக் கிடப்பது வழக்கமாம். அப்படி அவர்கள் காத்துக் கிடந்ததைத் தம் குழந்தைப் பருவத்தில் பார்த் திருப்பதாக பி.சி. ராய் ஒரு முறை தெரிவித்திருக்கிறார்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், நீதிக்குமுன் அனைவரும் சமம் என்ற அவர்களின் அறிவார்ந்த அணுகுமுறையினால் பிராமணர்களுக்கெனச் சிறப்பாக விதிக்கப்பட்டிருந்த உரிமைகள் விதி விலக்குகள், சலுகைகள் முதலிய பலவும் நிறுத்தப்பட்டன.

இத்தனை அனுகூலங்கள் வழங்கப்பட்டிருந்தும்கூட ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வையில் பிராமணன் மேலானவன், புனிதமானவன் என்ற நிலை இன்னும் தொடர்கிறது. அதனால்தான் இன்றும்கூட ஒடுக்கப்பட்ட மக்களால், பிராமணர்கள், பிரபு என்னும் பொருள்பட `ஸ்வாமி என்று அழைக்கப்படுகின்றனர்.--கி. வீரமணி அவர்கள் எழுதிய "சுயமரியாதை திருமணம் தத்துவமும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக